This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, August 2, 2011

பரிதாபத்துக்குரிய ஈழத்தமிழர்களும் கஸ்மீர் பண்டிற்களும்

“இனச்சுத்திகரிப்பு என்பதும் இனப்படுகொலை என்பதும் ஒன்றல்ல. இது சிறிலங்காவின் வடக்கிற்கு நன்றாகப் பொருந்துகின்றது. ஆனால் கஸ்மீருக்கு பொருத்தமற்றது“ இவ்வாறு கஸ்மீர் பண்டிற்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையுடன் ஈழத்தமிழர் பிரச்சினையை
ஒப்பிட்டு அலசியுள்ளார்- மும்பையைத் தளமாகக் கொண்ட “daily news & analysis' ஊடகத்தின் ஆசிரியர் ஆதித்ய சின்ஹா.

அவரது இந்த ஆய்வை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் நித்யபாரதி.

கஸ்மீர் பிரச்சினை தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட- 'எனது சுதந்திரம் கிடைக்கும் வரை''- கஸ்மீரில் புதிய இன்ரிபடா மற்றும் சிக்கலான பிரச்சினை: ஜம்மு – கஸ்மீர்' ஆகிய இரு நூல்களிலும் இந்தியாவின் கஸ்மீர் மாநிலம் தொடர்பான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கஸ்மீர் மக்கள் மிகவும் விரும்புகின்ற அந்த மாநிலத்தின் சுதந்திரம் தொடர்பாக இந்தியப் பழமைவாதிகள் எந்தவொரு அர்த்தமுள்ள கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை என்பது தொடர்பாக இவ்விரு நூல்களிலும் விவாதிக்கப்பட்டுள்ளன.

கஸ்மீர் பண்டிற்கள்(Pandits) மற்றும் அவர்கள் தமது சொந்த இடத்தை விட்டு வெளியேறியமை தொடர்பான விடயம் இங்கே முதன்மைப்படுத்தப்படுகின்றது.

கஸ்மீர் இந்துக்கள் இந்தியாவிற்குள்ளே இடம்பெயர்ந்து வாழும் அதேவேளையில், ஜம்மு, டில்லி, மற்றும் இந்தியாவின் வேறு பல மாநிலங்களிலும் மிகத் துன்பகரமான நிலையில் வாழ்கின்றார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

சிறிலங்காத் தமிழர்களைப் போன்று கஸ்மீர் இந்துக்களின் நிலையும் மிகவும் பரிதாபத்திற்குரிய ஒன்றாக உள்ளது.

கஸ்மீரின் பழமைவாதிகள் அங்கு வாழும் இந்துக்கள் மீதான 'இனச்சுத்திகரிப்பு' தொடர்பாக ஏதாவது விவாதங்களை மேற்கொள்கிறார்களா என்றால் ஒருபோதும் இல்லை என்பதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆனால் இதற்கு மாறாக இவர்கள் கஸ்மீர் முஸ்லீம் மக்கள் தொடர்பாக மட்டும் தமது கருத்துக்களை கூறிவருகின்றனர். இது கஸ்மீர் இந்துக்களின் நிலைமையை பரிதாபத்திற்கு உள்ளாக்குகின்றது என்பதே சோகமானதாகும்.

ஜம்முவில் உள்ள மிஸ்றிவாலா முகாம் மற்றும் டில்லியிலுள்ள லஜ்பாட் நகர் முகாமைப் பார்வையிட்ட ஒரு சில பழமைவாதிகள் உட்பட அவர்களால் எழுதப்பட்ட ஆக்கங்களில் கஸ்மீர் இந்துக்களின் வாழ்க்கை சுயநலம்மிக்கது என்ற விடயத்தை வலியுறுத்தியே எழுதப்படுகின்றது.

'இனச்சுத்திகரிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ள ஏழு இலட்சம் கஸ்மீர் இந்துக்களின் நிலை என்ன?' என பத்திரிகையில் வெளிவந்த எனது ஆக்கத்தை வாசித்த சென்னையைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் தனது கடிதத்தின் மூலம் வினவியிருந்தார்.

