This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday, June 29, 2011

4000 கோடியில் வரும் புதிய கார் தொழிற்சாலை

June 30, 2011 | no commentsசென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைகிறது.  இதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு அளிக்கும் என்று பிரான்ஸ் நாட்டு உயர்மட்ட அதிகாரக் குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமை செயலகத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.ஏ. பியூஜியாட் சிட்ரியான் நிறுவனத்தின் ஆசிய சிறப்பு செயல்பாடுகள் தலைமை செயல் அதிகாரி கிரிகோரி ஆலிவர், இந்திய திட்டங்களின் மேலாண்மை இயக்குனர் பிரெடரிக் பேபர், பிளாக் ஸ்டோன் நிறுவனத்தின் முதுநிலை மேலாண்மை இயக்குனர் ஜிதேஷ் காதியா, மனிதவள மேம்பாடு துணைத் தலைவர் சஞ்சு சாகா, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சசிகாந்த் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட அதிகாரக் குழு சந்தித்து, காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

மாநில அரசின் ஆதரவு

அப்போது முதல்வர் ஜெயலலிதா அந்தக் குழுவினரிடம் கூறுகையில், கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு மாநிலத்தை தேர்வு செய்ததற்காக பி.எஸ்.ஏ. நிறுவன அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்த தொழிற்சாலை விரைந்து தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர், தலைமை செயலாளர், தொழில் துறையின் முதன்மைச் செயலாளர், சிப்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன செயல் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள்

பாரிஸை தலைமையிடமாகக் கொண்ட பி.எஸ்.ஏ. ஆட்டோமொபைல் நிறுவனம் ‘பியூஜியாட்’, ‘சிட்ரியான்’ ஆகிய பெயர்களில் கார்கள், மோட்டார்கள் சைக்கிள்கள் விற்பனை செய்து வருகிறது. கார் உற்பத்தியில் ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும், உலகத்தில் 6-வது பெரிய நிறுவனமாகவும் பி.எஸ்.ஏ. நிறுவனம் இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் வர்த்தகம் (விற்றுமுதல்) ரூ.3 கோடியே 9 லட்சத்து 556 கோடிகள் ஆகும்.

பி.எஸ்.ஏ. நிறுவனம், ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலையை உருவாக்க ஆர்வமாக உள்ளது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கார்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக இந்த நிறுவனத்தின் அதிகாரிகள், இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று ஆலோசனை நடத்தினார்கள்.

இறுதியாக, சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் தொழிற்சாலைக்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர். சென்னையில் சிறந்த சுற்றுச்சூழல், கார் தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகங்கள் சப்ளை, தேவையான அளவு மனிதஆற்றல், துறைமுக வசதி ஆகியவை இருப்பதாக கருதும், பி.எஸ்.ஏ. நிறுவனம், எல்லாவற்றிற்கும் மேலாக, மாநில அரசின் ஆதரவு அவசியம் என்று கருதுவதால் அந்த நிறுவனத்தின் உயர்மட்ட குழுவினர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மாநில அரசு முழு ஆதரவு மற்றும் உதவி அளிப்பதுடன், கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு தேவைப்படும் நிலத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே இந்த கார் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன் பிரான்ஸ் நாட்டின் ஏராளமான கார் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களையும் இந்த நிறுவனம் ஈர்க்கும். அதன்மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆண்களுக்குப் பிடித்த பெண், பெண்களுக்குப் பிடித்த ஆண் யார்?? சர்வே..

June 30, 2011 | no commentsதாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.


மனதை மயக்கும் சிவப்பு
பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர்.

காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்…! கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.

ஆண்களை கவரும் பெண்கள்
பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது. ஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.

இயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள்
ஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்…! கண்ணுக்கு மை அழகு… கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும்.

முத்தம் சிந்தும் உதடுகள்
அடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது.

உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது. உதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர்.

பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.

பந்தா இல்லாத ஆண்கள்
சரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே…! பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.

மங்காத்தா கெஸ்ட் ரோலில் விஜய்

June 30, 2011 | no comments

கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு விஜய், அஜீத் பற்றிய செய்தி தான். அஜீத் நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மங்காத்தாவில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக எல்லா தொழிலும் போட்டி இருக்கிறது, அதுபோல சினிமாவிலும் போட்டி உண்டு. அதில் அஜீத்துக்கும், விஜய்க்கும் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் இவர்களது படத்தில் அஜீத்தை தாக்கி விஜய் பஞ்ச் டயலாக் பேசுவது போன்றும், விஜய்யை தாக்கி அஜீத் பஞ்ச் டயலாக் பேசுவதும் தொடர்கதையாக இருந்தது. இது இவர்களது ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்தது. இருவரது ரசிகர்களும் எப்போதும் முறைத்து கொண்டுதான் இருப்பார்.  ஆனால் நிஜத்தில் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க மாட்டார்களா…? என இவர்களது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அந்த ஏக்கம் பூர்த்தியாகி இருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 50வது படமான மங்காத்தா படத்தில், படத்தின் நாயகி த்ரிஷா தவிர அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜிஅமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில் மங்காத்தாவில் ஒரு காட்சியில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் மற்ற நடிகர்கள் படங்களில் கெஸ்ட்ரோலில் வந்துபோய் உள்ளார். ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமல்ல. அஜீத் படத்தில், விஜய் கெஸ்ட்ரோலில் நடித்திருப்பதாக கூறுவது தான் பெரிய விஷயம். இந்தசெய்தி குறித்த உறுதியான தகவல் இல்லை. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருப்பின், நிச்சயமாக இருவரது ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமான செய்தி தான்.

தற்போது மங்காத்தா படத்தின் இறுதிகட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் படத்தின் சூட்டிங் முடிந்து இறுதிகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் மங்காத்தா படம் திரைக்கு வருகிறது.

5 பேர் முன்னிலையில் தான் திறமையை நிரூபித்த பிரதமர்

June 29, 2011 | no commentsஎதிர்கட்சிகள் தன்னை திறமையற்றவன் என்று கூறிவந்ததற்கு இன்று நடைபெற்ற பத்திரிக்கை ஆசிரியர் சந்திப்பில் பதிலளித்துள்ளார் பிரதமர் மன்மோகன்சிங். நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று உரையாற்றினார். இந்த சந்திப்பில் 5 பத்திரிக்கையாசிரியர்கள் மட்டும் பங்கேற்றனர்.

சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது, நான் திறமையற்றவன் என்று எதிர்கட்சியினர் கூறிவருகின்றனர். ஆனால் நான் திறமையற்றவன் அல்ல. காங்கிரஸ் கட்சியை சோனியா நன்றாக வழிநடத்தி வருகின்றார். அமைச்சரவை மாற்றம் குறித்த பணிகள் நடந்து வருகிறது. இந்த மாற்றம் விரைவில் வெளியாகும். ராகுல் காந்தி பிரதமராக எந்த தடையும், சிக்கலும் இல்லை.

லோக்பால் அமைப்பில் பிரதமர் பதவியையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அதுதான் எனது விருப்பமும் கூட. அதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் அதே சமயம் நல்ல வலுவான மசோதவாக இருக்க வேண்டும் என்றார்.

மேலும், கறுப்பு பண விவகாரம் மற்றும் ஊழல் தடுப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், திமுகவுடனான கூட்டணி நன்றாகவே உள்ளது என்றும் பதிலளித்தார் மன்மோகன் சிங். இதே போன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பத்திரிகை ஆசிரியர்களிடமும், கடந்த பிப்ரவரி மாதம் “டிவி’ சேனல் ஆசிரியர்களிடமும், பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை செல்போன் கடைகள் ஸ்ட்ரைக்

June 29, 2011 | no commentsபுதிய இணைப்புகளுக்கு தரப்படும் கமிஷன் தொகை குறைக்கப்பட்டதைக் கண்டித்து மொபைல் போன் விற்பனையாளர்கள் நாளை கடையடைப்பு நடத்துகின்றன.

ரீ-சார்ஜ் மற்றும் புதிய இணைப்பு விற்பனைக்கு ஏர்செல், ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் தங்கள் முகவர்களுக்கு இதுவரை கொடுத்து வந்த கமிஷன் தொகையைக் கணிசமாகக் குறைத்துவிட்டன. இதனால் செல்போன் விற்பனையாளர்கள் மற்றும் தனியார் செல்போன் நிறுவன முகவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் இந்த செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து நாளை (வியாழன்) ஒருநாள் கடை அடைப்பு போராட்டம் நடத்த செல்போன் கடைக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செல்போன் உபயோகிப்பாளர்களின் பணத்தை சிறப்பு சேவை என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் எடுத்து கோடி, கோடியாக லாபம் அடைவதை ஏற்க முடியாது. புதிய இணைப்பு விற்பனையாளர்களின் லாபம் குறைக்கப்பட்டதைக் கண்டிக்கிறோம்.

இதை வலியுறுத்தி 30-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்போன் கடைகள் அடைக்கப்படும். ரீசார்ஜ், புதிய இணைப்பு விற்பனை எதுவும் நாளை பகலில் நடைபெறாது”, என்று அறிவித்துள்ளனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் விற்பனை இழப்பு ஏற்படும்.

ஆடிக்காற்றில் பறந்து போன அரவாண் செட்

June 29, 2011 | no comments

வசந்தபாலன் இயக்கி வரும் அரவாண் படத்தின் ஷூட்டிங்கில் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்த முறை படப்பிடிப்புக்காக போடப்பட்ட குடிசை செட் அப்படியே காற்றில் பறந்துவிட்டதாம்.

