This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday, August 3, 2011

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை – கருத்து வெளியிட ஐ.நா மறுப்பு

அண்மையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மனிதாபிமானப் போரின் உண்மைசார்ந்த பகுப்பாய்வுகள் என்ற அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.

நியுயோர்க்கில் நேற்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் செய்தியாளர்கள் இதுபற்றிக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த அவர், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை அதிகாரபூர்வமாக ஐ.நாவிடம் கையளிக்கப்பட்டதா என்பது குறித்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளதுடன், இதுதொடர்பாக கருத்து எதையும் வெளியிட முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசிடம் இருந்து ஐ.நாவுக்கு அதிகாரபூர்வமான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் குறித்து சிறிலங்கா எவ்வாறு பதிலளிக்கிறது என்பது குறித்து அனைத்துலக சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்கா: போரில் காணாமற்போன 600 சிறார்கள் என்னவானார்கள்?

சிறிலங்காவின் நீண்ட கால உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்கு வந்து இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் 630 சிறார்கள் தொடர்பான விபரங்கள் அவர்களது இரத்த உறவுகளுக்குத் தெரியாதுள்ளதாக அரசாங்கத் தகவல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1983ல் தமிழ் நாடு கோரிப் போராட்டத்தை ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தமானது நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட மே18 2009 அன்று பெரும்பாலான தமிழ்ச்சிறார்கள் காணாமற்போயுள்ளனர்.
 
இச்சிறார்களில் 64 வீதமானோர் புலிகளின் சிறுவர் ஆட்சேர்ப்பின் போது புலிகள் அமைப்புடன் இணைக்கப்பட்டவர்கள் என யுனிசெப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது 300,000 வரையிலான பொதுமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

யுத்தத்தின் போது தமது சிறார்களைப் பிரிந்த பெற்றோர் தமது பிள்ளைகள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் பல இடங்களுக்கு அலைந்து திரிந்த வண்ணமுள்ளனர். "எனது பணியகத்திற்கு வெளியில் அழுதவண்ணமிருந்த அந்தப் பெண்கள் தமது பிள்ளைகளைத் தேடித்தருமாறு என்னிடம் கேட்டார்கள்" என வவுனியா மாவட்டத்தில் உள்ள மூத்த அரசாங்க அதிகாரியான பியன்சியா சாள்ஸ் தெரிவித்தார்.
 
காணாமற்போன பிள்ளைகளின் குடும்பங்களுடன் தொடர்புகளைப் பேணும் பொருட்டு 2009 டிசம்பரில் குழுவொன்று உருவாக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"காணாமற் போனோர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதென்பது மிகக் கடினமான விடயமாகும். இந்தச் சிறார்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறை ஒன்றில்லை. இந்தச் சிறார்களின் பெற்றோர்கள் மிகவும் வேதனையுடன் வாழ்கிறார்கள்" என சாள்ஸ் மேலும் தெரிவித்தார்.

இச்சிறார்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக ஆளணி வளங்கள், பயிற்சிகள், மற்றும் தரவுத் தளம் ஒன்றை உருவாக்குவதற்கான உதவிகள் என்பவற்றை யுனிசெப் நிறுவனம் மேற்கொள்கின்றது. இற்றைவரை இவ்வாறு காணாமற் போன சிறார்களில் 600 பேர் வரையானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் 13 பேரது விபரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. அத்துடன் 34 சிறார்களின் பெயர்கள் அவர்களது பெற்றோர்களால் தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தரும் பொருட்டு வவுனியாவில் செயற்படும் சிறார்களைத் தேடிக் கண்டுபிடித்து மீளக் குடும்பங்களுடன் இணைக்கும் பிரிவிடம் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சில செயற்பாடுகளின் பின்னர் தற்போது தமது சிறார்களைக் காணவில்லை என அலைந்து திரிந்த பெற்றோர்களின் தொகை குறைந்துள்ளது. ஆனாலும் இது தொடர்பான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரிலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் கிராமத்தில் தற்போது  மீளக்குடியேறியுள்ள மூன்று பிள்ளைகளின் தாயாரான குலசேகரன் குகமதி 16 வயதுடைய தனது மூத்த மகனைப் பற்றிய எந்தவொரு செய்திகளும் கிடைக்காது மிகவும் வேதனையில் வாழ்கிறார்.

