This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, August 28, 2011

கோலிவுட்டுக்கு நோ சொன்ன ஷ்ரேயா கோஷல்

நடிக்க ஆரம்பித்தால் பாட முடியாமல் போய்விடும் என்பதால் நடிக்க வரும் வாய்ப்புகளை தட்டிக் கழிக்கிறார் பாடகி ஸ்ரேயா கோஷல்.

பாடகிகளில் இனிமையான குரலை உடையவர் ஷ்ரேயா கோஷல். இனிமையான குரல் மட்டுமல்லாமல் அசரடிக்கும் அழகையும் கொண்டவர் இந்த 27 வயது பாட்டுக் குயில்.வசீகரமான முகம் கொண்ட இவரையும் நடிக்க வைத்து விட கோலிவுட்டில் தீவிரமாக முயற்சிக்கிறார்களாம் சிலர். எப்படியாவது கோஷலை நடிகையாக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனராம்.

நினைப்புக்கு செயல் வடிவம் கொடுக்க ஷ்ரேயாவை அணுகினர். எப்படியாவது அவரை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் ஸ்ரேயாவோ நான் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ஏன் ஸ்ரேயா இப்படி அடம்பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் ஒரு பாடகி. நடிக்க வந்தால் பாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். அதனால் நடிக்க மாட்டேன் என்றார்.

பரவாயில்லையே, தனது பாதையில் படு தெளிவாகத்தான் இருக்கிறார் ஷ்ரேயா.

நிறைய தெலுங்குப் படம் பார்... அமலா பாலுக்கு அனுஷ்கா அட்வைஸ்

நிறைய தெலுங்கு படங்கள் பார் அமலா என்று நடிகை அமலா பாலுக்கு அனுஷ்கா அறிவுரை வழங்கியுள்ளாராம்.

கேரள அழகி அமலா பால் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார். அன்மையில் வெளிவந்த தெய்வத்திருமகள் பற்றி பெருமையாய் பேசி வருகிறார். இந்நிலையில் கோலிவுட்டை பார்த்தாச்சு, டோலிவுட்டை ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்திருக்கிறார் அமலா பால்.

அதற்காக தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறாராம். இது பற்றி தெரிய வந்த அனுஷ்கா நிறைய தெலுங்கு படங்கள் பார் அமலா. அது உனக்கு உதவியாக இருக்கும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளாராம். அமலாவும் தெலுங்குப் படங்களைப் பார்க்கத் துவங்கியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அட அனுஷ்கா அமலாவுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆகியாச்சா என்றால் ஆம் என்று தான் கூற வேண்டும். அவர்கள் இருவரும் சேர்ந்து தெய்வத்திருமகள் படத்தில் நடித்ததில் இருந்தே தோழிகளாகி விட்டனர். ஸாரி.. நெருக்கமான தோழிகளாகிவிட்டனராம்.

'சீயானுக்கும்' கூட அமலா பால் நெருங்கிய தோழியாகி விட்டதாக கோலிவுட்டில் கூறுகிறார்கள்...!

Saturday, August 27, 2011

சல்மான்கானுக்கு முக நரம்பில் பாதிப்பு- சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்

மும்பை: இந்தி நடிகர் சல்மான் தனது தாடை நரம்பு சிகிச்சைக்காக, அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு கடந்த 2007ம் ஆண்டு முதல் தாடையில் கடும் வலி இருந்து வருகிறது. ஆனால், அதை வெளியிடாமல் இருந்த சல்மான் கான் சமீபத்தில் அதுகுறித்து ஒரு வெளியில் சொன்னார்.