மதுரை, தென்காசி என தென் மாவட்டங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் வசந்த பாலன். ஆதி, பசுபதி, தன்ஷிகா, கபீர் பேடி உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த சரித்திரப் படத்துக்காக தென்காசி அருகே தோரணமலையில் ஒரு பெரிய குடிசைப் பகுதி செட் போடப்பட்டது. கிட்டத்தட்ட 100 குடிசைகள் இதில் இடம்பெற்றிருந்தன.

தென்காசி பகுதியில் பருவக் காற்று மிகப் பலமாக உள்ளது. எனவே இந்த குடிசை செட் காற்றில் பறந்துவிட்டது.மேலும் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட ஜிம்மி ஜிப் கேமராவும் இதில் பழுதடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை ஒகேனக்கல் பகுதிக்கு மாற்றியுள்ளார் வசந்தபாலன்.

ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது அரவாண் செட் எம்மாத்திரம்…

குத்தாட்டம் போட வரும் பாக் கிரிக்கெட் வீரரின் காதலி

June 29, 2011 | no comments

பாலிவுட்டின் புதிய ஐட்டம் டான்சராக களம் இறங்கியுள்ளார் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 4-வது சீசன் மூலம் இந்தியாவில் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிபின் காதலி. வீணா மாலிக்கை வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உலா வந்தவண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் பாலிவுட்டில் குத்தாட்டம் போட வந்துள்ளார் வீணா.

பாலிவுட்டில் ஏற்கனவே மலாய்கா அரோரா, கத்ரீனா, பிபாஷா, மல்லிகா ஷெராவத் என குத்தாட்டம் போட ஏராளமானோர் இருக்கின்றனர். மேலும், நாயகிகளும் நாங்களும் குத்தாட்டம் போட வருகிறோம் என்று கூறுகின்றனர். நாயகிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க நாயகர்களும் குத்துப் பாட்டுக்கு ஆடத் துவங்கியுள்ளனர். குத்துப் பாட்டு இல்லாமல் இந்திப் படங்கள் இல்லை என்ற நிலை உள்ளது.

தற்போது இந்த குத்தாட்டக்காரர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் வீணா மாலிக். பாபி ஷேக் இயக்கும் பிர் முலாகத் ஹோ நா ஹோ என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடவிருக்கிறார் வீணா.

குத்துப் பாட்டுக்கு ஆடவருமாறு வீணா மாலிக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றார் பாபி ஷேக். இது தான் பாபியின் முதல் படம். அவர் இதற்கு முன் ரன் மற்றும் ரங் தே பசந்தியில் துணை இயக்குனராக பணி புரிந்துள்ளார். ராஜ்பால் யாதவ், காதர் கான் மற்றும் பிரவீன் குமார் நடிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது.

பாலிவுட்டில் குத்தாட்டம் போட வரும் பாக். நடிகை வீணா மாலிக்

பாலிவுட்டின் புதிய ஐட்டம் டான்சராக களம் இறங்கியுள்ளார் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 4-வது சீசன் மூலம் இந்தியாவில் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிபின் காதலி. வீணா மாலிக்கை வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உலா வந்தவண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் பாலிவுட்டில் குத்தாட்டம் போட வந்துள்ளார் வீணா.

பாலிவுட்டில் ஏற்கனவே மலாய்கா அரோரா, கத்ரீனா, பிபாஷா, மல்லிகா ஷெராவத் என குத்தாட்டம் போட ஏராளமானோர் இருக்கின்றனர். மேலும், நாயகிகளும் நாங்களும் குத்தாட்டம் போட வருகிறோம் என்று கூறுகின்றனர். நாயகிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க நாயகர்களும் குத்துப் பாட்டுக்கு ஆடத் துவங்கியுள்ளனர். குத்துப் பாட்டு இல்லாமல் இந்திப் படங்கள் இல்லை என்ற நிலை உள்ளது.

தற்போது இந்த குத்தாட்டக்காரர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் வீணா மாலிக். பாபி ஷேக் இயக்கும் பிர் முலாகத் ஹோ நா ஹோ என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடவிருக்கிறார் வீணா.

குத்துப் பாட்டுக்கு ஆடவருமாறு வீணா மாலிக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றார் பாபி ஷேக்.

இது தான் பாபியின் முதல் படம். அவர் இதற்கு முன் ரன் மற்றும் ரங் தே பசந்தியில் துணை இயக்குனராக பணி புரிந்துள்ளார்.

ராஜ்பால் யாதவ், காதர் கான் மற்றும் பிரவீன் குமார் நடிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது.Topics: bollywood, item dance, veena malik, big boss, pakistan actress, வீனா மாலிக், பாலிவுட், குத்துப் பாட்டு

Vikram's Deiva Thirumagal gets clean chit

As expected, Vikram's Deiva Thirumagal has got clean chit from the Regional Censor Board. The movie has received 'U' certificate without any cut.

