This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, July 22, 2011

திரைப்படமாகும் நடிகைகளின் நிஜக் கதைகள்

நடிகைகளின் நிஜ வாழ்க்கையை படமாக எடுக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கற்பனைக் கதைகளைப் போன்று நடிகைகளின் நிஜ வாழ்க்கையை படமாக எடுக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். என்ன விசேஷம் என்றால் கற்பனைக் கதைகளை விட இந்த நிஜக் கதைகளில் சோகம், அதிரடி, டிராஜெடி ஆகியவை எக்கச்சக்கமாக உள்ளன.

புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யாவின் கதை மலையாளத்தில் திரக்கதா என்ற பெயரில் படமானது. அதில் ஸ்ரீவித்யாவாக பிரியாமணி நடித்தார். இறுதிக்காலத்தில் புற்று நோய்க்குப் பலியானார் ஸ்ரீவித்யா. அவரது வாழ்க்கைத் துளிகளை சித்தரிப்பதாக அமைந்தது இந்தப் படம்.

அதேபோல செக்ஸ் பாம் என்ற சொல்லுக்கு புது இலக்கண் படைத்தவரான சில்க் ஸ்மிதாவின் கதையை இப்போது டர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் படமாக்கி வருகின்றனர். வித்யா பாலனை சில்க் வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

1980-களில் கவர்ச்சி நடிகை வேண்டுமா, கூப்பிடுங்க சில்க் ஸ்மிதாவை என்று சொல்லும் அளவிற்கு அவர் மகா பிரபலம். அவரை பலர் காதல் என்ற பெயரில் ஏமாற்றினர். ஒரு கட்டத்தில் விரக்தியை தாங்க முடியாமல் சில்க் தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதா என்றால் கவர்ச்சி என்று சொல்லும் ரசிகர்களுக்கு அவருடைய பரிதாபமான வாழ்க்கையை பற்றிக் காட்டத் தான் இந்த படம்.

இந்த வரிசையில் இன்னொரு நடிகையின் கதை படமாகப் போகிறது. அவர் சாரதா. அந்தக் காலத்து அழகு நடிகை, தேசிய விருது பெற்றவர். ஊர்வசி சாரதா என்றுதான் அவருக்குப் பெயர்.

மலையாளத்தில் படமாகிறது சாரதாவின் கதை. படத்திற்கு நயிகா என்று பெயரிட்டுள்ளனர். இது சாரதாவின் காதல் தோல்விகள் பற்றிய படமாம்.

இதேபோல சோனியா அகர்வாலின் கதையை ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற பெயரில் சோனியாவை வைத்தே தயாரிக்கின்றனர். சோனாவும் தனது சொந்தக் கதையை படமாக்கப் போவதாக கூறியுள்ளார்.

இன்னும் எந்தெந்த நடிகையின் கதையெல்லாம் படமாகப் போகிறதோ தெரியவில்லை.

அங்கே சுட்டு, இங்கே சுட்டு கடைசியில் சினிமா உலகதுக்குள்ளேயே கதை தேட ஆரம்பித்து விட்டனர் இயக்குநர்கள். இது கற்பனை வறட்சியைக் காட்டுகிறதா அல்லது கவர்ச்சியை வைத்து காசாக்கும் நோக்கைக் காட்டுகிறதா என்பது புரியவில்லை.Topics: tamil cinema, real life stories, vidya balan, நடிகைகள் வாழ்க்கை, தமிழ் சினிமா

பிக்பாஸ் ஷோவில் நிர்வாணமாக தரிசனம் தர பூனம் பாண்டேவுக்கு ரூ.2 கோடி சம்பளம்?

பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியில் மாடல் அழகி பூனம் பாண்டே நிர்வாணமாக தரிசனம் தர தர, ரூ.2 கோடி பேரம் நடக்கிறது.

கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா கோப்பையை வென்றால், கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடப் போவதாக, கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் மாடல் அழகி பூனம் பாண்டே. இந்தியா உலக கோப்பையை வென்றாலும், கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தனது முடிவை அவர் வாபஸ் பெற்றார்.

வீரர்களுக்காக மட்டும் தனியாக நிர்வாண ஷோ நடத்த தயார் என்று அறிவித்தார். ஆனால் அதை கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில், பங்கேற்க, அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதற்கு ரூ.2 கோடி சம்பளமும் தருவதாக நிகழ்ச்சியாளர்கள் அவரை உற்சாகப்படுத்தி உள்ளனர்.

