This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, July 15, 2011

பிரித்தானிய குறைடன் பகுதியில் போலீசார் மீது துப்பாக்கி சூடு ..!

பிரித்தானிய குறைடன் பகுதியில் போலீசார் மீது துப்பாக்கி சூடு ..! பிரித்தானியாவின் குறைடன் Kingsdown Avenueபகுதியில் வைத்துபொலிசார் மீது சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் . பலத்த காயமடைந்த  அவர்  அதே பகுதியில் உள்ள மருத்துவ  மனையில்  அனுமதிக்க பட்டுள்ளார் .இது அவருக்கு விடப்பட கொலை அச்சுறுத்தல் என தெரிவிக்க பட்டுள்ளது ..!

இறுதிப்போர் சம்பவங்கள் பற்றி ஆராய வேண்டும் - இந்தியா முதல் குரல்

இலங்கை இறுதிப் போரில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.

இலங்கைப் போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் தொடர்பாகவும், அந்தப் போர் தொடர்பாக ஐ.நா தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.

சனல் 4 வெளியிட்ட இறுதிப் போர் தொடர்பான காட்சிகள் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தெளிவில்லாத நிலை உள்ளது.

இதுகுறித்து இலங்கை இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். அதுதொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ள கவலைகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக செயல்படுத்த வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவமொன்றுஇறுதிப் போரில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவமொன்றுஇலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிவடைந்த நல்ல சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்துகிறது என விஷ்ணுபிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அந்த அறிக்கை தொடர்பாக இன்னும் பல கேள்விகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அது என்ன கேள்விகள் என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.

ஐநா நிபுணர் குழு அறிக்கையைப் பொருத்தவரை, இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருந்த நேரத்திலும், கடந்த மாதம் கொழும்பில் நடந்த ஒரு மாநாட்டின் போதும் இலங்கை அரசின் கருத்துக்களை இந்தியா கேட்டறிந்திருப்பதாக விஷ்ணுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

(2ஆம் இணைப்பு) பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு

கண்டி கொழும்பு பிரதான வீதியின் கிரிபத்கும்புர பிரதேசத்தில் இன்று காலை 6.45 மணியளவில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்வடைந்துள்ளது.

விபத்தில் இரு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் விபத்தில் 18 பேர் படுகாயமடைந்துள்ளதோடு அவர்கள் சிகிச்சைகளுக்கென பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் பஸ்ஸும் ஹெம்மாத்தகம பிரதேசத்தில் இருந்து காமன்ட் தொழிலாளிகளை ஏற்றிவந்த பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

பெருந்தோட்டங்களில் நிலவும் குறைப்பாடுகளுக்கு நிர்வாகமே பொறுப்பு - யோகா

இலங்கை பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறைந்திருக்கிறது என்று கூறியுள்ள இலங்கை பேருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அதனால் நீண்ட காலத்தில் தோட்டங்களுக்கு பெரும் நட்டம் ஏற்படும் என்று கூறியிருக்கிறது.

குறிப்பாக இலங்கையின் தேயிலையின் மதிப்பு சர்வதேச சந்தையில் குறைந்திருப்பதாகவும், ஏனைய தேயிலை உற்பத்தி நாடுகளான இந்தியா மற்றும் கென்யாவை விட இலங்கையில் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் மிகவும் பிந்தங்கிய நிலையில் காணப்படுவதாகவும் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் இரு தினங்களுக்கு முன்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கொழும்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் இலங்கை பெருந்தோட்ட உற்பத்தித்திறன் குறைவுக்கு தோட்டத்தொழிலாளர்களை காரணமாகக் கூற முடியாது என்று கூறுகின்ற இலங்கை பாராளுமன்ற உறுப்பினரான ஆர். யோகராஜன், முதலீடு போதாமையும், உரிய விவசாய யுக்திகள் பயன்படுத்தப்படாமையுமே அதற்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார்.

அத்துடன் பெரிய கம்பெனிகளின் தோட்டங்களில் மறு நடுகை போன்ற யுக்திகள் பயன்படுத்தப்படாததால் அங்கு உற்பத்தித்திறன் குறைந்திருக்கும் அதேநேரம், தென் பகுதியைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான சிறு தோட்டங்களில் இந்த யுக்திகள் சரியாக பயன்படுத்தப்படுவதால் அவை உற்பத்தித்திறனில் இரு மடங்கு அதிகரிப்பைக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை தேயிலையின் மதிப்பு சர்வதேச சந்தையில் குறைந்திருப்பதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.

87 இலங்கை அகதிகள் குறித்து நியூசிலாந்து பாராளுமன்றில் விவாதம்

ஜோன் கீ எல்ஸியா கப்பலில் வந்த தமிழ் அகதிகளின் வேண்டுகோள்களை நியூசிலாந்து தலைமை அமைச்சர் நிராகரித்துள்ளது குறித்து கிறீன் கட்சியைச் சேர்ந்த கீய்த் லொக்கி பாராளுமன்றத்தில் நடந்த விசேட விவாதத்தின் போது அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்த அகதிகள் நியூசிலாந்தை நோக்கி வந்த வழியில் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

அகதிகளை இங்கு வரவேற்கவில்லை என்பது ஒரு சாதாரண செய்தியாக இருக்கலாம். ஆனால் அது அந்த அகதிகளின் உயிர் பிரச்சினை என்பதை ஏன் உணரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இது நியூசிலாந்து மக்களின் மனிதாபிமான உணர்வுகளுக்கு எதிரானதாகும். பெரும் துன்பங்களை அனுபவித்து துயரிலிருந்து தப்புவதற்காக தப்பி ஓடிவருபவர்களைப்பார்த்து இவ்வாறு கூறுவது இதயமற்றவர்களின் செயலாகும் என அவர் விமர்சித்துள்ளார்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று கப்பலில் வந்துள்ளவர்கள் கியூ வரிசையிலிருந்து பாய்ந்து வந்தவர்கள் என்று ஜோன் கீ கூறியுள்ளார்.

ஜோன் கீ யின் தாய் 1939 ஆண்டு யுத்தத்தில் நாஸி ஜேர்மனியிலிருந்து அகதியாக தப்பி வந்து பிரித்தானியாவில் தஞ்சம் கோரியவர்.

யூத அகதிகளுக்கு அப்போது கியூ வரிசையில் சேர வேண்டியிருந்ததில்லை. அவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக எல்லை தாண்டி கடவுச்சீட்டு இன்றி பிரித்தானியாவில் தஞ்சம் அமைந்தவர்கள் என்றும் கீய்த் லொக்கி தெரிவித்தார்.

இதன் போது குறுக்கிட்ட சபாநாயகர் தலைமை அமைச்சரின் தனிப்பட்ட குடும்ப விடயங்களை பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம்

நடிப்பு - விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா

பாடல்கள் - நா முத்துக்குமார்
இசை - ஜீவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு - நீரவ்ஷா
எடிட்டிங் - ஆண்டனி

தயாரிப்பு - எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா
எழுத்து - இயக்கம் - விஜய்

மக்கள் தொடர்பு - ஜான்சன்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்...

-நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும்.

