Monday, August 22, 2011

விடுதலைப் புலிகளின் சர்வதேச செற்பாட்டுத் தகவல்கள் இலங்கையிடமாம்

பிரித்தானியாவில் இயங்கும் நிறுவனம் ஒன்றிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதே நியாயாதிக்க சபையில் முறையீடு ஒன்றைச் செய்யும் வகையிலேயே இந்தத் தவகல்களைப் பெற்றுக் கொண்டிருக்கலாமென் ஏசியன் ரியூ செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச ரீதியிலான குற்றச் செயல்கள் குறித்தே இந்த முறைப்பாட்டினை இலங்கை செய்யலாம் என எதிர்பார்க்கிறது.

இது இவாறிருக்க, நிதிச்சேகரிப்பு ஆயுதக்கொள்வனவு உட்பட்ட தமது குற்றச்செயல்களை பெரும்பாலும் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஜேர்;மனி, டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி,ஸ்பெய்ன்,  அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுலைப் புலிகள் இயக்கத்ததின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment