This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, April 9, 2012

Monday, January 2, 2012

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் பீதியில் மக்கள்

« நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம் – ஆய்வு முடிவு » யூடியூப் இணையத்தளத்தின் புதிய சேவை!Published January 2, 2012 பிரபல யூடியூப் இணையத்தளம் புதிய வருடத்தில் புதிய சேவை வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தனது தளத்தில் தரவேற்றப்பட்டு மிக பிரபலமாகிவிடும் வீடியோக்களில் ஒரே வகையான இரு வீடியோக்களை போட்டிக்கு தெரிவு செய்து இவற்றில் எது சிறந்தது? எது உங்களுக்கு பிடித்திருக்கிறது? என வாக்களிக்க சொல்கிறது. வெற்றி பெறும் வீடியோக்களை வாரந்தோறும் பட்டியலிடப்போகிறது.

நகைச்சுவை, அழகு, இசை, ஆச்சரியம், நடனம் எனும் பிரதான ஐந்து வகைகளில் உள்ளடக்கப்படும் வீடியோக்களை இப்படி போட்டிக்கு தெரிவு செய்ய போவதாக யூடியூப் வலைப்பூ தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மற்றொன்றுடன் ஒப்பிட்டு சிறந்தவற்றை மாத்திரம் மேலும் பிரபலப்படுத்தும் வாய்ப்பு உருவாகும் எனவும், அவ்வீடியோக்களுக்கு ரசிகர்களிடம் உரிய அங்கீகாரம் கிடைக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் யுடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய புள்ளிவிபரத்தின் படி இணைய உலகில் அதிக நபர்களால் பார்வையிடப்படும் வீடியோ இணையத்தளமாக யூடியூப் தளம் தொடர்ந்து முதலிடத்தில் நிற்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மாத்திரம் 88.3 பில்லியன் வீடியோ காட்சிகள் யூடியூப் பக்கத்தில் பார்வையிடப்பட்டுள்ளன.

சீனாவின் Youku இணையத்தளம் 4.6 பில்லியன் தடவை பார்வையிடப்பட்டு இரண்டாவது இடத்திலும், பிரபல இசை வீடியோக்களுக்கான இணையத்தளமான Vevo 3.7 பில்லியன் தடவை பார்வையிடப்பட்டு மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

Sunday, January 1, 2012

ஓரு நாளில் 20 சிகரெட்டை பிடிக்கின்றார்: மதுஷாலினி

« தேன் ஒர் அற்புதமான மருந்து! உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து கோரிய தம்பதிகள்! » ஓரு நாளில் 20 சிகரெட்டை பிடிக்கின்றார்: மதுஷாலினிPublished December 31, 2011 பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் நடித்தவர் மதுஷாலினி. அந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. அதனால் இந்தியில் ராம்கோபால் வர்மா இயக்கும் ‘டிபார்ட்மெண்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கதைப்படி இப்படத்தில் ரவுடி கூட்டத்தலைவியாக நடிக்கிறார் மதுஷாலினி. இந்த படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், இப்படத்தில் வில்லி வேடத்தில் முதன்முறையாக நடிக்கிறேன். அதற்காக எனது கெட்டப்பை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். முக்கியமாக என்னை தினமும் 20 சிகரெட் வரை பிடிக்க வைக்கிறார். கதைக்கு தேவை என்பதால் சிகரெட் பிடித்தபடி நடித்து வருகிறேன். சிகரெட் வாடையே பிடிக்காத நான் ஒரு மாதமாக தினமும் 20 சிகரெட் வரை பிடித்து கஷ்டப்பட்டு வருகிறேன் என்கிறார் மதுஷாலினி.

டொயோட்டா உலகிலேயே எரிபொருள் சிக்கனமுடைய காரை அறிமுகபடுத்தியுள்ளது

« செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் அமீர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? » டொயோட்டா உலகிலேயே எரிபொருள் சிக்கனமுடைய காரை அறிமுகபடுத்தியுள்ளதுPublished December 31, 2011 உலக அளவில் எரிபொருள் விலை எகிறிக்கொண்டு செல்வதால், குறைந்தளவு எரிபொருள் பயன்படுத்தும் கார்களுக்கே தற்போது டிமான்ட் உள்ளது.

