This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, December 16, 2011

தங்கம் எப்படி உருவானது?

« செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் அமீர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? » தங்கம் எப்படி உருவானது?Published December 16, 2011 தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.

இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.

இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அணுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

அதிக உடல் பருமன் ஆயுளைக் குறைக்கும்

« குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? » அதிக உடல் பருமன் ஆயுளைக் குறைக்கும்Published December 16, 2011 பல காலம் தொடர்ந்து இருக்கும் உடல் பருமனால் ஏற்படக் கூடிய நீண்ட கால பாதிப்புகள் முன்பு எண்ணப்பட்டதை விட மோசமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.கூடுதல் எடையுடன் ஒருவர் எவ்வளவு காலம் இருக்கிறாறோ அவ்வளவுக்களவு அவரின் ஆயுட்காலம் குறையும் என்றும் – பருமனால் ஏற்படக் கூடிய வியாதிகளால் உயிரிழக்கும் அபயாம் இரட்டிப்பாகிறது என்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

முந்தைய ஆய்வுகளைப் போலல்லாமல் ஒருவரின் ஆயுட்காலத்தில் கூடுதல் பருமனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது, முதல் முறையாக இதில் ஆராயப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சுமார் 50 ஆண்டு காலமாக, ஐயாயிரம் பேரின் உடல் நலம் மற்றும் உடல் எடை போன்றவற்றை கவனித்து செய்யப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.

பத்தாண்டுகள் கூடுதல் பருமனுடன் ஒருவர் இருந்தால், பருமன் தொடர்புடைய நோய்களால் அவர் இறப்பதற்கான வாய்ப்புகள் இரட்டிப்பாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒருவர் எவ்வளவு ஆண்டுகள் கூடுதல் பருமனுடன் இருந்தார் என்பதை கண்டறிந்த பிறகு, அதற்குரிய சிகிச்சைகளை டாக்டர்கள் வழங்க முற்பட வேண்டும் என்றும். அப்போதுதான் அது சரியான பயனைத் தரும் என்றும் ஜர்னல் ஆஃப் எபிடிமாலஜி என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொழிலதிபர் மனைவி குத்திக்கொலை 2 வாலிபர்கள் பிடிபட்டனர்

« நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம் – ஆய்வு முடிவு » தொழிலதிபர் மனைவி குத்திக்கொலை 2 வாலிபர்கள் பிடிபட்டனர்Published December 16, 2011 சென்னை : தொழிலதிபர் மனைவியை குத்திக் கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த 2 வாலிபர்கள் பிடிபட்டனர். ஆவடி அருகே திருமுல்லைவாயல், வெங்கடாசலம் நகர் 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் லியாகத் அலி (50). பாடி யில் இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி யாஸ்மின் (47). இவர்களின் 2 மகள்கள், கொரட்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கின்றனர்.

கடந்த 12ம் தேதி வீட்டில் தனியாக இருந்த யாஸ்மின், தொண்டை யில் கத்தியால் குத்தப் பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட் டார். அவர் அணிந்திருந்த கம்மல், வீட்டில் இருந்த 10 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தன. இதுதொடர்பாக, திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் மகேஸ்குமார், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், ஆவடி உதவி கமிஷனர் மனோகரன் ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கொலை செய்யப்பட்ட யாஷ்மின், செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்ட நபர்கள் பட்டியலை எடுத்து விசாரித்தனர். இதில், ஆவடி அருகே பொத்தூர் தாய் நகரை சேர்ந்த கோபிநாத் (25), அவரது நண்பர் பாடி நம்மாழ்வார் நகரை சேர்ந்த சுப்பிரமணியம் (23) ஆகியோர், சம்பவத்தன்று யாஸ்மினுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.

அவர்கள் இருவரும் கொரட்டூர், அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய இடங்களில் உள்ள தனியார் கம்பெனி ஊழியர்கள். அவர் களை போலீசார் பிடித்து விசாரித்ததில், யாஸ்மினை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து பைக், கத்தி, 12 சவரன் நகைகளை போலீ சார் கைப்பற்றினர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கொலை செய்யப்பட்ட யாஸ்மின், வேறு மதத்தை சேர்ந்தவர். லியாகத் அலியை காதலித்து முஸ்லிம் மதத்துக்கு மாறி திருமணம் செய்துள்ளார். முதலில், மதுரவாயலில் இருந்த இவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்புதான், திருமுல்லைவாயலில் புதிதாக வீடு கட்டி குடிபுகுந்துள்ளனர். யாஸ்மினுக்கும் லியாகத் அலிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், யாஸ்மின் ஆடம்பர செலவுக்கு லியாகத் அலி பணம் கொடுப்பதில்லை.