இந் நிலையில் இந்தப் பிரச்சனைக்கு சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்லவும் முடிவு செய்துள்ளார். தாடையில் ஏற்படும் கடும் வலியினால் உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டதாகவும், சமீபகாலமாக அந்த வலி அதிகரித்து விட்டதால், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக மும்பையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூளையில் இருந்து முகத்துக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக வாயை திறந்தாலே தாடையில் தாங்க முடியாத வலி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

யுவன் யுவதி - சினிமா விமர்சனம்

ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்தக் கோரி சோளிங்கர் ரஜினி ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

லோக்பால் மசோதா கோரி கடந்த ஏப்ரல் மாதம் முதல்முறையாக அன்னா ஹஸாரே உண்ணாவிரதமிருந்தபோது தென்னகத்திலிருந்து அவருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்.

அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் போய், சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பி வந்த ரஜினி, இந்த முறை வலுவான லோக்பால் கோரி ஹஸாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக கடிதம் எழுதினார். அன்னா ஹஸாரே மூலம் ரத்தமற்ற புரட்சி நாட்டில் உருவாகியுள்ளதாகவும், ஊழலை ஒழித்தே தீர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினியின் தீவிர ரசிகர்களும் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.

முதல் உண்ணாவிரதம் சோளிங்கர் நகரில் ஆரம்பித்துள்ளது. வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

ஏராளமான ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்து இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். ரஜினி ரசிகர்களுக்கு ஆதரவாக மற்ற நடிகர்களின் ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் பொது மக்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து சேளிங்கர் ரவி கூறுகையில், "எங்கள் தலைவர் ரஜினிகாந்த் தனது படங்களில் தொடர்ந்து லஞ்சம், ஊழல் ஆகியவை எதிர்த்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'சிவாஜி' திரைப்படத்தில் லஞ்சம் லாவண்யத்தால் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி கூறினார். சொல்வது மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் எப்போதும் நேர்மையை கடைப்பிடித்து வருபவர் அவர்.

ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் என்பதே அவரின் நீண்ட நாள் கனவு. அந்த கனவை நிறைவேற்றக்கூடிய ஜன் லோக்பால் சட்டமசோதவை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் சமூக சேவகர் அன்னா ஹசாரே அவர்களுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்த 24 மணி நேரத்தில் நாங்கள் உண்ணா விரதம் மேற்கொண்டுள்ளோம்.

எங்களுடன் 200 பேர் ரசிகர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்," என்றார்.

நடிகை மினிஷா லம்பாவிற்கு 2 முறை கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்

பிரபல இந்தி நடிகை மினிஷா லம்பாவிற்கு மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தி ந்டிகை மினிஷா லம்பா யான், கிட்னாப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது கவர்ச்சியான நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம். மினிஷா, நியூயார்க்கில் நடக்கும் விழா கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில் மினிஷாவின் மொபைல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், நியுயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது. மீறி கலந்து கொண்டால், கொலை செய்துவிடுவேன், என மிரட்டியுள்ளார். முதலில் வெளிநாட்டில் இருந்தும், பின்னர் இந்தியா நம்பர் ஒன்றில் இருந்தும் அழைப்பு வந்ததாக நடிகை தெரிவித்துள்ளார்.

Monday, August 22, 2011

தலைவர் வீடு சிங்கள படைகளினால் உடைப்பு எம்.கே.சிவாஜிலிங்கம் செவ்வி .(VIdeo in)

2 ஆம் இணைப்பு .வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு  வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை கனராக வாகனகங்களை கொண்டு இடிக்கும் பணிகள் தற்போது (இரவு நேரத்தில்) இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த வீட்டை முற்றாக இடித்துவிடும் வகையில் பாரிய இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டை மட்டும்தான் இவர்களால்அகற்ற முடிமே தவிர மண்ணை அகற்ற இவர்களால் இடிக்கமுடியது எம். கே. சிவாஜிலிங்கம் செவ்வி கிழே.

