This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, July 28, 2011

கடவுளுக்கு நிகரானவர் ரஜினி-ஜூம் டிவி புகழாரம்

ஜூம் சூப்பர் நோவா 2010 டாப் 50 பட்டியலில் ரஜினி-கடவுளுக்கு நிகரானவர் என புகழாரம்!

பாலிவுட்டின் டாப் 50 பிரபலங்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது ஜூம் டிவி. இது டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் நடத்தும் பொழுதுபோக்கு சேனல்.

ஜூம் சூப்பர்நோவா பட்டியல் எனும் பெயரில் இந்த ஆண்டு முதல் 50 விவிஐபிகளைப் பட்டியலிட்டுள்ளது அந்த சேனல். இதில் டாப் 10 பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதில் மூன்றாவது இடத்தில் அவர் பெயரை வைத்துள்ளது ஜூம் டிவி. 'ரஜினியைப் பொருத்தவரை அவர் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர்' என்றும் குறிப்பிட்டுள்ளனர் ('Rajinikanth who is a demigod unto himself').

முதலிடத்தை சல்மானுக்கும் இரண்டாம் இடத்தை அமீர் கானுக்கும் வழங்கியுள்ளது இந்த பாலிவுட் சேனல். ஷாரூக் கான் 4வது இடத்திலும், ஏஆர் ரஹ்மான் 5வது இடத்திலும், அமிதாப் பச்சன் 6 வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில். இந்த டாப் 10 -பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் கத்ரீனா கைப். ஐஸ்வர்யா ராய்க்கு 14வது இடம் கிடைத்துள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து ரஜினியும் ரஹ்மானும் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளனர்.Topics: rajini, supernova top 50, zoom, ரஜினி, ஜூம் டிவி

சென்னையில் நடிப்புப் பயிற்சி நிறுவனம்-ராதிகாவுடன் தொடங்கினார் அனுபம் கெர்

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடத்தி வரும் ஆக்டர் ப்ரிபேர்ஸ் என்ற நடிப்பு பயிற்சி நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ராடன் டி.வியும் இணைந்து சென்னையில் நடிப்பு பயிற்சி கல்லூரியை துவங்கியுள்ளன.

இதற்கான ஒப்பந்தம் சென்னையில் புதன்கிழமை கையெழுத்தானது. அதன் பின் நிருபர்களை சந்தித்தார்கள் அனுபம் கெர், ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர்.

முப்பத்தியேழு வருடங்களுக்கு முன் இதே ஜுலையில்தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு முயற்சியை ஆரம்பித்தேன். இன்று அதே ஜுலையில் சென்னையில் நடிப்பு பயிற்சி இன்ஸ்ட்டியூட் துவங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அனுபர்கெர்.

அகமதாபாத், சண்டிகர் என்ற இரு இடங்களில் இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வரும் இவர், சென்னையிலும் கிளை துவங்க காரணமாக இருந்திருக்கிறது ராடர்ன் டிவி.

மூன்று மாத பயிற்சி வகுப்புக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கட்டணம். இதில் பத்து நாட்கள் அனுபம் கெரெ வந்து வகுப்பெடுப்பாராம். ராதிகாவும் வகுப்புகள் நடத்துவார். அது போகட்டும்... முக்கியமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார் ராதிகா.

ஏற்கெனவே கூத்துப் பட்டறை என்ற அமைப்பு வேறு இதே வேலையை செய்து கொண்டிருக்கிறதே என்று அனுபம் கெர் - ராதிகாவிடம் கேட்டனர் நிருபர்கள்.

அதற்கு ரொம்ப சிம்பிளாக சொன்னார்கள் பதிலை: இங்கே அனுபம் கெரும் ராதிகாவும் இருக்கிறார்கள். அங்கே இல்லை. அதான் வித்தியாசம் என்றனர்.

டிப்ளமா, சர்ட்டிபிகேட் மற்றும் குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் தனிப் பயிற்சி என மூன்று பிரிவுகளை இப்போதைக்கு வைத்துள்ளார்களாம்.Topics: radhika, anupam kher, raadan media, ராடான், அனுபம் கெர், ராதிகா

வரதட்சணை கொடுமை: சிரஞ்சீவி மருமகன் ஜெயிலில் அடைப்பு

ஹைதராபாத்: வரதட்சணைக் கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் சிரிஷ் பரத்வாஜ்.

நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறிது காலம் சந்தோஷமாக நீடித்த அவர்களது திருமண வாழ்க்கையில் வரதட்சணையால் பிரச்சினை ஏற்பட்டது.

கணவன் மற்றும் மாமியார் சர்வமங்களா ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி ஸ்ரீஜா தனது குழந்தையுடன் தந்தையான நடிகர் சிரஞ்சீவி வீட்டுக்கு வந்து விட்டார்.

மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் மாமியார் மீது போலீசில் ஸ்ரீஜா புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து அரசு ஊழியரான அவரது மாமியார் சர்வ மங்களா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் ஆனால் சிரிஷ் பரத்வாஜ் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவர் ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரை வரும் 8-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சஞ்சல்குடா என்ற ஜெயிலில் சிரிஷ் பரத்வாஜ் அடைக்கப்பட்டார்.Topics: வரதட்சணை, chiranjeevi, சிரஞ்சீவி மருமகன், chiranjeevi son in law, andhra pradesh, dowry case

அடுத்த 'ஜேம்ஸ்பாண்ட்' நாயகி ரஷ்யாவின் மார்கரிட்டா லெவிவா?

ரஷ்ய நடிகை மார்கரிட்டா லெவிவா தான் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகி என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல ரஷ்ய நடிகை மார்கரிட்டா லெவிவா(31). அவர் ஸ்பிரட், லிங்கன் லாயர் ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு கதாநாயகி தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் இப்போது லெவிவாவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனராம்.

அடுத்து வரவிருக்கும் 23-வது ஜேம்ஸ் பாண்ட் படத்தில் டேனியல் கிரெய்க்குக்கு ஜோடியாக லெவிவா நடிப்பார்.

பாண்ட் நாயகி என்றால் அழகாகவும், நம்பிக்கையுடனும் அதே சமயம் புதிரான தோற்றம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மார்கரிட்டாவுக்கு இந்த தகுதிகள் அனைத்தும் உள்ளன என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய பாண்ட் படத்தின் தயாரிப்பு பணிகள் வரும் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கிறது. எனவே அதற்குள் லெவிவாவை இறுதி செய்துவிடுவார்கள் என தெரிகிறது.Topics: james bond, margarita levieva, ஜேம்ஸ் பாண்ட், மார்கரிட்டா லெவிவா

Wednesday, July 27, 2011

'தேர்தலில் சொன்னதை செயலில் காட்டி விட்டார் ஜெ!' - கலைப்புலி சேகரன் ஐஸ்!

சென்னை: தரமான, யு சான்றிதழ் பெற்ற நேரடி தமிழ் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு கொடுத்ததன் மூலம், முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் சொன்னதை செயலில் காட்டி விட்டார் என்று திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் கூறியிருக்கிறார்.

சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் `கலைப்புலி' ஜி.சேகரன் விடுத்துள்ள அறிக்கை:

"எந்த ஒரு செயலும், தொழிலும் காட்டாற்று வெள்ளம் போல் கரையற்ற-முறையற்ற வழியில் சென்றால், அதன் விளைவுகள் சிறப்பாகவும் செம்மையாகவும் இருப்பதில்லை. கட்டுப்பாடு என்ற ஒரு கரைக்குள் தெளிந்த ஆறாக ஓடும்பொழுதுதான் தன்னை சார்ந்து உயிர்வாழும் ஜீவராசிகளுக்கும், இயற்கை நிகழ்வுகளுக்கும் நல் ஆதாரமாக, உயர்வாக, வளர்ச்சியாக அமையும்.

சரியான படத்துக்கு வரி விலக்கு

அதைப்போல் திரைப்பட தொழிலில் அனைவரும் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய வகையில் தமிழ் தலைப்புகளுடன், தமிழ் கலாசாரம் சார்ந்த 'யு' சான்றிதழ் பெற்ற தமிழ் நேரடி திரைப்படங்களுக்கு வரிவிலக்கும், மற்ற சான்றிதழ் பெற்ற படங்களுக்கு நிலுவையில் உள்ள வரியான மாநகராட்சி மற்றும் 'ஏ' கிரேட் நகராட்சி பகுதிகளுக்கு 15 சதவீதமும், மற்ற நகராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு 10 சதவீதமும் அறிவித்த தமிழக முதல்வருக்கு, இதுதொடர்பாக ஏற்கனவே கோரிக்கை விடுத்த சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் எல்லையில்லா நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

சொன்னதைச் செய்தார்

ஒட்டுமொத்தமாக அனைத்து திரைப்படங்களுக்கும் அபரிமிதமான வரி வரப்போகிறது என்ற செவி வழி செய்திகளை பொய்யாக்கி, என்றும் நன்மைக்கும், நல்லவைக்கும் பக்க துணையாக இருந்து திரைப்பட துறைக்கு நல்வழி காட்டுவேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது சொன்னதை செயலில் காட்டிய முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறிய தயாரிப்பாளர்கள், சிறிய வினியோகஸ்தர்கள், சிறிய திரையரங்க உரிமையாளர்கள் வாழ்வு நலம்பெற 'டிஜிடல் ஹோம்' தியேட்டருக்கு அனுமதி அளித்து, அவர்கள் வாழ்க்கையில் மேலும் ஒளிபெற செய்ய கேட்டுக்கொள்கிறோம்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.சேகரன் கூறியிருக்கிறார்.Topics: tamil cinema, வரிவிலக்கு, jayalalitha, kalaipuli sekaran, கலைப்புலி சேகரன், tax free

விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை... கேரவனை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்

சென்னை: நடிகர் விஜய்யின் நண்பன் படப்பிடிப்பில் ரசிகர்கள் திடீரென்று புகுந்த ரகளை செய்தனர். கேரவனை அடித்து நொறுக்கினர்.

இந்தியில் ஹிட்டான அமீர்கானின் 3 இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் தயராகிறது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கின்றனர். எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது.

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இன்றைய படப்பிடிப்பின்போது 200 பேர் திடீரென அந்தக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டனர். அவர்கள் விஜய் உள்ளிட்ட நடிகர்களை பார்க்க முண்டியடித்தனர்.

நிலைமையை உணர்ந்து விஜய், ஜீவா போன்றோர் ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து விட்டுச் சென்றார்கள்.

ஆனால் கூட்டத்தினர் திரும்பிச் செல்லவில்லை. அவர்கள் படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிகர்களின் கைகளை பிடித்து இழுக்க துவங்கினர். இதனால் படப்பிடிப்பை ஷங்கரால் நடத்த இயலவில்லை.

ரசிகர்களிடம் கலைந்து செல்லும்படி வேண்டினார். அவர்கள் போகவில்லை. அரங்குகளை சேதப்படுத்தி ரகளை செய்தனர். கேரவன் கண்ணாடிகளையும் உடைக்க ஆரம்பித்தனர். அவர்களின் இந்த நடவடிக்கையால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியானார்கள்.

உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை வெளியேற்றினர். இந்த சம்பவத்துக்கு பிறகு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.Topics: நண்பன், விஜய், படப்பிடிப்பு, ரசிகர்கள் வன்முறை, vijay fans, nanban shooting, vijay

Tuesday, July 26, 2011

விபச்சாரக் கும்பலாக மாறிய இலங்கை டிவி நடிகைகள்- 20 பேருக்கு வலைவீச்சு

சிங்கள டிவி நடிகைகள் பெருமளவில் விபச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். மிகப் பெரிய அளவில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் 20 நடிகைளைத் தேடி வருவதாக இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு குழுவாக இயங்கி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களில் நான்கு நடிகைகள் பிடிப்டுள்ளனர். இவர்கள் கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதிகளில்தான் இவர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்களாம்.

டிவி தொடர்கள், நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான பல நடிகைகள் இதுபோல விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவது இலங்கை அரசையும், காவல்துறையையும் அதிர வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது 20 முக்கிய நடிகைகளைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதை விட கேவலமான பல செயல்களும் இலங்கையில் தற்போது அதிகரித்து வருகிறதாம். அங்குள்ள கிளப்களில் பல வெளிநாட்டு பெண்களைக் கொண்டு விபச்சாரத்தை ஓஹோவென நடத்தி வருகிறார்களாம்.

பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமே இல்லாமல் பெருமளவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அனுராதபுரத்தில்தான் இது தலைவிரித்தாடி வருவதாகவும் அது கூறுகிறது.

இத்தனை காலமாக வருமானமே இல்லாமல் செத்துப் போய்க் கிடந்த இலங்கை சுற்றுலாத்துறைக்கு வருமானம் சேர்ப்பதற்காக அரசே மறைமுகமாக விபச்சாரத்தை ஆதரிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருப்பது நினைவு கூறத்தக்கது.Topics: prostitution, விபச்சாரம், டிவி நடிகைகள், srilanka, இலங்கை

Monday, July 25, 2011

ஜான் ஆபிரகாமிற்கு தோள் கொடுத்த தீபிகா

பிபாஷாவை பிரிந்த சோகத்தில் இருக்கும் ஜான் ஆபிரகாமிற்கு தனது சோகத்தை பகிர்ந்து கொள்ளும் தோழியாக கிடைத்துள்ளார் தீபிகா படுகோன்.

நீண்ட காலமாக ஒன்றாக இருந்த நடிகர் ஜான் ஆபிரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் அன்மையில் பிரிந்துவிட்டனர். தனது சோகத்தைப் பகிர்ந்துகொள்ள யாராவது கிடைக்க மாட்டார்களா என்று நினைத்த ஜான் ஆபிரகாமுக்கு நான் இருக்கிறேன் என்று நட்புக்கரம் நீட்டியுள்ளார் தீபிகா.

