This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, August 11, 2011

அமெரிக்கா மீது குற்றம்சாட்டுகிறது சிறிலங்கா

சிறிலங்கா அரசினால் கடந்த மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இது தமக்கு வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்துக்கு போதுமானளவு நிரூபித்து விட்டோம் என்றும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு கேள்விக்கும் போதுமானளவு பதில் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ள அவர், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படவுள்ள பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவுக்கு நேரடியாகப் பதிலளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாம் பலமுறை பதில் கூறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா வழங்கியுள்ள எச்சரிக்கையை அரசாங்கம் அற்பமானதாக கருதவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல, அமெரிக்காவின் அறிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுவது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் : மதநல்லிணக்கவாதிகள்

சிறிலங்கா அரசானது நாட்டின் நலன் கருதி கடந்த காலங்களில் தான் விட்ட தவறுகளின் ஊடாகக் கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டு தனது மனப்போக்கை மாற்றிக் கொள்வதுடன் சமூகத்திலிருந்து விலக்க முடியாத மதத் தலைவர்களின் ஈடுபாட்டையும் உள்ளடக்கி தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

'நாட்டில் நிலையான சமாதானத்தை நோக்கிய இணக்கப்பாட்டு முயற்சிகளில் எதிர்காலத் தலைவர்களின் பங்களிப்புக்கள்' என்ற தலைப்பில் சிறிலங்காவில் உள்ள கரித்தாஸ் நிறுவனம் இணைந்த Sedec ல் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
தற்போது ஆட்சியிலுள்ள மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மதநல்லிணக்கவாதிகள், புத்தபிக்குகள், மதகுருக்கள், சமூக அமைப்புக்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் அரசியல் தலைவர்களின் குறிக்கோள்கள், தமிழ் மக்களுக்கு கௌரவத்தை வழங்குதல், தேசிய மொழி தொடர்பாக மீள ஆராய்தல், வடக்கில் தற்போது நிலவும் இராணுவ ஆட்சியை நீக்குதல் போன்றன இக்கருத்தரங்கின் பேசுபொருட்களாக அமைந்திருந்தன.  

சிறிலங்காவில் நிலவுகின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டிய விடயம் என்பதை இக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த அனைத்து அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டனர்.

"சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவருவதனை அடிப்படையாகக் கொண்டே இந்நாட்டின் எதிர்கால செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்நாட்டையும் இந்நாட்டு மக்களையும் முன்னேற்றுவதற்கான பாதைகளை வழிவகுப்பதாக அனைத்த மதங்களின் செயற்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும்" என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜெயசேகர இக்கருத்தமர்வில் தெரிவித்தார்.

"இவற்றை அடைவதற்காக கடந்த காலங்களில் விட்ட தவறுகளை அடையாளங் கண்டுகொள்ளவேண்டும். மாறாக அவற்றை மூடிமறைத்துவிடக்கூடாது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தனது கருத்துப் பகிர்ந்து கொண்டார்.

"நாங்கள் புதியதோர் யுகத்தில் காலடி வைக்க வேண்டுமாயின் நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். இதற்கு மாறாக நாம் தனியொரு கட்சி என்ற அடிப்படையில் செயற்படக் கூடாது" எனவும் இக்கருத்தரங்கின் போது கருத்து  வெளியிட்டிருந்த தமிழ் அரசியல்வாதி தனது கருத்தின் ஊடாக சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிற்கு செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

"நாங்கள் போரை மட்டுமே வென்றிருக்கின்றோம். உண்மையான சமாதானத்தை இன்னமும் வென்றெடுக்கவில்லை. எமது தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே உள்ளது. அண்மையில் இடம்பெற்ற தேர்தலின் போது, தமிழர்களுக்கு எதிராகப் புதிய பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம். வடக்கு மற்றும் தெற்கில் வாழும் இளையோர்களுக்கு நாம் கொடுக்கின்ற செய்தி என்ன? இந்நாட்டில் தமிழ் மக்கள் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. இப்போதாவது நாம் அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கவேண்டும். தேசிய ஒருமைப்பாடு, சம உரிமை என்பன இல்லாத அபிவிருத்தி என்பது ஒரு கற்பனையே" என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்போரானது நிறைவுற்று இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட இங்கு வாழும் மக்களுக்கிடையில் மொழிப் பாகுபாடு நிலவுகின்றது. சிங்கள மொழியானது உத்தியோகபூர்வ மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் காணப்படுகின்றது. சிறிலங்காவின் அரசியல் உலகில் பயன்பாட்டில் உள்ள ஒரு மொழியாகவும் சிங்களம் மட்டுமே உள்ளது.