Deiva Thirumagal was screened for the members of the Censor Board yesterday. After watching the film, the officials congratulated the makers of the film for making such a clean movie without violence or vulgar scenes. They reportedly praised director AL Vijay and wished good luck for the team.

Vikram plays the role of a dim-witted adult with the maturity of a five-year-old boy in Deiva Thirumagal. Actresses Anushka Shetty and Amala Paul have paired him in the film. The movie is hitting the screens on July 15.Topics: vikram, al vijay, anushka shetty, amala paul, deiva thirumagal

பாலசந்தர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம்

June 29, 2011 | no commentsதான் இயக்கிய கிருஷ்ணலீலை படத்தை உடனே வெளியிடக் கோரி இயக்குநர் பாலச்சந்தருக்கு சொந்தமான கவிதாலயா பட நிறுவனம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் ஸெல்வன்.

இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் ஸெல்வன். சூரி என்ற படம் மூலம் இவர் இயக்குநரானார். இதையடுத்து ஜீவன்-மேக்னா ஜோடியாக நடித்த கிருஷ்ண லீலை படத்தை இயக்கினார். இப்படம் முடிந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் ரிலீசாகவில்லை.

இந்தப் படம் வெளிவந்தால்தான் தனக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், படத்தை வெளியிடாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இயக்குனர் ஸெல்வன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கிருஷ்ணலீலை படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. பின்னர் அப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்துக்கு விற்று விட்டனர். படப்பிடிப்பு டப்பிங் பணிகள் முடிந்துள்ளது.

2 வருடங்கள் 3 மாதங்களுக்கு முன்பே 90 சதவீதம் வேலைகள் முடிந்து படம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பலமுறை அலைந்து விட்டேன். படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படம் வராததால் புதுப்பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை.

‘கிருஷ்ணலீலை’ ரிலீஸ் ஆன பிறகு பட வாய்ப்பு தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் பெற்றோர்களை வைத்துக் கொண்டு என்னால் குடும்பம் நடத்த இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வருமானமின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். எனவே படத்தை ரிலீஸ் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வருகிற ஜூலை 5-ந்தேதி முதல் கவிதாலயா நிறுவனம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்,” என்று கூறியுள்ளார்.

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தார்.

மோதத் தயாராகும் பாரதிராஜா vs அமீர், சேரன்

June 29, 2011 | no comments

சங்க தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் வெற்றி பெற்ற ஒருவர் கூட சங்க அலுவலகத்திற்கு வருவதில்லையாம். மறைந்த இயக்குனர் புதியவனின் மனைவிதான் ஊழியராக பணியாற்றி வந்தார். இப்போது அவரும் வருவதை நிறுத்திவிட்டதால் சங்கம் எப்போது திறந்திருக்கும், எப்போது பூட்டப்பட்டிருக்கும் என்பதே புரியாமல் தவிக்கிறார்களாம் உறுப்பினர்கள்.

டைரக்டர் யூனியனுக்கு எப்போ வருவீங்க என்று அமீருக்கும், சேரனுக்கும் போன் அடித்த உதவி இயக்குனர் ஒருவருக்கு அதே போனிலேயே அர்ச்சனை! இருவரும் கேட்ட ஒரே கேள்வி, இந்த நம்பர் எப்படி கிடைச்சுது உனக்கு?

யாருமே பதவியேற்றுக் கொள்ளாமலிருப்பதால் தமக்கான பிரச்சனையை யாரிடம் சொல்வது என்று திகைத்துப் போயிருக்கிறார்கள் உறுப்பினர்கள். வேறு வழியில்லாமல் பழைய செயலாளர் செல்வமணிக்கே போன் அடித்து புலம்புகிறார்களாம். இதற்கிடையில் தனியாக போட்டியிட்டு வென்ற சங்கத்தின் இணை செயலாளர் வேல்முருகன் பதவியேற்பு விழாவை சீக்கிரம் நடத்தவில்லை என்றால் சங்கத்தின் உள்ளேயே சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த வாரம் வரப்போகும் ஆனந்த விகடனில் அமீரையும் சேரனையும் உண்டு இல்லை என்று காய்ச்சியிருக்கிறாராம் இயக்குனர் சங்க தலைவராக வெற்றி பெற்றிருக்கும் பாரதிராஜா. அவர்களும் பதிலுக்கு பேசினால் சங்கத்தில் பிளவு நிச்சயம் என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது இயக்குனர்கள் ஏரியா!

பெண் உறவை நாட 200 காரணங்கள்

June 29, 2011 | no comments

தாம்பத்திய உறவில் ஈடுபட பெண்களைப்பொறுத்தவரை உடல்ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஒரு ஆண், பெண்ணுடனான உறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கடைசி இடம்தானாம்.

போரடித்தால் செக்ஸ்

ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும் போது அந்த ஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப்பாள் என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.

போரடிப்பதால் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப் பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிறதாம். சே, பாவமா இருக்கு ‘இதைப்’ பார்த்தா என்று ஆண்கள்மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு ‘டீ’ சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.