தீபிகாவும், ஜானும் தேசிபாய்ஸ் என்ற படத்தில் முதன்முதலாக ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்தது. அப்போது தான் இருவரும் நண்பர்களாகியுள்ளனர். தானும் பிபாஷாவும் பிரிந்தது பற்றி தீபிகாவிடம் கூறும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்கள்.

ஷூட்டிங் இல்லாத நேரத்தில் ஒன்றாக காபி குடிக்கப் போவது, வெளி இடங்களுக்குப் போவது என்று இருவரும் ஒன்றாக நேரத்தை கழித்துள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே சிரிப்பும், பேச்சுமாய் இருந்த இவர்களைப் பார்த்து அங்கிருந்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டனராம்.

நெருக்கமாக இருந்த ஒருவரைப் பிரியும்போது ஏற்படும் வேதனை என்னவென்று தீபிகாவுக்கும் தெரியும். அந்த உணர்வு தான் இவர்களை நண்பர்களாக்கியுள்ளது.

தீபிகாவும், ரன்பீர் கபூரும் காதலித்தனர். பின்பு ஆளுக்கொரு வழியைப் பார்த்து சென்றவிட்டனர். அந்த சோகத்தை தாண்டி வந்த தீபிகா ஜானுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தீபிகாவுக்கு முன்பு ஜான் ஆபிரகாமுக்கு 'ஆறுதல் கூறியவர்' சிரிப்பழகி ஜெனிலியா என்பது குறிப்பிடத்தக்கது.


Topics: deepika padukone, john abraham, ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன்

ரஜினி எனக்கு அப்பா மாதிரி: நடிகை மானு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு அப்பா மாதிரி என்று அவரை சிங்கப்பூரில் கவனித்துக் கொண்ட நடிகை மானு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை மானு கூறியதாவது, சிங்கப்பூர் சினிமா தயாரிப்பாளர் ஜெயகுமார் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். அவர் என்னை அழைத்து ரஜினி சிகிச்சைக்காக சிங்கப்பூர் வருவதாகவும், அவர் திரும்பிச் செல்லும் வரையில் உடனிருந்து நல்லபடியாக கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

நானும், சிங்கப்பூர் நடிகர் புரவலன், தமிழ்செல்வன் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரும் ரஜினியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அருகேயே அவருக்கு வீடு பார்த்துக்கொடுத்தேன். அங்கு ரஜினி அவரது மனைவி லதா, மகள் மற்றும் மருமகன் தங்கியிருந்தனர்.

அவர் மருத்துவரீதியாக 3 வாரங்களிலேயே குணமடைந்துவிட்டார். முன்புபோல் சகநிலைக்குத் திரும்ப அவர் சில பயிற்சிகளை மேற்கொண்டார்.

அவர் தினமும் கொஞ்ச தூரம் வாக்கிங் போவார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக இருக்க ஆட்களை நியமித்தேன். ஆனால் தனக்கு பாதுகாப்பாளர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார். இருப்பினும் அவருக்குத் தெரியாமலேயே ஆட்களை அனுப்பினேன். அதைக் கண்டிபிடித்து நிறுத்தச் சொல்லிவிட்டார்.

ஒரு நாள் இட்லி, வடை கேட்பார், மறு நாள் மசாலா தோசை கேட்பார். சில படங்களின் டிவிடிகளைப் போட்டு பார்த்து ரசித்தார். தனது ஆன்மீக அனுபவங்கள் மற்றும் யோகாவின் மகத்துவம் பற்றி அடிக்கடி பேசுவார்.

ஆகஸ்ட் 2-ம் தேதி வரையாவது இருங்களேன் என்று கேட்டோம். ஆனால் அவர் நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும், எனது நாட்டையும், ரசிகர்களையும் மிஸ் செய்கிறேன் என்று கூறினார்.

அவர் சென்னை புறப்படும் முன்பு எங்களை அழைத்து நன்றி தெரிவித்தார். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஒரு பெரிய நடிகரை கவனித்துக் கொள்கிறோம் என்றே இல்லை. அவர் எனக்கு அப்பா மாதிரி. அவர் குடும்பத்தினரும் என்னை அவர்கள் வீட்டுப் பெண் போல் தான் நடத்தினர்.

ரஜினி மீது ஏன் பல லட்சம் பேர் பாசமாக இருக்கின்றனர் என்பது எனக்கு அன்று தான் புரிந்தது. அவர் குடும்பத்தை நேசிக்கும் சிறந்த மனிதர் என்றார்.Topics: rajini, maanu, மானு, ரஜினி

தென் கொரியாவில் 50 திரையரங்குகளில் வெளியாகிறது ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன்.

ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது. வசூலில் இந்தப் படம் புதிய சாதனை படைத்தது. இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் எந்திரன்தான்.

இப்போது இந்தப் படத்தை, இதுவரை வெளியாகாத நாடுகளில் மறுவெளியீடு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது ஈராஸ் நிறுவனம். வெளிநாடுகளில் விநியோகிக்கும் உரிமையை ஈராஸ்தான் பெற்றுள்ளது.

முதல்கட்டமாக தென் கொரியாவில் மட்டும் 50 திரையரங்குகளில் எந்திரனை வெளியிடப் போவதாக ஈராஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் குமார் அகுஜா கூறுகையில், "இதுவரை நாங்கள் கால் பதிக்காத புதிய பகுதிகளில் இந்தியப் படங்களை வெளியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இந்தியப் படங்களே வெளியாகாத தைவானில் முதல் முறையாக ஷாரூக்கான் நடித்த 'ரா ஒன்' படத்தை வெளியிடுகிறோம்.

அடுத்து தென் கொரியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்தை 50 திரையரங்குகளில் வெளியிடுகிறோம். எந்திரனின் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகள் இந்த அரங்குகளில் வெளியாகும்," என்றார்.

தென் கொரிய மக்களுக்கு ரஜினி படம் புதிதல்ல. அங்கு ஏற்கெனவே ரஜினி நடித்த சந்திரமுகி மற்றும் சிவாஜி தி பாஸ் படங்கள் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றன.Topics: enthiran, ரஜினி, எந்திரன், தென் கொரியா, ஈராஸ், south korea, eros

ஈசிஆர் ரோட்டில் லாரி-கார் மோதல்: இயக்குனர் மகள் உள்பட 3 பேர் பலி

திருப்போரூர்: கிழக்குக் கடற்கரை சாலை சூளேரிக்காடு என்ற இடத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிரபல மலையாள இயக்குனர் ஜோசியின் மகள் உள்பட 3 பேர் பலியாகினர்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (24). பிரபல மலையாள இயக்குனர் ஜோசியின் மகள். அதே ஊரைச் சேர்ந்தவர் ராதிகா (24). திருச்சூரைச் சேர்ந்தவர் அர்ஜுன் (24). இவர்கள் 3 பேருமே சாப்ட்வேர் என்ஜினீயர்கள்.

சென்னை ஊரப்பாக்கத்தில் தங்கி மறைமலைநகர் அருகே இருக்கும் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.

நேற்று விடுமுறை என்பதால் மகாபலிபுரத்திற்கு சுற்றுலா செல்ல முடிவு எடுத்தனர். இதையடுத்து அர்ஜுனின் காரில் ஐஸ்வர்யா, ராதிகா, அவர்கள் உடன் வேலைப்பார்க்கும் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த யேசுதாஸ்(24), அஸ்வின்(27) ஆகிய 5 பேர் மகாபலிபுரத்திற்கு சென்றனர்.

நாளைக் கொண்டாட்டமாகக் கழித்துவிட்டு இரவு ஊரப்பாக்கம் திரும்பினர். காரை அர்ஜுன் ஓட்டினார். அவர்கள் கார் இரவு 11 மணியளவில் கிழக்குகடற்கரை சாலை சூளேரிக்காடு என்ற இடத்தில் செல்கையில் மணல் எடுக்க மகாபலிபுரத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி அவர்கள் கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் அர்ஜுன், ஐஸ்வர்யா, ராதிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த யேசுதாஸ், அஸ்வினை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

அந்த லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். இந்த விபத்து குறித்து குறித்து மகாபலிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Topics: accident, mahabalipuram, ecr, பலி, விபத்து

Sunday, July 24, 2011

நடிகர் ரவிச்சந்திரன் தொடர்ந்து கவலைக்கிடம்

நடிகர் ரவிச்சந்திரனின் உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நுரையீரல் மற்றும் கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 5 நாட்களாக கோமாவில் உள்ளார்.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.Topics: ரவிச்சந்திரன், ravichandran, கவலைக்கிடம், தீவிர சிகிச்சை

வி.சி.குகநாதன் ராஜினாமா: 'பெப்சி' தலைவராக எம்.ஏ.ராமதுரை தேர்வு

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன (பெப்சி) தலைவராக இருந்த விசி குகநாதன் ராஜினாமா செய்துவிட்டதால், அவருக்கு பதில் புதிய தலைவராக வி ஏ ராமதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெப்சி பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பெப்சி தலைவர் பொறுப்பில் இருந்த வி.சி.குகநாதன் உடல்நிலை சரியில்லாததால் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நேற்று (23-ந் தேதி) அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில், புதிய தலைவராக எம்.ஏ.ராமதுரை தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை பற்றி தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பிலிம் சேம்பரில் பேசுவதற்கு, பேச்சுவார்த்தை குழு தலைவராக இயக்குனர் அமீர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தகவலை பெப்சி பொதுச்செயலாளர் ஜி.சிவா தெரிவித்துள்ளார்.Topics: fefsi, குகநாதன், tamil cinema, vc guhanathan, va ramadurai, பெப்சி