இதனால், தனது ஆடம்பர செலவுக்கு பணம் சம்பாதிப்பதற்காக ஆன்லைன் மூலம் பாலியல் தொழிலில் குதித்துள்ளார் யாஸ்மின். கணவன், மகள்கள் இல்லாத நேரத்தில் இவரது வீட்டுக்கு வாடிக்கையாளர்கள் வந்து சென்றுள்ளனர். மேலும், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தங்களது ஜோடியுடன் இவரது வீட்டில் வந்து உல்லாசமாக இருந்து சென்றுள்ளனர். இதற்கு ஒரு ஜோடிக்கு ரூ.1000 வாடகை யாஸ்மின் வசூலித்துள்ளார்.

இந்நிலையில், பாடியை சேர்ந்த அன்வர் என்பவர் மூலமாக கோபிநாத், சுப்பிரமணியமும் யாஸ்மினுக்கு பழக்கமானார்கள். இருவரும் யாஸ்மினுடன் கடந்த 6 மாதமாக கள்ளத்தொடர்பு வைத்துள்ளனர். அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். அப்போது, கணவனுடன் தகராறு பற்றியும், செலவுக்கு பணம் தராதது பற்றியும் கூறியிருக்கிறார். மேலும், மதுரவாயலில் உள்ள வீட்டை விற்று பணம் வைத்துள்ளதாகவும், ஸீ 2 லட்சத்துக்கு நகைகள் வாங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் பணம், நகை களை கொள்ளையடிக்க கோபிநாத்தும் சுப்பிரமணியமும் திட்டமிட்டனர். அதன்படி, சம்பவத்தன்று யாஸ்மினுக்கு போன் செய்து வீட்டுக்கு வருவதாக கூறியிருக்கின்றனர். பின்னர் கத்தி, இரும்பு கம்பியை மறைத்து எடுத்து வந்துள்ளனர். அவர்களை முன்கதவை திறந்து யாஸ் மின் வரவேற்றுள்ளார். பின்னர், முன் கேட்டையும் கதவையும் பூட்டிக் கொண்டனர்.

இருவரும் படுக்கை அறைக்கு வந்து யாஸ்மினுடன் பேசிக் கொண்டிருந்துள்ளனர். நகை, பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, யாஸ்மின் வாயை கோபிநாத் பொத்தி, கழுத்தை நெரித்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் மயங்கி சாய்ந்தார். பின்னர் பீரோவை கம்பியால் உடைத்து 10 சவரன் நகையை எடுத்துள்ளனர். சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க டிவி வால்யூமை அதிகரித்து வைத்துள்ளனர்.

திடீரென யாஸ்மின் விழித்துக் கொண்டு  சத்தம் போடவே, சுப்பிரமணியம் அவரது கால்களை கெட்டியாகப் பிடித்துள்ளார். கோபிநாத் அவரது வாயைப் பொத்தி கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர், காதுகளில் இருந்த கம்மல்களை அறுத்து எடுத்துக் கொண்டு, இருவரும் வீட்டின் பின்புற கதவை திறந்து பைக்கில் தப்பினர்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை 48 மணி நேரத்தில் பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் திரிபாதி பாராட்டினார்.

குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

யாஸ்மின் கணவர் லியாகத் அலியிடம் போலீசார் விசாரித்தபோது, மனைவி செல்போன் பயன்படுத்துவதில்லை, வீட்டில் தொலைபேசி இணைப்பும் கிடையாது, என்னை தொடர்பு கொள்வது என்றால் பி.சி.ஓ. மூலம்தான் பேசுவார் என்று கூறியிருந்தார். ஒரு தொழிலதிபர் வீட்டில் போன் இல்லாமல் இருக்குமா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
விசாரணையில்  ஒரு ரீசார்ஜ் கடையில் ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு அடிக்கடி யாஸ்மின் ரீசார்ஜ் செய்வார் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த செல்போன் நம்பர் மூலம் விசாரணையை முடுக்கினர். அந்த எண் யாஸ்மின் பெயரில் இல்லை, வேறொரு நபர் பெயரில் இருந்துள்ளது. அதை வைத்து விசாரிக்கும்போதுதான், சம்பவத்தன்று கோபிநாத் பேசியிருப்பதும், அடிக்கடி அவர் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்தது.  இதையடுத்து அவர்கள் இருவரையும் வீட்டில் சென்று போலீசார் மடக்கினர். அப்போது யாஸ்மின் செல்போனையும், இவர்கள் எடுத்துச் சென்று உடைத்து தூள், தூளாக்கி போட்டதும் தெரிந்தது. அந்த செல்போன் பாகங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

PDF கோப்புகளை Edit செய்வதற்கு

« குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? » PDF கோப்புகளை Edit செய்வதற்குPublished December 17, 2011 அடோப் நிறுவனம் வரையறை செய்து வழங்கும் போர்ட்டபிள் டாகுமெண்ட் போர்மட்டில்(PDFPortable Document Format)  கோப்பு ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல.

ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும்.

இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல பி.டி.எப் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.

பி.டி.எப் போர்மட் பல ஆண்டுகளுக்கு முன்பு அடோப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுவதற்கு அதன் சிறப்பியல்புகளே காரணம்.

ஒரிஜினல் டாகுமெண்ட்டின் அனைத்து சிறப்பு இயல்புகள், போர்மட்டிங் அம்சங்கள் அனைத்தும் பி.டி.எப் போர்மட்டிலும் அப்படியே காட்டப்படுகிறது.

டெக்ஸ்ட், இமேஜ், மல்டிமீடியா மற்றும் பல அம்சங்கள் பி.டி.எப் போர்மட்டிலும் உயிரோட்டத்துடன் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுச்சொல் கொண்டு ஒரு பி.டி.எப் கோப்பை பாதுகாக்கலாம்.

எந்த ஒரு இயங்குதளத்திலும் இந்த பி.டி.எப் போர்மட்டில் உள்ள கோப்பைக் காண முடியும். இந்த கோப்பை எடிட் செய்திட ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.

1. பி.டி.எப் எடிட்(PDF Edit): இது ஒரு ஓப்பன் சோர்ஸ் மற்றும் மிகக் குறைவாக இடம் பிடிக்கும் புரோகிராம். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள விஷயங்களை மாற்றி அமைக்கவும், அப்படி அமைத்த மாற்றங்களுடன் கோப்பை சேவ் செய்திடவும் இந்த புரோகிராம் வழி தருகிறது.

இந்த தொழில் நுட்பம் தெரிந்த பயனாளர்கள், இதில் கிடைக்கும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ்(GUI Graphical User Interface) வசதியைப் பயன்படுத்தி, பி.டி.எப். ஆப்ஜக்ட்களையும் மாற்றி அமைக்கலாம்.

இந்த புரோகிராமினை விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் இயங்குதளத்தில் இயங்கும் கணணியில் இயக்கலாம்.

தரவிறக்க சுட்டி

 

கொட்டாவி விடுவது ஏன் தெரியுமா?

« காதலித்துப்பார் அசைவ உணவால் ஏற்படும் தீமைகள்! » கொட்டாவி விடுவது ஏன் தெரியுமா?Published December 16, 2011 ஒருத்தர் ஓவரா கொட்டாவி விட்டு கொண்டே இருந்தால் என்ன நினைப்பீர்கள்?  அவர் நாம் சொல்வதை கவனிக்கவில்லை, அல்லது அவர் தூக்கக்கலக்கத்திலோ, சோர்விலோ இருக்கிறார் என்று தானே நினைப்பீர்கள்!!?உங்கள் நினைபெல்லாம் தவறாக இருக்கலாம், என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி ஒன்று. கொட்டாவியை தூக்கக்கலக்கம் மற்றும் சோர்வுடன் மட்டும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய மூளை ரொம்ப சூடாக இருக்கிறது’ என்பதன் அறிகுறி அது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.பேராசிரியர் Andrew தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் நடந்த விரிவான ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கபட்டது . ப்ராண்டியர்ஸ் எனும் மருத்துவ நூல் இந்த ஆராய்ச்சி குறித்து விரிவாக பேசுகிறது. நமது மூளை சூடாகும் போது அதை குளிரச் செய்ய என்ன செய்யலாம் என உடல் யோசிக்கிறது. எனவே அது கொட்டாவி மூலம் நிறைய காற்றை உள்ளே செலுத்தி மூளையை குளிர வைக்க முயல்கிறது என்பது தான் இவர்களுடைய கண்டு பிடிப்பின் சாராம்சம் . குளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி விடுவதன் காரணம் இது தானாம். அதெப்படி குளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி? வெயில் காலத்தில் தானே மூளை அதிகம் சூடாகும்? அப்போது தானே அதிகம் கொட்டாவி தேவைப்படும்? என்று தானே நினைகிறீர்கள்?ஆராய்ச்சி என்ன சொல்கிறதென்றால், நமது உடலுக்கு வெளியே உள்ள கற்று குளிரை இருக்கும் போது தான் அது மூளையை குளிர செய்ய முடியும். எனவே தான் குளிர் காலத்தில் அத்திட கொட்டாவி மூலம் அதிக குளிர்காற்றி உடல் உள்வாங்குகிறது. வெயில் காலத்தில் கொட்டாவி விட்டால் மூளை மேலும் அதிகள் வெப்பமடையும் ஆகையால் உடல் அதை அனுமதிக்க மறுத்து விடுகிறது. உடலின் தன்மைக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் கொட்டாவி வருகிறது எனும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் ஒரு புதிய விஷயமாக கருதப்படுகிறது. நோய்களுக்கான மருத்துவ விளக்கத்துக்கும் இந்த ஆராச்சி பயன்படுமென கூறப்படுகிறது .குறிப்பாக M.N.T எனப்படும் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் கொட்டாவியை வர வைக்கும். அந்த நோயாளிகளின் மூளை அதிக வெப்பமாக இருப்பது கூட இதன் காரணாமாக இருக்கலாம் எனும் கோணத்தில் ஆராய்ச்சிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு வாசல் திறந்து வைத்திருக்கிறது. எது எப்படியோ, அடித்தவாட்டி யாராச்சும் கொட்டாவி விட்டா! டென்ஷன் ஆகதிங்க! அவருக்கு மூளை சூடா இருக்கின்னு பரிதாபபடுங்க!