1.42 லட்சம் பேரை உள்ளடக்கிய 38,119 குடும்பங்கள் கஸ்மீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்கின்றனர் என ஜம்மு - கஸ்மீர் விடுதலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

21,684 பண்டிற் குடும்பங்கள் தற்போது புலம்பெயர்ந்து வாழ்வதாகவும் இதில் அதிகமானோர் டில்லியில் வாழ்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1989 இலிருந்து 219 கஸ்மீர் பண்டிற்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் 28 ஆண்டுகளுக்கு முன்னர் இனவன்முறையானது ஆரம்பிக்கப்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் 2008-2010 வரை இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எண்ணுக்கணக்கற்ற தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1983 இலிருந்து மூன்று இலட்சம் சிறிலங்காத் தமிழர்கள் புலம் பெயர்ந்து இந்தியாவில் வாழ்கின்றனர். புலம்பெயர் சிறிலங்கர்கள் மேற்கு நாடுகளிலேயே உள்ளனர். குறிப்பாக இரண்டு லட்சம் பேர் வரை கனடாவில் வாழ்கிறார்கள்.

தற்போது தமிழ்நாடானது சிறிலங்காத் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறான நிலை காணப்படவில்லை.

சிறிலங்கர்கள் தமது நாட்டிற்கு சீனர்களை வரவழைத்ததன் பின்னர் இந்தியாவானது மிகவும் அச்சமுற்றுள்ளது. அத்துடன் சிறிலங்காவும் பாகிஸ்தானும் மிக நெருக்கமான உறவைப் பேணிவருகின்றன.

அண்மையில் தமிழ்நாட்டு சபைக்கான தேர்தலில் மு.கருணாநிதி தோல்வியுற்றது உள்ளடங்கலாக பல்வேறு தேசிய நலனைக் கருத்திற்கொண்டு இந்தியாவானது சிறிலங்கா விடயத்தில் அமைதி காத்து வருகின்றது.

ஒரு இனக்குழுமமானது பிறிதொரு இனக்குழுமத்தின் மீதோ அல்லது, ஒரு மதசார் குழுவானது பிறிதொரு மதசார் குழு மீதோ, தனது வன்முறைகளை அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டு- அதன் ஊடாக பாதிக்கப்பட்ட இனக்குழுமத்தை அடியோடு வேரறுத்தலே இனச்சுத்திகரிப்பு எனப்படுகின்றது.

இங்கே குறிப்பிடப்படும் இனச்சுத்திகரிப்பு என்பதும் இனப்படுகொலை என்பதும் ஒன்றல்ல. இது சிறிலங்காவின் வடக்கிற்கு நன்றாகப் பொருந்துகின்றது. ஆனால் கஸ்மீருக்கு இது பொருத்தமற்றது.

இனச்சுத்திகரிப்பு என்பது கஸ்மீர் முஸ்லீம்களின் கொள்கையாக இருக்கவில்லை.

இந்த அடிப்படையில், கஸ்மீர் பண்டிற்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு அழைத்து அவர்களது வாழ்வை மீளப் புனரமைக்கும் நோக்குடன் அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாடு (All Parties Hurriyat Conference) கூட்டப்படுகின்றது.

கஸ்மீரில் இடம்பெற்ற மிகப் பெரும் இடப்பெயர்வுகளின் போது அங்கு வாழும் எல்லா சமூகங்களும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

கஸ்மீர் பண்டிற்கள் மற்றும் கஸ்மீர் முஸ்லீம் சமூகத்தவர்கள் மிகவும் வசதிப்பாடுகள் குறைந்த வீடுகளில் மன அழுத்தங்களுடன் தமது வாழ்வைக் கழிக்கிறார்கள்.

இவ்விரு சமூகத்தவர்களின் உடல், உளப் பாதிப்புக்கள் ஒன்றாக இருக்கின்ற போதிலும், கஸ்மீர் முஸ்லீம்களின் உயர் வகுப்பு சமூகத்தவர்கள் மட்டும் சொகுசாக வாழ்கிறார்கள்.

இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக பத்திரிகைத்துறை உள்ளது. 1990 களுக்கு முன்னர் இந்திய தேசிய பத்திரிகைகள் கஸ்மீர் இந்துக்கள் தொடர்பான செய்திகளையே அதிகம் முதன்மைப்படுத்தினர்.

ஆனால் தற்போது முஸ்லீம்கள் இங்கே அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர்.

