This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, August 22, 2011

இராணுவத்தளபதியின் மனைவியின் அராஜகம்: படையினர் குளப்பம்

சிறிலங்கா இராணுவத்தினருக்குக் கட்டளை இடுபவர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவா? அல்லது அவரது மனைவியா? என படை தரப்பினர் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமக்குக் கட்டளை இடுபவராகவும் தமது நிர்வாக நடவடிக்கைகளைக் கவனிப்பவராகவும் இராணுவத் தளபதியின் மனைவியான மஞ்சுலிகா அருண விஜய

சூரியவே தற்போது செயற்படுகிறார் எனவும் அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவியாகச் செயற்படும் அவர், தற்போது இராணுவ நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். தண்டனை பெற்ற தனக்குத் தேவையானோரை மன்னிக்கும் படியும் தனக்குப் பிடிக்காதவர்களை தண்டிக்குமாறும் அவர் உத்தரவிடுகிறார்.

உயர்மட்ட படை அதிகாரிகளை தம்ச (நீ) பளயங் (போடா) மே வரேன் (இங்கே வாடா) என அதிகார மமதையில் தரக்குறைவாகப் பேசுகிறார் எனவும் படைதரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தான் ஏதாவது படை முகாமுக்குச் சென்றால் தனக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவு வழங்கப்பட வேண்டுமெனக் கேட்கிறார். அத்துடன சேவா வனிதா பிரிவினால் நடத்தப்படும் பாலர் வகுப்புகளில் கல்வி பயிலும் இராணுவச் சிப்பாய்களின் பிள்ளைகளிடமிருந்து ஒரு தவணைக்கு என கட்டணமாகத் தலா 600 ரூபா அறவிடுகிறார் எனவும் திருமதி ஜயசூரிய மீது படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச செற்பாட்டுத் தகவல்கள் இலங்கையிடமாம்

பிரித்தானியாவில் இயங்கும் நிறுவனம் ஒன்றிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதே நியாயாதிக்க சபையில் முறையீடு ஒன்றைச் செய்யும் வகையிலேயே இந்தத் தவகல்களைப் பெற்றுக் கொண்டிருக்கலாமென் ஏசியன் ரியூ செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச ரீதியிலான குற்றச் செயல்கள் குறித்தே இந்த முறைப்பாட்டினை இலங்கை செய்யலாம் என எதிர்பார்க்கிறது.

இது இவாறிருக்க, நிதிச்சேகரிப்பு ஆயுதக்கொள்வனவு உட்பட்ட தமது குற்றச்செயல்களை பெரும்பாலும் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஜேர்;மனி, டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி,ஸ்பெய்ன்,  அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுலைப் புலிகள் இயக்கத்ததின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதியான அரசியல் தீர்வே நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் : மன்னார் ஆயர்

இலங்கையில் போரினால் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை ஆட்சியாளர்கள் உணர்ந்து, நீதியான அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்க முன்வந்தாலே நாட்டில் நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தையும் ஐக்கியத்தையும் எதிர்பார்க்க முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அருட் தந்தை ஜிம் பிரவுண் காணாமல் போய் 5 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், அவரது நினைவாக மன்னாரில் சனிக்கிழமை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாக ஆயர் அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்துக்குப் பூசைக்காக சென்றிருந்த போது, கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அருட் தந்தை ஜிம் பிரவுணும் சக ஊழியரும் காணாமல் போனார்கள்.

அவரது நிலைமையைக் கண்டறிவதற்காக யாழ் ஆயர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எவ்வித பலனும் கிட்டவில்லை. அவர் காணாமல் போன சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிவதில் அதிகாரிகளிடத்தில் தொடர்ச்சியாக அசமந்தப் போக்கே காணப்பட்டு வந்ததாகவும் மன்னார் ஆயர் தெரிவித்தார்.

ஆண்டகை அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் இந்தப் பிரச்சினையை அணுகி,மக்கள் சுதந்திரமாக நடமாடும் சூழலை உறுதிப்படுத்த நாட்டின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த போர்க் காலத்தில், காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பிலும் இதுதான் நிலைமை.

ஐநா குழுவோ அல்லது வேறு எந்த தரப்போ யுத்த காலத்து சம்பவங்கள் பற்றி சுட்டிக்காட்டும் விடயங்களில் என்ன உண்மை இருக்கிறது என்பதை கண்டறிவதற்கு அதிகாரிகள் முயற்சிக்காமல் அவற்றை பொதுவாக நிராகரித்துவிடும் போக்கு கூடாது.

முன்னைய ஆணைக்குழுக்களால் எவ்வித பிரயோசனமும் கிடைத்திராத நிலையில், தற்போதைய நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகளும் அவ்விதம் பலனளிக்காது போய்விடக்கூடாது.