ஹாட்ஸ் ஆஃப் விஜய்... . படத்துக்குப் படம் அதிகரிக்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

'ஐ யாம் சாம் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த தெய்வத் திருமகள் என்றாலும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம். வக்கிர அழுக்கும் மசாலா தூசும் நிறைந்த கோடம்பாக்கத்தில் பொலிவுறத் துடைத்தெடுத்து வந்த ரவிவர்மா ஓவியம் மாதிரி அத்தனை நேர்த்தி இந்தப் படத்தில்.

மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா (விக்ரம்) வுக்கும், அவரது காதல் மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே தாய் இறந்துவிட, மகளை வளர்க்கும் பொறுப்பு மனதளவில் குழந்தையாகவே உள்ள விக்ரமுக்கு. நிலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார்.

மகள் பள்ளி செல்லும் போது வருகிறது பிரச்சினை. ஒருநாள் திடீரென்று அந்த செல்ல மகளை கிருஷ்ணாவின் பணக்கார மாமனார் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார். மனவளர்ச்சி குன்றியவனுடன் குழந்தையை விட முடியாது என நியாயம் பேசுகிறார்.

வழக்கறிஞர் அனுராதா துணையுடன் நீதிமன்றம் போகிறான் கிருஷ்ணா. மகளைப் பார்க்க முடியாமல் தவி்க்கிறான். இந்த பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத்திலும் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நெகிழ வைக்கும் விதமாய் சொல்லியிருக்கிறார் விஜய்.

தமிழில் இதற்கு முன் இதே மாதிரி பெற்றால்தான் பிள்ளையா, சின்னக் கண்ணம்மா என மிகச் சில படங்கள் இப்படி வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றிலிருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது. காரணம், கதையின் நாயகன்.

மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, 'இனிப்பு இனிப்பாக இருக்கிறது' என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சஸன்!!

இவருக்கு அடுத்து நடிப்பில் இதயத்தைத் திருடுவது குழந்தை சாரா. அழகும் விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை உண்மையிலேயே தெய்வத் திருமகள்தான் போங்கள்!

அனுஷ்காவுக்கு அருமையான வாய்ப்பு இது. அவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க இன்னொருவர் நம்ம சந்தானம். ஒரு வசனம் கூட எல்லைமீறாத அளவுக்கு அவரை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.

குழந்தையின் சித்தியாக வருகிறார் அமலா பால். அழகாக வந்து போகிறார். எம்எஸ் பாஸ்கர், நந்தகுமாராக வரும் கிஷோர், சச்சின் கெடேகர், குறிப்பாக நாசர் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!

ஜீவி பிரகாஷின் இசை உண்மையிலேயே பிரமாதம். இப்போதுதான் அவர் காட்சிகளை உணர்ந்து இசை தருகிறார். தந்தை பாடும் தாலாட்டில் இசையும் முத்துகுமாரின் வரிகளும் அற்புதம். அந்த கதை சொல்லும் பாடலை படமாக்கிய விதம், விஜய்க்குள் இருக்கும் சூப்பர் ஆக்ஷன் பட ஆர்வத்தைக் காட்டுகிறது.

விஜய்யின் இன்னொரு வலது கரமாக நீரவ்ஷா. ஏசி இல்லாத தியேட்டரில் கூட ஊட்டியின் குளிரை வரவழைத்துவிடுகிறார் நீரவ்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால்.... காட்சிகள் மெதுவாக நகர்வது, முதல் பாதியில் வரும் நீளமான சில காட்சிகள். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே படம் பார்க்கும் ரசிகனை கதைக்குள் ஈர்த்துவிடுகிறார் விஜய். அதன்பிறகு அந்த ரசிகன் எழுந்திருப்பது 'எ பிலிம் பை விஜய்' என்ற எழுத்துக்கள் ஒளிரும்போதுதான்.

அந்தக் காட்சியில் அத்தனை பேரும் பேதமின்றி கைதட்டியது, விஜய்யின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

கமர்ஷியல், க்ளாஸிக் என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்!Topics: deiva thirumagal, review, vikram, தெய்வத் திருமகள், விமர்சனம், விக்ரம்

ஒகஸ்ட் 13, 14ம் திகதிகளில் அனைத்து சரணாலயங்களையும் மூடத் தீர்மானம்

யானைகளைக் கொண்ட இலங்கையின் தேசிய சரணாலயங்கள் அனைத்தும் எதிர்வரும் ஒகஸ்ட் 13, 14ம் திகதிகளில் மூடப்படவிருப்பதாக விவசாய மற்றும் வனவிலங்குகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

முதல் தடவையாக யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி வில்பத்து, யால, வஸ்கமுவ, உடவலவ உள்ளிட்ட 22 சரணாலயங்கள் எதிர்வரும் மாதம் 13, 14ம் திகதிகளில் மூடப்படவுள்ளன.

யானைகள் கணக்கெடுப்பின் பின்னர் அது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 5 ஆயிரம் தொடக்கம் 6 ஆயிரம் வரையிலான யானைகள் இருப்பதாக தற்போதைய தற்காலிக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் - மேலும் மூவருக்குப் பிணை

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் மூவருக்கு லாகூர் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் பிணை வழங்க அனுமதியளித்துள்ளது.

மாலிக் அப்துல் ரகுமான், ஜவீட் அன்வர், உபைதுல்லா ஆகியோருக்கே இவ்வாறு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுவந்த குற்றம் அரச தரப்பினரால் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் தாக்குதலுக்கு திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்பட்ட பாகிஸ்தானின் லஷ்கர்-இ-ஜஹாங்வி என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான மாலிக் ஷா இஷாக்கை 14 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பின் அந்நாட்டு உச்சநீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சிக்குப் படையெடுத்துள்ள கிரிடா சக்தி

திறன்மிகு வீரர்களை தெரிவுசெய்து அவர்களை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் போட்டிகளில் பங்குபற்றச்செய்யும் வகையில் நாடாளவிய ரீதியில் நடைபெற்று வரும் கிரிடா சக்தி விளையாட்டு பயிற்சி முகாம் இன்றுகாலை கிளிநொச்சி பொது மைதானத்தில் சிறப்பாக ஆரம்பமாகியது.

இந் நிகழ்வை விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே ஆரம்பித்து வைத்ததோடு ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ், றொஹான் ரத்வத்த ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

15ம் 16ம் ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இப்பயிற்சியானது ஒவ்வொரு விளையாட்டுகளிலும் நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பு பயிற்றுவிப்பாளர்களால் பயிற்றுவிக்கப்பட்டு தெரிவுசெய்யப்படும் திறன் மிகு வீரர்கள் தேசிய ரீதியிலான பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதோடு அவர்களுக்கு ஊக்குவிப்பு தொகையும் வழங்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் ரஞ்சனி ஜெயக்கொடி, வட மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அண்ணாத்துறை, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சீனிவாசன், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நிறைவேறாமல் போன கார்த்திக்கின் ஆசை!

Friday, Jul 15, 2011நவரச நாயகன் கார்த்திக் தனது மகனான கௌதமை மணிரத்னம் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக காத்திருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கார்த்திக் தனது எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதால் வேறு முடிவை எடுத்திருக்கிறார்.

மணிரத்னத்திடம் வேலையாகமல் போனதால், நல்ல கதைகளை வைத்திருக்கும் வேறு இயக்குனர்களை தேட ஆரம்பித்து இருக்கிறார் கார்த்திக்.

