This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label வழக்கு. Show all posts
Showing posts with label வழக்கு. Show all posts

Wednesday, July 13, 2011

ஹைகோப் வழக்கு ஓகஸ்ட் 4ம் திகதிக்கு ஒத்திவைப்பு

முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத்பொன்சேகா மற்றும் அவரது மருமகன் தனுன திலகரட்னவுக்கு எதிரான ஹைகோப் வழக்கு விசாரணையை கொழும்பு மேல்நீதிமன்றம் ஓகஸ்ட் 4ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இன்றைய வழக்கு விசாரணைக்காக சரத்பொன்சேகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

எனினும் சரத்பொன்சேகா தரப்பு சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுகவீனம் காரணமாக இன்று வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு ஆஜராகி இருக்கவில்லை.

இதனையடுத்து கொழும்பு மேல்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 4ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Tuesday, July 12, 2011

சரத் பொன்சேகா மீதான வழக்கு நவம்பர் வரை ஒத்திவைப்பு

சரத் பொன்சேகா மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சேனக டி சில்வாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை நவம்பர் 14ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை பணிக்கமர்த்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சரத் ​​பொன்சேகா சார்பாக ஆஜராகும் பிரதான சட்டத்தரணி நலின் லதுவஹெட்டி பிரிதொரு வழக்கிற்கு சென்றிருந்ததால் பிரதிவாதி சார்பில் ஆஜரான மற்றுமொரு சட்டத்தரணி வழக்கை பிரிதொரு தினத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர நவம்பர் 14ம் திகதிவரை விசாரணையை ஒத்திவைத்தார். மேலும் வழக்கு தொடர்பான அனைத்து சாட்சிகள் குறிப்பிட்ட நாளில் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Thursday, July 7, 2011

சக்சேனா, தயாநிதி மாறனுக்கு எதிராக நித்தி வழக்கு

July 7, 2011 | no comments

நித்யானந்தாவுக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக சன் டிவியின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் மீது நித்யானந்தா பீடத்தின் சென்னை நிர்வாகி ஸ்ரீநித்ய சர்வானந்தா போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

சக்சேனா கைது, தயாநிதி மாறன் ராஜினாமா என சன் குழுமத்துக்கு எதிரான காட்சிகள் அரங்கேறும் சூழலில் இந்தப் புகார் தரப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

2.3.2010 அன்று சன் டிவியில் இரவு எங்கள் ஆன்மீக குரு சுவாமி நித்யானந்தாவும், தமிழ் நடிகையும் இருப்பது போன்ற காட்சியை ஒளிபரப்பியது. இது உண்மையானதல்ல. போலியாக தயாரிக்கப்பட்ட இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள்.

நித்யானந்தா மீது அவதூறு பரப்பும் வகையில் இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் இவ்வாறு அந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

சேலம், நாமக்கல், கோவை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராஜபாளையம், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்பட எங்கள் பீடத்தின் கிளைகள் தமிழகம் முழுவதும் உள்ளன. அங்கு யோகா வகுப்புகளும், ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த பீடங்கள் மீது சன் டிவியின் உதவியுடன் தாக்குதல் நடத்தினார்கள். ஆண், பெண் பக்தர்களையும் தாக்கினர்.

அங்கிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. குறிப்பாக 3.3.2010 அன்று சேலம் பெரியபுதூர், அழகாபுரம், சீர்காழி, சட்டநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள ஆசிரமங்களில் குண்டர்கள் புகுந்து சன் டிவி கேமிராமேன்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தினார்கள். 2ந் தேதியன்று திருவண்ணாமலை மற்றும் ராஜபாளையம் ஆசிரமங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. சன் டிவியின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல்கள் நடைபெற்றன.

சன் டிவி மீண்டும் மீண்டும் அந்த காட்சிகளை ஒளிபரப்பியதால் எங்கள் பீடம் மீது மக்களுக்கு தவறான கருத்து உருவாகியது. இந்துக்கள் உணர்வு புண்படுத்தப்பட்டது. முந்தைய ஆட்சியில் இது குறித்து புகார் செய்யப்பட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களுடைய செல்வாக்கு காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே சன் டிவி நிர்வாக இயக்குனரும், தலைவருமான கலாநிதி மாறன், தலைமை செயல் அதிகாரி சக்சேனா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, July 1, 2011

இந்தி 'சிங்க'த்தை தடை செய்யக் கோரி வழக்கு

மனைவி ரம்லத்துக்கு தருவதாகக் கூறிய சொத்துக்களை இன்னும் பிரபுதேவா மாற்றிக் கொடுக்காததாலேயே வழக்கு தாமதமாவதாக தெரியவந்துள்ளது.

சென்னை குடும்ப நல கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்த பிரபுதேவா-ரம்லத் விவாகரத்து வழக்கில் இருவருமே நேற்று ஆஜராகவில்லை. இதற்குப் பின்னணியில் பரபரப்பான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

பிரபுதேவாவும், நயன்தாராவும் கடந்த வருடம் இறுதியில் திருமணத்துக்கு தயாரானதும் ரம்லத்துதான் கோர்ட்டுக்கு போனார். நயன்தாரா கணவரை பிரிக்க முயற்சிப்பதாகவும் பிரபுதேவாவை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் பிரபுதேவா- ரம்லத் இடையே சமரசம் ஏற்பட்டது. இருவரும் மனம் ஒத்து பிரிவதாக மனுதாக்கல் செய்தனர்.

அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடு, அண்ணா நகரில் உள்ள வீடு மற்றும் ஐதராபாத்தில் உள்ள பிளாட்கள் போன்றவற்றை மனைவி மற்றும் மகன்களுக்கு வழங்குவதாக பிரபுதேவா உறுதி அளித்தார். ஜூன் 30-ந்தேதிக்குள் பத்திரப்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் இன்னும் சொத்து பத்திரங்கள் ரம்லத் வசம் வரவில்லை என்று கூறப்படுகிறது.

வருகிற 10-ந்தேதி வழக்கு விசாரணையின்போது ரம்லத் மற்றும் குழந்தைகள் பெயரில் ஏற்கனவே குறிப்பிட்டப்படி சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டதா? என்ற தகவல் பிரபுதேவா தரப்பில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.Topics: ரம்லத், பிரபுதேவா, விவாகரத்து, ramlath, prabhu deva, divorce