கற்றறிந்த பாடங்கள் பற்றி ஆராயும் ஆணைக்குழு மூலம் நன்மை கிட்டும் என்ற நம்பிக்கையுடனேயே அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம். நாட்டை ஆள்பவர்களிடத்தில் மன ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு அவர்களின் கவனம் மக்கள் பக்கம் திரும்பினால் மட்டுமே உண்மையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியும்” என்றார்

Sunday, August 21, 2011

இந்திய உளவுத்துறையின் வலையில் சிக்குமா நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் .

இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகள் வருகின்ற மாதம்  30 ஆம்  திகதி ஒரு மாநாட்டை  ஏற்பாடு செய்துள்ளனர் இதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி ஒருவர் தொடக்கி வைக்கிறார் என்று  இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகள் அறிவித்துள்ளனர் . ஆனால் நாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமைமைய உறுபினர்களை கேட்ட பொழுது  எமக்கும் இந்த மாநாட்டுக்கும் எந்த  தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக  அறிவித்து விட்டனர் .

தற்போது புலத்தில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதி நிதிகளை  தொடர்புகொண்டு நாம் நாம் தமிழர் இயக்க ஏற்பாட்டில் தான் நடத்துகின்றோம்  நீங்கள்  கண்டிப்பாக வரவேண்டும் என்று ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் . அதே நபர் கனடாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதி நிதியை தொடர்பு கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்திக்கு பொறுப்பாக இருக்கும் சரஸ்வதி அம்மா ஒரு தெலுங்கர்அவரை மாற்றவேண்டும் என்றும் குறிபிட்டுள்ளார். இந்த மாநாட்டை நடத்துபவர்கள் யார் இவர்களின் குறிக்கோள் என்ன என்பதை பற்றி கிழே உள்ள செய்தி தொகுப்பில் இணைத்துள்ளோம் .  இவர்கள் நடத்தும்  மாநாட்டுக்கும் எமக்கும் எந்த தொடர்பு இல்லை என்று உடனடியாக மறுப்பு அறிக்கை விடுபம்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நாம் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் .

கொழும்பு அரசத்தலைவர் மகிந்தா கைகளுக்கு வந்த பின்பு, எல்லாவற்றிலும்  தமிழருக்கு எதிரான “சதி” என்பது நாளொரு வண்ணமும் அரங்கேறி வருகிறது. அதில் ” டக்லஸ்  தேவானந்தாவை” மெல்ல,மெல்ல தனது வலைக்குள் இழுத்து, கடைசியில் “தேவானந்தா” தனது ஈ.பி.டி.பி சின்னத்தில் கூட நிற்கவிடாமல்,, ராஜபக்சேவின் “வெற்றிலை” சின்னத்தில் நிற்கவைத்த “தந்திரம்” மகிந்தாவின் வெற்றியாக  சிங்களவெறியர்களால் கருதப்படுகிறது. “துரோகி கருணாவை” முழுமையாக தனது கட்சியுடன் இணையவைத்ததில் மஹிந்தாவென்றதாக அதே சிங்கள இன வெறியர்கள் கூறிவருகிறார்கள்.புலிகளை  “நாகப்பாம்பு” என்றும் அதை அழித்து விட்டதாகவும், இனி “சாரைப்பம்புகளை” அழித்திவிடலாம் என்றும் சிங்கள வெறியர்களான மகிந்தா கும்பல் கூறிவருகிறது. அவர்களது அடுத்த “களம்” இந்தியாவிற்குள் இருக்கும் ” ராஜபக்சே எதிர்ப்பாளர்களை” அழிப்பதுதான் என்றும் கூறுகிறார்கள். அதற்கு தங்களுக்கு இந்திய அரசின் “உளவுத் துறையினர்” முழுமையாக் உதவி வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