"மொழி என்பது அடிப்படையில் பெரிய பிரச்சினையாக உள்ளது. இது ஏனைய பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. தமிழர் ஒருவர் தனது உரிமைக்காகக் குரல் கொடுத்தால் அவர் பயங்கரவாதி எனக் கருதப்படுகிறார். அரசியல்வாதிகள் தமது பரிந்துரைகளை நடைமுறைக்கேற்ப முன்வைக்க வேண்டும்" என ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினரான சுஜீவா சேனசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரோ அல்லது அவரது ஆட்சியோ ஏதாவது தவறு விடும்பட்சத்தில் ஒருபோதும் விமர்சிப்பதில்லை என கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த கிறீஸ்தவ மற்றும் பௌத்த மதத் தலைவர்களை நோக்கி சேனசிங்க தெரிவித்துக் கொண்டார்.

சிறிலங்காவின் வடபகுதியில் வாழும் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளதாகவும், வடக்கில் பெருமளவில் காணப்படும் இராணுவத்தினராலும் அவர்களது ஆட்சியினாலும் அங்கு வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்திருப்பதாகவும், இதனால் இம்மக்கள் சொல்லொணத் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் யாழ் மறைமாவட்டத்தை சேர்ந்த மங்களராஜ் அடிகள்  சுட்டிக்காட்டினார்.

Wednesday, August 10, 2011

லண்டனில் வன்முறைகள் - கோத்தாபயவுக்கு சுவாரசியமாம்

லண்டனில் கலவரங்களை அடுத்து பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்- மோதலுக்குப் பிந்திய சூழலை பிரித்தானியா எவ்வாறு கையாளப் போகிறது என்று சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லண்டனில் ஏற்பட்டுள்ள கலவரங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், கட்டுநாயக்கவில் சிறிலங்கா காவல்துறையினர் வன்முறைகளைக் கையாண்ட விதத்தை விமர்சித்தவர்கள் லண்டனில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க மோதலை அடுத்து ஜேர்மனித் தூதுவர் சிறிலங்காவை அச்சுறுத்தும் அளவுக்குச் சென்றதாகவும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

லண்டனிலும் ஏனைய நகரங்களிலும் வசிக்கும் சிறுபான்மை இனத்தவரின் பாதுகாப்பை பிரித்தானிய அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் கோத்தாபய ராஜபக்ச.

அத்துடன் உலகின் ஏனைய பகுதிகளில் உள்நாட்டு அமைதியின்மையை ஊக்குவிக்கும் மூலோபாயம் ஆபத்தானது என்றும் அதையிட்டு கவனமாக இருக்க வேண்டும் அவர் பிரித்தானியாவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

Tuesday, August 9, 2011

சீனாவை சென்றடைந்தார் மகிந்த – அரசுமுறைப் பயணம் என்றும் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை சீனத் தலைநகர் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ளார்.

பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபரையும் அவருடன் சென்ற குழுவினரையும் சீனாவின் நிறைவேற்று உதவி வெளிவிவகார அமைச்சர் சங் சியுன் வரவேற்று அழைத்துச் சென்றார்.

சீன அதிபரின் அழைப்பின் பேரில் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள மகிந்த ராஜபக்ச அங்கு சீனஅதிபர் ஹுஜின்டாவோ, பிரதமர் வென் ஜியாபோ ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியொரும் சீனா சென்றுள்ளனர்.

முன்னதாக மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம் அரசுமுறையற்றது என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது இது அரசுமுறைப் பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான மேற்குலக அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சீனாவின் ஆதரவைப் பெறவே அவர் அங்கு சென்றுள்ளதாக கூறியுள்ளது.

ஜெயலலிதா தனது அரசியல் சுயலாபத்திற்காக மேற்கொண்ட தீர்மானம் - கோத்தாபய

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை சீனத் தலைநகர் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ளார்.

பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபரையும் அவருடன் சென்ற குழுவினரையும் சீனாவின் நிறைவேற்று உதவி வெளிவிவகார அமைச்சர் சங் சியுன் வரவேற்று அழைத்துச் சென்றார்.

சீன அதிபரின் அழைப்பின் பேரில் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள மகிந்த ராஜபக்ச அங்கு சீனஅதிபர் ஹுஜின்டாவோ, பிரதமர் வென் ஜியாபோ ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியொரும் சீனா சென்றுள்ளனர்.

முன்னதாக மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம் அரசுமுறையற்றது என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது இது அரசுமுறைப் பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான மேற்குலக அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சீனாவின் ஆதரவைப் பெறவே அவர் அங்கு சென்றுள்ளதாக கூறியுள்ளது.

