This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label ஒருவர். Show all posts
Showing posts with label ஒருவர். Show all posts

Monday, July 18, 2011

புகையிரதம் மோதி பிரித்தானியாவில் ஒருவர் பலி -

புகையிரதம் மோதி பிரித்தானியாவில் ஒருவர் பலி - இன்று மாலை .5.30மணியளவில் பிரித்தானியாவின் விம்பிள்டன் புகையிரத நிலையத்தில்நின்ற பயணி ஒருவர்  புகையிரதத்தில் மோதுண்டு பலியாகியுள்ளார் . இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என குற்ற தடுப்பு பிரிவினர்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . குறித்த விபத்து கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருந்தால்கீழ் வரும் தொலை பேசிக்கு அழைத்து தெரிவிக்குமாறு காவல்துறையினர் மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர் ..!

Sunday, July 17, 2011

மட்டக்களப்பில் விபத்து ஒருவர் பலி, இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் நேற்றிரவு 6.45மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண்முனைக்கு செல்லும் ஒல்லிக்குளம் வீதியில் உள்ள சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் பண்டாரியாவெளியை சேர்ந்த கருணா (30வயது) என்ற குடும்பஸ்த்தரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியில் வீடுகட்டும் பணியில் கூலித்தொழிலாளியாக வேலைசெய்துவிட்டு தனது முதலாளியின் மோட்டார் சைக்கிளை செலுத்திக்கொண்டு வீடு செல்லும்போது சந்திப்பகுதியில் வேகமாக சைக்கிளை திருப்ப முனைந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் கழுத்துப்பகுதி மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் நசியுண்ட நிலையில் அவ்விடத்தில் இருந்த பொதுமக்களால் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது வழியிலேயே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேநேரம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த காத்தான்குடியை சேர்ந்த இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பாணந்துறையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

பாணந்துறை திக்கல்ல பகுதியில் 3 கிராம் மற்றும் 280 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பாணந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவரை நாளைய தினம் பானந்துறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு பாணந்துறை பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Thursday, July 14, 2011

குருநாகலையில் விபத்து: ஒருவர் பலி மூவர் காயம்

குருநாகலை பொட்டுஹெர பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் மூவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று கோண்டதிலேயெ விபத்து சம்பவித்துள்ளது. சம்பத்தில் காயமடைந்த நால்வரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயெ ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் 36 வயதுடைய காமினி பதிராஜா என்பவரே உயிரிழந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில் குருநாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.