அப்படி இந்தியாவில் “சதி வேலைகளை” செய்ய  சில “தமிழ்நாட்டு ஆட்களை” இந்திய நடுவண் அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த “தமிழ்நாட்டு ஆட்கள்” பட்டியல் இப்போது கிடைத்துள்ளது. அவர்களில் முதன்மையாக “நகைமுகன்” வருகிறார். அவர் முதலில் ” நடுவண் அரசின் அதிகாரி”யாக இருந்தார். அதை ராசினாமா செய்துவிட்டு, சாராய உடையார் என்று புகழ் பெற்ற ராமசாமி உடையார் நடத்திய நிறுவனத்தில் மேலாளராக இருந்தார். அப்போது ” நமது நிருபர்” என்ற வார ஏட்டை, “நெப்போலியன் பால்ராஜ்” என்பவர் நடத்தி வந்தார். அது 1989  ஆம் ஆண்டு. அந்த இதழில் “நகை முகன்” நண்பராக இருந்துவந்தார். அவ்வப்போது எழுதியும் வந்தார். அப்போது திமுக அரசு கருணாநிதி தலைமையில் நடந்து வந்தது. அந்த அரசை கலைக்க நாடவன் அரசில் இருந்த காங்கிரஸ் நினைத்தது. நெப்போலியன் பால்ராஜ் வசம் ” அசாம் மாநில” போராளிகள் என்று சிலர் வந்து தங்கி இருந்தனர். அவர்களை “உல்பா” தீவிரவாதிகள் என்று அவர்கள் அழைத்துக் கொண்டார்கள். அந்த “உல்பா” தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது திமுக அரசு என்று ” பெரிய எழுத்துகளில் ” தங்களது இதழில் “நகைமுகன்” அச்சடித்து வெளியிட்டார். அதைவைத்து திமுக அரசை “கலைக்கவேண்டும்” என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். அதேபோல நடுவன் அரசு கருணாநிதி அரசை கலைத்தது. கருணாநிதி அப்போது” நகைமுகனை” அடையாளம் கண்டு அவர் “ஐ.பி. ஒற்றர்” என்று அறிவித்தார். அதாவது நாடவன் அரசு நடத்தும் உளவு நிறுவனத்துக்கு “ஐ.பி.” என்று பெயர். அதன் விளக்கம் ” உளவுத் துறை” என்பதே.அப்போதிலிருந்து “நகைமுகன்” ஐ.பி. காரர்களுக்கு விசுவாசமாக இருந்து கொண்டே பல “கட்டை பஞ்சாயத்துகளை  செய்து வந்தார்.

1991 இல் ராஜிவ்காந்தி கொலைக்கு பிறகு,பலரும் தமிழ்நாட்டில் குற்றம் சாட்டப்பட்ட போது, திராவிடர் கழகத்தில் அப்போது இருந்த “பாலகுரு” என்பவரும் “ஜெயின் ஆணையம்” கொடுத்த அறிக்கையில் அவரது பெயர் இருந்ததை வைத்து, நாடவன் அரசின் உளவுத் துறையினர் கொடுத்த அழுத்தத்தில் அவர்களுக்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அவர் “பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்ததும், அதில் ஒரு தொண்டர் கொலை செய்யப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்டதும், அங்கிருந்து வெளியேறினார் என்பதும்” தனிக் கதை. 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் ஒரு ‘போர் நிறுத்தம்” புலிகளால் அறிவிக்கப்பட்டு இரண்டாண்டு கழித்து சிங்களத்தால் ஏற்கப்பட்டு கையெழுத்தான நிலையில், தமிழகத்தில் இருந்து பலரும் ஈழம் சென்று வந்தனர்.அப்படி சென்றதில் ஒருவர் “தமிழா, தமிழா பாண்டியன்” என்ற ஊடகக்காரர். இப்போது 2010 ஆம் ஆண்டு மகிந்தாவின் உளவுத்துறையும், இந்திய உளவுத் துறையும், ஒரு திட்டமிட்டது. அதில் “கருணா மூலம் சரணடைந்த கேணல் ராம் குழுவினரை” பயன்படுத்தி அவர்கள் அடுத்த “ஆயுதப் போராட்டத்திற்கு” தயார் செய்வதாக ஒரு “கட்டுக் கதையை” பரப்ப எண்ணினார்கள்.

அதற்காக இந்தியாவிலிருந்து சிலர் இலங்கை வரவேண்டும் என்றும், அவர்கள் “கேணல் ராம் குழுவினரை” சந்தித்ததாக பரப்புரை செய்யவேண்டும் எனவும் திட்டமிட்டனர். அதற்கு இந்திய உளுத் துறையினர், “பாலகுருவையும், தமிழா, தமிழா பாண்டியனையும், நகைமுகனையும்” அனுப்பி வைத்தனர். அவர்கள் சென்று வந்ததை ” ஹம்சாநண்பர்” ஜாபர் சேட் மூலம் “நக்கீரன்” இதழில் வெளியிட  வைத்தனர்.அதன்மூலம் “பிரபாகரன் இறந்துவிட்டார் எனவும், ராமு ஆயுதப்போராட்டத்தை நடத்துகிறார்” எனவும் ஒரு கருத்தை பரப்ப இரண்டு நாட்டு உளவுத் துறைகளும் திட்டமிட்டன. அதில் அவர்களுக்கு பல வகைகளில் பிளான் உண்டு என்றும் கூறினர். அடுத்து “பாலகுரு மூலம்” போர் நடக்கும் சூழலிலேயே ஒரு மாணவர் பேரவையை ஏற்படுத்தி அதன்மூலம் “தமிழ்நாட்டில் ஈழப் பிரச்னைக்கு” போராடும் அமைப்பாக தனைகளை காட்டிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது “இந்து மத வெறியர்களை” நம்பி மட்டுமே ஈழத் தமிழர் பிரச்னையை அகில இந்திய அளவில் எடுக்க முடியும் என்று பரப்பி அதன்மூலம், “முஸ்லிம்கள்” தமிழர்களுக்கு ஆதரவாக வருவதையும், “கிறித்துவர்கள்” தங்களையும்  தமிழர்களாக கருதி வருவதையும் உடைக்க இரண்டு அரசுகளும் “சதி” செய்வதாக தெரிகிறது.  சிங்களம் ஏற்கனவே தனது “சாதியின் மூலம்” தமிழ் பேசும் முஸ்லிம்களை ஈழத் தமிழர்களுக்கு எதிராக ” நிறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளதால், அதையே இப்போது இந்தியாவில் பயன்படுத்த சொல்லி உலவுத்துறைகளுக்குள் பேசி, முடிவு செய்துளார்கள். அதுவே அங்கு இப்போது அமுலாகிவருகிறது. அதில் சமீபத்தில் பெங்களூரில் ஒரு மாநாட்டை கூட்டி அதில், கர்நாடக சிறிராம் சேனாவின் பிரமோத் முத்தாலிக் தலைமையில் செயல்பட முடிவு செய்துள்ளனர். இதுவும் உளவுத்துறைகளின் ஏற்பாடே. அதில் மேற்கண்ட ஒவ்வொரு நபர்களும் இறங்கி பணியாற்ற உளவுகள் பணித்துள்ளன.