தனக்கு ஒரு பாரதிராஜா கிடைத்த மாதிரி, தனது மகனுக்கும் ஒரு அற்புதமான இயக்குனர் கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கார்த்திக். அதே நம்பிக்கையுடன் அவரது மகனும் காத்திருக்கிறார்.

முல்லையில் மலசல கூடத்தில் இருந்து பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு ..!

முல்லையில் மலசல கூடத்தில் இருந்து பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு ..! முல்லைத்தீவு -வள்ளிபுரம் பகுதியில் கைவிடப்பட்ட மலச கூட குழியில் இருந்து115 Chinese built assault துப்பாக்கிகள் மீட்க பட்டுள்ளன . மீள் குடியேற்ற படும் மக்கள் பாதுகாப்பான இடங்கள் என கூறாப்பட்ட பகுதிகளில்தேடுதல் மற்றும் பாதுகாப்பை உறுதி படுத்தும் நட வடிக்கையில்   ஈடு பட்டிருந்த போதே இந்தபோராயுதங்கள் மீட்க பட்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்  . இறுதி யுத்த கால பகுதியில் விடுதலை புலிகள் அவசர அவசரமாக  இந்த கழிவறையில்ஆயுதங்களை வீசி விட்டு சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் ..!

வடக்கில் மனித உரிமை அமைப்புக்கள் தேர்தலை கண்காணிக்க வேண்டும்

வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவென மனித உரிமை அமைப்புக்கள் அங்கு செல்ல வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

அவ்வாறு குழுவை அனுப்பும் பட்சத்தில் அம்மக்களின் அரசியல், ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த முடியுமென அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் :-

சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையாளர் எடுக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. 50ற்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனால் சட்டவிரோத பிரச்சாரங்கள் தொடர்பில் அவர்களுடைய செயற்பாடுகளில் பிரச்சினை உள்ளது.

சட்டவிரோத பிரச்சாரங்களை அகற்ற அவர்கள் முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை. இதுவரையில் 43 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாங்கள் இன்று மனித உரிமைகள் ஆணையகத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்.

வடக்கின் நிலைமைகளை கருத்திற் கொண்டு அங்குள்ள உண்மை நிலைகளை கண்டறிந்து மத்தியஸ்த்தம் வகிக்கவென அவர்களுடைய விசேட குழுவை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளோம்.

மக்களின் நம்பிக்கை அரசியல் கட்சிகளின் நம்பிக்கை என்பவற்றை உறுதிப்படுத்த இவ்வாறான விடயங்கள் அவசியம், என்றார்.

செங்கலடி பதுளை வீதியில் விபத்து: ஆசிரியர் பலி

செங்கலடி பதுளை வீதியில் தம்மானம்வெளிப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் சாரதி காயமடைந்துள்ளார்

குறித்த சம்பவத்தில் பன்குடாவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பணியாற்றும் 45 வயதுடைய வே.கோவிந்தராஜா என்ற ஆசிரியரே பலியானவரென இனங்காணப்பட்டுள்ளதாக கரடியனாறுப் பொலிஸார் தெரிவித்தனர்.

கனரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தம்மானம் வெளியில் வீதியோரத்தில் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் இருந்து கதைத்துக்கொண்டு நின்ற வேளையில் எதிரே வேகமாக வந்த கனரக வாகனம் கட்டுபாட்டை இழந்து ஆசிரியர் மீது மோதி வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுண்டிக்குளியில் தீயில் எரிந்து பெண் பலி - மற்றொருவருக்கு எரிகாயம்

யாழ்ப்பாணம் சுண்டிக்குளிப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சுண்டிக்குளிப் பகுதியில் இருந்து இவர்கள் இருவரும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் மிகமோசமாக எரிந்த நிலையில் காணப்பட்ட பெண் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

28 வயதுடைய அகிலா என்ற குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ளதாகவும், பெண்ணின் காதலான மற்றைய நபருக்கும் இடையிலான வாக்குவாதத்தின் இறுதியில் அந்தப் பெண் கத்தியால் வெட்டப்பட்டே எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் தென்னிலங்கையினைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நடிகை விஜயசாந்தியின் சென்னை நிலத்தை அபகரித்த முன்னாள் எம்.பியின் தம்பி கைது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தெலுங்கு நடிகை விஜயசாந்திக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக தமிழக முன்னாள் எம்.பி. ஒருவரின் தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

5.15 ஏக்கர் பரப்பளவிலான இந்த நிலம் விஜயசாந்தி உள்ளிட்ட 8 பேருக்குச் சொந்தமானதாகும். இதன் மதிப்பு ரூ. 130 கோடி என்கிறார்கள். இந்த நிலத்தை போலியான ஆவணங்களைத் தயாரித்து கடந்த 2008ம் ஆண்டு வெறும் ரூ. 8 கோடிக்கு விற்றுள்ளனர்.

இதுகுறித்து ஏற்கனவே போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பெண்கள் உள்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அதே நிலத்தை 70 கோடி ரூபாய்க்கு சிலர் விலை பேசி வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக புகாரும் வந்தது.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் வில்வமணி என்ற புரோக்கர் கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் எம்.பி. ஒருவரின் தம்பியாவார். அந்த முன்னாள் எம்.பி. யார் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.Topics: விஜயசாந்தி, நில அபகரிப்பு, vijayashanthi, land grabbing

விவகாரத்து செய்யவில்லை, ஒன்னாத் தான் இருக்கோம்: பூமிகா

தனக்கும், தனது கணவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஒன்றாகத் தான் இருப்பதாகவும் நடிகை பூமிகா தெரிவித்துள்ளார்.

நடிகை பூமிகா, யோகா பயிற்சியாளர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக பூமிகா மும்பை நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

குறிப்பாக பரத் தாகூர் படம் ஒன்றை எடுத்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பூமிகா கடுப்பாகியுள்ளதாகவும் பேசப்பட்டது.

இதைப் பார்த்து பூமிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

எனக்கும், எனது கணவருக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறோம். நாங்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதை நான் பலமுறை மறுத்துள்ளேன். ஆனாலும் வதந்திகள் நின்றபாடில்லை. இந்த வதந்திகளை நம்பாதீர்கள் என்றார்.Topics: பூமிகா, bharath thakur, பரத் தாகூர், விவாகரத்து, bhumika

ரூ 45 லட்சம் விவகாரம்: வடிவேலு மீது பதிலுக்கு இணையதள ஆசிரியர் புகார்

சென்னை: வடிவேலுவால் ரூ 1 கோடி நஷ்டப்பட்ட மலேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சார்பாக நடிகர் வடிவேலு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் இணைய ஆசிரியர் செல்வகுமார்.

நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று முன் தினம் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.

அப் புகார் மனுவில், "ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை ஒரு இணைய தள ஆசிரியர் செல்வகுமார் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும்.

இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் அந்நபர் அடிக்கடி மிரட்டுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என்று கூறப்பட்டிருந்தது.

பதிலுக்கு புகார்...

இந்த நிலையில், வடிவேலு மீது இணையதள ஆசிரியர் செல்வகுமார் மோசடி புகார் மனு அளித்துள்ளார்.

அப்புகார் மனுவில், "நடிகர் வடிவேலு மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவுக்கு வருவதாக முன்பணம் பெற்றார். 2007-ம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த மைக்கேல் கானாவிடம் ரூ. 4 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை இன்றுவரை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்.