போட்டி நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கியுள்ள நிலையில், கார் மார்க்கெட்டில் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த அறிமுகம் உதவும் என்று எதிர்பார்க்கிறது டொயோட்டா.

நேற்று விற்பனைக்கு விடப்பட்டுள்ள கார், ‘Aqua’ மாடல் காராக ஜப்பானிலும், மற்றைய நாடுகளில்

டோக்கியோவில் நேற்று (திங்கட்கிழமை) அறிமுகப்படுத்தியபோது..

‘Prius C’ மாடல் காராகவும் விற்கப்படவுள்ளன. ஒரு லீட்டர் எரிபொருளுக்கு 35.4 கி.மீ. (35.4 km/litre) கொடுக்கும் விதத்தில் இதன் தொழில்நுட்பம் உள்ளதாக அறிவித்துள்ளது டொயோட்டா. இதுவரை டொயோட்டா விற்பனை செய்துவந்த அதிஉச்ச எரிபொருள் சிக்கன Prius கார், 32 km/litre தொழில்நுட்பம் உடையது.

டொயோட்டோவின் போட்டியாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டுக்குள் கொண்டுவந்திருப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். அவை இன்னமும் மார்க்கெட் ஷேரில் பெரிய சதவீதத்தை எட்டிப் பிடிக்க முடியாமல், குறைந்தளவு விற்பனை இலக்கங்களையே காட்டுகின்றன. நிசான் டோட்டர்ஸ் தயாரித்துள்ள லீஃப் மாடல் மற்றும், ஜி.எம். போட்டர்ஸ் தயாரித்துள்ள வோல்ட் ஆகிய மாடல்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு ஓகோ என்று இல்லை.

 அதற்கு முக்கிய காரணம், அவற்றின் பேட்டரிகளின் உச்ச விலை! எரிபொருளில் சேமிக்கும் பணம் பேட்டரியில் போய்விடுகிறது.டொயோட்டா நேற்று அறிமுகப்படுத்தியுள்ள மாடல், ஜப்பானில் அறிமுக விலையாக 1.60 மில்லியன் யென் (சுமார் 10 லட்சம் இந்திய ரூபா) விலைப் பட்டியலுடன் வெளியாகியுள்ளது. மாதம் ஒன்றுக்கு 12,000 கார்களை விற்பனை செய்ய முடியும் என்கின்றன அவர்களது ஆரம்ப காட்ட கணிப்பீடுகள்.

Friday, December 30, 2011

இன்றைய உலகில் கணவன் மனைவி உறவு எந்த நிலையில் உள்ளது?

« முட்டை மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும் பூமியில் ரஷ்ய விண்கலம் மோதும் அபாயம்! » இன்றைய உலகில் கணவன் மனைவி உறவு எந்த நிலையில் உள்ளது?Published December 28, 2011 கணவன் – மனைவிக்கு இடையே உள்ள தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இந்த தாம்பத்தியத்தின் வாயிலாக மறக்கப்படுகிறது. இவ்வளவு புனிதமான, இல்லறத்திற்கு அவசியமான தாம்பத்யம் தற்போது மாறி வரும் உலகில் கணவன் – மனைவிக்கு இடையே எந்த இடத்தில் உள்ளது?

காதல், திருமணம், தாம்பத்யம் இவை எல்லாமே மனிதனால், மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. இதில் தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்குமான ஒரு சிகிச்சை. இதனால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம்.

ஆனால் இரண்டு மனங்களும் ஒத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாம்பத்யம் கொள்ளும்போதுதான் இது சாத்தியமாகிறது.

நமது கலாச்சாரத்தின் படி, இரண்டு மனங்களை இணைப்பதே திருமணம். இந்த நோக்கம், இருவரும் இசைந்து தாம்பத்தியம் கொள்ளும்போதுதான் முழுமையடைகிறது. தாம்பத்யத்தின் வாயிலாக இருவரது உணர்வுகளும், சந்தோஷங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

அதற்கெல்லாம் எங்கு நேரம் என்று கூறும் தம்பதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. பெயர், புகழ், பணம் சம்பாதிக்க நீண்ட தூரம், வேகமாக ஓட வேண்டிய நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். அதனால் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச இங்கே யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை.

