This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Saturday, August 27, 2011

சல்மான்கானுக்கு முக நரம்பில் பாதிப்பு- சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்

மும்பை: இந்தி நடிகர் சல்மான் தனது தாடை நரம்பு சிகிச்சைக்காக, அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு கடந்த 2007ம் ஆண்டு முதல் தாடையில் கடும் வலி இருந்து வருகிறது. ஆனால், அதை வெளியிடாமல் இருந்த சல்மான் கான் சமீபத்தில் அதுகுறித்து ஒரு வெளியில் சொன்னார்.

இந் நிலையில் இந்தப் பிரச்சனைக்கு சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்லவும் முடிவு செய்துள்ளார். தாடையில் ஏற்படும் கடும் வலியினால் உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டதாகவும், சமீபகாலமாக அந்த வலி அதிகரித்து விட்டதால், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக மும்பையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூளையில் இருந்து முகத்துக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக வாயை திறந்தாலே தாடையில் தாங்க முடியாத வலி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

யுவன் யுவதி - சினிமா விமர்சனம்

ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்தக் கோரி சோளிங்கர் ரஜினி ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

லோக்பால் மசோதா கோரி கடந்த ஏப்ரல் மாதம் முதல்முறையாக அன்னா ஹஸாரே உண்ணாவிரதமிருந்தபோது தென்னகத்திலிருந்து அவருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்.

அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் போய், சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பி வந்த ரஜினி, இந்த முறை வலுவான லோக்பால் கோரி ஹஸாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக கடிதம் எழுதினார். அன்னா ஹஸாரே மூலம் ரத்தமற்ற புரட்சி நாட்டில் உருவாகியுள்ளதாகவும், ஊழலை ஒழித்தே தீர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினியின் தீவிர ரசிகர்களும் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.

முதல் உண்ணாவிரதம் சோளிங்கர் நகரில் ஆரம்பித்துள்ளது. வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

ஏராளமான ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்து இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். ரஜினி ரசிகர்களுக்கு ஆதரவாக மற்ற நடிகர்களின் ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் பொது மக்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து சேளிங்கர் ரவி கூறுகையில், "எங்கள் தலைவர் ரஜினிகாந்த் தனது படங்களில் தொடர்ந்து லஞ்சம், ஊழல் ஆகியவை எதிர்த்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'சிவாஜி' திரைப்படத்தில் லஞ்சம் லாவண்யத்தால் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி கூறினார். சொல்வது மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் எப்போதும் நேர்மையை கடைப்பிடித்து வருபவர் அவர்.

ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் என்பதே அவரின் நீண்ட நாள் கனவு. அந்த கனவை நிறைவேற்றக்கூடிய ஜன் லோக்பால் சட்டமசோதவை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் சமூக சேவகர் அன்னா ஹசாரே அவர்களுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்த 24 மணி நேரத்தில் நாங்கள் உண்ணா விரதம் மேற்கொண்டுள்ளோம்.

எங்களுடன் 200 பேர் ரசிகர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்," என்றார்.

நடிகை மினிஷா லம்பாவிற்கு 2 முறை கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்

பிரபல இந்தி நடிகை மினிஷா லம்பாவிற்கு மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தி ந்டிகை மினிஷா லம்பா யான், கிட்னாப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது கவர்ச்சியான நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம். மினிஷா, நியூயார்க்கில் நடக்கும் விழா கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில் மினிஷாவின் மொபைல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், நியுயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது. மீறி கலந்து கொண்டால், கொலை செய்துவிடுவேன், என மிரட்டியுள்ளார். முதலில் வெளிநாட்டில் இருந்தும், பின்னர் இந்தியா நம்பர் ஒன்றில் இருந்தும் அழைப்பு வந்ததாக நடிகை தெரிவித்துள்ளார்.