This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label பார்வை. Show all posts
Showing posts with label பார்வை. Show all posts

Friday, July 15, 2011

இன்று திரைக்கு வந்த படங்கள் ஒரு பார்வை

Friday, Jul 15, 2011இன்று முதல் விக்ரமின் தெய்வத்திருமகள், ஹாலிவுட் படமான ‘ஹாரிபாட்டரும் உயிர் ரகசியமும்’, அமலா பால் நடித்துள்ள ‘சிந்து’ ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வருகின்றன. இப்படங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தினை உங்களுக்காக பிலிமிக்ஸ் இணையதளம் வழங்குகிறது.

தெய்வத் திருமகள்

‘மதராசபட்டினம்’ விஜய் இயக்கும் படம் ‘தெய்வத் திருமகள்’ சீயான் விக்ரம் இப்படத்தில் 5 வயது சிறுவனின் மன நிலையைக் கொண்டவராக நடிக்கிறார். அனுஷ்கா, அமலா பால் என இரண்டு கதாநாயகிகள். 5 வயதே உடையே சாரா என்ற சிறுமி முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறாள். காமெடிக்கு சந்தானம் இருக்கிறார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு பணியை கவனித்துக் கொள்ள, படத்தொகுப்பினை ஆண்டனி செய்திருக்கிறார். இத்திரைப்படத்தின் பாடல்கள் நா.முத்துக் குமாரின் பேனாக்களால் வரையப்பட, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ராஜகாளியம்மன் பிலிம்ஸ் சார்பில் மோகன் நடராஜன் தயாரித்துள்ள இப்படத்தை, யு டிவி மோஷன் பிக்சர்ஸ் இன்று முதல் வெளியிடுகிறது.

ஹாரிபாட்டரும் உயிர் ரகசியமும்

உலகளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்த படம் எதுவென்றால் அது ஹாரிபாட்டர் படமாகத்தான் இருக்கும். ஹாரிபாட்டர் பட வரிசையில் ஏழு படங்கள் வந்திருக்கின்றன. தற்போது இப்படவரிசையின் எட்டாம் பாகம் மற்றும் கடைசி பாகமான ‘ஹாரிபாட்டரும் உயிர் ரகசியமும்’ என்ற பெயரில் இன்று முதல் திரைக்கு வருக்கிறது.

இந்த கதையின் கடைசி பாகம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. தன் தாய், தந்தையரை கொன்ற வில்லன் வால்டர் மோர்ட்டை பழி வாங்க புறப்பட்ட ஹாரிபாட்டரையும், அவனது நண்பர்களையும் தனது மாயாஜால வித்தைகளால் முறியடிக்கிறான் வால்டர்.

தொடர்ந்து போராடும் ஹாரிபாட்டருக்கு பெரும் இழப்புகள் ஏற்படுகிறது. இருந்தும், ஹாரிபாட்டர் தன்னம்பிக்கையோடு வால்டரை எதிர்த்து போராடுகிறான். ஆனால் வால்டருக்கு அதீத சக்திகள் அதிகரித்து பெரும் பலம் பெறுகிறான்.

வால்டரின் கையில் உள்ள மந்திரக் கோலால் மட்டுமே அவனை கொல்ல முடியும் என்பதை தெரிந்து கொண்ட ஹாரிபாட்டர், அந்த மந்திரக் கோலை எப்படி அவனிடமிருந்து எடுக்கிறான். அதை வைத்து எப்படி அவனை அழிக்கிறான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லுகிறது இந்த கடைசி பாகம். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தமிழில் டப் செய்து வெளியிடுகிறது.

சிந்து

‘உயிர்’ என்ற சர்ச்சைக்குரிய படத்தை இயக்கியவர் சாமி. இவர் நடிகை அமலா பாலை முதன் முதலில் தமிழில் அறிமுகப் படுத்திய படம் ‘சிந்து சமவெளி’. இப்படத்தில் மாமனாருக்கும், மருமகளான அமலா பாலிற்கும் இடையே ஏற்படும் தவறான உறவை சித்தரிக்கும் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு இப்படம் வெளியான போது அமலா பாலை யாருக்கும் தெரியாது. தற்போது மைனா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானதால், இப்படத்தை ‘சிந்து’ என்ற பெயரில் ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.

இப்படத்தில் அமலா பாலின் கவர்ச்சியான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்பதால் இப்படத்தை இன்று முதல் ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் தந்திருக்கிறது

Tuesday, June 28, 2011

யுவன் பக்கம் திரும்புமா?? மிஷ்கின் கூலிங்கிளாஸ் பார்வை

தங்கபாலு.. என்று ஒரு மானஸ்தன் பாராட்டிய ஜெயலலிதா June 28, 2011 | no commentsபிரதமரை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்து வரவேற்கத் தக்கது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று விடுத்த அறிக்கை:

லோக்பால் மசோதா இன்று நாடு முழுவதும் அதிகம் பேசப்படுகிற செய்தியாக உள்ளது. நீண்டநெடு நாட்களாக அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும், அதற்கான முயற்சிகளில் சோனியா வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திடீரென்று புதிய அவதாரங்களாக தாங்கள் தான் ஊழலை ஒழிக்க வந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொண்டு சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையிலும், சன்னியாசி என்ற பெயரிலும் தனி ராஜ்ஜியம் நடத்த புறப்பட்டிருக்கிறார்கள்.

ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை என்றென்றும் நிலைநிறுத்தப் போகும் கொள்கையை வலியுறுத்தும் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும், அதற்கேற்றவாறு காரணங்களை சேகரித்து பதிவு செய்யும் நடவடிக்கைகளில் இன்றைய மத்திய அரசு முனைப்போடு செயலாற்றி வருவதையும் நாடறியும்.

அந்நெறிமுறைப்படி மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் காலத்தில் மத்திய அரசு இதுகுறித்து மாநிலங்களின் முதல்வர்களையும் அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள் போன்று பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து அதன்வழியில் செயல்படுவதுதான் ஜனநாயக நடைமுறை.

அவ்வழிமுறைக்கு எதிராக செயல்பட்டு இந்தியாவில் ஜனநாயகத்தை மாய்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிலரை முன்னிலைப்படுத்தி, இங்கு குறுக்கு வழியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று, கனவு காணும் சில உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் தங்களது அரசியல் விளையாட்டை தொடங்கியிருக்கின்றனர்.

சோனியா வழியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து மாநில முதல்வர்கள், அனைத்து எதிர்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் கருத்துக்களை கேட்டுள்ளது.

இந்த நிலையில் லோக்பால் மசோதாவில் நாட்டின் பிரதமர் பதவியை சேர்க்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள கருத்தை பெரிதும் வரவேற்கிறேன்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கருத்து தெரிவிக்கும் போது, பிரதமர் பதவி நாட்டின் உயர்ந்த அந்தஸ்து பெற்றது. நாட்டின் ஆளுமையை நிலைநிறுத்தும் தனித்துவமிக்க சக்தியும், வல்லமையும் பெற்ற பதவி. இது எந்தவொரு தனி நபருக்கும் சாதகமானது அல்ல. பிரதமர் பதவிக்குள்ள சிறப்பையும், உரிமையையும் பொருத்தது. எனவே லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக ரீதியான, நியாயமான கருத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வலிமையோடு ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு இது வழிவகுக்கும்.”

- இவ்வாறு அவர் கூறியுள்ளார்.