tag:blogger.com,1999:blog-20872053384752900872024-02-20T16:53:12.807-08:00சங்கதீUnknownnoreply@blogger.comBlogger609125tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-9027729575945394922012-04-09T20:56:00.001-07:002012-04-09T20:58:26.544-07:00சினிமா ஆசை காட்டி பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல நடிகை கைது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<h2 class="title">
சினிமா ஆசை காட்டி பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல நடிகை கைது</h2>
<div class="postdate">
<span style="text-align: justify;"><a href="http://meenakam.com/2012/04/10/cinema-is-a-popular-actress-of-the-abortions-were-for-women-in-the-sex-industry.html" target="_blank">தெலுங்கு நடிகை தாரா சவுத்ரி. அத்ருஸ்யம், ரக்ஷாகுடு, பிரியசகி, லவ் டிக்கெட் ஆகிய படங்கள் மூலம் இவர் பிரபலம் ஆனார். இந்தநிலையில் இப்போது இவர் மீது ஒரு பரபரப்பு புகார் எழுந்துள்ளது. READ More>>></a></span></div>
</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-27416780644106799602012-01-02T19:29:00.000-08:002012-01-02T19:30:24.359-08:00இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் பீதியில் மக்கள் « நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம் – ஆய்வு முடிவு » யூடியூப் இணையத்தளத்தின் புதிய சேவை!Published January 2, 2012 பிரபல யூடியூப் இணையத்தளம் புதிய வருடத்தில் புதிய சேவை வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.</p>தனது தளத்தில் தரவேற்றப்பட்டு மிக பிரபலமாகிவிடும் வீடியோக்களில் ஒரே வகையான இரு வீடியோக்களை போட்டிக்கு தெரிவு செய்து இவற்றில் எது சிறந்தது? எது உங்களுக்கு பிடித்திருக்கிறது? என வாக்களிக்க சொல்கிறது. வெற்றி பெறும் வீடியோக்களை வாரந்தோறும் பட்டியலிடப்போகிறது.</p>நகைச்சுவை, அழகு, இசை, ஆச்சரியம், நடனம் எனும் பிரதான ஐந்து வகைகளில் உள்ளடக்கப்படும் வீடியோக்களை இப்படி போட்டிக்கு தெரிவு செய்ய போவதாக யூடியூப் வலைப்பூ தெரிவித்துள்ளது.</p>இதன் மூலம் மற்றொன்றுடன் ஒப்பிட்டு சிறந்தவற்றை மாத்திரம் மேலும் பிரபலப்படுத்தும் வாய்ப்பு உருவாகும் எனவும், அவ்வீடியோக்களுக்கு ரசிகர்களிடம் உரிய அங்கீகாரம் கிடைக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் யுடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>தற்போதைய புள்ளிவிபரத்தின் படி இணைய உலகில் அதிக நபர்களால் பார்வையிடப்படும் வீடியோ இணையத்தளமாக யூடியூப் தளம் தொடர்ந்து முதலிடத்தில் நிற்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மாத்திரம் 88.3 பில்லியன் வீடியோ காட்சிகள் யூடியூப் பக்கத்தில் பார்வையிடப்பட்டுள்ளன.</p>சீனாவின் Youku இணையத்தளம் 4.6 பில்லியன் தடவை பார்வையிடப்பட்டு இரண்டாவது இடத்திலும், பிரபல இசை வீடியோக்களுக்கான இணையத்தளமான Vevo 3.7 பில்லியன் தடவை பார்வையிடப்பட்டு மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-41166356183719999272012-01-01T10:23:00.001-08:002012-01-01T10:23:52.735-08:00ஓரு நாளில் 20 சிகரெட்டை பிடிக்கின்றார்: மதுஷாலினி « தேன் ஒர் அற்புதமான மருந்து! உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து கோரிய தம்பதிகள்! » ஓரு நாளில் 20 சிகரெட்டை பிடிக்கின்றார்: மதுஷாலினிPublished December 31, 2011 பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் நடித்தவர் மதுஷாலினி. அந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. அதனால் இந்தியில் ராம்கோபால் வர்மா இயக்கும் ‘டிபார்ட்மெண்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கதைப்படி இப்படத்தில் ரவுடி கூட்டத்தலைவியாக நடிக்கிறார் மதுஷாலினி. இந்த படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், இப்படத்தில் வில்லி வேடத்தில் முதன்முறையாக நடிக்கிறேன். அதற்காக எனது கெட்டப்பை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். முக்கியமாக என்னை தினமும் 20 சிகரெட் வரை பிடிக்க வைக்கிறார். கதைக்கு தேவை என்பதால் சிகரெட் பிடித்தபடி நடித்து வருகிறேன். சிகரெட் வாடையே பிடிக்காத நான் ஒரு மாதமாக தினமும் 20 சிகரெட் வரை பிடித்து கஷ்டப்பட்டு வருகிறேன் என்கிறார் மதுஷாலினி.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-10840085336943651262012-01-01T10:09:00.000-08:002012-01-01T10:10:25.609-08:00டொயோட்டா உலகிலேயே எரிபொருள் சிக்கனமுடைய காரை அறிமுகபடுத்தியுள்ளது « செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் அமீர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? » டொயோட்டா உலகிலேயே எரிபொருள் சிக்கனமுடைய காரை அறிமுகபடுத்தியுள்ளதுPublished December 31, 2011 உலக அளவில் எரிபொருள் விலை எகிறிக்கொண்டு செல்வதால், குறைந்தளவு எரிபொருள் பயன்படுத்தும் கார்களுக்கே தற்போது டிமான்ட் உள்ளது.</p>போட்டி நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கியுள்ள நிலையில், கார் மார்க்கெட்டில் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த அறிமுகம் உதவும் என்று எதிர்பார்க்கிறது டொயோட்டா.</p>நேற்று விற்பனைக்கு விடப்பட்டுள்ள கார், ‘Aqua’ மாடல் காராக ஜப்பானிலும், மற்றைய நாடுகளில்</p><p>டோக்கியோவில் நேற்று (திங்கட்கிழமை) அறிமுகப்படுத்தியபோது..</p>‘Prius C’ மாடல் காராகவும் விற்கப்படவுள்ளன. ஒரு லீட்டர் எரிபொருளுக்கு 35.4 கி.மீ. (35.4 km/litre) கொடுக்கும் விதத்தில் இதன் தொழில்நுட்பம் உள்ளதாக அறிவித்துள்ளது டொயோட்டா. இதுவரை டொயோட்டா விற்பனை செய்துவந்த அதிஉச்ச எரிபொருள் சிக்கன Prius கார், 32 km/litre தொழில்நுட்பம் உடையது.</p>டொயோட்டோவின் போட்டியாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டுக்குள் கொண்டுவந்திருப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். அவை இன்னமும் மார்க்கெட் ஷேரில் பெரிய சதவீதத்தை எட்டிப் பிடிக்க முடியாமல், குறைந்தளவு விற்பனை இலக்கங்களையே காட்டுகின்றன. நிசான் டோட்டர்ஸ் தயாரித்துள்ள லீஃப் மாடல் மற்றும், ஜி.எம். போட்டர்ஸ் தயாரித்துள்ள வோல்ட் ஆகிய மாடல்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு ஓகோ என்று இல்லை.</p> அதற்கு முக்கிய காரணம், அவற்றின் பேட்டரிகளின் உச்ச விலை! எரிபொருளில் சேமிக்கும் பணம் பேட்டரியில் போய்விடுகிறது.டொயோட்டா நேற்று அறிமுகப்படுத்தியுள்ள மாடல், ஜப்பானில் அறிமுக விலையாக 1.60 மில்லியன் யென் (சுமார் 10 லட்சம் இந்திய ரூபா) விலைப் பட்டியலுடன் வெளியாகியுள்ளது. மாதம் ஒன்றுக்கு 12,000 கார்களை விற்பனை செய்ய முடியும் என்கின்றன அவர்களது ஆரம்ப காட்ட கணிப்பீடுகள்.