சிறிலங்காவுடன் கடல் ஒப்பந்தம் - மாலைதீவு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

மாலைதீவு கடற்பரப்பின் ஊடாக சிறிலங்காவிற்குச் சொந்தமான கப்பல்கள் போக்குவரத்துச் செய்வதற்கான உடன்படிக்கை ஒன்றை எந்தவொரு முன்னறிவித்தலுமின்றி சிறிலங்காவுடன் மேற்கொண்டதைக் கண்டித்தும் அந்த உடன்படிக்கையை உடனடியாக நீக்கம் செய்யுமாறும் மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசாங்கத்திடம் பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Dhivehi Rayyithunge Party -DRP  என்னும் மாலைதீவு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அலி சலீமின் தலைமையிலேயே நேற்றைய தினம் மாலைதீவு நாடாளுமன்றில் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 மாலைதீவு அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் ஒப்பந்தம் தொடர்பான செய்தி சிறிலங்கா ஊடகம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால்  இந்த உடன்படிக்கை தொடர்பாக மாலைதீவு ஊடகங்களுக்கு  மீன்பிடித்துறை அமைச்சரான கலாநிதி இப்ராகிம் டிடி மற்றும் மாலைதீவு அதிபரின் ஊடகச் செயலாளரான மொகமட் சுகேயர் ஆகியோரால் வழங்கப்பட்ட செய்திகள் ஒன்றிற்கொன்று முரண்பட்ட நிலையிலிருந்தன. இதனாலேயே மாலைதீவு எதிர்கட்சியினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

"சிறிலங்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின் பின்னால் என்ன உள்ளது  என்பது தொடர்பாக நாடாளுமன்றம் பார்க்கவேண்டியுள்ளது" என தனது ஆரம்ப கட்டக் கருத்துரையின் போது சலீம் தெரிவித்துள்ளார்.

"அரேபியக் கடலூடாகப் பயணிக்கும் சிறிலங்காக் கப்பல்கள் சுறாக்களையோ அல்லது மீன்களையோ காவிச்சென்றாலும் கூட நீங்கள் அது பற்றி ஏதாவது அறிந்திருப்பீர்களா?  நேற்றைய தினம் தான் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஒருபோதும் அதுபற்றி அறிந்திருக்க முடியாது" எனவும் சலீம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின் பின்னால் 'பல விடயங்கள் ஒளிந்திருப்பதாக' நாடாளுமன்ற விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவுக் கடற்பரப்பின் ஊடக சிறிலங்காக் கப்பல்கள் பயணிப்பதற்கான உடன்படிக்கை எந்தக் கடற்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துமாறும், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக சிறிலங்காத் தூதரகத்திற்கு 48 மணிநேர முன்னறிவித்தலை வழங்குமாறும் நாடாளுமன்ற விவாதத்தின் போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

"இந்த உடன்படிக்கை தொடர்பாக தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட ரீதியற்ற மீன்பிடி என்பது பொய்த் தகவலாகும். இது தொடர்பான சரியான தகவல்களை நாம் கண்டறிந்துகொள்வதே மிகச் சிறந்ததாகும்" என மாலைதீவைத் தற்போது ஆட்சிசெய்கின்ற மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மொகமட் சசீட் தெரிவித்துள்ளார்.

"தற்போது செய்துகொள்ளப்பட்டுள்ள கடல் ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்படுமாயின், அதற்கு முன்னர் மாலைதீவிற்குச் சொந்தமான மீன்பிடி வலயங்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வருமானங்கள் போன்றவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மாலைதீவு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்" என DRP யின் நாடாளுமன்ற உறுப்பினரான மதிவெறி குசெயின் மொகமட், நாடாளுமன்ற விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.

இவ்வாறான உடன்படிக்கையின் மூலம் நடுநிலையான, ஒருநிலைப்பட்ட மாலைதீவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன் பல நூறு ஆண்டுகளாக சுதந்திரமாக உள்ள மாலைதீவு நாடு பெரும் ஆபத்தை சந்திக்கலாம் என DRP யின் நாடாளுமன்ற உறுப்பினரான அலி அறிப் தெரிவித்துள்ளார்.

"மாலைதீவு ஜனநாயகக் கட்சியானது ஆட்சியமைத்துக் கொண்ட 2008 தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் அக்கட்சியால் இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் அங்கீகாரமளித்திருந்தது. இதற்கு நன்றிக்கடனாக தற்போது சிறிலங்காவுடன் கடலொப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என நான் நம்புகின்றேன்" என Jumhooree கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இப்ராகிம் முத்தலிப் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களைக் கண்காணிப்பதற்கான போதியளவு ஆற்றல் மாலைதீவு மீனவர்களிடம் இல்லை என ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களால் கூறப்பட்ட கருத்தை மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மொகமட் சிபாஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

சட்டரீதியற்ற மீன்பிடித் தொழிலானது கண்காணிக்கப்படாதுவிடில் மாலைதீவின் உள்நாட்டு மீன்பிடித்துறையானது பெரும் ஆபத்தைச் சந்திக்கும் என மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அண்மைக் காலங்களில் சிறிலங்காவிற்குச் சொந்தமான மீன்பிடிக் கப்பல்கள் மாலைதீவுக் கடற்பரப்பில் சட்ட ரீதியற்ற மீன்பிடியில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினரான அஹ்மட் தஸ்மீன் அலி குறிப்பிட்டுள்ளார்.