தொடரும்-

Saturday, August 13, 2011

வெளியக தலையீடுகளற்ற சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு சீனா ஆதரவு

எந்தவொரு வெளியகத் தலையீடுகளும் இன்றி நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீனா ஆதரவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு நாள் பயணமாக சீனா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடமே சீனத் தலைவர்கள் இந்த வாக்குறுதியை அளித்துள்ளனர்.

நேற்று முன்தினம் சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்துப் பேசிய சிறிலங்கா அதிபர், நேற்று சென்சென் நகரிலுள்ள விடுதி ஒன்றில் சீன அதிபர் ஹுஜின்டாவோவை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்புகளின் போது இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது தொடர்பாகவும், பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்தும், போருக்குப் பின்னர் சிறிலங்கா எதிர்கொள்ளும் வெளியக அழுத்தங்கள் குறித்தும் பேசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போதே வெளியக அழுத்தங்களின்றி நல்லிணக்க முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்வதற்கு சீனா ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக மேற்குலக நாடுகள் வலியுறுத்தும் போர்க்குற்ற விசாரணை முயற்சிகளுக்கு எதிராக சிறிலங்காவுக்கு கைகொடுக்க சீனா தயாராக இருப்பதையே இவ்வாறு சூசகமாக வெளிப்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

அதேவேளை நான்கு நாள் பயணமாக சீனா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை கொழும்பு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, August 12, 2011

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் சிறிலங்காவை விட்டு வெளியேறி உள்ளார்

யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட இணைப்பாளரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தினாலேயே தான் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளதாக அவர் மின்னஞ்சல் மூலம் இந்தியாவின் இந்து நாளேட்டுக்கு கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் இருந்து தன்னை சட்டவாளர்கள் விடுவிக்கும் வரை அமெரிக்காவில் பணியாற்றப் போவதாகவும் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.

தான் நிச்சயம் யாழ்ப்பாணம் திரும்புவேன் என்றும் ஏனென்றால அது தனது சொந்த விடு என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேரதலில் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற தேர்தல் முறைகேடுகள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

பேராசிரியர் ரட்ணஜீவன் கூலை பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்க டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைளை எடுத்து வந்த நிலையிலேயே அவர் சிறிலங்காவில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.

சிறிலங்கா: போரின் பின் இரண்டாண்டுகள் கழிந்தாலும்..?

சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகள் இன்னமும் நடந்து முடிந்த யுத்த அழிவுகளை மீட்டிக்கொண்டேயிருக்கின்றன. அதாவது இந்த இடங்கள் தொடர்ந்தும் நரகமாகவே உள்ளன.

இவ்வாறு KRISHAN FRANCIS - Associated Press செய்தி நிறுவனத்திற்கு எழுதிய செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்கா தற்போது மீண்டும் உல்லாசப் பயணிகளின் சொர்க்கமாக மாறியுள்ளது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ் மக்கள் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகள் இன்னமும் நடந்து முடிந்த யுத்த அழிவுகளை மீட்டிக்கொண்டேயிருக்கின்றன. அதாவது இந்த இடங்கள் தொடர்ந்தும் நரகமாகவே உள்ளன.

இராணுவ ஆக்கிரமிப்பு, தமது அன்பிற்குரியவர்களை இழந்தமை என இந்த மக்கள் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

சிங்களவர்களால் ஆளப்படுகின்ற சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தற்போது தோற்கடிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற குருதி தோய்ந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் விளைவாக பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளதுடன், காணாமற் போன உறவுகளைக் கண்டுபிடித்து ஒன்று சேர்க்கும் எந்தவொரு முயற்சிகளும் இதுவரையில் எட்டப்படவில்லை.

பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வந்ததையடுத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கேற்ப இன்னமும் அரசியல் அதிகாரப் பகிர்வு செயற்படுத்தப்படவில்லை.