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-32861722906245581112011-12-30T20:47:00.000-08:002011-12-30T20:47:02.964-08:00இன்றைய உலகில் கணவன் மனைவி உறவு எந்த நிலையில் உள்ளது? « முட்டை மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும் பூமியில் ரஷ்ய விண்கலம் மோதும் அபாயம்! » இன்றைய உலகில் கணவன் மனைவி உறவு எந்த நிலையில் உள்ளது?Published December 28, 2011 கணவன் – மனைவிக்கு இடையே உள்ள தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இந்த தாம்பத்தியத்தின் வாயிலாக மறக்கப்படுகிறது. இவ்வளவு புனிதமான, இல்லறத்திற்கு அவசியமான தாம்பத்யம் தற்போது மாறி வரும் உலகில் கணவன் – மனைவிக்கு இடையே எந்த இடத்தில் உள்ளது?</p>காதல், திருமணம், தாம்பத்யம் இவை எல்லாமே மனிதனால், மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. இதில் தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்குமான ஒரு சிகிச்சை. இதனால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம்.</p>ஆனால் இரண்டு மனங்களும் ஒத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாம்பத்யம் கொள்ளும்போதுதான் இது சாத்தியமாகிறது.</p>நமது கலாச்சாரத்தின் படி, இரண்டு மனங்களை இணைப்பதே திருமணம். இந்த நோக்கம், இருவரும் இசைந்து தாம்பத்தியம் கொள்ளும்போதுதான் முழுமையடைகிறது. தாம்பத்யத்தின் வாயிலாக இருவரது உணர்வுகளும், சந்தோஷங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.</p>அதற்கெல்லாம் எங்கு நேரம் என்று கூறும் தம்பதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. பெயர், புகழ், பணம் சம்பாதிக்க நீண்ட தூரம், வேகமாக ஓட வேண்டிய நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். அதனால் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச இங்கே யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை.</p>அப்படியே கிடைத்தாலும் அந்த நேரத்தை தகவல் தொழில்நுட்பங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் விழுங்கி விடுகின்றன. எதிர் வீட்டில் இருப்பவரைப் பற்றியோ, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறதோ என்பதையோ அறிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை.</p>ஆனால் இப்போதெல்லாம், அவரவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை. அதிகாலையிலேயே பணிக்கு செல்வதும், இரவில் நேரம் கழித்து வருவதும் வழக்கமாகிவிட்டது. குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறார்கள் என்றாலும், பிள்ளைகளிடம் கொஞ்சி மகிழவும், வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடவும் இயலாமல் போய்விடுகிறது.</p>அதுபோன்றதொரு பொன்னான நேரத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பப் பெற இயலாது என்பதை அவர்கள் உணர்வதில்லை. காலத்தின் சூழ்நிலையால் மனிதன் எந்திரமாக மாறிவிட்டான். சக்கரம் போல் சுழலும் அவனது வாழ்க்கையில், எந்த இடத்திலும் சிறிது நேரம் களைப்பாறகூட அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை.</p>இதனால் மனிதன் விரும்பும் பல நல்ல விஷயங்களை அவன் அறியாமலேயே இழந்து வருகிறான். இதில் தாம்பத்யமும் ஒன்று. இது மிகவும் சிந்திக்க வேண்டிய, கவலை அளிக்கும் விஷயமாகும். கணவன் – மனைவி இருவருமே பணிக்கு செல்லும் நிலை இப்போதுள்ளது. ஒருவர் பணி நிமித்தமாக வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று கொண்டிருப்பதும், மற்றொருவர் பணியில் மூழ்கி இரவு – பகலென தெரியாமல் உழைப்பதும் இங்கெல்லாம் சாதாரணம்.</p>இதனால் கிடைப்பது என்ன? மிடுக்கான வாழ்க்கை, குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி, வெளிநாடுகளுக்கு பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு, நினைத்தப் பொருள் நினைத்தவுடன் கையில் என அனைத்தும் கிடைக்கும். ஆனால்… இதுதான் வாழ்க்கையா? இதில் மனம் நிறைவு பெறுமா? சரி இவற்றுக்கெல்லாம் நாம் கொடுக்கும் விலை என்ன தெரியுமா?</p>தாம்பத்ய வாழ்க்கை! இதற்கெல்லாம் தாம்பத்யம் ஈடாகுமா? ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் தாம்பத்யம் தற்போது குறைந்து வருகிறது. நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதற்கும், பல திருமணங்களின் உடனடி முறிவிற்கும் முக்கிய காரணமாக இந்த தாம்பத்யமே மையமாக அமைகிறது.</p>வாழ்க்கையில் முன்னேறவும், முக்கிய இடத்தை பிடிக்கவும் மனமும், உடலும் உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அந்த மனதிற்கும், உடலுக்கும் உற்சாகத்தை அளிக்கும் தாம்பத்தியத்தை பலர் மறந்தேவிட்டனர். “நேரம் இல்லை அதனால் செக்ஸ் இல்லை” என்பதே தற்போது பலர் சொல்லும் மந்திரமாகிவிட்டது.</p>மேலும் சில தம்பதிகளிடையே காலையில் எழுவதும், பணிக்கு செல்வதும், குழந்தைகளை பராமரிப்பதும் போல் தாம்பத்யமும் ஒரு பணியாக, அதனை கடமையாக எண்ணும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் காலையில் இருந்து நாம் சந்திக்கும் பிரச்சினைகளும், பணிச் சுமையுமே ஆகும்.</p>இதுபோல் பணியிலும், தாங்கள் சார்ந்துள்ள துறையிலும் உள்ளவர்களை `பணிச் சிறையில் வாழ்பவர்கள்’ என்றே அழைக்கலாம். இவர்கள் ஒரு நாளும் இந்த சிறையில் இருந்து விடுதலை ஆவதில்லை. இவர்கள் ஆயுள் கைதிகளாகவே இருந்து விடுகின்றனர். இதனால் இவர்களது திறமை வெளிப்பட்டு பெயர், புகழ் கிடைத்தாலும், உள்மனது அதற்கெல்லாம் மகிழ்ச்சியடைவதில்லை.</p>அது உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல பல சமயங்களில் அவர்களுக்கே தெரிவதில்லை. பணமும், புகழும், தங்களை சார்ந்தவர்களையும், தங்களது தேவைகளையும் திருப்திப்படுத்துமே தவிர, மனதையும், அதன் உணர்வுகளையும் அல்ல. பணத்தால் மனதை நிறைவு செய்ய இயலாது.</p>பணம் தான் வாழ்க்கை என ஓடும் பலர் சிறிது நேரம் நின்று பார்த்தால் தெரியும், எவ்வளவோ பேர் பணம் கிடைத்தும் நிம்மதி இல்லாமல் நிம்மதியைத் தேடி ஓடிக் கொண்டிருப்பதை. பலர் தங்களது வேலையில் ஏற்படும் பிரச்சினைகளுடனே வீட்டிக்குள் நுழைகின்றனர். இது தவிர்க்க முடியாததே ஆனாலும், தள்ளி வைக்க வேண்டிய விஷயமாகிறது.</p>இதுபோன்று பணியாற்றும் தம்பதிகள் பலருக்கு வீடு ஒரு விடுதி போலவும், இரவு வருவதும், காலையில் கிளம்பிச் செல்வதும் வழக்கமாகிவிடுகிறது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, அன்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் தாம்பத்யம் இல்லாமல், அவர்கள் அறியாமலேயே அவர்களது தன்னம்பிக்கையை இழந்து வருகின்றனர்.</p>தங்களது நிறைகுறைகளை, இன்ப துன்பங்களை, கோபதாபங்களை தனது துணையுடன் பகிர்ந்து கொண்டு, அதற்காக நேரம் ஒதுக்குவதும் தான் நல்ல தாம்பத்தியம். நல்ல தாம்பத்யம் என்பதே இல்லற வாழ்வின் இனிய வாசற்படி. அதற்குள் நுழைந்தால்தான் குழந்தைகள், செல்வம் என்னும் வீட்டிற்குள் வாழ இயலும். மனித வாழ்க்கைக்கு ஆதாரமான தாம்பத்தியத்தை தொலைத்து விட்டு நாம் தேடப்போகும் பொருள் தான் என்ன?