இந்த விதவைத் தாயின் மூத்த மகன் 2008ன் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் இணைக்கப்பட்டிருந்தார். சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான சிறுவர் போராளிகள் தமிழ்ப்புலிகளால் பலவந்தமாக அவர்களது படையில் இணைக்கப்பட்டிருந்தனர் என சிறுவர் போராளிகளை படையில் இணைப்பதை எதிர்க்கும் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"2008ம் ஆண்டிலிருந்து இன்னமும் நான் எனது மகன் தொடர்பான எந்தவொரு செய்திகளையும் அறியவில்லை. அவன் எங்காவாது உயிருடன் இருப்பான் என நான் நம்புகின்றேன். அவனைத் தேடுவதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்ளவேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இதற்கான போதியளவு நேரமோ அல்லது பணவசதியோ என்னிடம் இல்லை" என 44 வயதான குலசேகரன் குகமதி என்ற இந்தத் தாய் தெரிவித்தார்.
 
காணாமற் போன சிறார்கள் தொடர்பான ஏதாவது தகவல்கள் தமக்குக் கிடைக்கும் பட்சத்தில், தரவுத்தளத்தில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு அத்தகவல்கள் சரியாக இருந்தால் உரிய பெற்றோர்களுடன் அவர்களது பிள்ளைகளை மீள இணைத்துவிடுவதாக வவுனியாவிலுள்ள யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரி சஜி தோமஸ் தெரிவித்தார்.

"எமது பிரிவில் சிறார்கள் தொடர்பான தகவல்கள் மட்டுமே முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் ஏனைய காணாமற் போன இளையோர்களின் பெயர்களும் பதிவாகியள்ளன. இதுவரையில் 2000 வரையிலானவர்களின் பெயர்கள் எமது தரவுத்தளத்தில் பதிவாகியுள்ளன" என தோமஸ் மேலும் தெரிவித்தார்.

"இந்த இளையோர் தொடர்பான தகவல்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான அமைப்பொன்றை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான நிதி நிறுவனம் ஒன்றை நான் தற்போது தேடிக்கொண்டிருக்கிறேன். இவ்வாண்டின் இறுதிக்குள் இது தொடர்பான சாதகமான பதில் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என நான் நம்புகின்றேன்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி வழிமூலம்: IRIN
மொழியாக்கம்: நித்தியபாரதி

சிறிலங்கா அதிபரால் நேரடியாக மிரட்டப்பட்ட ஊடகவிலாளர்

கொழும்பில் இருந்து வெளியாகும் 'சண்டே லீடர்' பத்திரிகையில் வெளிவந்த "சிறிலங்கா அதிபர் மற்றும் அவரது மகன் ஆகியோர் தனிப்பட்ட ரீதியில் செலவழிப்பதற்கென சீனா பெருந்தொகையான நிதியை வழங்கியுள்ளது" என்கின்ற செய்தியை அடுத்து யூலை 19 திகதியன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இப்பத்திரிகையின் இயக்குனரான லால் விக்கிரமதுங்கவை அச்சுறுத்தியுள்ளதை எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் [Reporters Without Borders] கண்டித்துள்ளது.

"சிறிலங்கா அதிபர் தொலைபேசி மூலம் பத்திரிகையாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தல்களை விடுகின்ற செய்தியானது எமக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" எனவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சிறிலங்காவில் வெளியிடப்படுகின்ற ஒரேயொரு சுயாதீன ஆங்கிலப் பத்திரிகையான சண்டேலீடர் பத்திரிகையானது சிறிலங்கா அதிபரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

சிறிலங்கா அதிபர் இப்பத்திரிகையில் வெளிவந்த செய்தி தொடர்பாக மறுப்புத் தெரிவிக்க விரும்பியிருந்தால், ஊடகங்களின் ஊடாக இதற்கான பதிலறிக்கை ஒன்றை விடுத்திருக்கலாம்.

இந்த விடயத்தை ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்துவதே உண்மையில் ஜனநாயக வழிமுறையாகும்.