.மன அமைதி விரும்புவோர், செய்த உதவிக்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுறவு அனுப வங்களை கண்டறிந்து அதன்மூலம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

மனதுக்குள் ஸ்கேன் செய்யும் பெண்கள்

பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லையாம். வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூட மனசுக்குள் அவர்களை பற்றி ஆய்வு செய்து கொண்டே இருப்பார்களாம்.

ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையாம். அதாவது, மன ‘ஸ்கேனரில்’ விதம் விதமாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண் ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கடைசியில் திருப்திதான்

கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையும், மன அமைதியையும், உடல் ரீதியான உற்சாகத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது, என்னதான் சப்பைக் காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப்புக் கொள்கின்றனர்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். இந்த ஆய்வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது.

AR Murugadoss' next is a love story

Having given many blockbusters in action genre, AR Murugadoss is all set make a movie on a love subject. Well, he is not directing it but he is producing the film in association with a famous Hollywood production house.

The filmmaker has roped in Jai, Anjali, Sharvanand and Ananya to play the lead roles in the film, which is reportedly titled Engeyum Eppodum. "Love is something that can happen to a person at any time, anywhere. It's omnipresent. This is one of the reasons why Saravanan chose to have Engeyum Eppodum as the title. Another reason is an element in the script, which will be revealed in the film." the Times of India quoted a source as telling.

AR Murugadoss Productions has collaborated with the Hollywood's No.1 production house the 20th Fox Century for Engeyum Eppodum. The movie is directed by the filmmaker's long-time associate Saravanan.

The Ghajini director is currently busy with his much-hyped 7 Aum Arivu and he has recently approached Vijay to act in his next directorial film.Topics: ar murugadoss, vijay, anuya, sharwanand, engeyum eppodum, saravanan, 7 aum arivu

Surya's family invites Jayalalitha for Karthi's marriage

Karthi's marriage preparations are in full swing. His family is fully busy inviting their relatives and friends for his grand wedding. Yesterday, they have invited Tamil Nadu Chief Minister J Jayalalitha for the grand wedding, which will be held on July 3 at Codiddia Complex in Coimbatore.

The family headed by Sivakumar with his wife Lakshmi, along with Surya and his wife Jyothika met Jayalalitha at her Poes Garden residence and invited her for Karthi's marriage. The CM has reportedly told them that she could not attend the wedding, as it is held in Coimbatore.

Her busy schedule is forcing her to skip the function. However, Jayalalitha has assured them that she would attend the reception, which is held in Chennai on July 7. Meanwhile, Sivakumar's family has also invited who's who of the Tamil and Telugu film industries.Topics: karthi, surya, jyothika

Rajinikanth looks as stylish as ever, says Dhanush

Rajinikanth, who is recouping in Singapore, has not lost his weight during his illness. His son-in-law Dhanush has denied the report which claimed that the superstar has become too skinny due to bad health.

A Tamil daily has reported that the actor has become lean after the medication. Rubbishing the report, Dhanush tweeted, “Guys d news on a Tamil daily wch says superstar has lost weight and all s absolutely made up and false.he looks as stylish as ever.”

The superstar, who has called director Shankar recently, told him that he would be coming back to India after 45 days and he is almost back to his normal routine. Meanwhile, his next project Rana is expected to start its regular shooting in September 2011.Topics: rajinikanth, dhanush, rana

ஜெனிபர் ஆனிஸ்டனின் 'ஸ்ட்ரக்சர்' ரகசியம்

தனது உடலை எப்பொழுதும் ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் சத்தே இல்லாத, கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவு (ஜங்க் புட்) வகைகளைத் தொடுவதே இல்லை என்று அவரது முன்னாள் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜெனிபர் ஆனிஸ்டன். இவருக்கு வயது 42 ஆகி விட்டது. நடிகை பிராட் பிட்டின் முன்னாள் மனைவி. 42 வயதானாலும் ஆனிஸ்டனின் ஸ்டைலும், ஸ்டிரக்சரும் இன்னும் மாறவே இல்லை. அப்படியே 'படையம்மா' மாதிரி இன்னும் இளமையாக, ஸ்லிம்மாக இருக்கிறார். அதற்கு காரணம் அவர் சத்தே இல்லாத, கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவை எடுத்துக் கொள்வதே இல்லையாம்.

இது குறி்த்து அவர் கூறியதாவது,

உடலுக்குத் தேவையான சத்து இல்லாத, வெறும் கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவு வகைகளைத் தவிர்த்தாலே எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம். இது தவிர தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மற்றபடி நான் ஸ்லிம்மாக இருக்க வேறு எதையும் செய்வதில்லை.

