This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Saturday, July 2, 2011

விவாகரத்து வழக்கை இன்றே விசாரியுங்கள்: பிரபு தேவா திடீர் மனு

சென்னை: தள்ளிப் போடப்பட்ட தனது விவாகரத்து வழக்கை இன்றே விசாரிக்குமாறு நடிகர் பிரபு தேவா திடீர் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் பிரபுதேவாவும் அவரது மனைவி ரம்லத்தும் சில மாதங்களுக்கு முன்பு பரஸ்பர முறையில் விவாகரத்து செய்து கொள்வதாக குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பிரபுதேவா தனது இரு மகன்கள் மற்றும் ரம்லத்துக்கு கிழக்கு கடற்கரையில் உள்ள வீடு, அண்ணாநகரில் உள்ள வீடு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இரண்டு பிளாட்டுகள் போன்றவற்றை எழுதி கொடுப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தார்.

இதையடுத்து ரம்லத் விவாகரத்துக்கு சம்மதித்தார். கடந்த வியாழக்கிழமை இவ்வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரபுதேவாவும், ரம்லத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்த நிலையில் நீதிமன்றத்துக்கு இன்று சனிக்கிழமை காலை திடீரென வந்தார் பிரபுதேவா. காருக்குள்ளேயே தன்னை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அவர், நீதிபதிகள் வந்ததும் உள்ளே நுழைந்து ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

தனு வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என்று கோரி நீதிபதி பாண்டியன் முன்பு மனுதாக்கல் செய்தார். பிரபுதேவா கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது இன்று தெரிந்துவிடும்.Topics: prabhu deva, divorce, ramlath, பிரபு தேவா, விவாகரத்து வழக்கு, விசாரணை

நடிகை ராதா தோட்ட காவலாளிக்கு அரிவாள் வெட்டு-2 பேர் கைது

நெல்லை: ஏர்வாடி அருக நடிகை ராதாவுக்குச் சொந்தமான தோட்டத்தின் காவலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏர்வாடி-திருங்குடிக்கு ரோட்டில் நடிகை ராதாவுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு திருவனந்தபுரம் பாலராமபுரத்தை சேர்ந்த ரவி என்பவர் காவலாளியாக உள்ளார். நேற்று இங்கு வள்ளியூர் கோட்டையடி தெருவைச சேர்ந்த ராஜேந்திரன், ஏர்வாடி காந்திநகர் வேலு, மற்றும் சரவணன், ஜெயகுமார், மகேஷ், வசந்த், பாபு ஆகியோர் இளநீர் வாங்குவதற்காக வந்தனர்.

பின்னர் அவர்கள் இளநீர் வாங்கி வி்ட்டு பணம் கொடுக்காமல் சென்றனர். இதனை ரவி கண்டித்தார். இதையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேந்திரன் உள்ளிட்ட 7 பேரும் அவரை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ரவி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ், தனி்ப்படை சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ராஜேந்திரன், வேலு ஆகியோரை கைது செய்தனர். மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.Topics: radha, watchma, ராதா, தோட்டம், அரிவாள் வெட்டு

அமெரிக்கா போரில் கொன்றது 2.25 லட்சம் மக்கள்

July 2, 2011 | no commentsசெப்டம்பர் 11,2001 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா தொடுத்த போர்களால் இதுவரை 2,25,000 உயிர்ப் பலி ஏற்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஈராக், ஆப்கானிஸ்தானில் தொடுத்த போர்கள் மற்றும் பாகிஸ்தானிலும் ஏமனிலும் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது பிரவுன் பல்கலைக்கழகம்.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களில், சுமார் 2,25,000 பேர் உயிரிழந்துள்ளனர்; 3,65,000 பேர் காயமடைந்துள்ளதாக இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் அமெரிக்கர்கள் சுமார் 6,000 பேர் உள்பட 31,741 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், ஈராக்கியர்கள் 9,900 பேர், ஆப்கானியர்கள் 8,800 பேர், பாகிஸ்தானியர்கள் 2,300 பேர் மற்றும் 2,300 அமெரிக்க தனியார் பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர்.

