This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, August 28, 2011

கலை... தாகம்.. தொழில் அதிபர்...அசின்

நடிகை அசின் தீராத கலைத்தாகத்தால் தான் திரையுலகிற்கு வந்தார் என்று கூறப்படுகிறது.

கேரளாவில் நடிகை அசினுக்கு சொந்தமாக பல தொழிற்சாலைகள் உள்ளன. அம்மணி அதை நிர்வகிப்பதில் கில்லாடியாகவும் உள்ளார். கைவசம் தொழில் இருக்க அசின் எதற்கு நடிக்க வந்தார் என்று தானே நினைக்கிறீர்கள். அவருக்கு தீராத கலைத்தாகமாம். அதனால் தான் நடிக்க வந்தாராம்.

ஆரம்பத்தில் கோலிவுட்டிலும், பின்னர், தெலுங்கிலும் பிரமாதப்படுத்திய அசின் தற்போது பாலிவுட்டிலும் தனது கொடியை உயரப் பறக்க விட பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் எப்பாடுபட்டாவது பெரிய ஆளாகிவிட வேண்டும் என்பதில் குறியாய் உள்ளார். இதனால் கோலிவுட், தெலுங்கில் வரும் வாய்ப்புகளைப் புறம் தள்ளி வருகிறார்.

கஜினி தன்னை உயரத்தில் உட்கார வைத்ததைத் தொடர்ந்து அங்கேயே நிரந்தரமாக உட்கார்ந்து கொள்ளும் திட்டத்தில் இருக்கும் அசினுக்கு, கஜினிக்குப் பிறகு அதேபோல ஒரு சூப்பர் டூப்பர் படம் அமையாதது கவலையாகவும், வருத்தமாகவும் இருக்கிறதாம்.இருந்தாலும் விடாமல் தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

எப்படியோ 'தாகம்' தீர்ந்தா சரிதான்...!

கோலிவுட்டுக்கு நோ சொன்ன ஷ்ரேயா கோஷல்

நடிக்க ஆரம்பித்தால் பாட முடியாமல் போய்விடும் என்பதால் நடிக்க வரும் வாய்ப்புகளை தட்டிக் கழிக்கிறார் பாடகி ஸ்ரேயா கோஷல்.

பாடகிகளில் இனிமையான குரலை உடையவர் ஷ்ரேயா கோஷல். இனிமையான குரல் மட்டுமல்லாமல் அசரடிக்கும் அழகையும் கொண்டவர் இந்த 27 வயது பாட்டுக் குயில்.வசீகரமான முகம் கொண்ட இவரையும் நடிக்க வைத்து விட கோலிவுட்டில் தீவிரமாக முயற்சிக்கிறார்களாம் சிலர். எப்படியாவது கோஷலை நடிகையாக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனராம்.

நினைப்புக்கு செயல் வடிவம் கொடுக்க ஷ்ரேயாவை அணுகினர். எப்படியாவது அவரை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் ஸ்ரேயாவோ நான் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ஏன் ஸ்ரேயா இப்படி அடம்பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் ஒரு பாடகி. நடிக்க வந்தால் பாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். அதனால் நடிக்க மாட்டேன் என்றார்.

பரவாயில்லையே, தனது பாதையில் படு தெளிவாகத்தான் இருக்கிறார் ஷ்ரேயா.

நிறைய தெலுங்குப் படம் பார்... அமலா பாலுக்கு அனுஷ்கா அட்வைஸ்

நிறைய தெலுங்கு படங்கள் பார் அமலா என்று நடிகை அமலா பாலுக்கு அனுஷ்கா அறிவுரை வழங்கியுள்ளாராம்.

கேரள அழகி அமலா பால் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார். அன்மையில் வெளிவந்த தெய்வத்திருமகள் பற்றி பெருமையாய் பேசி வருகிறார். இந்நிலையில் கோலிவுட்டை பார்த்தாச்சு, டோலிவுட்டை ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்திருக்கிறார் அமலா பால்.

அதற்காக தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறாராம். இது பற்றி தெரிய வந்த அனுஷ்கா நிறைய தெலுங்கு படங்கள் பார் அமலா. அது உனக்கு உதவியாக இருக்கும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளாராம். அமலாவும் தெலுங்குப் படங்களைப் பார்க்கத் துவங்கியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அட அனுஷ்கா அமலாவுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆகியாச்சா என்றால் ஆம் என்று தான் கூற வேண்டும். அவர்கள் இருவரும் சேர்ந்து தெய்வத்திருமகள் படத்தில் நடித்ததில் இருந்தே தோழிகளாகி விட்டனர். ஸாரி.. நெருக்கமான தோழிகளாகிவிட்டனராம்.

'சீயானுக்கும்' கூட அமலா பால் நெருங்கிய தோழியாகி விட்டதாக கோலிவுட்டில் கூறுகிறார்கள்...!