</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-42119114115182997492011-12-30T20:42:00.000-08:002011-12-30T20:43:47.234-08:00நாட்டுக் கோழி குழம்பு. « D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு… » நாட்டுக் கோழி குழம்பு.Published December 29, 2011 <p>தேவையான பொருட்கள் 1. கோழி – 1 கிலோ<br /> 2. சின்ன வெங்காயம் – 35<br /> 3. தக்காளி – 2<br /> 4. தேங்காய் துருவல் – 1/4 சின்ன தேங்காய்<br /> 5. கறிவேப்பிலை – 6 கொத்து<br /> 6. கொத்தமல்லி – சிறிது<br /> 7. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி<br /> 8. மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி<br /> 9. மல்லி தூள் – 2 1/2 தேக்கரண்டி<br /> 10. உப்பு<br /> 11. கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி<br /> 12. சோம்பு – 1 தேக்கரண்டி<br /> 13. பச்சை மிளகாய் – 2<br /> 14. எண்ணெய் – தேவையான அளவு</p><p>செய்முறை:</p>பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் 15, கறிவேப்பிலை 4 கொத்து சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.இதை மசாலாவாக அரைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.மஞ்சள், தூள், கரம் மசாலா, கோழி சேர்த்து வதக்கி, குக்கரில் வைத்து வேக வைக்கவும்.பின் அடுப்பில் வைத்து அரைத்த மசாலா தண்ணீா் சோ்க்காமல் உப்பும் போட்டு எண்ணெய் திரண்டு வர கொதிக்க வைத்து எடுக்கவும்.<p> </p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-32012816055043183022011-12-18T22:37:00.000-08:002011-12-18T22:37:00.924-08:00உலகப் புகழ் சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்தது « நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம் – ஆய்வு முடிவு » உலகப் புகழ் சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்ததுPublished December 19, 2011 மவுனப்பட காலத்திலேயே உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கியவர், சார்லி சாப்ளின். சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். அவர் நடித்த படங் களின் “விசிடி”கள் இன்றும் எல்லா நாடுகளிலும் விற்பனை ஆகின்றன. சார்லி சாப்ளின் தெற்கு லண்டனில் 1889 ஏப்ரல் 16_ந் தேதி பிறந்தவர்.சார்லி சாப்ளின் பெற்றோர்கள் மேடைப் பாடகர்கள். ஆயினும் குடும்பம் வறுமையில் வாடியது. அதிகம் படிக்காத சார்லி சாப்ளின், ஐந்து வயதி லேயே மேடை நாடக ங்களில் நடிக்கத் தொடங் கினார். சார்லிக்கு 21 வயதான போது, நாடகக் குழு அமெரிக்கா சென்றது.அவரும் அமெரிக்கா போனார். 1913_ல் “கீ ஸ்டோன்” என்ற கம்பெனி தயாரித்த ஊமைப்படத்தில் முதன் முதலாக சாப்ளின் நடித்தார். படத்தின் பெயர் “மேக்கிங் எ லிவிங்”. அதில் அவர் வில்லனாக நடித்தார். அப்படம் வெற்றி பெறவில்லை. “கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ்” என்பது அவருடைய இரண்டாவது படம்.அதில்தான் அவர் காமெடி வேடத்தில் நடித்தார். தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத்தொப்பி, கையில் சிறு தடி _ இத்தகைய “மேக்கப்”புடன் தோன்றி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். பின்னர் இத்தகைய வேடமே அவருக்கு “டிரேட் மார்க்” ஆகியது.வரிசையாக சார்லியின் வெற்றிப் படங்கள் வெளிவந்தன. ஒரே ஆண்டில் 35 படங்களில் நடித்தார். எல்லாமே வெற்றிப்படங்கள்தான். தி கிரேட் டிக்டேட்டர் (மாபெரும் சர்வாதிகாரி) என்ற படத்தில் ஹிட்லர் வேடத்தில் நடித்தார். 1916_ம் ஆண்டில், வாரம் 10 ஆயிரம் டாலர் சம்பளத்தில் ஒரு படக்கம்பெனியில் சேர்ந்தார்.படங்களுக்கு கதை, வசனம் எழுதி நடித்தார். பல படங்களை டைரக்ட் செய்தார். உலகப் புகழ் பெற்றார். 1919_ம் ஆண்டில் “யுனைட்டெட் ஆர் டிஸ்ட்ஸ்” என்ற பட நிறுவனத்தை, வேறு சிலருடன் சேர்ந்து கூட்டாகத் தொடங்கினார். படங்களைத் தயாரித்ததுடன், படங்களை விநியோகம் செய்வதிலும் இந்தக் கம்பெனி ஈடுபட்டது.1931_ல் அவர் நடித்த “சிட்டிலைட்ஸ்” என்ற படம் மிகப் புகழ் பெற்றது. மவுனப் படயுகம் முடிவடைந்து, பேசும் படங்கள் வரத் தொடங்கி யிருந்த காலகட்டத்தில் 1936_ம் ஆண்டு “மாடர்ன் டைம்ஸ்” என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். அப்படத்தில் மற்றவர்கள் பேசினாலும், சார்லி ஒரு வார்த்தை கூட பேச வில்லை.அப்படமும் மகத்தான வெற்றி பெற்றது. 1940_ம் ஆண்டு சாப்ளின் தயாரித்த “தி கிரேட் டிக்டேட்டர்” சர்வாதிகாரி ஹிட்லரை கேலி செய்து எடுக்கப்பட்ட படம். ஹிட்லர் வேடத்தில் சாப்ளின் பிரமாதமாக நடித்தார். அவர் பேசி நடித்த முதல் படம் இது. உலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியது.1952_ல் அவர் “லைம் லைட்” என்ற படத்தில், சீரியசான வேடத்தில் நடித்தார். சாப்ளின் தன்னுடைய படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மிகவும் சிரமம் எடுத்துக்கொள்வார். செலவைப்பற்றி கவலைப்பட மாட்டார். “தி கிட்” படத்தில் ஒரு காட்சிக்காக 50 ஆயிரம் அடி படம் எடுத்தார்.அதில் 75 அடி தான் படத்தில் இடம் பெற்றது. எல்லோரையும் சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்தது. முதல் மனைவி மாக்மர்ரே, இரு குழந்தைகளைப் பெற்ற பிறகு சார்லியை விவாகரத்து செய்ததுடன் 10 லட்சம் டாலர் ஜீவனாம்சம் பெற்றார். அடுத்து நடந்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்தன.பிறகு, “ஓனா_ஓ_நீல்” என்ற 18 வயதுப் பெண்ணை மணந்தார். இந்தப் பெண்ணுக்கு 8 குழந்தைகள் பிறந்தன. இந்த மனைவிதான் சார்லியின் இறுதிக்காலம் வரை அவருடன் வாழ்ந்தவர். சார்லி வெறும் நடிகர் அல்ல. மனித குலத்திற்கு வழிகாட்டிய மேதை.அதனால்தான், “திரை உலகின் ஒரே மேதை சார்லி சாப்ளின்” என்று பெர்னாட்ஷா பாராட்டினார். இங்கிலாந்து அரசாங்கம் சார்லி சாப்ளினுக்கு “சர்” பட்டம் கொடுத்துக் கவுரவித்தது. 1928, 1972 ஆகிய ஆண்டுகளில் “ஆஸ்கார்” விசேஷப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.1977 டிசம்பர் 25_ந்தேதி சாப்ளின் மறைந்து விட்டாலும், அவர் நடித்த படங்கள் மூலம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-60254144772548029682011-12-18T22:32:00.000-08:002011-12-18T22:33:24.908-08:00மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? « செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் அமீர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? » மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?Published December 19, 2011 எப்போதும் சிரித்த முகம்.மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.காலையில் முன் எழுந்திருத்தல்.பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.நேரம் பாராது உபசரித்தல்.கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.அதிகாரம் பண்ணக் கூடாது.குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.கணவனை சந்தேகப்படக் கூடாது.குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.அளவுக்கு மீறிய ஆசை கூடாது.குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.