"சிறிலங்கா அரசாங்கமானது எந்தவொரு விட்டுக்கொடுப்புக்களையோ அல்லது ஈடுபாட்டையோ காட்டவில்லை" என யூலை மாதத்தில் வெளியிடப்பட்ட அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் சமாதானம் ஏற்பட்டிருப்பது போன்ற தோற்றப்பாட்டை உலகிற்குக் காட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கமானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதாகவும், அவர்களின் சிதறுண்ட வாழ்வை மீள ஒன்றுசேர்ப்பதற்கான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்வதாகவும் இதனால் தமிழ் மக்கள் பெரும் பயனுற்றுள்ளதாகவும் காட்டிக்கொள்கிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுற்றுலாத்துறை விடயத்தில் தனக்கென தனியிடத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக வானூர்திநிலையங்கள், கப்பற்துறைமுகங்கள், புதிய வீதிகள் போன்றவற்றை அமைக்கும் பணியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அத்துடன் இராணுவத் தலைமையகம் ஒன்று உள்ள இடத்தை மிக ஆடம்பரமான கடற்கரை விடுதியாக அமைக்குமாறு ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் கட்டளை பிறப்பித்துள்ளது.

ஆனால் வடபகுதியிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்துள்ளது.

முறிகண்டியில் உள்ள தனது வீடானது இராணுவத்தினர் வசம் உள்ளதால் பாடசாலை நடைபெறும் காலப்பகுதியில், இரவுநேரங்களில் பாடசாலையில் படுத்துறங்குவதாக அதிபர் ஆசிர்வாதம் சூசைநாதர் தெரிவித்துள்ளார்.

இவரது குடும்பத்தினர் முறிகண்டியிலிருந்து 50 மைல்கள் தொலைவில் இருப்பதால் வார இறுதியில் மட்டுமே தனது குடும்பத்தவர்களிடம் செல்ல முடிவதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

படையினரின் வசம் வீடுகள் உள்ளதால் இந்தப்பகுதியில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறிடங்களில் வாழ்வதாகவும், விரைவில் இந்த மக்களின் வீடுகள் கையளிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும் அதற்கான எந்தவொரு முயற்சிகளும் நடைபெறுவதாகத் தெரியவில்லை என அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

"எனது வீட்டில் 106 தென்னை மரங்கள் இருந்தன. ஆனால் தற்போது தேங்காயை நான் பணம்கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனது வீட்டை ஒப்படைப்பதாக கடந்த இரு ஆண்டுகளாக இராணுவத்தினர் கூறிக்கொண்டேயுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்தும் எனது வீட்டிலேயே வசித்த வருகின்றனர்" என 44 வயதான சூசைநாதர் தொலைபேசி மூலம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

யுத்தம் உக்கிரம் பெறுவதற்கு முன்னர் விசுவலிங்கம் கோமதி என்பவர் கிளிநொச்சியிலிருந்த தனது வீட்டில் கோழி மற்றும் கால்நடைகளை வளர்த்து அதில் வருமானம் பெற்று வாழ்ந்தார்.

தற்போது புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்பதற்காகவும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை எதிர்நோக்குவதற்காகவும் தனது நகைகள் அனைத்தையும் அடைவு வைத்துள்ளதாகவும் 52 வயதான கோமதி தெரிவித்துள்ளார்.

"எமக்குச் சொந்தமான வீட்டை மட்டும் எம்மிடம் இராணுவத்தினர் கையளிக்க வேண்டும். அதை மட்டுமே நாங்கள் அவர்களிடம் கேட்கின்றோம்" என கோமதி தெரிவித்துள்ளார்.

தமது வீடுகளை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் அவற்றில் வடக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள பெரும்பான்மைச் சிங்களவர்களை குடியேற்றிவிடுவார்களோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

இவ்வாறான குடியேற்றங்கள் மூலம் தமிழர்களின் வலுவைக் குறைத்து சிறுபான்மைத் தமிழர்களிடமிருந்து எதிர்காலத்தில் தனித்தாய்நாடு என்ற கோரிக்கையானது புதிதாக எழாமல் தடுக்க முடியும் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் எண்ணப்பாடாகும்.

யுத்தத்தின் முன் தனியார்களுக்குச் சொந்தமாக இருந்த இடங்களை இராணுவத்தினர் தம் வசம் வைத்துள்ளதாக தமிழ் கொள்கை வகுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"நிரந்தரமாக இருக்கின்ற நோக்கிலேயே சிறிலங்கா இராணுவத்தினர் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இராணுவத்தினர் நிரந்தர முகாங்களை அமைக்கின்றனர். வடமாகாணத்தின் நிர்வாக அலுவல்களில் அதிகம் தலையீடு செய்கின்றனர்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மின்சார வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீதிகள் செப்பனிடப்படுகின்றன. சிறப்புச்சந்தைகள், வங்கிகள், இணையத்தளக் கடைகள் என்பன யுத்தம் இடம்பெற்ற பகுதிகளைச் சூழத் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் யுத்தத்தின் போது தமது வீடுகளை இழந்த மக்கள் தொடர்ச்சியாக கூடாரங்களிலும், சிறிய குடிசைகளிலும் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் பெரும்பாலான மக்கள் யுத்தத்தின் போது தமது உடைமைகளையும், குடும்பத் தலைவர்களையும் இழந்து வாடுகின்றனர். இதனால் இந்த மக்களின் வாழ்வு பெரும் வறுமை நிலைக்குட்பட்டதாகவே உள்ளது.