நான் தினமும் யோகா செய்வேன். யோகா செய்வதால் நான் மிகுந்த உற்சாகமாகக் காணப்படுகிறேன். தினமும் 20 நிமிடங்கள் யோகா செய்தால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். நான் போதிய அளவு உடற்பியிற்சி செய்வதால் எடை கூடிவிடுமோ என்ற கவலையின்றி உணவு எடுத்துக் கொள்கிறேன்.

அப்படியே எடை கூடினாலும், ஒரு வாரத்திற்கு மீன் மற்றும் சாலட் அதிகம் எடுத்துக் கொள்வேன். வழக்கமாக வாரத்தில் 2 அல்லது 3 மூன்று தடவை உடற்பயிற்சி செய்வேன். எடை கூடிவிட்டால் 4 அல்லது 5 தடவை செய்வேன்.

உடற்பயிற்சி செய்த பிறகு எனக்கு நிறைய தெம்பு கிடைக்கும். எதையும் நினைத்து கவலைப்படாமல் இருக்க முயல்வேன் என்றார்.

கோலிவுட் 'அழகிகளே' ஆனிஸ்டன் சொல்வதையும் கேட்டுக்கங்க...!Topics: hollywood, jennifer aniston, slim figure, junk foods, ஜெனிபர் ஆனிஸ்டன், ஸ்லிம் உடம்பு, ஜங்க் உணவு

தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் காமெடியன் விவேக்

திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்களை வளர்க்க முடிவு செய்திருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய வி வேக், “ இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 100 கோடி மரக்கன்று நடவேண்டும். தமிழ் நாட்டில் 100 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளோம். டிசம்பர் 2011க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து இதற்காக மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். வனத்துறை அமைச்சர், சமூக நல ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவிகளையும் நாடி வருகிறோம் என்று கூறினார்.

நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்த போது மரங்களின் நிலமை பற்றி ஒரு கவிதை புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதில் மரம் தனது அவலநிலைப்பற்றி கூறுவதுபோல கவிதை இருந்தது. அதுதான் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற காரணம் என்றும் விவேக் தெரிவித்தார்.

நான் அடுத்து கந்தா படத்தில் நடித்து வருகிறேன். இதில் மரங்களை அழித்து ரியல் எஸ்ட்டேட்டில் நிலத்தை விற்ற விவசாயி கடைசியில் சித்தாளாக மாறியதுடன் இலவச அரிசிக்கு வரிசையில் காத்திற்கும் அவலம் பற்றி கூறியுள்ளேன். மரங்களை வளர்த்தால் தான் எதிர்காலம் வளமாகும்’’ என்று கூறினார்.Topics: tamil cinema, மரக்கன்று, vivek fans, donation, விவேக், மரக்கன்றுகள்

ஐஸ்வர்யா மாதிரி அழகான பெண் குழந்தைதான் வேண்டும்: அபிஷேக்

மும்பை: எங்களுக்கு ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகான பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று தந்தையாகவிருக்கும் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

தனது மருமகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கடந்த வாரம் அமிதாப் பச்சன் அறிவித்தார். மேலும் தனக்குப் பேரன்தான் பிறப்பான் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அப்போ அபிஷேக்கோ தனக்கு ஐஸ்வர்யா மாதிரியே அழகான பெண் குழந்தை வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நான் தந்தையாகப் போவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தான் கர்ப்பமாக இருப்பதை எனது தந்தை தான் உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா தான் கூறினார்.

என்னுடைய தாய் ஜெயா பச்சன் கர்ப்பம் தரித்தபோது எனது தந்தை அவரது தந்தையைத் தான் அந்த செய்தியை உலகிற்கு தெரிவிக்க சொன்னார். இதை நான் என் மனைவியிடம் எப்பொழுதோ கூறியிருந்தேன். அதை நினைவில் வைத்து தான் இவ்வாறு செய்துள்ளார்.

ஐஸ்வர்யா விருப்பப்படியே அந்த செய்தியை எனது தந்தை டுவிட்டரில் வெளியிட்டார். அதில் இருந்து வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. தொலைபேசி ஓயாது ஒலிக்கிறது. எங்கள் வீடு முழுவதும் மலர்கொத்துகளாகக் காட்சியளிக்கிறது.

குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது பற்றி இன்னும் யோசிக்கவேயில்லை. ஐஸ்வர்யாவை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எந்த புத்தகங்களையும் இன்னும் படிக்கவில்லை.

புதிய படங்கள் திரைக்கு வந்தவுடன் தான் இதில் முழுக் கவனம் செலுத்துவேன். நவம்பரில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் குழந்தை ஜஸ்வர்யா போன்று அழகான பெண் குழந்தையாக இருக்க வேண்டும். அடுத்து ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.