இந்திய தூதரகம் மூலமும் வடிவேலுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை.

கலைநிகழச்சிக்கு வடிவேலு போகாததால் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வடிவேலு மீது புகார் அளிக்க எனக்கு பொது அதிகாரபத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புகார் அளிக்கிறேன். வடிவேலு மீதான புகாருக்கு போதுமான ஆதாரங்களையும், வீடியோ பதிவையும் கொடுத்துள்ளேன்,’’ எறு குறிப்பிட்டுள்ளார்.Topics: வடிவேலு, elvakumar, website ditor, இணையதளம், vadivelu, compensation

ரூ 35 கோடி பட்ஜெட்டில் அஜீத் நடிக்கும் பில்லா -2 படம் நேற்று தொடங்கியது.

ரூ 35 கோடி பட்ஜெட்டில் அஜீத் நடிக்கும் பில்லா -2 படம் நேற்று தொடங்கியது.

சக்ரி டோலட்டி இயக்கும் இந்த படம், முன்பு வெளியாகி வெற்றி பெற்ற பில்லா படத்துக்கு முந்தைய கதையமைப்பைக் கொண்டதாகும்.

ஹதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நேற்று படப்பிடிப்பு தொடங்கியது. முதல் நாள் ஷூட்டிங்கில் அஜீத், நாயகி ஹ்யூமா குரேஷி உள்ளிட்டோர் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்றனர்.

ரூ 35 கோடி செலவில், இந்துஜா குழுமம் மற்றும் வைட் ஆங்கில் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் நடக்கிறது.

மதராசபட்டணம் புகழ் செல்வகுமார் கலையை கவனிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏப்ரல் 2012 ல் இந்தப் படம் வெளியாகும் என்கிறார்கள். அஜீத்தின் பொன்விழாப் படமான மங்காத்தா அடுத்த மாதம் வெளியாகிறது.Topics: ajith, billa 2, அஜீத், பில்லா 2, shooting

சூதாட்டத்தில் 2.4மில்லியன் ரூபா பணத்தை இழந்த நபர் பொலிசாரால் கைது ..!

சூதாட்டத்தில் 2.4மில்லியன் ரூபா பணத்தை இழந்த நபர் பொலிசாரால் கைது ..! கசினோ சூதாட்டத்தின் போது 2.4மில்லியன் பணத்தினை இழந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர் . இவர் பதின் ஐந்து வாகனம்கள் வாடகைக்கு அமர்த்தி அதனை போலி ஆவணம்கள் ஊடாக முறைகேடாகவிற்றுள்ளார் . இவர்மீது எட்டு குற்றங்கள் சுமத்த பட்டுள்ளன .இதேவேளை பிறிதொரு குற்றசாட்டின் அடிப்படையில்  இவர்ஐந்து லட்சம் பணம் மோசடி செய்துள்ளது கண்டு பிடிக்க அபட்டுள்ளது . இவரது மகன் ஒருவன் பிரித்தானியாவில் வசித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது ..!

லஷ்கர் இ ஜங்வி பயங்கரவாத தலைவர் விடுதலை; பாக்.,கில் ஆயுத படைசூழ ரோஜா மலர் தூவி வரவேற்பு

லஷ்கர் இ ஜங்வி பயங்கரவாத தலைவர் விடுதலை; பாக்.,கில் ஆயுத படைசூழ ரோஜா மலர் தூவி வரவேற்பு

பயங்கரவாதம், சதிச்செயல், மற்றும் கொலை என 44 வழக்குகளில் தொடர்புடைய தடை செய்யப்பட்ட அமைப்பான லஷ்கர் இ ஜங்வி பயங்கரவாத தலைவர் மாலிக்முகம்மது ஈசாக் 14 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

 இவரை வரவேற்க பாகிஸ்தான் கோட்லாபாத் ஜெயிலில் ஆயுத படைபரிவாரங்களுடன் உள்ளூர் மத தலைவர்கள் மற்றும் பலர் வரவேற்றனர் என்பதுதான் கூடுதல் ஹைலைட்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ ஜங்வி தலைவராக இருந்து வருபவர் மாலிக்முகம்மது ஈசாக் .இவர் பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர். 1997 முதல் இவர் மீது 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் பாக்., சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தார். இந்த விசாரணையில் இவர் மீதான 34 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என இவரது மீதான வழக்குள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் இவரை ஜாமீனில் விடலாம் என கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி இவர் நேற்று விடுதலையானார்.

இவரை வரவேற்க பாகிஸ்தானில் உள்ள ஏ.எஸ்.வால்ஜமாத் தலைவர் முகம்மது அகம்மது லூதியான்வி ஆயுத படைபரிவாரங்களுடன் வந்திருந்தார். ஜெயில் வாசலில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கூடி நின்ற ஆதரவாளர்கள் ரோஜாமலர் தூவி வரவேற்பு அளித்து அவருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். பல கார்களில் அணிவகுத்து வந்த அவரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். வழிநெடுகிலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த மாலிக் ஈசாக் கூறுகையில் ; தம்மை பயங்கரவாத செயல்களுடன் தொடர்பு இல்லாதவன் என கோர்ட் ஏற்றுக்கொண்டது தமக்கு திருப்தி அளிப்பதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில்; ஒருங்கிணைந்த பாகிஸ்தானுக்கு தான் என்னவேண்டுமானாலும் செய்வேன், பாகிஸ்தானுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றார்.
இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்: சமீபத்தில் 2009 ம் ஆண்டில் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்றிருந்த போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு மாலிக் ஈசாக் ஜெயிலில் இருந்து மூளையாக செயல்பட்டான் என்ற குற்றச்சாட்டும் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவுடன் விரைவில் திருமணம்: குருவாயூர் கோவிலில் பிரபுதேவா காணிக்கை

நயன்தாராவுடன் விரைவில் திருமணம்: குருவாயூர் கோவிலில் பிரபுதேவா காணிக்கை

நடிகர் பிரபுதேவா காதலி நயன்தாராவுடன் கேரளாவில் தங்கி திருமண ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே, நேற்று பிரபுதேவா நயன் தாராவுடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். நயன்தாரா கிறிஸ்தவர் என்பதால் அவர் காரிலேயே அமர்ந்து கொண்டார்.
 
பிரபுதேவா தனது கார் டிரைவருடன் கோவிலுக்குள் சென்று 15 நிமிடங்கள் கிருஷ்ணனை வழிபட்டார். பின்னர் தங்க பட்டுச்சேலையில் தாலியை பொதிந்து வைத்து மேல்சாந்தியிடம் காணிக்கையாக கொடுத்து வழிபட்டார். அதோடு, கதலி வாழைக் குலை மற்றும் ஒரு கட்டு பணம் மற்றும் சந்தனம், நல்லெண்ணெய் ஆகியவற்றையும் காணிக்கையாக வழங்கினார்.
 
பிரபுதேவா கோவிலுக்கு வந்துள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் அவரைக் காண அங்கு திரண்டனர். இதனால் பிரபுதேவா அங்கிருந்து அவசர, அவசரமாக கிளம்பினார். பின்னர் நயன்தாராவுக்கு சொந்தமான அரியானூர் சாந்திமடம் பகுதியில் உள்ள பண்ணைத் தோட்டத்திற்கு சென்றனர்.