மறுபுறம், இராணுவ முகாங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. போரின் போது கொல்லப்பட்ட இராணுவ வீரர்களைக் கௌரவிக்கும் முகமாக, யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் காணப்பட்ட துயிலுமில்லங்கள் முற்றமுழுதாக அழிக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக கூடுகின்ற சிங்கள சுற்றுலாப் பயணிகளிற்காக சிறிலங்கா இராணுவத்தினர் உணவு விடுதிகளை அமைத்துள்ளனர்.

கடந்த மாதம் சிறிலங்காவின் வடபகுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் பெறுபேறானது, வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மற்றும் இணக்கப்பாட்டு முயற்சிகளிற்கான சாதகத்தைக் காட்டும் என சிறிலங்கா அரசாங்கம் நம்பியிருந்தது.

ஆனால் தற்போது ஆட்சியிலுள்ள கூட்டணியானது உள்ளராட்சி சபைத் தேர்தலின் போது வடக்கில் தோல்வியுற்றுள்ளது. 25 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் இத்தேர்தல் பெறுபேறானது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பிற்கும் மாறாக உண்மையான மக்கள் ஆணையை எடுத்துக் காட்டியது.
இணக்கப்பாடு மற்றும் போரில் பாதிக்கப்பட்டவர்களில் அதிக கரிசனையைக் காட்டுவதாக சிறிலங்கா அரசாங்கம் அடித்துக்கூறுகின்றது.

"துரித மீள்குடியேற்றம், பொருளாதார நடவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்படுகின்றது. வெளிப்படையாகப் பல தேவைகள் நிறைவேற்றப்படுகிறது" என ராஜபக்சவின் ஆலோசகரும் கொள்கை வகுப்பாளருமான றஜீவ விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினர் தனியார் நிலங்களை ஆளுகைப்படுத்தியுள்ளனர் என்பதை றஜீவ விஜேசிங்க மறுத்துள்ளதுடன், உண்மையில் தனியாருக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினர் தம்வசம் வைத்திருந்தால் அதற்கான நட்டஈடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான ஆனந்தி யுத்தத்தின் போது காணாமற் போன தனது கணவரான சின்னத்துரை சசிதரன் என்பவரைத் தேடிக்கொண்டிருக்கிறார். தமிழ்ப் புலிகளின் அரசியல் துறைத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய இவரது கணவர் மே 18,2009 அன்று இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

"தனது கணவர் சரணடையத் தயாராக இருக்கவில்லை. அவர் என்னை அனுப்பி விட்டு சயனைட் அருந்த முடிவெடுத்திருந்தார். ஆனால் நான் தான் அவரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் எஞ்சியுள்ள வாழ்வை எம்முடன் அவர் கழிக்க வேண்டும் என்பதால் அவரை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்" என ஆனந்தி உள்ளம் நெகிழ்கிறார்.

எழிலன் என நன்கறியப்படும் இவரது கணவர் மற்றும் சரணடைந்த ஏனைய புலி உறுப்பினர்களும் இவர்களது சரணடைவிற்கு மத்தியஸ்தம் வகித்திருந்த கத்தோலிக்க மதகுரு ஆகியோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாகத் தெரியாது என ஆனந்தி தெரிவித்துள்ளார்.

தனது கணவர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியோரிடம் தான் தெரிவித்த போதிலும் இதுவரையில் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என ஆனந்தி தெரிவித்தார்.

உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது தம்மிடம் சரணடைந்த 11000 முன்னாள் புலி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களைத் தாம் மீளவும் அவர்களது குடும்பத்தவர்களுடன் இணைத்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், சரணடைந்த தமிழ்ப் புலிகளில் பெரும்பாலானவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது கூடத் தமக்குத் தெரியவில்லை என அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

காணாமற் போன தமது உறவுகளை வைத்தியசாலைகள், முகாங்கள் மற்றும் தடுப்பு நிலையங்கள் போன்றவற்றில் தாம் தேடியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

புலிகளால் பலவந்தமாகப் படையில் இணைக்கப்பட்ட தனது மகன் மற்றும் மகள் தொடர்பான செய்திகளை யுத்தம் முடிவுற்ற காலத்திலிருந்து தான் இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை என 07 பிள்ளைகளின் தாயாரான சந்தனா முருகையா தெரிவித்துள்ளார். "யுத்தத்தின் போது அவர்கள் உயிர் தப்பினார்களா என்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது" என முருகையா தெரிவித்தார்.