அப்படியே கிடைத்தாலும் அந்த நேரத்தை தகவல் தொழில்நுட்பங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் விழுங்கி விடுகின்றன. எதிர் வீட்டில் இருப்பவரைப் பற்றியோ, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறதோ என்பதையோ அறிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை.

ஆனால் இப்போதெல்லாம், அவரவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை. அதிகாலையிலேயே பணிக்கு செல்வதும், இரவில் நேரம் கழித்து வருவதும் வழக்கமாகிவிட்டது. குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறார்கள் என்றாலும், பிள்ளைகளிடம் கொஞ்சி மகிழவும், வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடவும் இயலாமல் போய்விடுகிறது.

அதுபோன்றதொரு பொன்னான நேரத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பப் பெற இயலாது என்பதை அவர்கள் உணர்வதில்லை. காலத்தின் சூழ்நிலையால் மனிதன் எந்திரமாக மாறிவிட்டான். சக்கரம் போல் சுழலும் அவனது வாழ்க்கையில், எந்த இடத்திலும் சிறிது நேரம் களைப்பாறகூட அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை.

இதனால் மனிதன் விரும்பும் பல நல்ல விஷயங்களை அவன் அறியாமலேயே இழந்து வருகிறான். இதில் தாம்பத்யமும் ஒன்று. இது மிகவும் சிந்திக்க வேண்டிய, கவலை அளிக்கும் விஷயமாகும். கணவன் – மனைவி இருவருமே பணிக்கு செல்லும் நிலை இப்போதுள்ளது. ஒருவர் பணி நிமித்தமாக வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று கொண்டிருப்பதும், மற்றொருவர் பணியில் மூழ்கி இரவு – பகலென தெரியாமல் உழைப்பதும் இங்கெல்லாம் சாதாரணம்.

இதனால் கிடைப்பது என்ன? மிடுக்கான வாழ்க்கை, குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி, வெளிநாடுகளுக்கு பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு, நினைத்தப் பொருள் நினைத்தவுடன் கையில் என அனைத்தும் கிடைக்கும். ஆனால்… இதுதான் வாழ்க்கையா? இதில் மனம் நிறைவு பெறுமா? சரி இவற்றுக்கெல்லாம் நாம் கொடுக்கும் விலை என்ன தெரியுமா?

தாம்பத்ய வாழ்க்கை! இதற்கெல்லாம் தாம்பத்யம் ஈடாகுமா? ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் தாம்பத்யம் தற்போது குறைந்து வருகிறது. நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதற்கும், பல திருமணங்களின் உடனடி முறிவிற்கும் முக்கிய காரணமாக இந்த தாம்பத்யமே மையமாக அமைகிறது.

வாழ்க்கையில் முன்னேறவும், முக்கிய இடத்தை பிடிக்கவும் மனமும், உடலும் உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அந்த மனதிற்கும், உடலுக்கும் உற்சாகத்தை அளிக்கும் தாம்பத்தியத்தை பலர் மறந்தேவிட்டனர். “நேரம் இல்லை அதனால் செக்ஸ் இல்லை” என்பதே தற்போது பலர் சொல்லும் மந்திரமாகிவிட்டது.

மேலும் சில தம்பதிகளிடையே காலையில் எழுவதும், பணிக்கு செல்வதும், குழந்தைகளை பராமரிப்பதும் போல் தாம்பத்யமும் ஒரு பணியாக, அதனை கடமையாக எண்ணும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் காலையில் இருந்து நாம் சந்திக்கும் பிரச்சினைகளும், பணிச் சுமையுமே ஆகும்.

இதுபோல் பணியிலும், தாங்கள் சார்ந்துள்ள துறையிலும் உள்ளவர்களை `பணிச் சிறையில் வாழ்பவர்கள்’ என்றே அழைக்கலாம். இவர்கள் ஒரு நாளும் இந்த சிறையில் இருந்து விடுதலை ஆவதில்லை. இவர்கள் ஆயுள் கைதிகளாகவே இருந்து விடுகின்றனர். இதனால் இவர்களது திறமை வெளிப்பட்டு பெயர், புகழ் கிடைத்தாலும், உள்மனது அதற்கெல்லாம் மகிழ்ச்சியடைவதில்லை.