படங்கள் தோல்வி: இலியானா சம்பளம் 1 கோடியாக குறைப்பு

படங்கள் தோல்வி: இலியானா சம்பளம் 1 கோடியாக குறைப்பு

பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இந்தியில் இருந்து தமிழில் ரீ மேக் ஆகும் 3 இடியட்ஸ் படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.

 
இலியானாவின் தெலுங்கு படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் சம்பளத்தை பெருமளவு உயர்த்தினார். ரூ.1 கோடி வாங்கி வந்த அவர் ரூ.1 1/2 கோடியாக்கினார்.
 
தற்போது அல்லு அர்ஜுனுடன் தெலுங்கு பட மொன்றில் நடிக்க ரூ.2 கோடி கேட்டார். இது தெலுங்கு பட உலகினரை அதிர்ச்சியடையச் செய்தது. எந்த நடிகையும் இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களின் புதுப் படங்களில் இலியானாவை ஒப்பந்தம் செய்ய தயங்கினர். இவருக்கு வரவேண்டிய பெரிய பட்ஜெட் படங்கள் வேறு நடிகைகள் கைக்கு மாறியது.
 
இதனால் அதிர்ச்சியான இலியானா சம்பளத்தை ரூ.1 கோடியாக திடீரென குறைத்துள்ளார். சம்பள பிரச்சினையால் இழந்த படங்களையும் மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கிறார்

திரிபோலி நகரை குண்டு வைத்து தகர்க்க கடாபி திட்டம்: ரஷிய தூதர் தகவல்

திரிபோலி நகரை குண்டு வைத்து தகர்க்க கடாபி திட்டம்: ரஷிய தூதர் தகவல்

லிபியாவில், அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 புரட்சியாளர்கள் லிபியாவின் 2-வது பெரிய நகரமான பெங்காசி மற்றும் அதை சுற்றியுள்ள பலநகரங்களை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். தற்போது தலைநகர் திரிபோலியையும் நெருங்கி விட்டனர். இவர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் உதவியாக உள்ளன.
 
இந்த நகரம் எந்த நேரமும் புரட்சியாளர்கள் வசம் ஆகலாம் என்ற நிலை உள்ளது.   ஆனால், திரிபோலியை புரட்சியாளர்கள் கைப்பற்றி விட்டால் அந்த நகரை பூண்டோடு அழிக்க அதிபர் கடாபி திட்டமிட்டுள்ளதாக ரஷியாவின் சிறப்பு தூதர் மிகைல் மார்கெலோவ் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் சமாதானம் குறித்து பேச கடந்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி அவர் லிபியா சென்று இருந்தார். அப்போது அந்த நாட்டின் பிரதமர் பாக்தாதி அல்- மக்முதியை சந்தித்து பேசினார். அப்போது இந்த தகவல் தனக்கு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
 
இதை ரஷியாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.   மேலும் அவர் கூறும் போது, லிபியா அதிபர் கடாபியிடம் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. அவற்றை அவர் இன்னும் பயன்படுத்தவில்லை. தலைநகர் திரிபோலியை புரட்சியாளர்கள் கைப்பற்றினால் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தி அந்த நகரத்தை அழிக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் பொலிஸார் இடமாற்றம் - பவ்ரல்

தேர்தல் சட்டங்களுக்கு எதிராக தேர்தல் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் தொடர்பில் உடனடியாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவ்ரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இதுகுறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு பவ்ரல் அமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தேர்தல் சட்டங்களை மீறி மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களினால் தேர்தல்கள் தொடர்பில் மக்களிடத்தே நம்பிக்கையின்மை அதிகரித்துவருவதாக பவ்ரல் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நாவின் மனித உரிமை பிரகடனத்தை மீறியது இந்தோனேஷியா : சீமான்

இந்தோனேஷிய அரசால் நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவிக்க முயற்சி எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதல்வர் வற்புறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் :-

தங்களுடைய வாழ்வுரிமையை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் அமைய வேண்டும் என்பதற்காக நியூசிலாந்து சென்ற அவர்களை இந்தோனேஷிய அரசு சிறைப்பிடித்து வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது.

இலங்கையில் யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழர்கள் மீது இலங்கை இனவாத அரசு தொடர்ந்து நடத்திவரும் இன அழித்தலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்துக்கொள்ளவும், நியூசிலாந்து நாட்டை நோக்கி கப்பலில் பயணம் செய்த 87 ஈழத் தமிழ் அகதிகளை இந்தோனேஷிய அரசு நடுக்கடலில் சிறைபிடித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

ஈழத் தமிழ் அகதிகள் பயணம் செய்த கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் பழுதாகி நின்றபோது இந்தோனிஷிய கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கப்பலில் இருந்து இறக்கி இந்தோனேசியா நாட்டிற்குக் கொண்டு செல்ல அந்நாட்டுப் படையினர் முயற்சித்தபோது, கப்பலில் இருந்து இறங்க அகதிகள் மறுத்துள்ளனர். தாங்கள் நியூசிலாந்து நோக்கி பயணிக்க அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் கப்பலில் இருந்தே சாவோம் என்று கூறிவிட்டனர். இந்தத் தகவல்களையெல்லாம் அந்தக் கப்பலில் உள்ளவர்கள் என்னைத் தொடர்புகொண்டு என்னிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.

அந்த 87 அகதிகளில் 5 பேர் குழந்தைகள், 6 பேர் பெண்கள். அவர்களில் ஒருவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கப்பலை விட்டு இறங்க மறுத்த அகதிகளுக்கு கடந்த 13ஆம் திகதி முதல் உணவு அளிப்பதை நிறுத்தி துன்புறுத்தி வருகிறது இந்தோனேஷிய அரசு. ஆஸ்திரேலியாவிற்கும், நியூசிலாந்து நாட்டிற்கும் தப்பிச் செல்ல முயலும் ஈழத் தமிழ் அகதிகளை இதற்கு முன்னும் இப்படி தடுத்து நிறுத்தி சிறைப்படுத்தியுள்ளது இந்தோனிஷிய அரசு.

ஐ.நா.வின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் விதி 14ன் படி, தங்கள் நாட்டில் கொடூரமான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படும் எந்த ஒரு நபரும் வேறொரு நாட்டிற்கு அகதியாகச் சென்று தன்னை காத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்தோனேசிய அரசின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஐ.நா.வின் பன்னாட்டு மனித உரிமை பிரகடனத்திற்கும், ஐ.நா.வின் அகதிகள் பிரகடனத்திற்கும் முற்றிலும் முரணானதாகும். ஆனால் சர்வதேச பிரகடனங்களின் இந்த நெறிமுறைகளை மதிக்காமல், தனது நட்பு நாடான இலங்கை அரசுக்கு உதவும் வகையில் இந்தோனிஷிய அரசு செயல்பட்டு வருகிறது.

ஈழத் தமிழ் அகதிகள் வந்தால் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று நியூசிலாந்து நாடு கூறுவதும் ஐ.நா.அகதிகள் பிரகடனத்திற்கு முரணானதே.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அங்கு தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை இன்னமும் நீடிப்பதால்தான் சொந்த மண்ணில் இருந்து அவர்கள் அகதிகளாக மற்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.