இது தொடர்பான முன்னைய செய்தி

இராணுவத்தளபதியின் மனைவியின் அராஜகம்: படையினர் குளப்பம்

சிறிலங்கா இராணுவத்தினருக்குக் கட்டளை இடுபவர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவா? அல்லது அவரது மனைவியா? என படை தரப்பினர் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமக்குக் கட்டளை இடுபவராகவும் தமது நிர்வாக நடவடிக்கைகளைக் கவனிப்பவராகவும் இராணுவத் தளபதியின் மனைவியான மஞ்சுலிகா அருண விஜய

சூரியவே தற்போது செயற்படுகிறார் எனவும் அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவியாகச் செயற்படும் அவர், தற்போது இராணுவ நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். தண்டனை பெற்ற தனக்குத் தேவையானோரை மன்னிக்கும் படியும் தனக்குப் பிடிக்காதவர்களை தண்டிக்குமாறும் அவர் உத்தரவிடுகிறார்.

உயர்மட்ட படை அதிகாரிகளை தம்ச (நீ) பளயங் (போடா) மே வரேன் (இங்கே வாடா) என அதிகார மமதையில் தரக்குறைவாகப் பேசுகிறார் எனவும் படைதரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தான் ஏதாவது படை முகாமுக்குச் சென்றால் தனக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவு வழங்கப்பட வேண்டுமெனக் கேட்கிறார். அத்துடன சேவா வனிதா பிரிவினால் நடத்தப்படும் பாலர் வகுப்புகளில் கல்வி பயிலும் இராணுவச் சிப்பாய்களின் பிள்ளைகளிடமிருந்து ஒரு தவணைக்கு என கட்டணமாகத் தலா 600 ரூபா அறவிடுகிறார் எனவும் திருமதி ஜயசூரிய மீது படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச செற்பாட்டுத் தகவல்கள் இலங்கையிடமாம்

பிரித்தானியாவில் இயங்கும் நிறுவனம் ஒன்றிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதே நியாயாதிக்க சபையில் முறையீடு ஒன்றைச் செய்யும் வகையிலேயே இந்தத் தவகல்களைப் பெற்றுக் கொண்டிருக்கலாமென் ஏசியன் ரியூ செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச ரீதியிலான குற்றச் செயல்கள் குறித்தே இந்த முறைப்பாட்டினை இலங்கை செய்யலாம் என எதிர்பார்க்கிறது.

இது இவாறிருக்க, நிதிச்சேகரிப்பு ஆயுதக்கொள்வனவு உட்பட்ட தமது குற்றச்செயல்களை பெரும்பாலும் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஜேர்;மனி, டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி,ஸ்பெய்ன்,  அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுலைப் புலிகள் இயக்கத்ததின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதியான அரசியல் தீர்வே நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் : மன்னார் ஆயர்

இலங்கையில் போரினால் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை ஆட்சியாளர்கள் உணர்ந்து, நீதியான அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்க முன்வந்தாலே நாட்டில் நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தையும் ஐக்கியத்தையும் எதிர்பார்க்க முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அருட் தந்தை ஜிம் பிரவுண் காணாமல் போய் 5 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், அவரது நினைவாக மன்னாரில் சனிக்கிழமை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாக ஆயர் அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்துக்குப் பூசைக்காக சென்றிருந்த போது, கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அருட் தந்தை ஜிம் பிரவுணும் சக ஊழியரும் காணாமல் போனார்கள்.

அவரது நிலைமையைக் கண்டறிவதற்காக யாழ் ஆயர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எவ்வித பலனும் கிட்டவில்லை. அவர் காணாமல் போன சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிவதில் அதிகாரிகளிடத்தில் தொடர்ச்சியாக அசமந்தப் போக்கே காணப்பட்டு வந்ததாகவும் மன்னார் ஆயர் தெரிவித்தார்.

ஆண்டகை அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் இந்தப் பிரச்சினையை அணுகி,மக்கள் சுதந்திரமாக நடமாடும் சூழலை உறுதிப்படுத்த நாட்டின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த போர்க் காலத்தில், காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பிலும் இதுதான் நிலைமை.