அது உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல பல சமயங்களில் அவர்களுக்கே தெரிவதில்லை. பணமும், புகழும், தங்களை சார்ந்தவர்களையும், தங்களது தேவைகளையும் திருப்திப்படுத்துமே தவிர, மனதையும், அதன் உணர்வுகளையும் அல்ல. பணத்தால் மனதை நிறைவு செய்ய இயலாது.

பணம் தான் வாழ்க்கை என ஓடும் பலர் சிறிது நேரம் நின்று பார்த்தால் தெரியும், எவ்வளவோ பேர் பணம் கிடைத்தும் நிம்மதி இல்லாமல் நிம்மதியைத் தேடி ஓடிக் கொண்டிருப்பதை. பலர் தங்களது வேலையில் ஏற்படும் பிரச்சினைகளுடனே வீட்டிக்குள் நுழைகின்றனர். இது தவிர்க்க முடியாததே ஆனாலும், தள்ளி வைக்க வேண்டிய விஷயமாகிறது.

இதுபோன்று பணியாற்றும் தம்பதிகள் பலருக்கு வீடு ஒரு விடுதி போலவும், இரவு வருவதும், காலையில் கிளம்பிச் செல்வதும் வழக்கமாகிவிடுகிறது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, அன்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் தாம்பத்யம் இல்லாமல், அவர்கள் அறியாமலேயே அவர்களது தன்னம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

தங்களது நிறைகுறைகளை, இன்ப துன்பங்களை, கோபதாபங்களை தனது துணையுடன் பகிர்ந்து கொண்டு, அதற்காக நேரம் ஒதுக்குவதும் தான் நல்ல தாம்பத்தியம். நல்ல தாம்பத்யம் என்பதே இல்லற வாழ்வின் இனிய வாசற்படி. அதற்குள் நுழைந்தால்தான் குழந்தைகள், செல்வம் என்னும் வீட்டிற்குள் வாழ இயலும். மனித வாழ்க்கைக்கு ஆதாரமான தாம்பத்தியத்தை தொலைத்து விட்டு நாம் தேடப்போகும் பொருள் தான் என்ன?

நாட்டுக் கோழி குழம்பு.

« D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு… » நாட்டுக் கோழி குழம்பு.Published December 29, 2011

தேவையான பொருட்கள்    1. கோழி – 1 கிலோ
    2. சின்ன வெங்காயம் – 35
    3. தக்காளி – 2
    4. தேங்காய் துருவல் – 1/4 சின்ன தேங்காய்
    5. கறிவேப்பிலை – 6 கொத்து
    6. கொத்தமல்லி – சிறிது
    7. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
    8. மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
    9. மல்லி தூள் – 2 1/2 தேக்கரண்டி
    10. உப்பு
    11. கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
    12. சோம்பு – 1 தேக்கரண்டி
    13. பச்சை மிளகாய் – 2
    14. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் 15, கறிவேப்பிலை 4 கொத்து சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.இதை மசாலாவாக அரைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.மஞ்சள், தூள், கரம் மசாலா, கோழி சேர்த்து வதக்கி, குக்கரில் வைத்து வேக வைக்கவும்.பின் அடுப்பில் வைத்து அரைத்த மசாலா தண்ணீா் சோ்க்காமல்  உப்பும் போட்டு எண்ணெய் திரண்டு வர கொதிக்க வைத்து எடுக்கவும்.

 