அங்கு அமைதி ஏற்பட்டுள்ளதாக கூறும் அந்நாட்டு அரசின் குரலாக பேசிவரும் சிவ்சங்கர் மேனன் இதற்கு மேலாவது அமைதி என்ற வார்த்தைக்கு மயான அமைதி என்பது பொருளல்ல என்பதை உணர்ந்திட வேண்டும்.

எனவே, நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்ட ஈழத் தமிழ் அகதிகளுக்கு உணவளித்து, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல அனுமதிக்க தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரஜினியை அவமதித்தார்களா?

சென்னை: சிறுநீரக பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து சென்னைக்குத் திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை, விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு ஊர் திரும்பினார்.அவரை வரவேற்க பெருமளவில் ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

ரஜினிகாந்த் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புதன்கிழமை இரவு சென்னை திரும்பும் தகவல் கிடைத்ததால் அவரது ரசிகர்கள் புதன்கிழமை மதியம் முதலே மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குவியத் தொடங்கினார்கள்.

பாதுகாப்பு கருதியும், ரசிகர்களிடம் ரஜினி சிக்கி விடக் கூடாதே என்பதற்காகவும், ரஜினி எந்த வாயில் வழியாக வருவார் என்பதை இரவு 9.30 மணிவரை போலீஸார் ரகசியமாக வைத்திருந்தனர். இருப்பினும் ரஜினி வரும் பாதையைத் தெரிந்து கொண்ட ரசிகர்கள் அங்கு ஓடி காரை முற்றுகையிட்டனர். அவரை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைக்க தடியடி வரை போக வேண்டியதாயிற்று போலீஸாருக்கு.

முன்னதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய ரஜினிகாந்தும் மற்றவர்களும் வழக்கம்போல விமானப் பாலம் மூலம் வெளியே வந்தனர்.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் இமிக்ரேஷன் என்று அழைக்கப்படும் அனுமதி சோதனைக்குப் பிறகுதான் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். முக்கியமான பிரமுகர்கள் இதுபோல வெளிநாட்டுப் பயணம் முடித்து இந்தியா திரும்புவதாக இருந்தால், அவர்களை விமானத்திலிருந்து இறங்கும் இடத்திலேயே வரவேற்று, இமிக்ரேஷன் அனுமதி அளிப்பது உண்டு.

இருப்பினும், ரஜினிகாந்த், 'இமிக்ரேஷன்' சோதனைக்கு நடத்தியே அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மூச்சிரைக்க நடந்து வந்ததைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது' என்று கண்கள் கலங்க தெரிவித்துள்ளார் பணியில் இருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர்.

இதுபோன்ற நேரங்களில் பிரமுகர்களை ஏற்றிச் செல்ல டாடா சுமோ போன்ற வாகனங்கள்தான் பயன்படுத்தப்படும். ஆனால், ரஜினிகாந்த் ஒரு பழைய பஸ்ஸில் அழைத்துச் சென்று ஆறாவது வாயிலில் இறக்கிவிடப்பட்டார். ரஜினிகாந்த் ஒரு நோயாளியாக சிகிச்சை முடிந்து நாடு திரும்புகிறார் என்று தெரிந்தும் விமான நிலைய அதிகாரிகள் முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா?'' என்று ஆதங்கம் எழுப்பியுள்ளனர் ரசிகர்கள்.

ரஜினி குடும்பத்தினர் மீதும் தவறு உள்ளது...

இத்தனை குளறுபடிகளுக்கும் ரஜினி குடும்பத்தினரும் ஒரு காரணம் என்கிறார் ரஜினி ரசிகர் ஒருவர்.

"1996-ல் ரஜினி வெளிநாட்டிலிருந்து திரும்பும்போது ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா முன்னேற்பாடுகளைக் கவனமாகச் செய்திருந்தார். அதேபோல, ரஜினி குடும்பத்தினர் முதல்வரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டிருந்தால், நிச்சயமாக அவர் தகுந்த ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டிருப்பார். அவர்கள் சொல்லாதது தான் தவறு'' என்று கருத்துத் தெரிவித்தார் அவர்.Topics: rajini, chennai airport, insult, ரஜினி, விமான நிலையம், அவமதிப்பு

9வயது சிறுமியை கற்பழித்த பிக்கு கைது ..!

9வயது சிறுமியை கற்பழித்த பிக்கு கைது ..!   பிலிப்பைன்ஸ்  நாட்டில் ஒன்பது வயது சிறுமியை கற்பழித்தஇலங்கையை சேர்ந்த  பிக்கு ஒருவர் அந்தநாட்டு காவல்துறையினரால் கைது செய்ய  பட்டுள்ளார் ,. சிறார் துஸ் பிரோயோகத்தின் கீழ் இவர் கைது செய்யபட்டு சிறை அடைக்க  பட்டுள்ளார் .

இலங்கைக்கு இந்தியா பிரித்தானியா .பாகிஸ்தானியர் அதிகமா சென்றுள்ளனர் -அரசு குசி ..!

இலங்கைக்கு இந்தியா பிரித்தானியா .பாகிஸ்தானியர் அதிகமா சென்றுள்ளனர் -அரசு குசி ..! இந்த வருட தை மாதம் முதல் வைகாசி வரையிலான கல பகுதியில்மிக அதிகமாக இலங்கைக்கு உல்லாச பயணிகளாக  68,830இந்தியர்கள் வருகை தந்துள்ளனர் . அதை அடுத்து பிரித்தானியார் 41,474இரண்டாம் நிலையில் உள்ளனர் .அவர்களின்மூன்றாம் நிலையில்  6,027பாகிஸ்தானியர் வருகை தந்துள்ளனர் .என இலங்கை உல்லாசத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது ..!

அமெரிக்கா செனட் வரை சென்றுள்ள சனல் 4வின் இலங்கை கொலைக்களம் ..!

அமெரிக்கா செனட் வரை சென்றுள்ள சனல் 4வின் இலங்கை கொலைக்களம் ..! அமெரிக்காவின் செனட் சபயில் விரைவில் சனல் 4தொலைகாட்சி ஒளிபரப்பியஇலங்கை கொலைக்களம் திரையிட்டு காண்பிக்க படவுள்ளது . இதில் அமெரிக்க கொள்கைகளை வகுப்பவர்களுக்கும், செனட்டர்களுக்கும் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கும்இந்த அதிர்ச்சி கரமான தமிழர் அழிப்பின் கொலைக்களம் ஆவண படுத்த படவுள்ளன . அவ்வாறு அனைவரும்  இந்த காட்சியினை பார்த்த பின்னர் இலங்கைக்கு பாரிய எதிர்ப்பு கிளம்புவதுடன்தமிழர்களுக்கு அவர்தாம் வாழ்வதற்கான   அரசியல் அழகு வழங்க படும் என நோக்கர்கள் தெரிவித்துள்ளனர் .>!

தேர்தல் வன்முறை 78பேர் கைது ..!

தேர்தல் வன்முறை 78பேர் கைது ..! இலங்கையில் நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் அரசியல்கட்சிகளின் பிரச்சார கூட்டங்களின் போது  இதுவரை ஐம்பத்தி எட்டு தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன . இந்த வன்முறைகளில் கலவரத்தில் ஈடுபட்ட எழுபத்தி எட்டு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .இந்த வன்முறைகளிற்கு பதினெட்டு வாகனம்கள் பயன் படுத்த பட்டுள்ளன எனகாவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . இந்த வன்முறைகளில் துப்பாக்கி தாக்குதல்களும் அடங்கும் என குறிப்பிட பட்டுள்ளது ..!