ஐநா குழுவோ அல்லது வேறு எந்த தரப்போ யுத்த காலத்து சம்பவங்கள் பற்றி சுட்டிக்காட்டும் விடயங்களில் என்ன உண்மை இருக்கிறது என்பதை கண்டறிவதற்கு அதிகாரிகள் முயற்சிக்காமல் அவற்றை பொதுவாக நிராகரித்துவிடும் போக்கு கூடாது.

முன்னைய ஆணைக்குழுக்களால் எவ்வித பிரயோசனமும் கிடைத்திராத நிலையில், தற்போதைய நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகளும் அவ்விதம் பலனளிக்காது போய்விடக்கூடாது.

கற்றறிந்த பாடங்கள் பற்றி ஆராயும் ஆணைக்குழு மூலம் நன்மை கிட்டும் என்ற நம்பிக்கையுடனேயே அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம். நாட்டை ஆள்பவர்களிடத்தில் மன ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு அவர்களின் கவனம் மக்கள் பக்கம் திரும்பினால் மட்டுமே உண்மையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியும்” என்றார்

Sunday, August 21, 2011

இந்திய உளவுத்துறையின் வலையில் சிக்குமா நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் .

இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகள் வருகின்ற மாதம்  30 ஆம்  திகதி ஒரு மாநாட்டை  ஏற்பாடு செய்துள்ளனர் இதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி ஒருவர் தொடக்கி வைக்கிறார் என்று  இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகள் அறிவித்துள்ளனர் . ஆனால் நாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமைமைய உறுபினர்களை கேட்ட பொழுது  எமக்கும் இந்த மாநாட்டுக்கும் எந்த  தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக  அறிவித்து விட்டனர் .

தற்போது புலத்தில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதி நிதிகளை  தொடர்புகொண்டு நாம் நாம் தமிழர் இயக்க ஏற்பாட்டில் தான் நடத்துகின்றோம்  நீங்கள்  கண்டிப்பாக வரவேண்டும் என்று ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் . அதே நபர் கனடாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதி நிதியை தொடர்பு கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்திக்கு பொறுப்பாக இருக்கும் சரஸ்வதி அம்மா ஒரு தெலுங்கர்அவரை மாற்றவேண்டும் என்றும் குறிபிட்டுள்ளார். இந்த மாநாட்டை நடத்துபவர்கள் யார் இவர்களின் குறிக்கோள் என்ன என்பதை பற்றி கிழே உள்ள செய்தி தொகுப்பில் இணைத்துள்ளோம் .  இவர்கள் நடத்தும்  மாநாட்டுக்கும் எமக்கும் எந்த தொடர்பு இல்லை என்று உடனடியாக மறுப்பு அறிக்கை விடுபம்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நாம் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் .

கொழும்பு அரசத்தலைவர் மகிந்தா கைகளுக்கு வந்த பின்பு, எல்லாவற்றிலும்  தமிழருக்கு எதிரான “சதி” என்பது நாளொரு வண்ணமும் அரங்கேறி வருகிறது. அதில் ” டக்லஸ்  தேவானந்தாவை” மெல்ல,மெல்ல தனது வலைக்குள் இழுத்து, கடைசியில் “தேவானந்தா” தனது ஈ.பி.டி.பி சின்னத்தில் கூட நிற்கவிடாமல்,, ராஜபக்சேவின் “வெற்றிலை” சின்னத்தில் நிற்கவைத்த “தந்திரம்” மகிந்தாவின் வெற்றியாக  சிங்களவெறியர்களால் கருதப்படுகிறது. “துரோகி கருணாவை” முழுமையாக தனது கட்சியுடன் இணையவைத்ததில் மஹிந்தாவென்றதாக அதே சிங்கள இன வெறியர்கள் கூறிவருகிறார்கள்.புலிகளை  “நாகப்பாம்பு” என்றும் அதை அழித்து விட்டதாகவும், இனி “சாரைப்பம்புகளை” அழித்திவிடலாம் என்றும் சிங்கள வெறியர்களான மகிந்தா கும்பல் கூறிவருகிறது. அவர்களது அடுத்த “களம்” இந்தியாவிற்குள் இருக்கும் ” ராஜபக்சே எதிர்ப்பாளர்களை” அழிப்பதுதான் என்றும் கூறுகிறார்கள். அதற்கு தங்களுக்கு இந்திய அரசின் “உளவுத் துறையினர்” முழுமையாக் உதவி வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