மம்முட்டி வீட்டில் நாளை மீண்டும் ரெய்டு: அதிகாரிகள் முடிவு

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி வீட்டில் மீண்டும் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சோதனை நாளை நடக்கவிருக்கிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் கடந்த 22ம் தேதி காலையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த நட்சத்திரங்களின் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 80 அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்த சோதனைகளில் ரொக்கம், ஆவணங்கள், யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.

இதில் மம்முட்டியின் கொச்சி வீட்டில் இருந்து மட்டும் ரூ. 20 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனைகள் நடந்தபோது மம்முட்டி சென்னையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கொச்சி சென்ற அவரிடம் வருமான வரித்துறையினர் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

அவரிடம் ரூ. 20 லட்சம் ரொக்கம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இது தொடர்பாக உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படும் என்று மம்முட்டி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை மீண்டும் மம்முட்டி வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.Topics: mammootty, it raid, ஐடி ரெய்டு, மம்முட்டி, வருமான வரித்துறை, it officials

பிரபல பாடகி எமி ஒயின்ஹவுஸ் மர்ம சாவு: வீட்டில் பிணமாக கிடந்தார்

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான பாடகி எமி ஒயின்ஹவுஸ் (27) அவரது வீட்டில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அதிகளவில் போதை மருந்தை எடுத்துக் கொண்டதால் அவர் பலியாகியிருக்கலாம் என்று தெரிகிறது.

வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் சதுக்கத்தில் உள்ள தனது வீட்டில் இவர் நேற்று பிணமாகக் கிடந்தார்.

எமி ஒயின்ஹாசுக்கு போதை மருந்து மற்றும் மதுப் பழக்கம் இருந்தது. அதற்காக மறுவாழ்வு மையத்தில் தங்கி பலமுறை சிகிச்சை பெற்றுள்ளார்.

ஹவுஸ் பேக் டூ பிளாக், சோல் உள்ளிட்ட பாப் இசை ஆல்பங்கள் மூலம் புகழ் பெற்ற இவர் போதை பழக்கத்தால் சீரழிய ஆரம்பித்தார்.

இங்கிலாந்தின் கார்ன்வெல் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது, கடும் போதையில் பாடலையே மறந்துவிட்ட இவர், கூடியிருந்த ரசிகர்கள் மீது எச்சிலைத் துப்பிவிட்டு, இரும்பு மைக்கால் தன்னைத் தானே அடித்துக் கொண்டார். இன்னொரு நிகழ்ச்சியில் போதையில் தடுமாறி கீழே விழுந்தார்ய

இது போன்ற செயல்களால் ரசிகர்களின் ஆதரவை இழந்து வந்தார். இறுதியாக கடந்த மாதம் பெல்கிரேட் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பாடினார். ஆனால், அங்கும் போதை மருந்து உட்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்ததால் வாந்தி எடுத்தார், நிகழ்ச்சியில் முறையாகப் பாடவும் இல்லை.

இதைத் தொடர்ந்து அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று வீட்டில் பிணமாகக் கிடந்தார்.

10 வயதாக இருக்கும் போதே தனது நண்பர்களுடன் சேர்ந்து பாப் பாடல்கள் பாடி புகழ் பெற்ற இவர், பேக்டூ பிளாக் ஆல்பம் மூலம் உலகப் புகழ் பெற்றார். இந்த ஆல்பம் 5 கிரம்மி விருதுகளை வென்றது.

பிளேக் பீல்டர் என்பவர் உதவியோடு பாப் இசை உலகில் கால் வைத்த எமி, பின்னர் அவரை விட்டுப் பிரிவதும் சேருவதுமாக இருந்தார். அவரைப் பிரிந்தபோதெல்லாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, போதைக்கு அடிமையானார். பின்னர் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

ஆனாலும், இவர்களிடையே நடுரோட்டில் கூட அடிதடி சண்டை நடந்து இருவருக்கும் ரத்தக் காயமும் ஏற்பட்டுள்ளது.Topics: hollywood, amy winehouse, போதை மருந்து, லண்டன், drug, london

Friday, July 22, 2011

திரைப்படமாகும் நடிகைகளின் நிஜக் கதைகள்

நடிகைகளின் நிஜ வாழ்க்கையை படமாக எடுக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கற்பனைக் கதைகளைப் போன்று நடிகைகளின் நிஜ வாழ்க்கையை படமாக எடுக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். என்ன விசேஷம் என்றால் கற்பனைக் கதைகளை விட இந்த நிஜக் கதைகளில் சோகம், அதிரடி, டிராஜெடி ஆகியவை எக்கச்சக்கமாக உள்ளன.

புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யாவின் கதை மலையாளத்தில் திரக்கதா என்ற பெயரில் படமானது. அதில் ஸ்ரீவித்யாவாக பிரியாமணி நடித்தார். இறுதிக்காலத்தில் புற்று நோய்க்குப் பலியானார் ஸ்ரீவித்யா. அவரது வாழ்க்கைத் துளிகளை சித்தரிப்பதாக அமைந்தது இந்தப் படம்.

அதேபோல செக்ஸ் பாம் என்ற சொல்லுக்கு புது இலக்கண் படைத்தவரான சில்க் ஸ்மிதாவின் கதையை இப்போது டர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் படமாக்கி வருகின்றனர். வித்யா பாலனை சில்க் வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

1980-களில் கவர்ச்சி நடிகை வேண்டுமா, கூப்பிடுங்க சில்க் ஸ்மிதாவை என்று சொல்லும் அளவிற்கு அவர் மகா பிரபலம். அவரை பலர் காதல் என்ற பெயரில் ஏமாற்றினர். ஒரு கட்டத்தில் விரக்தியை தாங்க முடியாமல் சில்க் தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதா என்றால் கவர்ச்சி என்று சொல்லும் ரசிகர்களுக்கு அவருடைய பரிதாபமான வாழ்க்கையை பற்றிக் காட்டத் தான் இந்த படம்.

இந்த வரிசையில் இன்னொரு நடிகையின் கதை படமாகப் போகிறது. அவர் சாரதா. அந்தக் காலத்து அழகு நடிகை, தேசிய விருது பெற்றவர். ஊர்வசி சாரதா என்றுதான் அவருக்குப் பெயர்.

மலையாளத்தில் படமாகிறது சாரதாவின் கதை. படத்திற்கு நயிகா என்று பெயரிட்டுள்ளனர். இது சாரதாவின் காதல் தோல்விகள் பற்றிய படமாம்.

இதேபோல சோனியா அகர்வாலின் கதையை ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற பெயரில் சோனியாவை வைத்தே தயாரிக்கின்றனர். சோனாவும் தனது சொந்தக் கதையை படமாக்கப் போவதாக கூறியுள்ளார்.

இன்னும் எந்தெந்த நடிகையின் கதையெல்லாம் படமாகப் போகிறதோ தெரியவில்லை.

அங்கே சுட்டு, இங்கே சுட்டு கடைசியில் சினிமா உலகதுக்குள்ளேயே கதை தேட ஆரம்பித்து விட்டனர் இயக்குநர்கள். இது கற்பனை வறட்சியைக் காட்டுகிறதா அல்லது கவர்ச்சியை வைத்து காசாக்கும் நோக்கைக் காட்டுகிறதா என்பது புரியவில்லை.Topics: tamil cinema, real life stories, vidya balan, நடிகைகள் வாழ்க்கை, தமிழ் சினிமா

பிக்பாஸ் ஷோவில் நிர்வாணமாக தரிசனம் தர பூனம் பாண்டேவுக்கு ரூ.2 கோடி சம்பளம்?

பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியில் மாடல் அழகி பூனம் பாண்டே நிர்வாணமாக தரிசனம் தர தர, ரூ.2 கோடி பேரம் நடக்கிறது.

கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா கோப்பையை வென்றால், கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடப் போவதாக, கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் மாடல் அழகி பூனம் பாண்டே. இந்தியா உலக கோப்பையை வென்றாலும், கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தனது முடிவை அவர் வாபஸ் பெற்றார்.

வீரர்களுக்காக மட்டும் தனியாக நிர்வாண ஷோ நடத்த தயார் என்று அறிவித்தார். ஆனால் அதை கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில், பங்கேற்க, அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதற்கு ரூ.2 கோடி சம்பளமும் தருவதாக நிகழ்ச்சியாளர்கள் அவரை உற்சாகப்படுத்தி உள்ளனர்.

இந்த ஷோவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் கலந்து கொள்ள உள்ளார். பூனம் கலந்து கொள்ளும் பட்சத்தில், அவர் பூனமிடம் ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அளித்த வாக்குறுதி (நிர்வாண போஸ்) குறித்து கேட்பார்.