"எமது நாட்டுக் கடல் எல்லைகளுக்குள் சட்டரீதியற்ற விதத்தில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிநாட்டுக் கப்பல்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுத்து நிறுத்தக் கூடிய வலு எமது நாட்டு அரசாங்கத்திற்கோ அல்லது எமது நாட்டிற்கோ இல்லை என்பது எமது நாட்டு மீனவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும. அத்துடன் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கடல் உடன்படிக்கையானது எமது நாட்டின் பொருளாதார வலயத்தினைக் கண்காணிப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்" என அஹ்மட் தஸ்மின் அலி மேலும் எச்சரித்துள்ளார்.

மீன்வளத்தைக் குறைக்கக் கூடிய சுறா வகை கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கின்ற செயற்பாட்டில் சிறிலங்கா மீன்பிடிக் கப்பல்கள் ஈடுபட்டுவருவதாகவும் தஸ்மீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கடல் சார் உடன்பாடொன்றை மேற்கொள்வதற்கு முன்னர் 'பரந்த விட்டுக்கொடுப்புக்கள்' இடம்பெற்றிருக்கவேண்டும் எனவும் எதிர்க்கட்சித்தலைவரான தஸ்மீன் தெரிவித்துள்ளார்.

"இதற்கு முன்னிருந்த அரசாங்கம் 1982 ல் ஐ.நாவின் கடற்சட்டத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டிருந்தது. இதன் பிரகாரம், எந்தவொரு வெளிநாட்டுக் கப்பல்களும் அனைத்தலகக் கடற்பரப்பின் ஊடாகப் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்" என மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அஹ்மட் கம்சா தெரிவித்தார்.

சாதாரண போக்குவரத்துக்களை மேற்கொள்வதற்கான அனுமதி மட்டுமே இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான கப்பல்கள்கள் பயணிப்பதற்கான அனுமதி மிகக் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சாசனத்தின் பிரகாரம் தான் சிறிலங்காவுடனான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பது உத்தியோகபூர்வமாக கண்டறியப்பட்ட பின்னர் இது தொடர்பான விவாதம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என கம்சா ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தி வழிமூலம்: Minivan News

Monday, August 8, 2011

அமெரிக்கப் போர்விமானங்கள் தற்செயலாகவே நுழைந்தனவாம் – செய்தித்துளிகள்

அமெரிக்காப் போர் விமானங்கள் சிறிலங்காவின் வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தது தற்செயலான சம்பவமே என்றும், இதில் உள்நோக்கங்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விமானப்படையின் 7ஆவது படையணிக்குச் சொந்தமான 10 போர் விமானங்களைக் கொண்ட அணியொன்று, சிறிலங்கா வான்பரப்பில் 380 கிலோமீற்றர் தூரத்துக்குள் ஊடுருவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுடன் சிறிலங்கா விமானப்படை தொடர்பு கொண்ட போது, தமது படைப்பிரிவு பயிற்சியில் ஈடுபடுவதாகவும், இதன்போதே தற்செயலாக சிறிலங்கா வான்பரப்புக்குள் விமானங்கள் வந்ததாகவும் அவர்கள் தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வான்எல்லைக்குள் ஊடுருவிய போர் விமானங்களுடன் சிறிலங்கா விமானப்படைத் தலைமையகம் தொடர்பை ஏற்படுத்தி, அது தொடர்பாக அறிவித்ததை அடுத்து அந்த விமானங்கள் எல்லைக்கு வெளியே சென்றுவிட்டதாகவும், இதுதொடர்பாக பதற்றம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சீனா புறப்பட்டார் சிறிலங்கா அதிபர் – அரசுமுறைப் பயணம் இல்லையாம்

சீன அதிபர் ஹுஜின்டாவோவின் அழைப்பின் பேரில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருப்பதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

ஆனால் இது ஒரு அரசுமுறைப் பயணம் அல்ல என்றும் அவர் அறிவித்துள்ளார்.

நான்கு நாட்கள் சீனாவில் தங்கியிருக்கும் போது மகிந்த ராஜபக்ச, சீன அதிபர் ஹுஜின்டாவோவை பெய்ஜிங் நகரிலும், சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சென்சென் நகரிலும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் மாதம் ரஸ்யாவில் சிறிலங்காஅதிபரை சந்தித்த போது அவரை பெய்ஜிங் வருமாறு சீன அதிபர் அழைப்பு விடுத்திருந்ததாகவும், அந்த அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் குழப்பமான தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார செயலர் காலமானார்

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார செயலர் றொமேஸ் ஜெயசிங்க இன்று காலமானதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியான அவர், 2009 ஒக்ரோபர் 1ம் நாள் தொடக்கம் கடந்த மார்ச் 28ம் நாள் வரை சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலராக பணியாற்றியிருந்தார்.