<p>இவ் எதிர் பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மனைவியின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தானாகவே நிறைவேறும். பின்பற்றித்தான் பாருங்களே உங்களுக்கே எல்லாம் புரியும்.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-37868490751303792072011-12-18T11:02:00.000-08:002011-12-18T11:02:00.466-08:00பாம்பு வடிவில் பிறந்த குழந்தை- அதிர்ச்சி வீடியோ « கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது நல்லதா? ஸ்கேன் செய்வதால் குழந்தையின் வளர்ச்சி கர்ப்பப்பையில் பாதிக்கப்படுமா? » பாம்பு வடிவில் பிறந்த குழந்தை- அதிர்ச்சி வீடியோPublished December 18, 2011 இயற்கையின் மாற்றத்தில் பல்வேறு அதிசயங்கள் நடப்பது இயப்பு. அந்த வகையில் பிறந்த குழந்தை ஒன்று எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தியுள்ளது. சாதாரணமாக பிறக்கும் குழந்தையல்லா மல் பாம்பு உடலமைப்பில் பிறந்துள்ளது இக்குழந்தை. சவுதிஅரேபியால் ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தையே இவ்வாறு பாம்பின் வடிவில் பிறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தோல்வியாதியாக இருக்க கூடும் என வைத்தியர்கள் தெரி வித்துள்ளனர். பாம்பு குழந்தையினை காண வீடியோவை பாருங்கள்.</p><p></p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-30132819091907496972011-12-18T10:57:00.000-08:002011-12-18T10:58:28.300-08:00சுருட்டி எடுத்து செல்லும் பாக்கெட்” டி.வி விரைவில் அறிமுகமாகின்றது « D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு… » சுருட்டி எடுத்து செல்லும் பாக்கெட்” டி.வி விரைவில் அறிமுகமாகின்றதுPublished December 18, 2011 சுருட்டி எடுத்து செல்லும் வகையில் பாக்கெட் டி.வி. தயாரிக்கப்பட்டு ள்ளது. இது விரைவில் அறிமுகம் ஆகிறது. தற்போது அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட டி.வி.க்கள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக 3டி முப்பரிமாண டி.வி.க்கள் விற்பனைக்கு வந்துள் ளன.</p>அவற்றை ஒரே இடத்தில் வைத்து தான் பார்க்க முடியும். ஆனால் சுருட்டி மடக்கி பாக்கெட்டில் எடுத்து செல்லும் மிக அதிநவீன டி.வி.க்களை இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குழு தயாரித்துள்ளனர்.</p>மனித ரோமத்தை விட 1 லட்சம் மடங்கு மெல்லிய சின்னஞ் சிறிய ஒளிப்பான்களை உருவாக்கியுள்ளனர். அதற்கு “குவா ண்டம் டாட்ஸ்” என பெயரி ட்டுள்ளனர்.</p>அதன் மூலம் மிக மெல்லிய டி.வி. திரைகளை உருவாக்க முடியும். அவ ற்றை பிளக்சிபில் பிளாஸ்டின் சீட்டில் ஒட்டி அதை எங்கு வேண்டுமா னாலும் எடுத்து செல்ல முடியும்.</p>அவை அடுத்த ஆண்டு இறுதியில் கடைகளில் விற்பனைக்கு வரும். ஆசிய எலக்ட்ரானிக் கம்பெனிகளின் உதவியுடன் இவற்றை தயாரித்த தாக மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானி மைக்கேல் டெல்டான் தெரிவித்துள்ளார்.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-65116457497799307852011-12-18T08:01:00.000-08:002011-12-18T08:01:00.980-08:00சிறார் பாலியல் துஷ்பிரயோகம் 112பேர் கைது « குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? » சிறார் பாலியல் துஷ்பிரயோகம் 112பேர் கைதுPublished December 18, 2011 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதான வீடியோ காட்சிகளை இணையம் வழியாக பரிமாறிக்கொண்ட சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 22 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.</p>கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து இந்த குற்றச்செயலில் சம்பந்தப்பட்டதாக இதுவரை 270 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.</p>இது தொடர்பில் மிக மோசமான வீடியோக்களை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்திருக்கும் ஐரோப்பிய காவல்துறையான யூரோ போல், பச்சிளம் குழந்தைகளும், இளம் சிறார்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுவதை இவை காட்டுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.</p>கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்துவரும் இந்த நடவடிக்கையில் இதற்கு முன்னர் கண்டுபிடிக்காத புதிய வலையமைப்புக்களை தாங்கள் கண்டுபிடித்ததாகவும், இந்த குற்றமிழைத்தவர்கள் இணையத்தை பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இந்த வீடியோக்களை உலக அளவில் பகிர்ந்துகொண்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் யூரோபோல் தெரிவித்துள்ளது.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-19169074966913838002011-12-18T07:56:00.000-08:002011-12-18T07:56:00.773-08:00முட்டை கொலஸ்ட்ராலை குறைக்கும் « கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது நல்லதா? ஸ்கேன் செய்வதால் குழந்தையின் வளர்ச்சி கர்ப்பப்பையில் பாதிக்கப்படுமா? » முட்டை கொலஸ்ட்ராலை குறைக்கும்Published December 18, 2011 அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.</p>அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது. “சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் ‘பி’ குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன” என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.<br />1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.</p>1986-ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.<br />80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான்.</p>சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான்.</p>நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-44875167167182335152011-12-18T07:51:00.000-08:002011-12-18T07:51:00.552-08:00தேனியின் ரீங்காரம் எப்படி ஏற்படுகின்றது « நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம் – ஆய்வு முடிவு » தேனியின் ரீங்காரம் எப்படி ஏற்படுகின்றதுPublished December 18, 2011 <p>தேனியின் ரீங்காரம் என்பது – அதன் குரல் ஒலி அல்ல அது தன்னுடைய சிறகுகளை விநாடிக்கு 400 தடைவைகளுக்கு மேல் அடிப்பதால் ஏற்படும் ஒலி ஆகும்.</p><p> </p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-22647847748386248042011-12-18T07:46:00.000-08:002011-12-18T07:46:00.299-08:0033 பவுண்ட்ஸ் எடைகொண்ட விசித்திர பூனைக்குட்டி (காணொளி இணைப்பு) « கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது நல்லதா? ஸ்கேன் செய்வதால் குழந்தையின் வளர்ச்சி கர்ப்பப்பையில் பாதிக்கப்படுமா? » 33 பவுண்ட்ஸ் எடைகொண்ட விசித்திர பூனைக்குட்டி (காணொளி இணைப்பு)Published December 18, 2011 <p>வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் பூனையும் ஒன்றாகும். குழந்தைகள் முதல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பூனைகளின் அளவு ஒரே மாதிரியாகத் தான் காணப்படுவதைத் தான் பார்த்திருப்போம். சீனாவில் சாங்டங் மாகாணத்தில் காணப்படும் Monster என்ற 9 வயது பூனை 33 பவுண்ட்ஸ் எடையுடன் காணப்படுகிறது. இதன் உரிமையாளர் மீன், கோழி மற்றும் பன்றி இறைச்சிகளை தினமும் ஆறு பவுண்டுகள் இந்தப் பூனைக்கு உணவாக அளிக்கிறார்.