அப்படி இந்தியாவில் “சதி வேலைகளை” செய்ய  சில “தமிழ்நாட்டு ஆட்களை” இந்திய நடுவண் அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த “தமிழ்நாட்டு ஆட்கள்” பட்டியல் இப்போது கிடைத்துள்ளது. அவர்களில் முதன்மையாக “நகைமுகன்” வருகிறார். அவர் முதலில் ” நடுவண் அரசின் அதிகாரி”யாக இருந்தார். அதை ராசினாமா செய்துவிட்டு, சாராய உடையார் என்று புகழ் பெற்ற ராமசாமி உடையார் நடத்திய நிறுவனத்தில் மேலாளராக இருந்தார். அப்போது ” நமது நிருபர்” என்ற வார ஏட்டை, “நெப்போலியன் பால்ராஜ்” என்பவர் நடத்தி வந்தார். அது 1989  ஆம் ஆண்டு. அந்த இதழில் “நகை முகன்” நண்பராக இருந்துவந்தார். அவ்வப்போது எழுதியும் வந்தார். அப்போது திமுக அரசு கருணாநிதி தலைமையில் நடந்து வந்தது. அந்த அரசை கலைக்க நாடவன் அரசில் இருந்த காங்கிரஸ் நினைத்தது. நெப்போலியன் பால்ராஜ் வசம் ” அசாம் மாநில” போராளிகள் என்று சிலர் வந்து தங்கி இருந்தனர். அவர்களை “உல்பா” தீவிரவாதிகள் என்று அவர்கள் அழைத்துக் கொண்டார்கள். அந்த “உல்பா” தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது திமுக அரசு என்று ” பெரிய எழுத்துகளில் ” தங்களது இதழில் “நகைமுகன்” அச்சடித்து வெளியிட்டார். அதைவைத்து திமுக அரசை “கலைக்கவேண்டும்” என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். அதேபோல நடுவன் அரசு கருணாநிதி அரசை கலைத்தது. கருணாநிதி அப்போது” நகைமுகனை” அடையாளம் கண்டு அவர் “ஐ.பி. ஒற்றர்” என்று அறிவித்தார். அதாவது நாடவன் அரசு நடத்தும் உளவு நிறுவனத்துக்கு “ஐ.பி.” என்று பெயர். அதன் விளக்கம் ” உளவுத் துறை” என்பதே.அப்போதிலிருந்து “நகைமுகன்” ஐ.பி. காரர்களுக்கு விசுவாசமாக இருந்து கொண்டே பல “கட்டை பஞ்சாயத்துகளை  செய்து வந்தார்.