இவர் இந்தியா, பெல்ஜியம், லக்சம்பேர்க், ஐரோப்பிய ஒன்றியம், ஆகியவற்றுக்கான தூதுவராகவும், பொன், ஜெனிவா, டாக்கா போன்ற நகரங்களிலுள்ள சிறிலங்கா தூதரகங்களில் இராஜதந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். 

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆவணப்படம் வெளிநாடுகளுக்கு

சனல்-4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அவற்றை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், தூதரகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆதாரங்களை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கடந்தவாரம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை- மனிதாபிமான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது என்பதை வலியுறுத்தும் வகையில் அந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சனல்-4 குற்றம்சாட்டுவது போன்று சிறிலங்காப் படையினரால் போர்க்குற்றங்கள் ஏதும் இழைக்கப்படவில்லை என்று, அந்த ஆவணப்படத்தில் தளபதி சூசையின் மனைவி, முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மனைவி, தயாமாஸ்ரர் உள்ளிட்டோரை சிறிலங்கா அரசாங்கம் சாட்சியமளிக்கச் செய்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட இந்த ஆவணப்படத்தை தாம் கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதரகங்களுக்கும், வெளிநாடுகளிலும் உள்ள இராஜதந்திர மையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பொதுசனத்தொடர்புப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முல்லைத்தீவு, இரணைமடுவுக்கும் வர்த்தக விமானசேவை

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு, இரணைமடு விமான ஓடுபாதைகள் புனரமைக்கப்பட்டு வர்த்தக விமானப் போக்குவரத்துகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா விமானப்படை கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கிளிநொச்சி ஓடுபாதையை புனரமைத்து வர்த்தக விமானப் போக்குவரத்தை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ள சிறிலங்கா விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய, இரணைமடு, முல்லைத்தீவு ஓடுபாதைகளும் விரைவில் புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவற்றையும் வர்த்தக விமானப் போக்குவரத்துக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா விமானப்படை ஏற்கனவே பெல்-212, பெல் 412 உலங்குவானூர்திகள், வை-12 விமானம் ஆகியவற்றின் மூலம் வர்த்தக விமான சேவைகளை காங்கேசன்துறை, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுர, பலாலி உள்ளிட்ட பல இடங்களுக்கும் நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அவுஸ்ரேலிய வாழ் தமிழர்களுக்கு கேசி தமிழ்மன்றம் விடுக்கும் அழைப்பு

அவுஸ்ரேலியாவில் நாளை 9ம் நாள் 2011ம் ஆண்டுக்கான சனத்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இதற்காக வழங்கப்பட்டுள்ள படிவத்தில் 16வது, 18வது வினாக்களுக்கு ‘தமிழ்‘ என்று பதிலளிக்குமாறு அவுஸ்ரேலிய வாழ் தமிழர்களை கேசி (Casey) தமிழ்மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

சனத்தொகைக் கணக்கெடுப்புக்காக வழங்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பும்போது அல்லது இணையத்தில் நிரப்பும் போது,
16வது வினாவான வீட்டில் பேசும் மொழி என்ன? என்ற கேள்விக்கு ‘தமிழ்‘ என்று பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் 18வது வினாவான, உங்களின் பூர்வீகம் என்ன? என்ற கேள்விக்கும் தமிழ் என்று பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த சனத்தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள், மத்திய, மாநில, உள்ளூர் அரசாங்கங்களின் அபிவிருத்தி, ஆங்கிலம் அல்லாத பிறமொழி பேசுபவர்களுக்கான சலுகைகள், வசதிகள், உதவிகள் குறித்த முடிவுகளின் பெரும் தாக்கத்தை செலுத்துகின்றன.

இந்தப் படிவத்தில் தமிழ் என்று அடையாளப்படுத்துவதன் மூலம் அவுஸ்ரேலிய வாழ் தமிழர்கள், தமிழ்மொழி, தமிழ்பண்பாட்டை புகட்டும் பாடசாலைகளுக்கு அவுஸ்ரேலிய அரசின் உதவிகள், ஊக்கத்தொகை கிடைக்கச் செய்ய முடியும்.

அத்தியாவசிய சேவைகள் வழங்கும் நிறுவனங்களுடன் தமிழ்மொழிபெயர்ப்பாளருடன் உரையாடுவது அல்லது தகவல்களை தமிழில், பெறுவதற்கும், பொதுநூலகங்களில் தமிழ் நூல்களை வழங்கச் செய்யவும், ,எஸ்பிஎஸ் போன்ற தொலைக்காட்சிகளில் தமிழ்த் திரைப்படங்களை ஒளிபரப்பச் செய்யவும் இதன்மூலம் வழிசெய்யலாம்.