உலகில் மிகப் பலம் வாய்ந்த அமைப்புக்களில் ஒன்றாக விளங்கிய தமிழ்ப் புலிகள், சிங்களப் பெரும்பான்மையினரால் ஆளப்படும் சிறிலங்கா அரசாங்கத்தால் சிறுபான்மைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஓரங்கட்டப்பட்டபோது தமிழர்களுக்குத் தனிநாடு வேண்டி ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தனித்தாய்நாடு கோரிப் போராடிய புலிகள் அமைப்பானது சனநெருக்கடி மிக்க தொடருந்து நிலையங்களில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டனர்.

அதேவேளையில், சிறிலங்காப் படைகள் போர் வலயங்களில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் மீதும், வைத்தியசாலைகள் மீதும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிராயுதபாணிகளாக இருந்த தமிழ்க் கைதிகள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சிகள் பிரிட்டனின் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் காண்பிக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தில் பங்குகொண்ட இருதரப்பினரும் பல போர்க்குற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கடந்த ஏப்ரலில் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழு அறிக்கையில் சாட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் இக்குற்றச்சாட்டுக்களைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்ற போதிலும், மே 2009 இல் இடம்பெற்ற இறுதிப் போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை முதல் முறையாக கடந்த வாரம் சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகக் கொடூரமான யுத்தம் இடம்பெற்ற பின்னர் தற்போது இதயசுத்தியுடனான உள்ளார்ந்தமானதொரு மூலோபாயமானது உண்மையான மீளிணக்கப்பாட்டை உருவாக்கத் தேவையாக உள்ளது என தேசிய சமாதானப் பேரவையின் ஆய்வாளாரான ஜெகன் பெரேரா தெரிவித்துள்ளார். இராணவ ஆட்சி என்பது இதற்குப் பொருத்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பாக நீதியானதொரு முடிவு அறிவிக்கப்படவேண்டும். அத்துடன் அவர்களுக்கு என்ன நடந்ததென்பது தொடர்பாகவும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும. இது தொடர்பாக தமிழ்க் கொள்கை வகுப்பாளர்கள் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த போதிலும் சிறிலங்கா அரசாங்கம் இது தொடர்பான பதிலை இன்னமும் வழங்கவில்லை" என பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

Thursday, August 11, 2011

அமெரிக்கா மீது குற்றம்சாட்டுகிறது சிறிலங்கா

சிறிலங்கா அரசினால் கடந்த மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இது தமக்கு வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்துக்கு போதுமானளவு நிரூபித்து விட்டோம் என்றும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு கேள்விக்கும் போதுமானளவு பதில் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ள அவர், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படவுள்ள பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவுக்கு நேரடியாகப் பதிலளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாம் பலமுறை பதில் கூறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா வழங்கியுள்ள எச்சரிக்கையை அரசாங்கம் அற்பமானதாக கருதவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல, அமெரிக்காவின் அறிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுவது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் : மதநல்லிணக்கவாதிகள்

சிறிலங்கா அரசானது நாட்டின் நலன் கருதி கடந்த காலங்களில் தான் விட்ட தவறுகளின் ஊடாகக் கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டு தனது மனப்போக்கை மாற்றிக் கொள்வதுடன் சமூகத்திலிருந்து விலக்க முடியாத மதத் தலைவர்களின் ஈடுபாட்டையும் உள்ளடக்கி தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

'நாட்டில் நிலையான சமாதானத்தை நோக்கிய இணக்கப்பாட்டு முயற்சிகளில் எதிர்காலத் தலைவர்களின் பங்களிப்புக்கள்' என்ற தலைப்பில் சிறிலங்காவில் உள்ள கரித்தாஸ் நிறுவனம் இணைந்த Sedec ல் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
தற்போது ஆட்சியிலுள்ள மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மதநல்லிணக்கவாதிகள், புத்தபிக்குகள், மதகுருக்கள், சமூக அமைப்புக்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் அரசியல் தலைவர்களின் குறிக்கோள்கள், தமிழ் மக்களுக்கு கௌரவத்தை வழங்குதல், தேசிய மொழி தொடர்பாக மீள ஆராய்தல், வடக்கில் தற்போது நிலவும் இராணுவ ஆட்சியை நீக்குதல் போன்றன இக்கருத்தரங்கின் பேசுபொருட்களாக அமைந்திருந்தன.  

சிறிலங்காவில் நிலவுகின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டிய விடயம் என்பதை இக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த அனைத்து அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டனர்.

"சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவருவதனை அடிப்படையாகக் கொண்டே இந்நாட்டின் எதிர்கால செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்நாட்டையும் இந்நாட்டு மக்களையும் முன்னேற்றுவதற்கான பாதைகளை வழிவகுப்பதாக அனைத்த மதங்களின் செயற்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும்" என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜெயசேகர இக்கருத்தமர்வில் தெரிவித்தார்.

"இவற்றை அடைவதற்காக கடந்த காலங்களில் விட்ட தவறுகளை அடையாளங் கண்டுகொள்ளவேண்டும். மாறாக அவற்றை மூடிமறைத்துவிடக்கூடாது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தனது கருத்துப் பகிர்ந்து கொண்டார்.

"நாங்கள் புதியதோர் யுகத்தில் காலடி வைக்க வேண்டுமாயின் நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். இதற்கு மாறாக நாம் தனியொரு கட்சி என்ற அடிப்படையில் செயற்படக் கூடாது" எனவும் இக்கருத்தரங்கின் போது கருத்து  வெளியிட்டிருந்த தமிழ் அரசியல்வாதி தனது கருத்தின் ஊடாக சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிற்கு செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

"நாங்கள் போரை மட்டுமே வென்றிருக்கின்றோம். உண்மையான சமாதானத்தை இன்னமும் வென்றெடுக்கவில்லை. எமது தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே உள்ளது. அண்மையில் இடம்பெற்ற தேர்தலின் போது, தமிழர்களுக்கு எதிராகப் புதிய பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம். வடக்கு மற்றும் தெற்கில் வாழும் இளையோர்களுக்கு நாம் கொடுக்கின்ற செய்தி என்ன? இந்நாட்டில் தமிழ் மக்கள் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. இப்போதாவது நாம் அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கவேண்டும். தேசிய ஒருமைப்பாடு, சம உரிமை என்பன இல்லாத அபிவிருத்தி என்பது ஒரு கற்பனையே" என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்போரானது நிறைவுற்று இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட இங்கு வாழும் மக்களுக்கிடையில் மொழிப் பாகுபாடு நிலவுகின்றது. சிங்கள மொழியானது உத்தியோகபூர்வ மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் காணப்படுகின்றது. சிறிலங்காவின் அரசியல் உலகில் பயன்பாட்டில் உள்ள ஒரு மொழியாகவும் சிங்களம் மட்டுமே உள்ளது.

"மொழி என்பது அடிப்படையில் பெரிய பிரச்சினையாக உள்ளது. இது ஏனைய பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. தமிழர் ஒருவர் தனது உரிமைக்காகக் குரல் கொடுத்தால் அவர் பயங்கரவாதி எனக் கருதப்படுகிறார். அரசியல்வாதிகள் தமது பரிந்துரைகளை நடைமுறைக்கேற்ப முன்வைக்க வேண்டும்" என ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினரான சுஜீவா சேனசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரோ அல்லது அவரது ஆட்சியோ ஏதாவது தவறு விடும்பட்சத்தில் ஒருபோதும் விமர்சிப்பதில்லை என கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த கிறீஸ்தவ மற்றும் பௌத்த மதத் தலைவர்களை நோக்கி சேனசிங்க தெரிவித்துக் கொண்டார்.

சிறிலங்காவின் வடபகுதியில் வாழும் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளதாகவும், வடக்கில் பெருமளவில் காணப்படும் இராணுவத்தினராலும் அவர்களது ஆட்சியினாலும் அங்கு வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்திருப்பதாகவும், இதனால் இம்மக்கள் சொல்லொணத் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் யாழ் மறைமாவட்டத்தை சேர்ந்த மங்களராஜ் அடிகள்  சுட்டிக்காட்டினார்.

Wednesday, August 10, 2011

லண்டனில் வன்முறைகள் - கோத்தாபயவுக்கு சுவாரசியமாம்

லண்டனில் கலவரங்களை அடுத்து பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்- மோதலுக்குப் பிந்திய சூழலை பிரித்தானியா எவ்வாறு கையாளப் போகிறது என்று சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லண்டனில் ஏற்பட்டுள்ள கலவரங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், கட்டுநாயக்கவில் சிறிலங்கா காவல்துறையினர் வன்முறைகளைக் கையாண்ட விதத்தை விமர்சித்தவர்கள் லண்டனில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க மோதலை அடுத்து ஜேர்மனித் தூதுவர் சிறிலங்காவை அச்சுறுத்தும் அளவுக்குச் சென்றதாகவும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

லண்டனிலும் ஏனைய நகரங்களிலும் வசிக்கும் சிறுபான்மை இனத்தவரின் பாதுகாப்பை பிரித்தானிய அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் கோத்தாபய ராஜபக்ச.

அத்துடன் உலகின் ஏனைய பகுதிகளில் உள்நாட்டு அமைதியின்மையை ஊக்குவிக்கும் மூலோபாயம் ஆபத்தானது என்றும் அதையிட்டு கவனமாக இருக்க வேண்டும் அவர் பிரித்தானியாவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.