</p><p> </p><p> </p><p> </p><p> </p><p><img class="alignleft size-medium wp-image-856" title="fattest-cat-in-the-world-01" src="http://www.kadalkanni.com/wp-content/uploads/2011/12/fattest-cat-in-the-world-01-256x300.jpg" alt="" width="256" height="300" /><img class="alignleft size-medium wp-image-857" title="fattest-cat-ever copy" src="http://www.kadalkanni.com/wp-content/uploads/2011/12/fattest-cat-ever-copy-225x300.jpg" alt="" width="225" height="300" /></p><p> </p><p> </p><p> </p><p> </p><p> </p><p> </p><p> </p><p> </p><p> </p><p></p><p> </p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-6634891881484700152011-12-18T07:41:00.000-08:002011-12-18T07:42:49.326-08:00ஒரு பாம்பு இன்னொரு பாம்பை உயிருடன் முழுவதுமாக விழுங்கும் – அதிர்ச்சி வீடியோ « முட்டை மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும் பூமியில் ரஷ்ய விண்கலம் மோதும் அபாயம்! » ஒரு பாம்பு இன்னொரு பாம்பை உயிருடன் முழுவதுமாக விழுங்கும் – அதிர்ச்சி வீடியோPublished December 18, 2011 <p>நெஞ்சை உறைய வைக்கும் காட்சி. ஒரு பாம்பு இன்னொரு பாம்பை உயிருடன் முழுவதுமாக விழுங் கும் அசாதாரண காட்சி. இந்த அரிய வீடியோ இணைப்பை பாருங்கள்.</p><p></p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-30096076570681056612011-12-17T09:44:00.000-08:002011-12-17T09:44:00.137-08:00முட்டை மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும் « செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் அமீர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? » முட்டை மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும்Published December 17, 2011 மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதில் முட்டைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பகல் நேரங்களில் குறிப்பாக அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தவிர்க்க காலை சிற்றுண்டிக்கு ப்ரெட் டோஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து சாப்பிடலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஜாமுக்கு பதிலாக முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கொள்வது நல்லதாம்.</p><p>வெள்ளைக்கருவில் உள்ள புரதம், மூளை மற்றும் உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் என்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்கருவில் உடலின் அதிக கலோரிகளை எரிக்க தேவையான மூலப்பொருள் உள்ளதால் உடல் எடை கூடும் என்ற பயமும் வேண்டாம். தூக்கம், சுறுசுறுப்பு இரண்டுக்கும் முக்கிய காரணம் ஓரெக்சான் என்ற செல்கள். இந்த செல்கள் மூளையில் ஓரெக்சின் அல்லது ஹைப்போக்ரெடின் என்ற சுரப்புக்கு காரணமாகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது நார்கோலக்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும்.</p><p>இந்த பாதிப்பில் இருந்து முட்டையின் வெள்ளைக்கரு பாதுகாப்பு அளிக்கிறது. இதில் உடலுக்கு அத்தியாவசிய தேவையான அமினோ அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை மூளையில் உள்ள ஓரெக்சின் செல்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது. இதனால் இவற்றின் செயல்பாடுகள் சீராக இருக்கும். இதன்மூலம் மூளை மற்றும் உடல் செயல்பாட்டில் புத்துணர்ச்சி ஏற்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-48022052576190448522011-12-17T09:39:00.000-08:002011-12-17T09:39:00.164-08:00சிசேரியன் எதற்காக? « குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? » சிசேரியன் எதற்காக?Published December 17, 2011 *யாருக்கு சிசேரியன் என்று நம்மால் சொல்ல முடியாது டாக்டர் சுகபிரசவம் என்று தான் கூறினார்.திடீரென சிசேரியன் என்கிறார்கள் என்று எல்லோரும் பயப்டுவது உண்டு. பிரசவ வலி வரும்போது தான் சிசேரியன் வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைப்படுவதை உணருகின்றோம்.</p><p>*இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்டபின்புதான் கவனிக்க முடியும் – கணிக்க முடியும் – அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.</p><p>*பெரும்பாலானவா்கள் “முதல் தடவை சிசேரியன் செய்ததால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று புலம்புகிறார்கள்.</p><p>*முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாராலும் கணிக்க முடியாது. எனவே, முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும்.</p><p>*பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியதாகிறது.</p><p>*ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கேஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>*எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.</p><p>*சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது.</p><p>*அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது, 10, 15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.</p><p>*சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.</p><p>*யாருக்கு சிசேரியன் என்று நம்மால் சொல்ல முடியாது டாக்டர் சுகபிரசவம் என்று தான் ஊறினர்.தீடிரெண்டு சிசேரியன் என்கிறார்கள் என்று எல்லோரும் பயபடுவது உண்டு.பிரசவ வலி வரும்போது தான் சிசேரியன் வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம்.</p><p>*இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்டபின்புதான் கவனிக்க முடியும் – கணிக்க முடியும் – அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.</p><p>*பெரும்பாலோர் “முதல் தடவை சிசேரியன் செய்ததால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று புலம்புகிறார்கள்.</p><p>*முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாராலும் கணிக்க முடியாது. எனவே, முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும்.</p><p>*பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியதாகிறது.</p><p>*ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கேஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>*எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.</p><p>*சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது.</p><p>*அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது, 10, 15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.</p><p>*சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.><br />Loading…<br />[*]<br />[*] [LINK=javascript:open_youtube('');]Embed video[/LINK] [/*]</p><p>[*]<br />[*] [LINK=#]B[/LINK] [/*]<br />[*] [LINK=#]I[/LINK] [/*]<br />[*] [LINK=#]U[/LINK] [/*]<br />[*] [LINK=#]S[/LINK] [/*]<br />[*] [LINK=#]Ul[/LINK] [/*]<br />[*] [LINK=#]Quote[/LINK] [/*]<br />[*] [LINK=#]Link[/LINK] [/*]<br />[*] [LINK=#]Img[/LINK] [/*]<br />[/*]</p><p>[*][LINK=#](-) click to collapse[/LINK][/*]<br />[/*]</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-17778682505639644022011-12-17T09:34:00.000-08:002011-12-17T09:34:00.961-08:00அமெரிக்காவில் 25 வயதுக்கு முன்பே பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனா். « உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள்! சிசேரியன் எதற்காக? » அமெரிக்காவில் 25 வயதுக்கு முன்பே பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனா்.Published December 17, 2011 வாஷிங்டன் : அமெரிக்க பெண்களில் 5ல் ஒருவர், வாழ்நாளில் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக ஆய்வு தெரிவிக்கிறது. பாலியல் தொந்தரவு குறித்து அமெரிக்காவில் சிடிசி அமைப்பு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்: அமெரிக்காவில் மறைந்திருந்து நோட்டமிடுதல் மற்றும் பின்தொடரும் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கொலை அல்லது தாக்குதலுக்கு ஆளாகுவோம் என்று 5ல் 1 பெண் அஞ்சுகிறார்.</p><p>அமெரிக்காவில் நிமிடத்திற்கு சராசரியாக 24 பெண்கள் பலாத்காரம், உடல் ரீதியான துன்புறுத்தல் அல்லது மர்மநபர்கள் நோட்டமிடுவதால் பாதிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் 70 சதவீதம் பேர் 25 வயதுக்கு முன்பே நெருங்கிய உறவினரால் பாதிக்கப்பட்டதாகவும், 80 சதவீதம் பேர் 25வயதுக்கு முன்பே பாலியல் தாக்குலுக்கு ஆளாகியதும் ஆய்வில் தெரியவந்தது.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-86316657010337690452011-12-17T09:29:00.000-08:002011-12-17T09:30:51.549-08:00உப்பு சோ்ப்பதால் ஹார்ட் டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது « நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம் – ஆய்வு முடிவு » உப்பு சோ்ப்பதால் ஹார்ட் டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறதுPublished December 17, 2011 உணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்ளது. உணவுக்கு சுவை கூட்டும் உப்பு, கம்ப்யூட்டரின் சைஸ் கூட்டும் அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கம்ப்யூட்டர் இயங்குவதற்கு தேவையான சாப்ட்வேர்கள், கம்ப்யூட்டரில் நாம் பதிவு செய்கிற போட்டோ, பாட்டு, சினிமா உள்ளிட்ட பைல்கள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கிலேயே பதிவாகின்றன. கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், ஹார்ட் டிஸ்க்குகளை வைப்பதற்கு பெரிய அறைகள் தேவைப்பட்டன. டிஸ்க் அளவை குறைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது.</p>இந்த சைஸை மேலும் குறைப்பது தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதுதொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது:கம்ப்யூட்டரின் மிக முக்கியமான பகுதி ஹார்ட் டிஸ்க். பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.</p>டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் டேட்டா ரெகாடிங் திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் தயாரிப்பின்போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும்போது, ஹார்ட் டிஸ்க்கின் பதிவு திறன் ஒரு சதுர இன்ச்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது. அதாவது, டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது.உப்பு சேர்ப்பதால் கம்ப்யூட்டருக்கோ, இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கின் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது.இவ்வாறு ஜோயல் கூறினார்.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-89262437903640594532011-12-16T21:56:00.000-08:002011-12-16T21:56:00.319-08:00தங்கம் எப்படி உருவானது? « செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் அமீர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? » தங்கம் எப்படி உருவானது?Published December 16, 2011 தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.</p>இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.</p>எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.</p>ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.</p>இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அணுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-77411450758266626712011-12-16T21:51:00.000-08:002011-12-16T21:52:23.486-08:00அதிக உடல் பருமன் ஆயுளைக் குறைக்கும் « குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? » அதிக உடல் பருமன் ஆயுளைக் குறைக்கும்Published December 16, 2011 பல காலம் தொடர்ந்து இருக்கும் உடல் பருமனால் ஏற்படக் கூடிய நீண்ட கால பாதிப்புகள் முன்பு எண்ணப்பட்டதை விட மோசமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.கூடுதல் எடையுடன் ஒருவர் எவ்வளவு காலம் இருக்கிறாறோ அவ்வளவுக்களவு அவரின் ஆயுட்காலம் குறையும் என்றும் – பருமனால் ஏற்படக் கூடிய வியாதிகளால் உயிரிழக்கும் அபயாம் இரட்டிப்பாகிறது என்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.</p>முந்தைய ஆய்வுகளைப் போலல்லாமல் ஒருவரின் ஆயுட்காலத்தில் கூடுதல் பருமனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது, முதல் முறையாக இதில் ஆராயப்பட்டுள்ளது.</p>அமெரிக்காவில் சுமார் 50 ஆண்டு காலமாக, ஐயாயிரம் பேரின் உடல் நலம் மற்றும் உடல் எடை போன்றவற்றை கவனித்து செய்யப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.</p>பத்தாண்டுகள் கூடுதல் பருமனுடன் ஒருவர் இருந்தால், பருமன் தொடர்புடைய நோய்களால் அவர் இறப்பதற்கான வாய்ப்புகள் இரட்டிப்பாவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p>ஒருவர் எவ்வளவு ஆண்டுகள் கூடுதல் பருமனுடன் இருந்தார் என்பதை கண்டறிந்த பிறகு, அதற்குரிய சிகிச்சைகளை டாக்டர்கள் வழங்க முற்பட வேண்டும் என்றும். அப்போதுதான் அது சரியான பயனைத் தரும் என்றும் ஜர்னல் ஆஃப் எபிடிமாலஜி என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-54928281983956365932011-12-16T21:46:00.000-08:002011-12-16T21:46:01.751-08:00தொழிலதிபர் மனைவி குத்திக்கொலை 2 வாலிபர்கள் பிடிபட்டனர் « நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம் – ஆய்வு முடிவு » தொழிலதிபர் மனைவி குத்திக்கொலை 2 வாலிபர்கள் பிடிபட்டனர்Published December 16, 2011 சென்னை : தொழிலதிபர் மனைவியை குத்திக் கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த 2 வாலிபர்கள் பிடிபட்டனர். ஆவடி அருகே திருமுல்லைவாயல், வெங்கடாசலம் நகர் 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் லியாகத் அலி (50). பாடி யில் இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி யாஸ்மின் (47). இவர்களின் 2 மகள்கள், கொரட்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கின்றனர்.