அமிதாப் பேரன் வேண்டும் என்று கூறியுள்ளார், அபியோ பெண் வேண்டும் என்கிறார். யார் ஆசை நிறைவேறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.Topics: aishwarya rai, abhishek bachchan, pregnant, baby girl, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், கர்ப்பம்

பாலிவுட் போகும் சேரன் நாயகி

June 29, 2011 | no comments

“பொய்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை விமலா ராமன், “ராமன் தேடிய சீதை” படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். தமிழ் தவிர மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கும் விமலா ராமன், தற்போது மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் “டேம் 999″ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக இந்தி படம் ஒன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து விமலாராமனின் உதவியாளர் கூறியதாவது, விமலா ராமன் இந்தியில் நடிக்க போவது உண்மைதான். டைரக்டர் ஹாட் அலி அக்பர் இயக்கும் படத்தில், கோவிந்தாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. விமலா ராமனுடன் சுனில் ஷெட்டி, ஆர்யா அக்பர், முகுதா கோஸ், முகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் ஒரு முழுநீள கா‌மெடி படமாக இருக்கும். இப்படத்தின் சூட்டிங்கிற்காக விரைவில் மும்பை செல்ல இருக்கிறார் விமலா ராமன். தெலுங்கு சினிமாவில் விமலா ராமன் எப்படி அசத்தினாரோ, அதேபோல் இந்தி சினிமாவிலும் நிச்சயம் அவர் அசத்துவார் என்றார்.

கொரியா போலீஸில் மாட்டிக்கொண்ட தமிழ் கவர்ச்சி நடிகை

June 29, 2011 | no comments

படபிடிப்புக்காக கொரியா சென்ற கவர்ச்சி நடிகை லக்ஷா உட்பட 12 பேர் இந்தியா திரும்ப முடியாமல் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதாவின் மகள் லக்ஷா. இவர் ரங்கலீலா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சித்திரைச் செல்வன், பிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் ‘லாலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு புது ஹீரோயினும், இரண்டு புது ஹீரோவும் நடிக்கிறார்கள். இவர்களும் சண்டை மற்றும் நடன கலைஞர்கள் 13 பேரும் கொரியாவில் படப்பிடிப்பிற்காக கடந்த 19ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் டெல்லியில் 30 பேர் இவர்களுடன் இணைந்துள்ளனர். அவர்களும் படப்பிடிப்புக்காக வருகிறார்கள் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தென்கொரியா சென்ற இவர்கள் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினர். படப்பிடிப்பு நடக்கும் போதே டெல்லியில் இவர்களுடன் இணைந்தவர்கள் ஒவ்வொருவராக காணாமல் போனார்கள். இதுபற்றி தயாரிப்பு நிர்வாகியிடம் கேட்டிருக்கிறார்கள். வேறொரு பணிக்காகப் போயிருக்கிறார்கள்; வந்து விடுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பை முடித்து விட்டு அனைவரும் நேற்று இந்தியா திரும்ப விமான நிலையம் வந்தனர்.

அப்போது இவர்களுடன் டெல்லியில் இணைந்த 29 பேரைக் காணவில்லை. ஜாயிண்ட் விசாவில் சென்றுள்ளதால் அனைவரும் வந்தால்தான் நாடு திரும்ப அனுமதிக்க முடியும் என்று கொரியா ஏர்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு படப்பிடிப்பிற்காக சென்ற அனைவரையும் ஏர்போர்ட்டிலேயே முடக்கி வைத்துள்ளனர். இதனால் நடிகை லக்ஷா உள்ளிட்ட அனைவரும் கொரியா ஏர்போர்ட்டில் தவித்து வருகிறார்கள். இது பற்றி பெப்சி அமைப்பிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

மகள் வெளிநாட்டில் சிக்கிக் கொண்டது பற்றி நடிகை பபிதா கண்ணீர் மல்க கூறியதாவது: என் மகளை தனியாக எந்த நாட்டுக்கும் அனுப்ப மாட்டேன். இப்போது அவளின் தந்தை ஜூடோ ரமேசும் உடன் சென்றுள்ளார். அவர்தான் அந்தப் படத்தின் சண்டை இயக்குனர். படத்துக்காக 30 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தோம். அதில் 6 நாள் கொரியாவில் படப்பிடிப்பு என்று அழைத்துச் சென்றார்கள்.

இதில் ஏதோ மோசடி நடந்திருக்கிறது. நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். தயாரிப்பாளர்கள், உடன் செல்லவில்லை. அவர்களை தொடர்பு கொண்டால் செல்போன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. என் மகள் நல்லபடியாகத் திரும்பி வர இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

மோசமான ஆட்டத்துடன் குட்பை சொன்ன ஜெயசூர்யா

June 29, 2011 | no commentsஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் கடும் அதிருப்தி, எதிர்ப்புகளை மீறி ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்ற முன்னாள் கேப்டன் ஜெயசூரியாவுக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது அவர் ஆடிய கடைசி ஒரு நாள் போட்டி.

