This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, July 28, 2011

கடவுளுக்கு நிகரானவர் ரஜினி-ஜூம் டிவி புகழாரம்

ஜூம் சூப்பர் நோவா 2010 டாப் 50 பட்டியலில் ரஜினி-கடவுளுக்கு நிகரானவர் என புகழாரம்!

பாலிவுட்டின் டாப் 50 பிரபலங்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது ஜூம் டிவி. இது டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் நடத்தும் பொழுதுபோக்கு சேனல்.

ஜூம் சூப்பர்நோவா பட்டியல் எனும் பெயரில் இந்த ஆண்டு முதல் 50 விவிஐபிகளைப் பட்டியலிட்டுள்ளது அந்த சேனல். இதில் டாப் 10 பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதில் மூன்றாவது இடத்தில் அவர் பெயரை வைத்துள்ளது ஜூம் டிவி. 'ரஜினியைப் பொருத்தவரை அவர் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர்' என்றும் குறிப்பிட்டுள்ளனர் ('Rajinikanth who is a demigod unto himself').

முதலிடத்தை சல்மானுக்கும் இரண்டாம் இடத்தை அமீர் கானுக்கும் வழங்கியுள்ளது இந்த பாலிவுட் சேனல். ஷாரூக் கான் 4வது இடத்திலும், ஏஆர் ரஹ்மான் 5வது இடத்திலும், அமிதாப் பச்சன் 6 வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில். இந்த டாப் 10 -பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் கத்ரீனா கைப். ஐஸ்வர்யா ராய்க்கு 14வது இடம் கிடைத்துள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து ரஜினியும் ரஹ்மானும் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளனர்.Topics: rajini, supernova top 50, zoom, ரஜினி, ஜூம் டிவி

சென்னையில் நடிப்புப் பயிற்சி நிறுவனம்-ராதிகாவுடன் தொடங்கினார் அனுபம் கெர்

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடத்தி வரும் ஆக்டர் ப்ரிபேர்ஸ் என்ற நடிப்பு பயிற்சி நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ராடன் டி.வியும் இணைந்து சென்னையில் நடிப்பு பயிற்சி கல்லூரியை துவங்கியுள்ளன.

இதற்கான ஒப்பந்தம் சென்னையில் புதன்கிழமை கையெழுத்தானது. அதன் பின் நிருபர்களை சந்தித்தார்கள் அனுபம் கெர், ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர்.

முப்பத்தியேழு வருடங்களுக்கு முன் இதே ஜுலையில்தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு முயற்சியை ஆரம்பித்தேன். இன்று அதே ஜுலையில் சென்னையில் நடிப்பு பயிற்சி இன்ஸ்ட்டியூட் துவங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அனுபர்கெர்.

அகமதாபாத், சண்டிகர் என்ற இரு இடங்களில் இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வரும் இவர், சென்னையிலும் கிளை துவங்க காரணமாக இருந்திருக்கிறது ராடர்ன் டிவி.

மூன்று மாத பயிற்சி வகுப்புக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கட்டணம். இதில் பத்து நாட்கள் அனுபம் கெரெ வந்து வகுப்பெடுப்பாராம். ராதிகாவும் வகுப்புகள் நடத்துவார். அது போகட்டும்... முக்கியமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார் ராதிகா.

ஏற்கெனவே கூத்துப் பட்டறை என்ற அமைப்பு வேறு இதே வேலையை செய்து கொண்டிருக்கிறதே என்று அனுபம் கெர் - ராதிகாவிடம் கேட்டனர் நிருபர்கள்.

அதற்கு ரொம்ப சிம்பிளாக சொன்னார்கள் பதிலை: இங்கே அனுபம் கெரும் ராதிகாவும் இருக்கிறார்கள். அங்கே இல்லை. அதான் வித்தியாசம் என்றனர்.

டிப்ளமா, சர்ட்டிபிகேட் மற்றும் குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் தனிப் பயிற்சி என மூன்று பிரிவுகளை இப்போதைக்கு வைத்துள்ளார்களாம்.Topics: radhika, anupam kher, raadan media, ராடான், அனுபம் கெர், ராதிகா

வரதட்சணை கொடுமை: சிரஞ்சீவி மருமகன் ஜெயிலில் அடைப்பு

ஹைதராபாத்: வரதட்சணைக் கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் சிரிஷ் பரத்வாஜ்.

நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறிது காலம் சந்தோஷமாக நீடித்த அவர்களது திருமண வாழ்க்கையில் வரதட்சணையால் பிரச்சினை ஏற்பட்டது.

கணவன் மற்றும் மாமியார் சர்வமங்களா ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி ஸ்ரீஜா தனது குழந்தையுடன் தந்தையான நடிகர் சிரஞ்சீவி வீட்டுக்கு வந்து விட்டார்.

மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் மாமியார் மீது போலீசில் ஸ்ரீஜா புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து அரசு ஊழியரான அவரது மாமியார் சர்வ மங்களா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் ஆனால் சிரிஷ் பரத்வாஜ் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவர் ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரை வரும் 8-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சஞ்சல்குடா என்ற ஜெயிலில் சிரிஷ் பரத்வாஜ் அடைக்கப்பட்டார்.Topics: வரதட்சணை, chiranjeevi, சிரஞ்சீவி மருமகன், chiranjeevi son in law, andhra pradesh, dowry case

அடுத்த 'ஜேம்ஸ்பாண்ட்' நாயகி ரஷ்யாவின் மார்கரிட்டா லெவிவா?

ரஷ்ய நடிகை மார்கரிட்டா லெவிவா தான் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகி என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல ரஷ்ய நடிகை மார்கரிட்டா லெவிவா(31). அவர் ஸ்பிரட், லிங்கன் லாயர் ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு கதாநாயகி தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் இப்போது லெவிவாவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனராம்.

அடுத்து வரவிருக்கும் 23-வது ஜேம்ஸ் பாண்ட் படத்தில் டேனியல் கிரெய்க்குக்கு ஜோடியாக லெவிவா நடிப்பார்.

பாண்ட் நாயகி என்றால் அழகாகவும், நம்பிக்கையுடனும் அதே சமயம் புதிரான தோற்றம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மார்கரிட்டாவுக்கு இந்த தகுதிகள் அனைத்தும் உள்ளன என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய பாண்ட் படத்தின் தயாரிப்பு பணிகள் வரும் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கிறது. எனவே அதற்குள் லெவிவாவை இறுதி செய்துவிடுவார்கள் என தெரிகிறது.Topics: james bond, margarita levieva, ஜேம்ஸ் பாண்ட், மார்கரிட்டா லெவிவா