</p><p>கடந்த 12ம் தேதி வீட்டில் தனியாக இருந்த யாஸ்மின், தொண்டை யில் கத்தியால் குத்தப் பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட் டார். அவர் அணிந்திருந்த கம்மல், வீட்டில் இருந்த 10 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தன. இதுதொடர்பாக, திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.<br />கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் மகேஸ்குமார், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், ஆவடி உதவி கமிஷனர் மனோகரன் ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது.</p><p>இவர்கள் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கொலை செய்யப்பட்ட யாஷ்மின், செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்ட நபர்கள் பட்டியலை எடுத்து விசாரித்தனர். இதில், ஆவடி அருகே பொத்தூர் தாய் நகரை சேர்ந்த கோபிநாத் (25), அவரது நண்பர் பாடி நம்மாழ்வார் நகரை சேர்ந்த சுப்பிரமணியம் (23) ஆகியோர், சம்பவத்தன்று யாஸ்மினுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.</p><p>அவர்கள் இருவரும் கொரட்டூர், அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய இடங்களில் உள்ள தனியார் கம்பெனி ஊழியர்கள். அவர் களை போலீசார் பிடித்து விசாரித்ததில், யாஸ்மினை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து பைக், கத்தி, 12 சவரன் நகைகளை போலீ சார் கைப்பற்றினர்.<br />இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:</p><p>கொலை செய்யப்பட்ட யாஸ்மின், வேறு மதத்தை சேர்ந்தவர். லியாகத் அலியை காதலித்து முஸ்லிம் மதத்துக்கு மாறி திருமணம் செய்துள்ளார். முதலில், மதுரவாயலில் இருந்த இவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்புதான், திருமுல்லைவாயலில் புதிதாக வீடு கட்டி குடிபுகுந்துள்ளனர். யாஸ்மினுக்கும் லியாகத் அலிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், யாஸ்மின் ஆடம்பர செலவுக்கு லியாகத் அலி பணம் கொடுப்பதில்லை.</p><p>இதனால், தனது ஆடம்பர செலவுக்கு பணம் சம்பாதிப்பதற்காக ஆன்லைன் மூலம் பாலியல் தொழிலில் குதித்துள்ளார் யாஸ்மின். கணவன், மகள்கள் இல்லாத நேரத்தில் இவரது வீட்டுக்கு வாடிக்கையாளர்கள் வந்து சென்றுள்ளனர். மேலும், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தங்களது ஜோடியுடன் இவரது வீட்டில் வந்து உல்லாசமாக இருந்து சென்றுள்ளனர். இதற்கு ஒரு ஜோடிக்கு ரூ.1000 வாடகை யாஸ்மின் வசூலித்துள்ளார்.</p><p>இந்நிலையில், பாடியை சேர்ந்த அன்வர் என்பவர் மூலமாக கோபிநாத், சுப்பிரமணியமும் யாஸ்மினுக்கு பழக்கமானார்கள். இருவரும் யாஸ்மினுடன் கடந்த 6 மாதமாக கள்ளத்தொடர்பு வைத்துள்ளனர். அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். அப்போது, கணவனுடன் தகராறு பற்றியும், செலவுக்கு பணம் தராதது பற்றியும் கூறியிருக்கிறார். மேலும், மதுரவாயலில் உள்ள வீட்டை விற்று பணம் வைத்துள்ளதாகவும், ஸீ 2 லட்சத்துக்கு நகைகள் வாங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>இதனால் பணம், நகை களை கொள்ளையடிக்க கோபிநாத்தும் சுப்பிரமணியமும் திட்டமிட்டனர். அதன்படி, சம்பவத்தன்று யாஸ்மினுக்கு போன் செய்து வீட்டுக்கு வருவதாக கூறியிருக்கின்றனர். பின்னர் கத்தி, இரும்பு கம்பியை மறைத்து எடுத்து வந்துள்ளனர். அவர்களை முன்கதவை திறந்து யாஸ் மின் வரவேற்றுள்ளார். பின்னர், முன் கேட்டையும் கதவையும் பூட்டிக் கொண்டனர்.</p><p>இருவரும் படுக்கை அறைக்கு வந்து யாஸ்மினுடன் பேசிக் கொண்டிருந்துள்ளனர். நகை, பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, யாஸ்மின் வாயை கோபிநாத் பொத்தி, கழுத்தை நெரித்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் மயங்கி சாய்ந்தார். பின்னர் பீரோவை கம்பியால் உடைத்து 10 சவரன் நகையை எடுத்துள்ளனர். சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க டிவி வால்யூமை அதிகரித்து வைத்துள்ளனர்.</p><p>திடீரென யாஸ்மின் விழித்துக் கொண்டு சத்தம் போடவே, சுப்பிரமணியம் அவரது கால்களை கெட்டியாகப் பிடித்துள்ளார். கோபிநாத் அவரது வாயைப் பொத்தி கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர், காதுகளில் இருந்த கம்மல்களை அறுத்து எடுத்துக் கொண்டு, இருவரும் வீட்டின் பின்புற கதவை திறந்து பைக்கில் தப்பினர்.</p><p>இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை 48 மணி நேரத்தில் பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் திரிபாதி பாராட்டினார்.</p><p>குற்றவாளிகள் சிக்கியது எப்படி?</p><p>யாஸ்மின் கணவர் லியாகத் அலியிடம் போலீசார் விசாரித்தபோது, மனைவி செல்போன் பயன்படுத்துவதில்லை, வீட்டில் தொலைபேசி இணைப்பும் கிடையாது, என்னை தொடர்பு கொள்வது என்றால் பி.சி.ஓ. மூலம்தான் பேசுவார் என்று கூறியிருந்தார். ஒரு தொழிலதிபர் வீட்டில் போன் இல்லாமல் இருக்குமா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.<br />விசாரணையில் ஒரு ரீசார்ஜ் கடையில் ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு அடிக்கடி யாஸ்மின் ரீசார்ஜ் செய்வார் என்பது தெரிய வந்தது.</p><p>இதையடுத்து அந்த செல்போன் நம்பர் மூலம் விசாரணையை முடுக்கினர். அந்த எண் யாஸ்மின் பெயரில் இல்லை, வேறொரு நபர் பெயரில் இருந்துள்ளது. அதை வைத்து விசாரிக்கும்போதுதான், சம்பவத்தன்று கோபிநாத் பேசியிருப்பதும், அடிக்கடி அவர் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் வீட்டில் சென்று போலீசார் மடக்கினர். அப்போது யாஸ்மின் செல்போனையும், இவர்கள் எடுத்துச் சென்று உடைத்து தூள், தூளாக்கி போட்டதும் தெரிந்தது. அந்த செல்போன் பாகங்களையும் போலீசார் கைப்பற்றினர்.</p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-20417646126188280922011-12-16T21:41:00.000-08:002011-12-16T21:42:20.518-08:00PDF கோப்புகளை Edit செய்வதற்கு « குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? » PDF கோப்புகளை Edit செய்வதற்குPublished December 17, 2011 அடோப் நிறுவனம் வரையறை செய்து வழங்கும் போர்ட்டபிள் டாகுமெண்ட் போர்மட்டில்(PDFPortable Document Format) கோப்பு ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல.</p>ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும்.</p>இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல பி.டி.எப் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.</p>பி.டி.எப் போர்மட் பல ஆண்டுகளுக்கு முன்பு அடோப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுவதற்கு அதன் சிறப்பியல்புகளே காரணம்.</p>ஒரிஜினல் டாகுமெண்ட்டின் அனைத்து சிறப்பு இயல்புகள், போர்மட்டிங் அம்சங்கள் அனைத்தும் பி.டி.எப் போர்மட்டிலும் அப்படியே காட்டப்படுகிறது.</p>டெக்ஸ்ட், இமேஜ், மல்டிமீடியா மற்றும் பல அம்சங்கள் பி.டி.எப் போர்மட்டிலும் உயிரோட்டத்துடன் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுச்சொல் கொண்டு ஒரு பி.டி.எப் கோப்பை பாதுகாக்கலாம்.</p>எந்த ஒரு இயங்குதளத்திலும் இந்த பி.டி.எப் போர்மட்டில் உள்ள கோப்பைக் காண முடியும். இந்த கோப்பை எடிட் செய்திட ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.</p>1. பி.டி.எப் எடிட்(PDF Edit): இது ஒரு ஓப்பன் சோர்ஸ் மற்றும் மிகக் குறைவாக இடம் பிடிக்கும் புரோகிராம். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள விஷயங்களை மாற்றி அமைக்கவும், அப்படி அமைத்த மாற்றங்களுடன் கோப்பை சேவ் செய்திடவும் இந்த புரோகிராம் வழி தருகிறது.</p>இந்த தொழில் நுட்பம் தெரிந்த பயனாளர்கள், இதில் கிடைக்கும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ்(GUI Graphical User Interface) வசதியைப் பயன்படுத்தி, பி.டி.எப். ஆப்ஜக்ட்களையும் மாற்றி அமைக்கலாம்.</p>இந்த புரோகிராமினை விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் இயங்குதளத்தில் இயங்கும் கணணியில் இயக்கலாம்.</p>தரவிறக்க சுட்டி</p><p> </p> Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-30785597220252375452011-12-16T00:50:00.000-08:002011-12-16T00:50:00.451-08:00கொட்டாவி விடுவது ஏன் தெரியுமா? « காதலித்துப்பார் அசைவ உணவால் ஏற்படும் தீமைகள்! » கொட்டாவி விடுவது ஏன் தெரியுமா?Published December 16, 2011 ஒருத்தர் ஓவரா கொட்டாவி விட்டு கொண்டே இருந்தால் என்ன நினைப்பீர்கள்? அவர் நாம் சொல்வதை கவனிக்கவில்லை, அல்லது அவர் தூக்கக்கலக்கத்திலோ, சோர்விலோ இருக்கிறார் என்று தானே நினைப்பீர்கள்!!?உங்கள் நினைபெல்லாம் தவறாக இருக்கலாம், என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி ஒன்று. கொட்டாவியை தூக்கக்கலக்கம் மற்றும் சோர்வுடன் மட்டும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய மூளை ரொம்ப சூடாக இருக்கிறது’ என்பதன் அறிகுறி அது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.பேராசிரியர் Andrew தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் நடந்த விரிவான ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கபட்டது . ப்ராண்டியர்ஸ் எனும் மருத்துவ நூல் இந்த ஆராய்ச்சி குறித்து விரிவாக பேசுகிறது. நமது மூளை சூடாகும் போது அதை குளிரச் செய்ய என்ன செய்யலாம் என உடல் யோசிக்கிறது. எனவே அது கொட்டாவி மூலம் நிறைய காற்றை உள்ளே செலுத்தி மூளையை குளிர வைக்க முயல்கிறது என்பது தான் இவர்களுடைய கண்டு பிடிப்பின் சாராம்சம் . குளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி விடுவதன் காரணம் இது தானாம். அதெப்படி குளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி? வெயில் காலத்தில் தானே மூளை அதிகம் சூடாகும்? அப்போது தானே அதிகம் கொட்டாவி தேவைப்படும்? என்று தானே நினைகிறீர்கள்?ஆராய்ச்சி என்ன சொல்கிறதென்றால், நமது உடலுக்கு வெளியே உள்ள கற்று குளிரை இருக்கும் போது தான் அது மூளையை குளிர செய்ய முடியும். எனவே தான் குளிர் காலத்தில் அத்திட கொட்டாவி மூலம் அதிக குளிர்காற்றி உடல் உள்வாங்குகிறது. வெயில் காலத்தில் கொட்டாவி விட்டால் மூளை மேலும் அதிகள் வெப்பமடையும் ஆகையால் உடல் அதை அனுமதிக்க மறுத்து விடுகிறது. உடலின் தன்மைக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் கொட்டாவி வருகிறது எனும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் ஒரு புதிய விஷயமாக கருதப்படுகிறது. நோய்களுக்கான மருத்துவ விளக்கத்துக்கும் இந்த ஆராச்சி பயன்படுமென கூறப்படுகிறது .குறிப்பாக M.N.T எனப்படும் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் கொட்டாவியை வர வைக்கும். அந்த நோயாளிகளின் மூளை அதிக வெப்பமாக இருப்பது கூட இதன் காரணாமாக இருக்கலாம் எனும் கோணத்தில் ஆராய்ச்சிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு வாசல் திறந்து வைத்திருக்கிறது. எது எப்படியோ, அடித்தவாட்டி யாராச்சும் கொட்டாவி விட்டா! டென்ஷன் ஆகதிங்க! அவருக்கு மூளை சூடா இருக்கின்னு பரிதாபபடுங்க! Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2087205338475290087.post-90838428724641005862011-12-16T00:45:00.001-08:002011-12-16T00:45:54.054-08:00எலிசபெத் டெய்லரின் நகைகள் ரூ 580 கோடிக்கு ஏலம் « இங்கிலாந்தில் அதிகம் விபசாரத்தில் ஈடுபடும் மாணவிகள்! அதிர்ச்சி எலிசபெத் டெய்லரின் நகைகள் ரூ 580 கோடிக்கு ஏலம்Published December 16, 2011 பிரபல ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர்இ 79 வயதில் மரணமடைந்தார். எனினனும் பகழ் என்னும் மறையவில்லை, அவர் பயன்படுத்திய முத்துக்கள், வைரங்கள் இந்திய நகைகள் போன்றவற்றை அமெரிக்காவை சோ்ந்த ஏல நிறுவனம் ஒன்று ஏலம் விட்டது. சுமார் 4 மணிநேரம் நடந்த ஏலத்தில் எலிசபெத் டெய்லரின் நகைகள் மட்டும் 2 மணிநேரம் ஏலம் விடப்பட்டன.</p>33 கேரட் வைர மோதிரம், பிரஸ் லெட், முத்து மாலை என அவருடைய 80 வகையான நகைகள் ஏலம் விடப்பட்டது மொத்தம் ரூ. 580 கோடிக்கு விற்பனையானது. இது எதிர்பார்த்ததை விட ரூ.100 கோடி அதிகமாகும். திருமணம் மற்றும் விவகாரத்துக்கு பெயர் பெற்ற நடிகை எலிசபெத் டெய்லரை இரண்டு முறை திருமணம் செய்த ரிச்சர்டு பர்டன் பரிசளித்த இரண்டு நகைகளும் ஏலத்தில் இடம் பெற்றன. ரிச்சர்ட் பார்டன் அவரது சக நடிகராவார். இந்த நகைகளில் அநேகமானவை மைக் டொட் வழங்கியவை. அவருடைய ஏழு கணவன்மார்களில் அவர் மைக் டொட்டை மட்டுமே விவாகரத்து செய்யவில்லை. அவர்கள் இருவரும் திருமணம் செய்து ஒரு வருட காலத்துக்குள் டொட் இறந்து விட்டார்.</p>அவரிடம் இருந்த நகைகளின் தொகுப்பு உலகப் புகழ் பெற்றவை ஆகும். 33.19 கேரட் எடை உள்ள வைரத்தையும் இவர் வைத்து இருந்தார். அது எலிசபெத் டெய்லர் வைரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இதன் மதிப்பு மட்டும் ரூ. 12 கோடியே 50 இலட்சம் ஆகும்.</p>இதே எலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த 55 கேரட் (203 கிரேய்ன்) முத்து மாலையும் ஏலம் விடப்படடது அது ஒரு கோடியே 20 லடசம் ரூபாய்க்கு ஏலம் போனது இங்கிலாந்து ராணி மற்றும் ஸ்பாணிஸ் அரசிகள் இந்த முத்து மாலையை பயன்படுத்தினார்கள் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.</p><br /></p> Unknownnoreply@blogger.com0