இந்தப் போட்டியிடுன் கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லி விட்டார் ஜெயசூர்யா. முன்னதாக ஜெயசூரியாவை ஒரு நாள் தொடருக்கான அணியில் சேர்க்க மூத்த வீரர்கள் பலரும் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். ஆனால் அதையும் மீறி ஜெயசூரியாவை அணிக்குள் நுழைத்தனர். இந்த ஜெயசூரியா, ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. என்பதால், அரசியல் செல்வாக்கு காரணமாக உள்ளே புகுந்தார் ஜெயசூரியா. ஆனால் அணி வீரர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பைப் பார்த்து அதிர்ந்து போன அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் தான் விளையாடப் போவதாகவும், அதன் பின்னர் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து, இலங்கை இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் லண்டனில் தொடங்கியது. முதல் போட்டியில் விளையாடிய இலங்கைக்கு மிகப் பெரிய அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன்.

மழை காரணமாக போட்டி 32 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. இங்கிலாந்து அணி முதலில் ஆடி 290 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலங்கை ஆடத் தொடங்கியது. திருத்தப்பட்ட இலக்குப்படி 232 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் இலங்கை இருந்தது. ஆனால் ஆண்டர்சனின் அபாரப் பந்து வீச்சால் இலங்கை சிதறிப் போனது. 4 விக்கெட்களை வீழ்த்திய ஆண்டர்சனால், இலங்கை அணி 121 ரன்களில் சுருண்டு, 110 ரன்கள் வித்தியாசத்தில் கேவலமான தோல்வியைத் தழுவியது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஜெயசூரியாவின் ஆட்டம்தான். தனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் போட்டியை ஆட வந்த அவர் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். டிம் பிரஸ்னன் பந்து வீச்சில், இயான் மார்கனிடம் பிடி கொடுத்து நடையைக் கட்டினார் ஜெயசூரியா.

2 ரன்களில் ஆட்டமிழந்தாலும் இது அவருக்குக் கடைசிப் போட்டி என்பதால் மைதானத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கை தட்டி வழியனுப்பி வைத்தனர். முன்னதாக பந்து வீச்சின்போது ஜெயசூர்யா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இருப்பினும் இந்தப் போட்டி எந்த வகையிலும் ஜெயசூர்யாவுக்கு மகிழ்ச்சியைத் தராத ஒன்றாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.

நாளை ஜெயசூர்யாவுக்கு 42 வயது பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது கடைசிப் போட்டியை கசப்பான உணர்வுகளுடன் முடித்துள்ளார் ஜெயசூர்யா. ராஜபக்சே கட்சியின் எம்.பி என்ற ஒரே காரணத்திற்காக அணியில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு, இத்தனை நாட்கள் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயரை ஒரே நாளில் சக வீரர்களிடமே கெடுத்துக் கொண்டவர் ஜெயசூர்யா என்பது நினைவு கூறத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட்- விக்கெட் மழை

June 29, 2011 | no commentsஇந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக லட்சுமண் 85 ரன்னும் ரெய்னா 53 ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ராம்பால், ‌எட்வர்ட்ஸ் மற்றும் பிஷூ தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.‌அடுத்து விளையாடிய ‌ வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 30 ரன் எடுத்திருந்தது.முன்னதாக பார்படாஸ் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் “வேகங்கள் போட்டுத் தாக்க, இந்திய அணி திணறல் துவக்கம் கண்டது. உணவு இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 44 ரன்கள் மட்டும்எடுத்திருந்தது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி பார்படாசில் நேற்று துவங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் நாஷ் நீக்கப்பட்டு, மர்லான் சாமுவேல்ஸ் வாய்ப்பு பெற்றார். இந்திய அணியில் அமித் மிஸ்ராவுக்கு பதில் அபிமன்யு மிதுன் இடம் பெற்றார். “டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி, “பீல்டிங் தேர்வு செய்தார்.ராம்பால் மிரட்டல்:இந்திய அணிக்கு துவக்கத்திலேயே “அடி விழுந்தது. ராம்பால் வேகத்தில் முகுந்த்(1) நடையை கட்டினார். தூணாக நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிராவிட்(5), சமி பந்தில் அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது. தொடர்ந்து மிரட்டிய ராம்பால், தனது ஒரே ஓவரில் முரளி விஜய்(11), விராத் கோஹ்லியை(0) வெளியேற்றி இரட்டை அதிர்ச்சி கொடுத்தார். இப்படி “டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர உணவு இடைவேளையின் போது 27 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது. போராடிய லட்சுமண்(23) அவுட்டாகாமல் இருந்தார்.உணவு இடை‌வேளைக்கு பின்னர் தொடர்ந்து விளையாடிய லட்சுமண் 85 ரன்‌ சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னாவும் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் 68 ஓவரில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா.பின்னர் முதல் இன்னிங்சைதொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் வரிசை ஆட்டக்காரர்களான சிம்மன்ஸ்(2), அட்ரியன்(3) இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததனர்.பிராவோ 9 ரன்னுக்கு ஆட்டமிழக்க முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 30 ரன் எடுத்திருந்தது. சர்வான் 10 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.