இதுபோன்ற பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள உதவக் கூடும் என்பதால், சனத்தொகை கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்யும் போது 16, 18வது வினாக்களுக்கு தமிழ் என்று பதிலளிக்குமாறு கேசி தமிழ்மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

Sunday, August 7, 2011

சோமீதரனின் 'முல்லைத்தீவு சகா': கேரள திரைப்பட விழாவில் சிறப்பிப்பு

"கேரளாவில் மட்டுமே இது நடந்திருக்க முடியும்" என 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற படத்தினை உருவாக்கியவரான சிறிலங்காவைச் சேர்ந்த எஸ். சோமீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று கேரளாவில் இடம்பெற்ற அனைத்துலக ஆவணப்படம் மற்றும் குறும்பட நிகழ்வில் [International Documentary and Short Film Festival of Kerala] மிகப் பெரும் கடினங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இவரது 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற இவ்வாவணப்படம் நடுவர்களின் சிறப்பு பாராட்டைப் [special mention] பெற்றுள்ளது.

கேரளா முதல்வர் ஓமென் சாண்டி [Chief Minister Oommen Chandy] மற்றும் திரைப்படத்துறை அமைச்சரான கே.பி.கணேஸ் ஆகியோரின் பாராட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு சில மணித்தியாலங்களிற்கு முன்னர், புலனாய்வுத் துறை அதிகாரிகளால் இப்பட உருவாக்குநரான சோமீதரன் மிரட்டப்பட்டார்.

"கேராளவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட நான் முயற்சிப்பதாக ஊடகமொன்றில் வந்த செய்தியை அடுத்து நான் புலனாய்வு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டேன். நேற்று நான் தங்கியிருந்த இடத்திற்கு புலனாய்வு அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால் அந்த வேளையில் நான் அங்கிருக்கவில்லை. கைராலி திரையரங்கில் இருந்தேன். பின்னர் எனது திரைப்படத்தின் DVD யைத் தரும்படி அவர்கள் என்னைக் கேட்டார்கள்" என சிறிலங்காவின் வடபகுதியைச் சேர்ந்த உறுதி மிக்க திரைப்படத் உருவாக்குநரான சோமீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழனன்று நடைபெற்று முடிந்த திரைப்பட விழாவில் சோமீதரன் பாராட்டப்பட்டுள்ளார். பல்வேறு கடினமான சூழல்களைக் கடந்து இடர்களின் மத்தியில் தனது திரைப்படத்தை திறம்பட இவர் உருவாக்கியுள்ளார்.

இத்திரைப்பட விழாவில் இவரது பெயர் அறிவிக்கப்பட்ட போது தனது ஆசனத்தை விட்டு எழுந்து சிறிது தூரம் நடந்து சென்று பின் மீண்டும் நின்று தனது பெயர் தான் அறிவிக்கப்படுகின்றதா என உறுதிப்படுத்தியபோது சோமீதரன் மிகப் பெரும் ஆச்சரியம் அடைந்ததாகத் தெரிவித்தார்.

"அந்தக் கணத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடியாதுள்ளது. இங்கிருக்கும் மக்கள் எனது திரைப்படத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதே எனக்குக் கிடைத்த பாராட்டுதலுக்கான காரணமாகும். இந்தப் பாராட்டு என்பது வேறு எங்கும் நடந்திட முடியாது. தமிழ் நாட்டிலும் கூட" என சோமீதரன் தெரிவித்தார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக இழந்த தனது நண்பர்களையும் இவர் நினைவு கூர்ந்தார்.

"இது போருக்குப் பிந்திய காட்சிகள். இவற்றில் பெரும்பாலனவை அதிர்ச்சி தரக் கூடியவை. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தமது வீடுகள், தொழில்கள், வாழ்வாதாரங்கள் போன்றவற்றை இழந்தனர். விவசாயம், மீன்பிடி போன்றவற்றை மேற்கொள்வதில் பெரும் தடைகள் காணப்படுகின்றன. சிங்களவர்கள் உட்பட சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்துப் பேசுகின்ற அல்லது செயற்படுபவர்கள் அனைவரும் அழிக்கப்படுகிறார்கள்" என சோமீதரன் தெரிவித்தார்.

"சில மக்கள் ஐந்து தடவைகளுக்கும் மேல் இடம்பெயர்ந்து பல மாதங்கள் காடுகளில் ஒளிந்து வாழவேண்டியவர்களாகவும் இருந்தார்கள். எனது திரைப்படம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டதல்ல. மாறாக தமிழ் மக்கள் சார்பாக அவர்களது பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருவதற்கான ஒரு வழியாகவே இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கான காட்சிகள் அனைத்தும் யுத்தப் பாதிப்பிற்குள்ளான இடங்களில் வாழும் எனது நண்பர்களால் எடுக்கப்பட்டவையாகும். இவர்கள் இவற்றை எடுத்த பின்னர் அதற்குள்ளிருக்கும் நினைவக அட்டையை மட்டும் எடுத்துவிட்டு ஒளிப்படக் கருவிகளைத் தூர வீசிவிடுவார்கள். பின்னர் இந்த நினைவக அட்டைகள் பலரது கைகளுக்கு மாறி இறுதியில் என்னை வந்து சேரும்" என சோமீதரன் தெரிவித்தார்.