"சிறிலங்கா அதிபரின் பொறுப்பற்ற நடவடிக்கையை நாம் கண்டிக்கிறோம். ஒரு நாட்டினுடைய தலைவர் தனது மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழவேண்டியவராவார். ஆனால் மகிந்த ராஜபக்ச மிகவும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்கின்ற தனது கொள்கையை மகிந்த ராஜபக்ச உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்" என எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ராஜபக்சா குடும்பத்து உறுப்பினர்களால் ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுகின்ற சம்பவம் இது மட்டுமல்ல. இதற்கு முதலும் இவ்வாறான பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இது போன்ற அச்சுறுத்தல் சம்பவங்களை உடனடியாகக் கைவிடுமாறு நாம் சிறிலங்கா அதிபர் மீத அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமிடத்து சிறிலங்காவிலுள்ள அனைத்து ஊடகங்களும் ஒன்று சேர்ந்து தமது கண்டனங்களைத் தெரிவிக்கவேண்டும் எனவும் எல்லையற்ற பத்திரிகையாளர் சங்கம், அனைத்து சிறிலங்கா ஊடகங்களிடமும் வேண்டிநிற்கின்றது" எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

யூலை 19 அன்று விக்கிரமதுங்க, சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றுக்கொண்டபோது, அதிபரால் விடுக்கப்பட்ட மிரட்டல் செய்தி பின்வருமாறு:
 
"பொய்யான செய்திகளை பிரசுரிக்கிறீர்கள். இவை அனைத்தும் மூர்க்கத்தனமானவை. உங்களது செய்திகள் மூலம் அரசியல் ரீதியான தாக்குதல்களை என்மீது மேற்கொள்ள முடியும்.  நீங்கள் என்னைத் தனிப்பட்ட ரீதியில் தாக்க நினைத்தால், உங்களை எவ்வாறு தனிப்பட்ட ரீதியில் தாக்குவது என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்"

'பொய் பேசவேண்டாம்', 'கடவுள் உங்களைத் தண்டிப்பார்' போன்ற வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட துண்டுப்பிரசுரங்கள் சண்டேலீடர் பத்திரிகையின் தலைமைச் செயலக மதில்களில் ஒட்டப்பட்டிருந்தன.

சிறிலங்கா அதிபரின் தொலைபேசி மிரட்டல் மேற்கொள்ளப்படுவுதற்கு இரு நாட்களின் முன்னர் சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிறட்றிக்கா ஜான்ஸ் தனது பத்தியில், சீனாவானது சிறிலங்கா அதிபர் தனிப்பட்ட ரீதியில் செலவழிப்பதற்காக 09 மில்லியன் டொலர்களையும் அவரது மகனுக்கு அரை மில்லியன் டொலர்களையும் மானியமாக வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான தெளிவான பதிலை சிறிலங்கா அதிபருக்கு வழங்கும் முகமாக சண்டேலீடர் பத்திரிகையின் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

சண்டேலீடர் பத்திரிகையானது நீண்டகாலமாக சிறிலங்கா அரசாங்கத்தால் குறிவைக்கப்பட்டுள்ள ஒரு பத்திரிகையாகும்.

லால் விக்கிரமதுங்காவிற்கு முன்னர் இப்பத்திரிகையின் இயக்குனராகச் செயற்பட்ட லசந்த விக்கிரமதுங்க 08,ஜனவரி 2009 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலை தொடர்பான எந்தவொரு விசாரணைகளும் முற்றுமுழுதாக நிறைவுசெய்யப்படவில்லை. இக்கொலையுடன் தொடர்புபட்ட எந்தவொரு குற்றவாளிகளும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

லசந்த விக்கரமதுங்காவின் படுகொலை தொடர்பான முறையான விசாரணைகளை உடனடியாக  மேற்கொள்ளப்பட வேண்டும் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் மீண்டும் வலியுறுத்துகின்றது.

லசந்தவின் படுகொலையைத் தொடர்ந்து அவரது சகோதரனான லால் விக்கிரமதுங்க தற்போது இப்பத்திரிகையின் இயக்குனராகப் பொறுப்பேற்றுச் செயற்படுகின்றார். லால் விக்கிரமதுங்கவும் தற்போது குறிவைக்கப்பட்டுள்ளார்.