Sunday, December 18, 2011

உலகப் புகழ் சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்தது

« நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம் – ஆய்வு முடிவு » உலகப் புகழ் சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்ததுPublished December 19, 2011 மவுனப்பட காலத்திலேயே உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கியவர், சார்லி சாப்ளின். சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். அவர் நடித்த படங் களின் “விசிடி”கள் இன்றும் எல்லா நாடுகளிலும் விற்பனை ஆகின்றன.   சார்லி சாப்ளின் தெற்கு லண்டனில் 1889 ஏப்ரல் 16_ந் தேதி பிறந்தவர்.சார்லி சாப்ளின் பெற்றோர்கள் மேடைப் பாடகர்கள். ஆயினும் குடும்பம் வறுமையில் வாடியது. அதிகம் படிக்காத சார்லி சாப்ளின், ஐந்து வயதி லேயே மேடை நாடக ங்களில் நடிக்கத் தொடங் கினார். சார்லிக்கு 21 வயதான போது, நாடகக் குழு அமெரிக்கா சென்றது.அவரும் அமெரிக்கா போனார். 1913_ல் “கீ ஸ்டோன்” என்ற கம்பெனி தயாரித்த ஊமைப்படத்தில் முதன் முதலாக சாப்ளின் நடித்தார். படத்தின் பெயர் “மேக்கிங் எ லிவிங்”. அதில் அவர் வில்லனாக நடித்தார். அப்படம் வெற்றி பெறவில்லை. “கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ்” என்பது அவருடைய இரண்டாவது படம்.அதில்தான் அவர் காமெடி வேடத்தில் நடித்தார். தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத்தொப்பி, கையில் சிறு தடி _ இத்தகைய “மேக்கப்”புடன் தோன்றி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். பின்னர் இத்தகைய வேடமே அவருக்கு “டிரேட் மார்க்” ஆகியது.வரிசையாக சார்லியின் வெற்றிப் படங்கள் வெளிவந்தன. ஒரே ஆண்டில் 35 படங்களில் நடித்தார். எல்லாமே வெற்றிப்படங்கள்தான்.   தி கிரேட் டிக்டேட்டர் (மாபெரும் சர்வாதிகாரி) என்ற படத்தில் ஹிட்லர் வேடத்தில் நடித்தார். 1916_ம் ஆண்டில், வாரம் 10 ஆயிரம் டாலர் சம்பளத்தில் ஒரு படக்கம்பெனியில் சேர்ந்தார்.படங்களுக்கு கதை, வசனம் எழுதி நடித்தார். பல படங்களை டைரக்ட் செய்தார். உலகப் புகழ் பெற்றார். 1919_ம் ஆண்டில் “யுனைட்டெட் ஆர் டிஸ்ட்ஸ்” என்ற பட நிறுவனத்தை, வேறு சிலருடன் சேர்ந்து கூட்டாகத் தொடங்கினார். படங்களைத் தயாரித்ததுடன், படங்களை விநியோகம் செய்வதிலும் இந்தக் கம்பெனி ஈடுபட்டது.1931_ல் அவர் நடித்த “சிட்டிலைட்ஸ்” என்ற படம் மிகப் புகழ் பெற்றது. மவுனப் படயுகம் முடிவடைந்து, பேசும் படங்கள் வரத் தொடங்கி யிருந்த காலகட்டத்தில் 1936_ம் ஆண்டு “மாடர்ன் டைம்ஸ்” என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். அப்படத்தில் மற்றவர்கள் பேசினாலும், சார்லி ஒரு வார்த்தை கூட பேச வில்லை.அப்படமும் மகத்தான வெற்றி பெற்றது. 1940_ம் ஆண்டு சாப்ளின் தயாரித்த “தி கிரேட் டிக்டேட்டர்” சர்வாதிகாரி ஹிட்லரை கேலி செய்து எடுக்கப்பட்ட படம். ஹிட்லர் வேடத்தில் சாப்ளின் பிரமாதமாக நடித்தார். அவர் பேசி நடித்த முதல் படம் இது. உலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியது.1952_ல் அவர் “லைம் லைட்” என்ற படத்தில், சீரியசான வேடத்தில் நடித்தார். சாப்ளின் தன்னுடைய படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மிகவும் சிரமம் எடுத்துக்கொள்வார். செலவைப்பற்றி கவலைப்பட மாட்டார். “தி கிட்” படத்தில் ஒரு காட்சிக்காக 50 ஆயிரம் அடி படம் எடுத்தார்.அதில் 75 அடி தான் படத்தில் இடம் பெற்றது.   எல்லோரையும் சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்தது. முதல் மனைவி மாக்மர்ரே, இரு குழந்தைகளைப் பெற்ற பிறகு சார்லியை விவாகரத்து செய்ததுடன் 10 லட்சம் டாலர் ஜீவனாம்சம் பெற்றார். அடுத்து நடந்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்தன.பிறகு, “ஓனா_ஓ_நீல்” என்ற 18 வயதுப் பெண்ணை மணந்தார். இந்தப் பெண்ணுக்கு 8 குழந்தைகள் பிறந்தன. இந்த மனைவிதான் சார்லியின் இறுதிக்காலம் வரை அவருடன் வாழ்ந்தவர். சார்லி வெறும் நடிகர் அல்ல. மனித குலத்திற்கு வழிகாட்டிய மேதை.அதனால்தான், “திரை உலகின் ஒரே மேதை சார்லி சாப்ளின்” என்று பெர்னாட்ஷா பாராட்டினார். இங்கிலாந்து அரசாங்கம் சார்லி சாப்ளினுக்கு “சர்” பட்டம் கொடுத்துக் கவுரவித்தது. 1928, 1972 ஆகிய ஆண்டுகளில் “ஆஸ்கார்” விசேஷப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.1977 டிசம்பர் 25_ந்தேதி சாப்ளின் மறைந்து விட்டாலும், அவர் நடித்த படங்கள் மூலம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

« செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் அமீர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? » மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?Published December 19, 2011 எப்போதும் சிரித்த முகம்.மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.காலையில் முன் எழுந்திருத்தல்.பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.நேரம் பாராது உபசரித்தல்.கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.அதிகாரம் பண்ணக் கூடாது.குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.கணவனை சந்தேகப்படக் கூடாது.குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.அளவுக்கு மீறிய ஆசை கூடாது.குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ் எதிர் பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மனைவியின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தானாகவே நிறைவேறும். பின்பற்றித்தான் பாருங்களே உங்களுக்கே எல்லாம் புரியும்.

பாம்பு வடிவில் பிறந்த குழந்தை- அதிர்ச்சி வீடியோ

« கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது நல்லதா? ஸ்கேன் செய்வதால் குழந்தையின் வளர்ச்சி கர்ப்பப்பையில் பாதிக்கப்படுமா? » பாம்பு வடிவில் பிறந்த குழந்தை- அதிர்ச்சி வீடியோPublished December 18, 2011 இயற்கையின் மாற்றத்தில் பல்வேறு அதிசயங்கள் நடப்பது இயப்பு. அந்த வகையில் பிறந்த குழந்தை ஒன்று எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தியுள்ளது. சாதாரணமாக பிறக்கும் குழந்தையல்லா மல் பாம்பு உடலமைப்பில் பிறந்துள்ளது இக்குழந்தை. சவுதிஅரேபியால் ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தையே இவ்வாறு பாம்பின் வடிவில் பிறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தோல்வியாதியாக இருக்க கூடும் என வைத்தியர்கள் தெரி வித்துள்ளனர். பாம்பு குழந்தையினை காண வீடியோவை பாருங்கள்.

சுருட்டி எடுத்து செல்லும் பாக்கெட்” டி.வி விரைவில் அறிமுகமாகின்றது

« D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு… » சுருட்டி எடுத்து செல்லும் பாக்கெட்” டி.வி விரைவில் அறிமுகமாகின்றதுPublished December 18, 2011 சுருட்டி எடுத்து செல்லும் வகையில் பாக்கெட் டி.வி. தயாரிக்கப்பட்டு ள்ளது. இது விரைவில் அறிமுகம் ஆகிறது. தற்போது அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட டி.வி.க்கள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக 3டி முப்பரிமாண டி.வி.க்கள் விற்பனைக்கு வந்துள் ளன.

அவற்றை ஒரே இடத்தில் வைத்து தான் பார்க்க முடியும். ஆனால் சுருட்டி மடக்கி பாக்கெட்டில் எடுத்து செல்லும் மிக அதிநவீன டி.வி.க்களை இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குழு தயாரித்துள்ளனர்.

மனித ரோமத்தை விட 1 லட்சம் மடங்கு மெல்லிய சின்னஞ் சிறிய ஒளிப்பான்களை உருவாக்கியுள்ளனர். அதற்கு “குவா ண்டம் டாட்ஸ்” என பெயரி ட்டுள்ளனர்.

அதன் மூலம் மிக மெல்லிய டி.வி. திரைகளை உருவாக்க முடியும். அவ ற்றை பிளக்சிபில் பிளாஸ்டின் சீட்டில் ஒட்டி அதை எங்கு வேண்டுமா னாலும் எடுத்து செல்ல முடியும்.

அவை அடுத்த ஆண்டு இறுதியில் கடைகளில் விற்பனைக்கு வரும். ஆசிய எலக்ட்ரானிக் கம்பெனிகளின் உதவியுடன் இவற்றை தயாரித்த தாக மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானி மைக்கேல் டெல்டான் தெரிவித்துள்ளார்.