1991 இல் ராஜிவ்காந்தி கொலைக்கு பிறகு,பலரும் தமிழ்நாட்டில் குற்றம் சாட்டப்பட்ட போது, திராவிடர் கழகத்தில் அப்போது இருந்த “பாலகுரு” என்பவரும் “ஜெயின் ஆணையம்” கொடுத்த அறிக்கையில் அவரது பெயர் இருந்ததை வைத்து, நாடவன் அரசின் உளவுத் துறையினர் கொடுத்த அழுத்தத்தில் அவர்களுக்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அவர் “பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்ததும், அதில் ஒரு தொண்டர் கொலை செய்யப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்டதும், அங்கிருந்து வெளியேறினார் என்பதும்” தனிக் கதை. 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் ஒரு ‘போர் நிறுத்தம்” புலிகளால் அறிவிக்கப்பட்டு இரண்டாண்டு கழித்து சிங்களத்தால் ஏற்கப்பட்டு கையெழுத்தான நிலையில், தமிழகத்தில் இருந்து பலரும் ஈழம் சென்று வந்தனர்.அப்படி சென்றதில் ஒருவர் “தமிழா, தமிழா பாண்டியன்” என்ற ஊடகக்காரர். இப்போது 2010 ஆம் ஆண்டு மகிந்தாவின் உளவுத்துறையும், இந்திய உளவுத் துறையும், ஒரு திட்டமிட்டது. அதில் “கருணா மூலம் சரணடைந்த கேணல் ராம் குழுவினரை” பயன்படுத்தி அவர்கள் அடுத்த “ஆயுதப் போராட்டத்திற்கு” தயார் செய்வதாக ஒரு “கட்டுக் கதையை” பரப்ப எண்ணினார்கள்.

அதற்காக இந்தியாவிலிருந்து சிலர் இலங்கை வரவேண்டும் என்றும், அவர்கள் “கேணல் ராம் குழுவினரை” சந்தித்ததாக பரப்புரை செய்யவேண்டும் எனவும் திட்டமிட்டனர். அதற்கு இந்திய உளுத் துறையினர், “பாலகுருவையும், தமிழா, தமிழா பாண்டியனையும், நகைமுகனையும்” அனுப்பி வைத்தனர். அவர்கள் சென்று வந்ததை ” ஹம்சாநண்பர்” ஜாபர் சேட் மூலம் “நக்கீரன்” இதழில் வெளியிட  வைத்தனர்.அதன்மூலம் “பிரபாகரன் இறந்துவிட்டார் எனவும், ராமு ஆயுதப்போராட்டத்தை நடத்துகிறார்” எனவும் ஒரு கருத்தை பரப்ப இரண்டு நாட்டு உளவுத் துறைகளும் திட்டமிட்டன. அதில் அவர்களுக்கு பல வகைகளில் பிளான் உண்டு என்றும் கூறினர். அடுத்து “பாலகுரு மூலம்” போர் நடக்கும் சூழலிலேயே ஒரு மாணவர் பேரவையை ஏற்படுத்தி அதன்மூலம் “தமிழ்நாட்டில் ஈழப் பிரச்னைக்கு” போராடும் அமைப்பாக தனைகளை காட்டிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது “இந்து மத வெறியர்களை” நம்பி மட்டுமே ஈழத் தமிழர் பிரச்னையை அகில இந்திய அளவில் எடுக்க முடியும் என்று பரப்பி அதன்மூலம், “முஸ்லிம்கள்” தமிழர்களுக்கு ஆதரவாக வருவதையும், “கிறித்துவர்கள்” தங்களையும்  தமிழர்களாக கருதி வருவதையும் உடைக்க இரண்டு அரசுகளும் “சதி” செய்வதாக தெரிகிறது.  சிங்களம் ஏற்கனவே தனது “சாதியின் மூலம்” தமிழ் பேசும் முஸ்லிம்களை ஈழத் தமிழர்களுக்கு எதிராக ” நிறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளதால், அதையே இப்போது இந்தியாவில் பயன்படுத்த சொல்லி உலவுத்துறைகளுக்குள் பேசி, முடிவு செய்துளார்கள். அதுவே அங்கு இப்போது அமுலாகிவருகிறது. அதில் சமீபத்தில் பெங்களூரில் ஒரு மாநாட்டை கூட்டி அதில், கர்நாடக சிறிராம் சேனாவின் பிரமோத் முத்தாலிக் தலைமையில் செயல்பட முடிவு செய்துள்ளனர். இதுவும் உளவுத்துறைகளின் ஏற்பாடே. அதில் மேற்கண்ட ஒவ்வொரு நபர்களும் இறங்கி பணியாற்ற உளவுகள் பணித்துள்ளன.

தொடரும்-