இந்தத் தாக்குதல்களில் இதுவரை பலியான சிவிலியன்களின் எண்ணிக்கை 1,72,000. இதில், 1,25,000 ஈராக்கியர்களும், 35,000 பாகிஸ்தானியர்களும், 12,000 ஆப்கானியர்களும் பலியாகியுள்ளனர்.

மேலும், 168 பத்திரிகையாளர்கள் மற்றும் 266 தன்னார்வ தொண்டு ஊழியர்களும் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கப் போர்களால் இதுவரை 78 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, அமெரிக்காவால் தொடுக்கப்பட்ட போர்களுக்கு இதுவரை 4.4 டிரில்லியன் டாலர்கள் அளவில் செலவிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இவை அனைத்தும் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள மதிப்பீடுகளைக் காட்டிலும் மிக அதிகம் என்பது கவனத்துக்குரியது.

கவர்ச்சி நடிகை மீட்பு

July 2, 2011 | no comments

படப்பிடிப்பு என்ற பெயரில் விசா மோசடி கும்பலுடன் போய் மாட்டிக் கொண்ட கவர்ச்சி நடிகை லக்ஷா பெப்சி சங்கத்தின் துணையுடன் மீட்கப்பட்டார். பிரபல கவர்ச்சி நடிகை லக்ஷா. இவர் முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதாவின் மகள். லாலி, என்ற படத்தில் லக்ஷா நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புக்காக தென் கொரியாவுக்கு லக்ஷாவை அழைத்து சென்றனர்.

அவருடன் சில நடன கலைஞர்களும் , துணை நடிகர்கள் என்ற பெயரில் மேலும் 29 பேரும் ஏறிக்கொண்டனர். தயாரிப்பாளர் செல்லவில்லை. தென் கொரியாவில் லக்ஷா பங்கேற்ற நடன காட்சி 4 நாட்கள் படமாக்கப்பட்டது. அப்போது டெல்லியில் இருந்து சென்ற 29 பேரும் திடீரென மாயமானார்கள்.

லக்ஷாவும் சென்னையில் இருந்து சென்ற நடனக் குழுவினரும் நாடு திரும்ப தென் கொரியா விமான நிலையத்துக்கு வந்தபோது அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். டெல்லியில் இருந்து வந்த 29 பேரும் ஜாயிண்ட் விசாவில் வந்திருப்பதால் அவர்களும் வந்தால்தான் நாடு திரும்ப அனுமதிப்போம் என்றனர்.

பெப்சி தலையீடு

லக்ஷா உள்ளிட்ட படக்குழுவினர் அங்குள்ள ஓட்டலில் சிறை வைக்கப்பட்டனர். லக்ஷா தாய் பபீதா இதுகுறித்து பெப்சி யூனியனில் புகார் செய்தார். பெப்சி நிர்வாகிகள் தலையிட்டனர். அவர்கள் முயற்சியால் லக்ஷா விடுவிக்கப்பட்டார்.

நேற்று அவர் டெல்லி வந்து சேர்ந்தார். இன்று காலை அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் சென்னை வந்து சேர்ந்தார். லக்ஷா மீட்கப்பட்டது பபிதா கூறுகையில், “சிறு தயாரிப்பாளர்கள்தான் இந்த மாதிரி வேலையைச் செய்கின்றனர்.

சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத 29 பேரை டெல்லியில் இருந்து அழைத்து போனதால்தான் தென் கொரியாவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.  தயாரிப்பாளர்கள் தென் கொரியாவுக்கு போகவில்லை. இதில் மோசடி நடந்துள்ளது. என் மகளை மீட்டுத் தந்த பெப்சிக்கு நன்றி,” என்றார்.