இந்த ஷோவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் கலந்து கொள்ள உள்ளார். பூனம் கலந்து கொள்ளும் பட்சத்தில், அவர் பூனமிடம் ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அளித்த வாக்குறுதி (நிர்வாண போஸ்) குறித்து கேட்பார்.

அப்போது நிகழ்ச்சியில் பூனம் நிர்வாண போஸ் தர வேண்டிய நிலை ஏற்படும். 2 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கூறியுள்ள நிலையில், என்ன முடிவு எடுப்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம் பூனம்.Topics: பூனம் பாண்டே, பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, சம்பளம், bigboss reality show, poonam pandey

பிந்து மாதவி, நித்யா மேனனின் 'வெப்பம்'

மனிதர்களின் மனதுக்குள் புதைந்து கிடக்கும் வெவ்வேறு வகையான வெப்பத்தை கதையாக்கி படமாக்கியுள்ளாராம் அஞ்சனா, தனது வெப்பம் படத்தில்.

அஞ்சனா, கெளதம் வாசுதேவ மேனனின் அசோசியேட்டாக இருந்தவர். இப்போது மேனனின் தயாரிப்பில் அஞ்சனா இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தில் இரு நாயகிகள் பிந்து மாதவி மற்றும் நித்யா மேனன். நாயகனாக நடிப்பது கார்த்திக்குமார்.

அது என்ன வெப்பம் என்ற பெயரில் ஒரு கதை என்றுகேட்டால், ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு விதமான வெப்பம் புதைந்து கிடக்கும். ஏதாவது தக்க தருணத்தில் அது வெளியாகி வெடித்துப் புறப்படும்.

ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள இந்த இறுக்கமான மன நிலையை வைத்துத்தான் படத்தை உருவாக்கியுள்ளேன். இப்படத்தில் காதல் இருக்கிறது, நட்பு இருக்கிறது, குடும்பப் பாசம், மரணம் என அனைத்துமே நிரம்பியுள்ளது.

இது சுத்தமான சென்னைக் கதை. சென்னையின் வாழ்க்கையை இதில் பார்க்கலாம். இருப்பினும் அனைவருக்கும் இது பிடித்தமான படமாக இருக்கும் என்றார் அஞ்சனா.

படம் வரட்டும், பிடிக்கிறதா, இல்லையா என்று பார்க்கலாம்!Topics: tamil cinema, veppam, வெப்பம், பிந்து மாதவி, bindu madhavi, nithya menon, நித்யா மேனன்

கோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்டர்கள் போராட்டம்

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் உடல் நலம் மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் தற்போது கோமாவுக்குப் போய் விட்டார். அவரது உயிரைக் காக்க டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் கோமாவுக்குப் போய் விட்டதாக அவரது மகனும், நடிகருமான அம்சவிர்தன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தந்தைக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்தது. இருப்பினும் அதைக் கட்டுக்குள் வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு திடீரென நுரையீரல் பிரச்சினை வந்து அது செயலிழக்கத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது அவர் கோமா நிலைக்குப் போய் விட்டார். டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர் என்றார்.

71 வயதாகும் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், இரு மகன்கள்,ஒரு மகள் உள்ளனர். அனைவரும் அருகில் இருந்து கவனித்தபடி உள்ளனர்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரவிச்சந்திரன் ஸ்டைல் நடிப்பை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஹீரோ. காதலிக்க நேரமில்லை படத்திலேயே அந்தக் காலத்து இளைய தலைமுறையைக் கவர்ந்தவர் ரவிச்சந்திரன். தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்தவர். ஊமை விழிகள் படத்தில் வில்லனாக கலக்கிய அவர், அருணாச்சல் படத்தில் ரஜினிக்கு தந்தையாகவும், பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசனுக்கு தந்தையாகவும் நடித்திருந்தார்.

கடைசியாக அவர் கண்டேன் காதலைப் படத்தில் அவர் நடித்திருந்தார்.Topics: கவலைக்கிடம், ravichandran, தமிழ் சினிமா, ரவிச்சந்திரன், அப்பல்லோ மருத்துவமனை, apollo hospitals

புதிதாக ஓட்டுப்போட்டவர்களில் 50% பேர் விஜய் ரசிகர்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர்

விருப்பாட்சி: இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்து தேய்ந்துபோன நாம் இனி நமக்காக உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருபாட்சிபுரத்தில் நடந்தது.