எலிசபெத் டெய்லரின் நகைகள் ரூ 580 கோடிக்கு ஏலம்

« இங்கிலாந்தில் அதிகம் விபசாரத்தில் ஈடுபடும் மாணவிகள்! அதிர்ச்சி எலிசபெத் டெய்லரின் நகைகள் ரூ 580 கோடிக்கு ஏலம்Published December 16, 2011 பிரபல ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர்இ 79 வயதில் மரணமடைந்தார். எனினனும் பகழ் என்னும் மறையவில்லை, அவர் பயன்படுத்திய முத்துக்கள், வைரங்கள் இந்திய நகைகள் போன்றவற்றை அமெரிக்காவை சோ்ந்த ஏல நிறுவனம் ஒன்று ஏலம் விட்டது. சுமார் 4 மணிநேரம் நடந்த ஏலத்தில் எலிசபெத் டெய்லரின் நகைகள் மட்டும் 2 மணிநேரம் ஏலம் விடப்பட்டன.

33 கேரட் வைர மோதிரம், பிரஸ் லெட், முத்து மாலை என அவருடைய 80 வகையான நகைகள் ஏலம் விடப்பட்டது மொத்தம் ரூ. 580 கோடிக்கு விற்பனையானது. இது எதிர்பார்த்ததை விட ரூ.100 கோடி அதிகமாகும். திருமணம் மற்றும் விவகாரத்துக்கு பெயர் பெற்ற நடிகை எலிசபெத் டெய்லரை இரண்டு முறை திருமணம் செய்த ரிச்சர்டு பர்டன் பரிசளித்த இரண்டு நகைகளும் ஏலத்தில் இடம் பெற்றன. ரிச்சர்ட் பார்டன் அவரது சக நடிகராவார். இந்த நகைகளில் அநேகமானவை மைக் டொட் வழங்கியவை. அவருடைய ஏழு கணவன்மார்களில் அவர் மைக் டொட்டை மட்டுமே விவாகரத்து செய்யவில்லை. அவர்கள் இருவரும் திருமணம் செய்து ஒரு வருட காலத்துக்குள் டொட் இறந்து விட்டார்.

அவரிடம் இருந்த நகைகளின் தொகுப்பு உலகப் புகழ் பெற்றவை ஆகும். 33.19 கேரட் எடை உள்ள வைரத்தையும் இவர் வைத்து இருந்தார். அது எலிசபெத் டெய்லர் வைரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இதன் மதிப்பு மட்டும் ரூ. 12 கோடியே 50 இலட்சம் ஆகும்.

இதே எலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த 55 கேரட் (203 கிரேய்ன்) முத்து மாலையும் ஏலம் விடப்படடது அது ஒரு கோடியே 20 லடசம் ரூபாய்க்கு ஏலம் போனது இங்கிலாந்து ராணி மற்றும் ஸ்பாணிஸ் அரசிகள் இந்த முத்து மாலையை பயன்படுத்தினார்கள் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.