கோட்டபாய மீது சீறிப்பாயும் சுமந்திரன்

தன் கீழுள்ள இராணுவத்தினரை கட்டுப்படுத்த தெரியாதவர், எம்மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தெரியாதவர், அரசியல் கட்சிகள் தொடர்பில் விமர்சனம் செய்வது நல்லதல்ல என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் :-

யாழ்ப்பாண கட்டளைத்தளபதி நேற்றைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் இலாபத்துக்காக இராணுவத்தினருக்கு எதிராக குற்றம் சுமத்துவதாக தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமையானது அவர் அரசியலில் தேவையின்றி தலையிடும் ஒரு காரியம் எனவும் அவருகென்று ஒரு தொழில் உள்ளது, அதை மாத்திரம் செய்துகொண்டிக்க அவருக்கு தெரிய வேண்டும்.

அளவெட்டியிலே எங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அதை இராணுவத்தினரேதான் செய்ததாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தன் கீழுள்ள இராணுவத்தினரை கட்டுப்படுத்த தெரியாதவர், எம்மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தெரியாதவர், அரசியல் கட்சிகள் தொடர்பில் விமர்சனம் செய்வது நல்லதல்ல.

ஆசிய ஒலிம்பிக் சபையின் உப தலைவராக ஹேமசிறி பெனாண்டோ

ஆசிய ஒலிம்பிக் சபையின் உப தலைவராக ஹேமசிறி பெனாண்டோநியமிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானில் இடம்பெற்றுவரும் வருடாந்த ஆசிய ஒலிம்பிக் சபையின் கூட்டத்தின் போதே இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஹேமசிறி பெனான்டோ தற்போதைய பொதுநலவாய விளையட்டுகள் சம்மேளனத்தின் உபதலைவர் மற்றும் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லஷ்கர்-இ-ஜஹாங்வி தலைவரை பாகிஸ்தான் பிணையில் விடுவித்தது

இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் தாக்குதலுக்கு திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்பட்ட பாகிஸ்தானின் லஷ்கர்-இ-ஜஹாங்வி என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான மாலிக் ஷா இஷாக்கை 14 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பின் அந்நாட்டு உச்சநீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

பாகிஸ்தானின் லஷ்கர்-இ- ஜஹாங்வி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார் மாலிக் ஷா இஷாக். இவர் மீது பயங்கரவாத செயல்களில்ஈடுபட்டது, தலைமைச் செயலகம் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 1990-ம் ஆண்டு ஷியா பிரிவு எனும் சிறுபான்மை அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை கொலை செய்தது உள்ளிட்ட 45 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.

கடந்த 1997-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். தவிர கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களள் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார்.

முன்னாள் அதிபர் முஷாரப் ஆட்சியின் போது இவரது இந்த இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீதான தாக்குதல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் .உச்சநீதிமன்றத்தில் மாலிக் ஷா இஷாக், பிணையில் விடக்‌கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

மாலிக் சார்பில் சட்டத்தரணி மிஸ்பா-உல்-ஹாக் ஆஜராகி வாதாடினார். அதில் இஷாக் மீது உள்ள 45 வழக்குகளில் 37 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். ‌ஏற்கனவே 8 வருடங்கள் சிறை தண்டனையும் பெற்றார். ஆகவே இவரை பிணையில் விடுக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாலிக் ஷா-இஷாக்கை, 1 மில்லியன் டொலர் பிணைத் தொகையின் பேரில் அவரை பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

விடுவிக்கப்பட்ட மாலிக்-ஷா இஷாக்கை, லாகூர் சிறைக்கு வெளியே காத்திருந்த 100-க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வரவேற்று அளித்தனர்.

சங்கிலியன் சிலையை அகற்றவில்லையாம் : அழகுபடுத்துகிறார்களாம்

இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் தாக்குதலுக்கு திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்பட்ட பாகிஸ்தானின் லஷ்கர்-இ-ஜஹாங்வி என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான மாலிக் ஷா இஷாக்கை 14 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பின் அந்நாட்டு உச்சநீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

பாகிஸ்தானின் லஷ்கர்-இ- ஜஹாங்வி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார் மாலிக் ஷா இஷாக். இவர் மீது பயங்கரவாத செயல்களில்ஈடுபட்டது, தலைமைச் செயலகம் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 1990-ம் ஆண்டு ஷியா பிரிவு எனும் சிறுபான்மை அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை கொலை செய்தது உள்ளிட்ட 45 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.

கடந்த 1997-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். தவிர கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களள் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார்.

முன்னாள் அதிபர் முஷாரப் ஆட்சியின் போது இவரது இந்த இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீதான தாக்குதல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் .உச்சநீதிமன்றத்தில் மாலிக் ஷா இஷாக், பிணையில் விடக்‌கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

மாலிக் சார்பில் சட்டத்தரணி மிஸ்பா-உல்-ஹாக் ஆஜராகி வாதாடினார். அதில் இஷாக் மீது உள்ள 45 வழக்குகளில் 37 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். ‌ஏற்கனவே 8 வருடங்கள் சிறை தண்டனையும் பெற்றார். ஆகவே இவரை பிணையில் விடுக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாலிக் ஷா-இஷாக்கை, 1 மில்லியன் டொலர் பிணைத் தொகையின் பேரில் அவரை பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

விடுவிக்கப்பட்ட மாலிக்-ஷா இஷாக்கை, லாகூர் சிறைக்கு வெளியே காத்திருந்த 100-க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வரவேற்று அளித்தனர்.

வொஷிங்டனில் இலங்கையின் கொலைக்களங்கள்

வொஷிங்டன் டீ.சி பிரதேசத்தில் அமெரிக்க கொள்கைகளை வகுப்பவர்களுக்கும், செனட்டர்களுக்கும் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கும் சனல் 4வின் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தை காட்சிப்படுத்த பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் திட்டமிட்டுள்ளது.

ஜூன் மாதம் பிரித்தானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்தை பார்வையிட்டு அதுதொடர்பில் கலந்துரையாடுவதற்கான விரிவான ஏற்பாடுகள் வொஷிங்டன் டீ.சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனீவா மற்றும் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டு, சர்வதேச விசாரணைகளுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜிம் மக்கோவன் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு உதவித் தலைவர் ரொம் லன்டோஸ் ஆகியோர் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட முன்னர் விளக்கவுரை வழங்கவுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஓகஸ்ட் மாதம் இந்தியா பாராளுமன்றில் இலங்கைப் பிரச்சனை

தேர்தல் சட்டங்களுக்கு எதிராக தேர்தல் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் தொடர்பில் உடனடியாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவ்ரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இதுகுறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு பவ்ரல் அமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தேர்தல் சட்டங்களை மீறி மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களினால் தேர்தல்கள் தொடர்பில் மக்களிடத்தே நம்பிக்கையின்மை அதிகரித்துவருவதாக பவ்ரல் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று திரைக்கு வந்த படங்கள் ஒரு பார்வை

Friday, Jul 15, 2011இன்று முதல் விக்ரமின் தெய்வத்திருமகள், ஹாலிவுட் படமான ‘ஹாரிபாட்டரும் உயிர் ரகசியமும்’, அமலா பால் நடித்துள்ள ‘சிந்து’ ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வருகின்றன. இப்படங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தினை உங்களுக்காக பிலிமிக்ஸ் இணையதளம் வழங்குகிறது.