முதல் மூன்று மாதங்களும் இத்திரைப்படக் காட்சிகளை தன்னால் தொகுக்க முடியாதிருந்ததாக சோமீ குறிப்பிட்டார். "இக்காட்சிகளைப் பார்த்த பின்னர் எங்களால் அவற்றைத் தொகுக்க முடியவில்லை. எங்களால் உண்ணவோ அல்லது உறங்கவோ முடியவில்லை. முதலில் எம்மிடம் ஆறு மணித்தியாலக் காட்சிகள் இருந்தன. அவை பார்ப்பதற்கு மிகப் பயங்கரமானவை. இதில் 30 நிமிடக் காட்சிகளை மட்டுமே உபயோகப்படுத்தியுள்ளேன். ஏனைய ஐந்தரை மணி நேரக் காட்சிகள் அடங்கிய தொகுப்புக்கள் என்னிடம் உள்ளன" என சோமீ தெரிவித்தார்.

சோமீதரன் தனது திரைப்படத்திற்காக இராணுவக் காட்சிகள், ஐ.நாவின் செய்மதி வழி ஒளிப்படங்கள், வலையமைப்புகள் மூலம் நண்பர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட காட்சிகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளார்.

29 வயதான திரைப்படத் உருவாக்குநரான சோமீதரன், தனது ஆவணப்படத்திற்கு முல்லைத்தீவு பகுதியில் ஆடப்படும் வீரப்பெண்ணாக சித்தரிக்கப்படும் 'கண்ணகி கூத்தை' குறியீடாகவும் அடிப்படையாகவும் பயன்படுத்தி உள்ளார்.

அழுகுரல்கள், இடப்பெயர்வுகள், சாவுகள், இறந்த உடலங்கள், உதவியற்ற சிறார்களின் முகங்கள் போன்றவற்றை உள்ளடக்கி சோமீதரனால் உருவாக்கப்பட்ட முல்லைத்தீவு சகா ‘Mullaitivu Saga’ என்ற இத்திரைப்படமானது இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் உணர்வற்ற மனிதர்களைக் கூட உள்ளம் நெகிழ வைத்துவிடும்.

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக சோமீதரனால் உருவாக்கப்பட்ட இரண்டாவது ஆவணப்படமாக இது அமைந்துள்ளது. 47 நிமிட நேரத்திரைப்படமான 'முல்லைத்தீவு சகா' சில ஐரோப்பிய நாடுகள், கனடா போன்றவை உள்ளடங்கலாகப் பல நாடுகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழ்கின்ற இவரது நண்பர்கள் தாம் வசிக்கும் நாடுகளுக்கு சோமீதரனை வரும்படி அழைக்கின்றார்கள்.

"நான் எனது தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்லவே விரும்புகின்றேன். அது முடியாவிட்டால் இந்தியாவிலாவது எனது வாழ்வைத் தொடரவேண்டும் என நான் விரும்புகின்றேன். கேரளாவின் நில அமைப்பு மற்றும் ஓட்டு வீடுகள் போன்றன எனது தாய்நாட்டின் உணர்வையே எனக்கு ஏற்படுத்துகின்றது. உங்களுக்கு தெரியுமா, நாங்களும் அப்பம், பிட்டு போன்ற உணவுகளையே உண்கின்றோம்" என சோமீதரன் தெரிவித்துக் கொண்டார்.

செய்தி வழிமூலம்: Express News Service, The New Indian Express

Saturday, August 6, 2011

ஜேர்மனிக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் மீது போர்க்குற்றச்சாட்டு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது ஐரோப்பிய நாடொன்றில் பிரதித் தூதராகக் கடமையாற்றுகின்ற ஜெகத் டயசிற்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களை இருமனித உரிமைக்குழுக்கள் குழுக்கள் முன்வைத்துள்ளன.

26 ஆண்டுகளாகத் தொடர்ந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது மே 2009 இல் நிறைவுக்கு வந்தபோது சிறிலங்காப் படைகளை வழிநடத்திய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது யுத்தக் குற்றங்களை முன்வைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட மக்களிற்கான அமைப்பு மற்றும் TRIAL ஆகிய சுவிஸைத் தளமாகக் கொண்டியங்கும் இரு மனித குழுக்களும் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக தாம் இரகசிய முறைப்பாடொன்றை சுவிஸ் நாட்டின் பிரதம வழக்கறிஞரிடம் மேற்கொண்டுள்ளதாகவும் இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது 80,000 தொடக்கம் 100,000 வரையானவர்கள் கொல்லப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்டப் போரில் சில பகுதிகளுக்குப் பொறுப்பாகவிருந்து யுத்தத்தை வழி நடத்திய டயஸ் செப்ரெம்பர் 2009ல் ஜேர்மன், சுவிற்சர்லாந்து மற்றும் வத்திக்கான் ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் தூதராக நியமிக்கப்பட்டார்.

யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதென்பது மிகவும் இலகுவானதெனவும், ஆனால் ஒரு போர்க்குற்றவாளி என்பதைத் தான் மறுப்பதாகவும் பேர்லினிலுள்ள தனது தூதரக பணியகத்தில் இருந்து டயஸ் தெரிவித்தார்.

"எந்தவொன்றிற்காகவும் யாரையும் யாரும் குற்றம் சாட்டமுடியும். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையானதாக இல்லை. நாங்கள் யுத்தத்தில் ஈடுபட்ட போது பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்புக்களும் ஏற்படக்கூடாது என்ற கொள்கையைப் பின்பற்றியிருந்தோம். உண்மையில் நாங்கள் மக்களை அழிக்க வேண்டும் என நினைத்திருந்தால், எங்களால் 300,000 வரையான மக்களை எவ்வாறு காப்பாற்றியிருக்க முடியும் அல்லது விடுவித்திருக்க முடியும்" என டயஸ் Associated Press  இடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் யுத்தம் முடிவிற்கு வந்த போது அதிலிருந்து உயிர் தப்பிய 300,000 வரையான மக்கள் சிறிலங்காவின் வடபகுதியிலுள்ள காடுகளில் அமைக்கப்பட்ட முகாங்களில் தங்கவைக்கப்பட்டதுடன், அதில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் களைந்தெடுக்கப்பட்டனர்.

டயஸின் கீழ் செயற்பட்ட சிறிலங்கா இராணுவ வீரர்கள் வைத்தியாசாலைகள் மற்றும் மக்கள் வாழிடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களுக்குப் பொறுப்பாளிகளாவர் என ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவின் சாட்சியங்களிலிருந்தும் ஏனைய அனைத்துலக நிறுவனத் தகவல்களிலிருந்தும் அறியக் கூடியதாகவுள்ளதாக சுவிஸ் குழுக்கள் முறையீடு செய்துள்ளனர்.

"யுத்தக் குற்றங்களுக்கு எதிராக சுவிற்சர்லாந்தானது தனது எதிர்ப்பைக் காட்டுவதற்கான மிகப் பொருத்தமான ஒரு சந்தர்ப்பமாக உள்ளது" என இக்குழுக்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுக்களால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாகத் தாம் ஆராய்ந்து வருவதாக சுவிற்சர்லாந்தின் வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த விடயமானது சிறிலங்கா அதிகாரிகளுடன் தொடர்புபட்டுள்ளதால் இதனைத் தாம் தமது கவனத்தில் எடுத்துள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் தூதர் பதவிகள் வழங்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் களமுனைத் தளபதிகளில் டயசும் ஒருவராவார். "அனைத்துலக நிறுவனங்களாலும் மனித உரிமைகள் அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு நாம் தற்போது ஜெகத் டயசிற்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளோம். டயஸ் ஒரு தூதராக இருக்கின்ற போதிலும், அவர் சுவிற்சர்லாந்தில் வைத்துக் கைதுசெய்யப்படலாம் என நாம் கருதுகிறோம்" எனவும் TRIAL சார்பாக வாதிடும் வழக்கறிஞரான Benedict De Moerloose   தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் இறுதிக் கட்ட உள்நாட்டுப் போரில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றக்காட்சிகளை உள்ளடக்கிய ஆவணப்படம் ஒன்றை பிரிட்டனின் சனல் 04 தொலைக்காட்சிச் சேவை வெளியிட்டிருந்தது. இதில் காண்பிக்கப்பட்டவாறு சரணடைந்தவர்கள் மீது சிறிலங்கா இராணுவ வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்கள் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வருமாறு சிறிலங்கா அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழு கடந்த மேயில் அழைத்திருந்தது.

இது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றவரான டயஸ், 1983-2009 வரை முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத புலி ஆதரவுக் குழுக்களால் உருவாக்கப்பட்ட போலியான ஆவணப்படத்தையே சனல் 04 வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

"இது போலியானது. இதில் எந்தவொரு உண்மைத் தன்மையும் இல்லை" எனவும் டயஸ் மேலும் தெரிவித்துள்ளார். உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது எந்தவொரு பொதுமக்களும் கொல்லப்படவில்லை என யுத்தம் நிறைவுக்கு வந்ததையடுத்து சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்திக் கூறியது.  ஆனால் இதற்கு மாறாக யுத்தம் இடம்பெற்ற இறுதி ஐந்து மாதங்களில் 7000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.