இதேபோன்றே, உள்ளுர் நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை போன்றவற்றிலும் முஸ்லீம்களே அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கஸ்மீர் பண்டிற்களின் தொகை குறைவாக இருந்தபோதிலும், ஒப்பீட்டளவில் சிறிலங்காவில் வாழும் தமிழர்களை விட தமது சொந்த இடத்தில் இவர்கள் அதிக பயன்களைப் பெறுகின்றனர்.

அரச தொலைக்காட்சி ஊடகவியலாளரே போர்க்குற்ற காணொலிகளை இரகசியமாக விற்றாராம்

சிறிலங்கா அரசாங்கத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூலமே சனல்-4 தொலைக்காட்சிக்கு போர்க்குற்றக் காணொலிகள் கிடைத்துள்ளன. ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவலில் இருந்து இது உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2009 மே 17ம் நாள், போர் முடிவுக்கு வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, விடுதலைப் புலிகளால் மனிதக்கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டது குறித்த காணொலியை ரூபவாகினி மற்றும் ஐரிஎன், சுவர்ணவாகினி ஆகியவற்றில் ஒளிபரப்புமாறு உத்தரவிட்டதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.

உள்ளூர் அலைவரிசைகளில் ஒளிபரப்பான இந்த காட்சிகள் அடங்கிய காணொலியில் நிச்சயமாக அந்த தொலைக்காட்சிகளின் சின்னங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் ஜுலை 27ம் நாள் சனல் -4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொலியில் உள்ளூர் தொலைக்காட்சிகளின் சின்னங்கள் இருக்கவில்லை.
அதில் சனல்-4 தொலைக்காட்சியின் சின்னம் மட்டுமே இருந்தது.

இதிலிருந்து உள்ளூர் தொலைக்காட்சிகளுக்காக ஒளிப்பதிவு செய்யப்பட்ட காணொலிகள் பிரதி எடுக்கப்பட்டு சனல்-4 தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தொலைக்காட்சி குழுவினரே போர்க்களக் காட்சிகளைப் படம்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தன் மீதும் உயிரை பணயம் வைத்து போர்க்களக் காட்சிகளை பதிவு செய்த ருபவாகினி ஊடகவியலாளரான சமன்குமார  ராமவிக்கிரம மீதும் சிலர் சேறு பூச முனைவதாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்க தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகளின் மூலப்பிரதி சனல்- 4 தொலைக்காட்சிக்கு எவ்வாறு கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்- அந்தக் காட்சிகளைப் படம்பிடித்த அரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ராமவிக்கிரமவே அவற்றை வெளிநாட்டு தொலைகாட்சிகளுக்கு விற்றிருப்பது உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சமன்குமார ராமவிக்கிரம போர்முனையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது புலிகளின் பல மடிக்கணினிகளையும் இலத்திரனியல பொருட்களையும் தனது வாகனத்தில் திருடிக் கொண்டு சென்றபோது மதவாச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை அரசாங்க தகவல் திணைக்களப் பணிபாளர் லக்ஸ்மன் ஹுலுகல்லவே தலையிட்டு விடுவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குகநாதன் மீதான தாக்குதல்- கொழும்பில் எதிர்ப்புப் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உதயன் செய்திஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டதற்கு எதிராக கொழும்பில் இன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று காலை தொடக்கம் பிற்பகல் வரை நடத்தப்பட்ட போராட்டத்தில் பல்வேறு ஊடக அமைப்புகளையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.

சிறிலங்கா உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கம்,சிறிலங்கா முஸ்லிம் ஊடக அமைப்பு, ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம்,ஜனநாயகத்துக்கான ஊடக அமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜெயசேகர, மங்கள சமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, மனோ கணேசன், அனோமா பொன்சேகா ஆகியோரும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா சிவ்ராஜ் யாழ்ப்பாணம் வருகிறார்

இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சிவ்ராஜ் அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர் செப்ரெம்பர் 17ம் ,18ம் நாட்களில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லியில் நேற்று சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்சவை சந்தித்த பின்னர் சுஸ்மா சிவ்ராஜ் இந்தத் தகவலை ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளார்.

தனது சிறிலங்காவுக்கான பயணத்தை யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் சுஸ்மா சிவ்ராஜ் கூறியுள்ளார்.