தெய்வத் திருமகள்

‘மதராசபட்டினம்’ விஜய் இயக்கும் படம் ‘தெய்வத் திருமகள்’ சீயான் விக்ரம் இப்படத்தில் 5 வயது சிறுவனின் மன நிலையைக் கொண்டவராக நடிக்கிறார். அனுஷ்கா, அமலா பால் என இரண்டு கதாநாயகிகள். 5 வயதே உடையே சாரா என்ற சிறுமி முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறாள். காமெடிக்கு சந்தானம் இருக்கிறார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு பணியை கவனித்துக் கொள்ள, படத்தொகுப்பினை ஆண்டனி செய்திருக்கிறார். இத்திரைப்படத்தின் பாடல்கள் நா.முத்துக் குமாரின் பேனாக்களால் வரையப்பட, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ராஜகாளியம்மன் பிலிம்ஸ் சார்பில் மோகன் நடராஜன் தயாரித்துள்ள இப்படத்தை, யு டிவி மோஷன் பிக்சர்ஸ் இன்று முதல் வெளியிடுகிறது.

ஹாரிபாட்டரும் உயிர் ரகசியமும்

உலகளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்த படம் எதுவென்றால் அது ஹாரிபாட்டர் படமாகத்தான் இருக்கும். ஹாரிபாட்டர் பட வரிசையில் ஏழு படங்கள் வந்திருக்கின்றன. தற்போது இப்படவரிசையின் எட்டாம் பாகம் மற்றும் கடைசி பாகமான ‘ஹாரிபாட்டரும் உயிர் ரகசியமும்’ என்ற பெயரில் இன்று முதல் திரைக்கு வருக்கிறது.

இந்த கதையின் கடைசி பாகம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. தன் தாய், தந்தையரை கொன்ற வில்லன் வால்டர் மோர்ட்டை பழி வாங்க புறப்பட்ட ஹாரிபாட்டரையும், அவனது நண்பர்களையும் தனது மாயாஜால வித்தைகளால் முறியடிக்கிறான் வால்டர்.

தொடர்ந்து போராடும் ஹாரிபாட்டருக்கு பெரும் இழப்புகள் ஏற்படுகிறது. இருந்தும், ஹாரிபாட்டர் தன்னம்பிக்கையோடு வால்டரை எதிர்த்து போராடுகிறான். ஆனால் வால்டருக்கு அதீத சக்திகள் அதிகரித்து பெரும் பலம் பெறுகிறான்.

வால்டரின் கையில் உள்ள மந்திரக் கோலால் மட்டுமே அவனை கொல்ல முடியும் என்பதை தெரிந்து கொண்ட ஹாரிபாட்டர், அந்த மந்திரக் கோலை எப்படி அவனிடமிருந்து எடுக்கிறான். அதை வைத்து எப்படி அவனை அழிக்கிறான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லுகிறது இந்த கடைசி பாகம். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தமிழில் டப் செய்து வெளியிடுகிறது.

சிந்து

‘உயிர்’ என்ற சர்ச்சைக்குரிய படத்தை இயக்கியவர் சாமி. இவர் நடிகை அமலா பாலை முதன் முதலில் தமிழில் அறிமுகப் படுத்திய படம் ‘சிந்து சமவெளி’. இப்படத்தில் மாமனாருக்கும், மருமகளான அமலா பாலிற்கும் இடையே ஏற்படும் தவறான உறவை சித்தரிக்கும் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு இப்படம் வெளியான போது அமலா பாலை யாருக்கும் தெரியாது. தற்போது மைனா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானதால், இப்படத்தை ‘சிந்து’ என்ற பெயரில் ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.

இப்படத்தில் அமலா பாலின் கவர்ச்சியான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்பதால் இப்படத்தை இன்று முதல் ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் தந்திருக்கிறது

ரஜினியிடம் நலம் விசாரித்த கருணாநிதி- கனிமொழியின் நலம் விசாரித்த ரஜினி

சென்னை: சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

அப்போது திகார் சிறையில் உள்ள கனிமொழியைப் பற்றியும், கருணாநிதியின் நலம் குறித்தும் ரஜினி விசாரித்துள்ளார்.

சிகிச்சை முடிந்து சிங்கப்பூரிலிருந்து புதன்கிழமை இரவு சென்னை வந்தார். கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் உள்ள அவரை வியாழக்கிழமை திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, தலைவர் கலைஞர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது என் மீது காட்டிய அக்கறைக்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட ரஜினி, கனிமொழி குறித்தும் நலம் விசாரித்தார்.

-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.Topics: rajini, karunanidhi, kanimozhi, ரஜினி, கனிமொழி, கருணாநிதி

இரண்டு மாதங்கள் ஓய்வு... ரஜினி ராணாவை மீண்டும் தொடங்குவது எப்போது?

சென்னை: சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

அப்போது திகார் சிறையில் உள்ள கனிமொழியைப் பற்றியும், கருணாநிதியின் நலம் குறித்தும் ரஜினி விசாரித்துள்ளார்.

சிகிச்சை முடிந்து சிங்கப்பூரிலிருந்து புதன்கிழமை இரவு சென்னை வந்தார். கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் உள்ள அவரை வியாழக்கிழமை திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, தலைவர் கலைஞர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது என் மீது காட்டிய அக்கறைக்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட ரஜினி, கனிமொழி குறித்தும் நலம் விசாரித்தார்.

-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.Topics: rajini, karunanidhi, kanimozhi, ரஜினி, கனிமொழி, கருணாநிதி

ஹீரோயின் இல்லாத ஹீரோயின்: புலம்பும் மதுர் பண்டார்கர்

தனது படம் ஹீரோயினுக்கு இன்னும் எந்த ஹீரோயினையும் ஒப்பந்தம் செய்யவில்லை என்று இயக்குனர் மதுர் பண்டார்கர் தெரிவித்துள்ளார்.

மதுர் பண்டார்கர் 'ஹீரோயின்' என்ற படத்தை இயக்க முடிவு செய்து அதற்காக ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தம் சில நாட்களிலேயே அமிதாப் தனது மருமகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியைக் கேட்டு அனைவரும் சந்தோஷப்பட இயக்குனர் மதுர் பண்டார்கருக்கு மட்டும் தலையில் இடி விழுந்தது போலாகிவிட்டது. படத்திற்கு ஒப்பந்தம் செய்தபோது தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஐஸ்வர்யா மறைத்துவி்ட்டார் என்று வருத்தப்பட்டார்.

ஹீரோயின் திரைக்கு வரும் முன்பே பரணுக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் மதுர் பண்டார்கர் தனது படத்தை தூசி தட்டி எடுத்து அதில் நடிக்க கதாநாயகியைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று செய்திகள் வந்தன. இதற்காக கரீனா கபூர் அல்லது பிரயங்கா சோப்ராவை அணுகக்கூடும் என்றும் கூறப்பட்டது.

நான் ஹீரோயின் படத்திற்காக புது கதாநாயகியைத் தேடுவதாக வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.Topics: ஹீரோயின், மாதுர் பண்டார்கர், madhur bhandarkar, heroine, bollywood