Saturday, August 27, 2011

யுவன் யுவதி - சினிமா விமர்சனம்

ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்தக் கோரி சோளிங்கர் ரஜினி ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

லோக்பால் மசோதா கோரி கடந்த ஏப்ரல் மாதம் முதல்முறையாக அன்னா ஹஸாரே உண்ணாவிரதமிருந்தபோது தென்னகத்திலிருந்து அவருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்.

அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் போய், சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பி வந்த ரஜினி, இந்த முறை வலுவான லோக்பால் கோரி ஹஸாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக கடிதம் எழுதினார். அன்னா ஹஸாரே மூலம் ரத்தமற்ற புரட்சி நாட்டில் உருவாகியுள்ளதாகவும், ஊழலை ஒழித்தே தீர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினியின் தீவிர ரசிகர்களும் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.

முதல் உண்ணாவிரதம் சோளிங்கர் நகரில் ஆரம்பித்துள்ளது. வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

ஏராளமான ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்து இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். ரஜினி ரசிகர்களுக்கு ஆதரவாக மற்ற நடிகர்களின் ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் பொது மக்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து சேளிங்கர் ரவி கூறுகையில், "எங்கள் தலைவர் ரஜினிகாந்த் தனது படங்களில் தொடர்ந்து லஞ்சம், ஊழல் ஆகியவை எதிர்த்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'சிவாஜி' திரைப்படத்தில் லஞ்சம் லாவண்யத்தால் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி கூறினார். சொல்வது மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் எப்போதும் நேர்மையை கடைப்பிடித்து வருபவர் அவர்.

ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் என்பதே அவரின் நீண்ட நாள் கனவு. அந்த கனவை நிறைவேற்றக்கூடிய ஜன் லோக்பால் சட்டமசோதவை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் சமூக சேவகர் அன்னா ஹசாரே அவர்களுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்த 24 மணி நேரத்தில் நாங்கள் உண்ணா விரதம் மேற்கொண்டுள்ளோம்.

எங்களுடன் 200 பேர் ரசிகர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்," என்றார்.

0 comments:

Post a Comment