விம்பிள்டன் வெளியேறிய சானியா , பெயஸ், அரையிறுதியில் மகேஷ்

July 2, 2011 | no comments

விம்பிள்டனில் சானியா மிர்ஸாவின் கனவு தகர்ந்து விட்டது. ஒற்றையரில் கோட்டை விட்டாலும், கலப்பு இரட்டையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் வேகமாக முன்னேறி வந்த அவர் இரண்டு போட்டிகளிலும் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளார்.

ஒற்றையர் போட்டியில் முதல்சுற்றோடு முடிந்தது சானியாவின் கதை. இதையடுத்து இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் அவர் தீவிரமாக ஆட ஆரம்பித்தார். இரட்டையர் பிரிவில் அவர் அரை இறுதி வரை முன்னேறி அனைவரையும் அசத்தினார். ஆனால் சானியா -வெஸ்னினா ஜோடி அரை இறுதிப் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவி வெளியேறியது.

இந்த நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா – ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் காலிறுதிப் போட்டியில், சானியா ஜோடி தோல்வியைத் தழுவி கனவைத் தகர்த்தது. இதனால் விம்பிள்டனில் சானியாவின் வேட்டை நின்று விட்டது. அதேசமயம், இந்தியாவின் மகேஷ் பூபதி – வெஸ்னினா ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவில் அரை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ஆறுதல் தேடித் தந்துள்ளது.

அதேசமயம், லியாண்டர், காரா பிளாக் ஜோடி, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் டேணியல் நெஸ்டர்-யூங் ஜான் சான் ஜோடியிடம் கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டியில் வீழ்ந்தது.

பா.ம.க நிழல் பட்ஜெட் தாக்கல்

July 2, 2011 | no commentsபாமக-வின் ‘மாதிரி மாநில பட்ஜெட்’டை வெளியிட்ட அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் இடம்பெறுவது குறித்து கட்சியின் பொதுக் குழுவில் கூடி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

சென்னையில் இன்று 2011-12 ஆண்டுக்கான பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடு நிருபர்களிடம் ராமதாஸ் கூறியது:

“ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாக செயல் அறிக்கை, பொருளாதார ஆய்வறிக்கை, முந்தைய நிதிநிலை அறிக்கை பற்றிய விளக்க அறிக்கை ஆகியவற்றை மத்திய அரசு வெளியிடுவது போல மாநில அரசும் வெளியிட வேண்டும்.

எங்கள் கட்சியின் மதிப்பீட்டின்படி நடப்பு ஆண்டின் மொத்த வருமானம் ரூ.81,635. செலவு ரூ.81,125 கோடி. ரூ.510 கோடி மீதம் வரும். சென்ற ஆண்டின் பற்றாக்குறைக்கு சம்பள உயர்வுதான் காரணம்.

நிர்வாக வசதி கருதி விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து குழந்தைகளுக்கு 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி விட்டு, இந்த ஆண்டே 1 முதல் 12-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க மாவட்டந்தோறும் குழு அமைக்கவேண்டும். தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்துவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.

மின்தேவையை சமாளிக்க சூரிய ஒளி மின் உற்பத்தியில் மக்களை ஈடுபட செய்ய வேண்டும். காற்றாலை, சர்க்கரை ஆலை மற்றும் கழிவுப் பொருட்களில் இருந்து மின் உற்பத்தி செய்யும் முறைக்கு ஊக்கம் அளிக்கவேண்டும்.

திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும். தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளைஞர்கள் பாதை மாறி செல்வதற்கு குடிப்பழக்கமும் சினிமாவும்தான் காரணம். குறைந்தது 5 ஆண்டுகள் இந்த இரண்டையும் தடை செய்து விட்டால் தான் இளைஞர்களை திருத்த முடியும்.

முதல் கட்டமாக மது விற்பனையை பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் நடத்தவேண்டும். சனி, ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களில் மதுக்கடைகளை மூடவேண்டும்.

சென்னை மற்றும் நகர பகுதிகளில் பொது இடங்களிலும், கல்வி நிறுவன பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த நிழல் நிதிநிலை அறிக்கையை தமிழக முதல்வரிடம் கொடுப்பதற்கான வாய்ப்பில்லை. அவரது வீட்டு வாசலிலாவது கொடுத்து விடுவோம்.

இலங்கை தமிழர் பிரச்னையில் அந்த நாட்டுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எல்லாம் இதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்.

கூட்டணி நீடிக்கிறதா?

திமுக கூட்டணியில் பாமக தொடர்கிறதா? என்று கேட்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் நான் இதற்கு உடனடியாக பதில் சொல்லிவிட முடியாது. கட்சியின் செயற்குழுவும், பொதுக்குழுவும் கூடிதான் முடிவு செய்யும். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நிச்சயம் முடிவு செய்து விடுவோம்.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பற்றி கேட்கிறீர்கள். சட்டம் அதன் கடமையை செய்யும்.  லோக்பால் சட்ட மசோதாவில் பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் உட்படுத்த வேண்டும்,” என்றார் ராமதாஸ்.

சிறுமியிடன் பாலியல் தொல்லை ஓட்டுனர்கள் அட்டூழியம்

July 2, 2011 | no commentsபஸ்சில் பயணித்த 16 வயது சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக கூறி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர்கள் இருவர் உடுப்பியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்பத்தூர்-கொல்லூர் இடையிலான பேருந்து புதன்கிழமையன்று கோவையிலிருந்து கிளம்பியது. அந்தப் பேருந்தில், 16 வயது சிறுமி தனது தம்பி சிவா என்பவருடன் சத்தியமங்கலத்தில் ஏறியுள்ளார். இருவரும் கர்கலா அருகே வசித்து வரும் தங்களது பெற்றோரைப் பார்ப்பதற்காக வந்துள்ளனர். அவர்கள் பஸ்சில் பயணித்த போது வேறு யாரும் பஸ்சில் இல்லை என்று தெரிகிறது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு பஸ் டிரைவர் சிவக்குமாரும், இன்னொரு டிரைவரான ராமு என்பவரும், சிவாவை வேறு ஒரு இடத்தில் அமருமாறு கூறி விட்டு சிறுமியிடம் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

இரு டிரைவர்களும் மாறி மாறி செய்த செக்ஸ் சில்மிஷங்களால் கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியும், அவரது தம்பியும் பாடுபித்ரி என்றஇடத்தில் இறங்கி விட்டனர். இரு டிரைவர்களின் செல்போன் எண்களையும் எப்படியோ தெரிந்து கொண்ட சிறுமி, பஸ்சின் எண்ணையும் குறித்து வைத்துக் கொண்டார்.

பின்னர் உடுப்பி விரைந்த இருவரும், அங்கிருந்தபடி தங்களது பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார். இந்த நிலையில் உடுப்பியிலிருந்து கொல்லூர் சென்ற பஸ் மீண்டும் உடுப்பிக்கு வந்து சேர்ந்தபோது, அங்கு வந்து காத்திருந்த சிறுமியின் உறவினர்களும், நண்பர்களும், பொதுமக்களும் சேர்ந்து பஸ்சைப் பிடித்து உள்ளே இருந்த இரு டிரைவர்களையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்களை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Mysskin's takes up superhero film

Fresh from the success of Yuddham Sei, Mysskin is all set to start his next project, which is titled Mugamoodi. After directing some serious films, the filmmaker has geared up to direct a superhero film, which is produced by UTV Motion Pictures.

The director has roped in Jeeva and Narain to play the lead roles in the film but the makers of the film are yet to finalize the actress. The movie is an action-oriented movie, which is targeted at mass as well as family audience.

Giving further details about the film, production house said, "This will be the first ever Tamil movie to be made focusing on extensive martial arts, and promises to be an action packed entertainer and a treat for kids and families alike".

The lead stars will undergo martial arts training before starting the film. Experts from the Shaolin Temple of Martial Arts in China will train Jeeva and Narain for the film.Topics: mysskin, jeeva, narain, mugamoodi