நான்கு நாள் பயணமாக சீனா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடமே சீனத் தலைவர்கள் இந்த வாக்குறுதியை அளித்துள்ளனர்.
நேற்று முன்தினம் சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்துப் பேசிய சிறிலங்கா அதிபர், நேற்று சென்சென் நகரிலுள்ள விடுதி ஒன்றில் சீன அதிபர் ஹுஜின்டாவோவை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன்போதே வெளியக அழுத்தங்களின்றி நல்லிணக்க முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்வதற்கு சீனா ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக மேற்குலக நாடுகள் வலியுறுத்தும் போர்க்குற்ற விசாரணை முயற்சிகளுக்கு எதிராக சிறிலங்காவுக்கு கைகொடுக்க சீனா தயாராக இருப்பதையே இவ்வாறு சூசகமாக வெளிப்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.
அதேவேளை நான்கு நாள் பயணமாக சீனா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை கொழும்பு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.