முன்னர் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு நடவடிக்கைகள் அதிகளவிலான பலனை தரவில்லை என கொழும்பு மாநகர சபையில் பிரதம மருத்துவ அதிகாரியின் காரியாலயம் தெரிவித்துள்ளது.
டெங்கு தொற்று காரணமாக மரணமானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகர எல்லைக்குட்டபட்ட பிரதேசங்களில் இருந்து 25 முதல் 30 வரையிலான நோயாளர்கள் நாளாந்தம் சிகிச்சைப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 சதவீத்திற்கும் மேற்பட்ட டெங்கு தொற்றுக்கள் பெரும்பாலும் கொழும்பு வடக்கு பிரதேசத்திலேயே பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் மருத்துவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பம்பலப்பிட்டி கருவாக்காடு மற்றும் கொம்பனி தெரு போன்ற பிரதேசங்களில் இருந்து மிகக்குறைவான டெங்கு தொற்றுக்குள்ளானவர்களே இனங்காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








