This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, August 22, 2011

தலைவர் வீடு சிங்கள படைகளினால் உடைப்பு எம்.கே.சிவாஜிலிங்கம் செவ்வி .(VIdeo in)

2 ஆம் இணைப்பு .வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு  வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை கனராக வாகனகங்களை கொண்டு இடிக்கும் பணிகள் தற்போது (இரவு நேரத்தில்) இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த வீட்டை முற்றாக இடித்துவிடும் வகையில் பாரிய இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டை மட்டும்தான் இவர்களால்அகற்ற முடிமே தவிர மண்ணை அகற்ற இவர்களால் இடிக்கமுடியது எம். கே. சிவாஜிலிங்கம் செவ்வி கிழே.

இது தொடர்பான முன்னைய செய்தி

இராணுவத்தளபதியின் மனைவியின் அராஜகம்: படையினர் குளப்பம்

சிறிலங்கா இராணுவத்தினருக்குக் கட்டளை இடுபவர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவா? அல்லது அவரது மனைவியா? என படை தரப்பினர் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமக்குக் கட்டளை இடுபவராகவும் தமது நிர்வாக நடவடிக்கைகளைக் கவனிப்பவராகவும் இராணுவத் தளபதியின் மனைவியான மஞ்சுலிகா அருண விஜய

சூரியவே தற்போது செயற்படுகிறார் எனவும் அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவியாகச் செயற்படும் அவர், தற்போது இராணுவ நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். தண்டனை பெற்ற தனக்குத் தேவையானோரை மன்னிக்கும் படியும் தனக்குப் பிடிக்காதவர்களை தண்டிக்குமாறும் அவர் உத்தரவிடுகிறார்.

உயர்மட்ட படை அதிகாரிகளை தம்ச (நீ) பளயங் (போடா) மே வரேன் (இங்கே வாடா) என அதிகார மமதையில் தரக்குறைவாகப் பேசுகிறார் எனவும் படைதரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தான் ஏதாவது படை முகாமுக்குச் சென்றால் தனக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவு வழங்கப்பட வேண்டுமெனக் கேட்கிறார். அத்துடன சேவா வனிதா பிரிவினால் நடத்தப்படும் பாலர் வகுப்புகளில் கல்வி பயிலும் இராணுவச் சிப்பாய்களின் பிள்ளைகளிடமிருந்து ஒரு தவணைக்கு என கட்டணமாகத் தலா 600 ரூபா அறவிடுகிறார் எனவும் திருமதி ஜயசூரிய மீது படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச செற்பாட்டுத் தகவல்கள் இலங்கையிடமாம்

பிரித்தானியாவில் இயங்கும் நிறுவனம் ஒன்றிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதே நியாயாதிக்க சபையில் முறையீடு ஒன்றைச் செய்யும் வகையிலேயே இந்தத் தவகல்களைப் பெற்றுக் கொண்டிருக்கலாமென் ஏசியன் ரியூ செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச ரீதியிலான குற்றச் செயல்கள் குறித்தே இந்த முறைப்பாட்டினை இலங்கை செய்யலாம் என எதிர்பார்க்கிறது.

இது இவாறிருக்க, நிதிச்சேகரிப்பு ஆயுதக்கொள்வனவு உட்பட்ட தமது குற்றச்செயல்களை பெரும்பாலும் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஜேர்;மனி, டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி,ஸ்பெய்ன்,  அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுலைப் புலிகள் இயக்கத்ததின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதியான அரசியல் தீர்வே நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் : மன்னார் ஆயர்

இலங்கையில் போரினால் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை ஆட்சியாளர்கள் உணர்ந்து, நீதியான அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்க முன்வந்தாலே நாட்டில் நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தையும் ஐக்கியத்தையும் எதிர்பார்க்க முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அருட் தந்தை ஜிம் பிரவுண் காணாமல் போய் 5 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், அவரது நினைவாக மன்னாரில் சனிக்கிழமை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாக ஆயர் அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்துக்குப் பூசைக்காக சென்றிருந்த போது, கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அருட் தந்தை ஜிம் பிரவுணும் சக ஊழியரும் காணாமல் போனார்கள்.

அவரது நிலைமையைக் கண்டறிவதற்காக யாழ் ஆயர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எவ்வித பலனும் கிட்டவில்லை. அவர் காணாமல் போன சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிவதில் அதிகாரிகளிடத்தில் தொடர்ச்சியாக அசமந்தப் போக்கே காணப்பட்டு வந்ததாகவும் மன்னார் ஆயர் தெரிவித்தார்.

ஆண்டகை அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் இந்தப் பிரச்சினையை அணுகி,மக்கள் சுதந்திரமாக நடமாடும் சூழலை உறுதிப்படுத்த நாட்டின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த போர்க் காலத்தில், காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பிலும் இதுதான் நிலைமை.

ஐநா குழுவோ அல்லது வேறு எந்த தரப்போ யுத்த காலத்து சம்பவங்கள் பற்றி சுட்டிக்காட்டும் விடயங்களில் என்ன உண்மை இருக்கிறது என்பதை கண்டறிவதற்கு அதிகாரிகள் முயற்சிக்காமல் அவற்றை பொதுவாக நிராகரித்துவிடும் போக்கு கூடாது.

முன்னைய ஆணைக்குழுக்களால் எவ்வித பிரயோசனமும் கிடைத்திராத நிலையில், தற்போதைய நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகளும் அவ்விதம் பலனளிக்காது போய்விடக்கூடாது.

கற்றறிந்த பாடங்கள் பற்றி ஆராயும் ஆணைக்குழு மூலம் நன்மை கிட்டும் என்ற நம்பிக்கையுடனேயே அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம். நாட்டை ஆள்பவர்களிடத்தில் மன ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு அவர்களின் கவனம் மக்கள் பக்கம் திரும்பினால் மட்டுமே உண்மையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியும்” என்றார்