அதில் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கலந்துரையாடினர்.

பின்னர் கூட்டத்தி்ல் பேசிய சந்திரசேகர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையவேண்டும், தவறு செய்தவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று விஜய் விரும்பினார். அவரது ஆசை ரசிகர்களாகிய உங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் 80 லட்சம் இளைஞர்கள் புதிதாக ஓட்டுப் போட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 சதவீதம் பேர் விஜய் ரசிகர்கள் தான்.

இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்து தேய்ந்துபோன நாம் இனி நமக்காக உழைத்து முன்னுக்கு வரவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஒரு உள்ளாட்சி அமைப்புக்கு ஒரு உறுப்பினர் வெற்றி பெற்றால்கூட தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 1000 பேர் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ஆதரவு மூலம் விஜய் இளைய தளபதியாக வளர்ந்துள்ளார். தற்போது அவர் பெயரை வைத்து நீங்கள் முன்னுக்கு வரவேண்டும். செயலில் கில்லி மாதிரி இருக்கவேண்டும். மக்கள் விழிப்புடன் உள்ளனர். எனவே கொள்ளையடிக்கும் எண்ணத்தில் யாரும் அரசியலுக்கு வரவேண்டாம்.

விஜய் முழுநேர நடிகர்தான். நேரடியாக அவர் அரசியலுக்கு வரமாட்டார். நான்தான் உங்களுக்கு பாலமாக இருப்பேன் என்றார்.Topics: sa chandrasekaran, எஸ்ஏ சந்திரசேகர், tn elections, vijay

மலையாள சூப்பர்ஸ்டார்கள் மம்முட்டி,மோகன்லால் வீடுகளில் ஐடி ரெய்டு

தம்பி வெட்டோத்தி சுந்தரம்... கரண் நடித்து வெளியாகும் அடுத்த படம் இது. படத்தில் அவருக்கு ஜோடி அஞ்சலி.

இருவரும் இந்தப் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

இந்தப் படக்குழுவினர் நேற்று நிருபர்களைச் சந்தித்து, படம் குறித்த பல்வேறு தகவல்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் நாயகி அஞ்சலி கூறுகையில், "தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் கரணுக்கு ஜோடியாக என்னை நடிக்க அழைத்தபோது, அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதால், எப்படி பழகுவாரோ என்று கொஞ்சம் பயந்தேன். ஆனால், நான் பயந்தது போல் அவர் இல்லை. எனக்கு சவுகரியமான கதாநாயகனாக இருந்தார்.

எனக்கும், அவருக்கும் ஜோடிப்பொருத்தம் கச்சிதமாக இருக்கிறது. குறிப்பாக, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'கொலைகாரா...' என்ற பாடல் காட்சியில், எங்கள் இருவரின் கூட்டணியும், படம் பார்க்கும் எல்லோருக்கும் பிடிக்கும்.

இந்த வேடம், இந்த காஸ்ட்யூம் என்று எனக்கு எந்த பிடிவாதமும் இல்லை. நல்ல வேடம், காட்சிக்கேற்ற உடைகளை நான் அணிய தயங்கியதில்லை," என்றார்.

இந்தப் படம் நாகர்கோவில் அருகில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ளார்.

கரண் பேசும்போது, "தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை பார்த்தபின், அந்த படத்தை மறக்க முடியாது. 4 நாட்களுக்கு மனசுக்குள்ளேயே நிற்கும். அப்படி ஒரு பாதிப்பை படம் ஏற்படுத்தும்'' என்றார்.

அது என்ன வெட்டோத்தி...?

"வெட்டுக்கத்தி மாதிரி அது ஒரு ஆயுதம். ஆனால் இந்தப் படம் ஒவ்வொரு ரசிகருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே வாழ்ந்த அனுபவத்தைத் தரும்," என்றார்கள் இயக்குநர் வடிவுடையானும் தயாரிப்பாளர் செந்தில் குமாரும்.Topics: anjali, அஞ்சலி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், thambi vettothi sundaram, கரண், karan