அப்போது நிகழ்ச்சியில் பூனம் நிர்வாண போஸ் தர வேண்டிய நிலை ஏற்படும். 2 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கூறியுள்ள நிலையில், என்ன முடிவு எடுப்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம் பூனம்.Topics: பூனம் பாண்டே, பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, சம்பளம், bigboss reality show, poonam pandey

பிந்து மாதவி, நித்யா மேனனின் 'வெப்பம்'

மனிதர்களின் மனதுக்குள் புதைந்து கிடக்கும் வெவ்வேறு வகையான வெப்பத்தை கதையாக்கி படமாக்கியுள்ளாராம் அஞ்சனா, தனது வெப்பம் படத்தில்.

அஞ்சனா, கெளதம் வாசுதேவ மேனனின் அசோசியேட்டாக இருந்தவர். இப்போது மேனனின் தயாரிப்பில் அஞ்சனா இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தில் இரு நாயகிகள் பிந்து மாதவி மற்றும் நித்யா மேனன். நாயகனாக நடிப்பது கார்த்திக்குமார்.

அது என்ன வெப்பம் என்ற பெயரில் ஒரு கதை என்றுகேட்டால், ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு விதமான வெப்பம் புதைந்து கிடக்கும். ஏதாவது தக்க தருணத்தில் அது வெளியாகி வெடித்துப் புறப்படும்.

ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள இந்த இறுக்கமான மன நிலையை வைத்துத்தான் படத்தை உருவாக்கியுள்ளேன். இப்படத்தில் காதல் இருக்கிறது, நட்பு இருக்கிறது, குடும்பப் பாசம், மரணம் என அனைத்துமே நிரம்பியுள்ளது.

இது சுத்தமான சென்னைக் கதை. சென்னையின் வாழ்க்கையை இதில் பார்க்கலாம். இருப்பினும் அனைவருக்கும் இது பிடித்தமான படமாக இருக்கும் என்றார் அஞ்சனா.

படம் வரட்டும், பிடிக்கிறதா, இல்லையா என்று பார்க்கலாம்!Topics: tamil cinema, veppam, வெப்பம், பிந்து மாதவி, bindu madhavi, nithya menon, நித்யா மேனன்

கோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்டர்கள் போராட்டம்

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் உடல் நலம் மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் தற்போது கோமாவுக்குப் போய் விட்டார். அவரது உயிரைக் காக்க டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் கோமாவுக்குப் போய் விட்டதாக அவரது மகனும், நடிகருமான அம்சவிர்தன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தந்தைக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்தது. இருப்பினும் அதைக் கட்டுக்குள் வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு திடீரென நுரையீரல் பிரச்சினை வந்து அது செயலிழக்கத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது அவர் கோமா நிலைக்குப் போய் விட்டார். டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர் என்றார்.

71 வயதாகும் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், இரு மகன்கள்,ஒரு மகள் உள்ளனர். அனைவரும் அருகில் இருந்து கவனித்தபடி உள்ளனர்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரவிச்சந்திரன் ஸ்டைல் நடிப்பை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஹீரோ. காதலிக்க நேரமில்லை படத்திலேயே அந்தக் காலத்து இளைய தலைமுறையைக் கவர்ந்தவர் ரவிச்சந்திரன். தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்தவர். ஊமை விழிகள் படத்தில் வில்லனாக கலக்கிய அவர், அருணாச்சல் படத்தில் ரஜினிக்கு தந்தையாகவும், பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசனுக்கு தந்தையாகவும் நடித்திருந்தார்.

கடைசியாக அவர் கண்டேன் காதலைப் படத்தில் அவர் நடித்திருந்தார்.Topics: கவலைக்கிடம், ravichandran, தமிழ் சினிமா, ரவிச்சந்திரன், அப்பல்லோ மருத்துவமனை, apollo hospitals

புதிதாக ஓட்டுப்போட்டவர்களில் 50% பேர் விஜய் ரசிகர்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர்

விருப்பாட்சி: இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்து தேய்ந்துபோன நாம் இனி நமக்காக உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருபாட்சிபுரத்தில் நடந்தது.

அதில் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கலந்துரையாடினர்.

பின்னர் கூட்டத்தி்ல் பேசிய சந்திரசேகர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையவேண்டும், தவறு செய்தவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று விஜய் விரும்பினார். அவரது ஆசை ரசிகர்களாகிய உங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் 80 லட்சம் இளைஞர்கள் புதிதாக ஓட்டுப் போட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 சதவீதம் பேர் விஜய் ரசிகர்கள் தான்.

இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்து தேய்ந்துபோன நாம் இனி நமக்காக உழைத்து முன்னுக்கு வரவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஒரு உள்ளாட்சி அமைப்புக்கு ஒரு உறுப்பினர் வெற்றி பெற்றால்கூட தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 1000 பேர் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ஆதரவு மூலம் விஜய் இளைய தளபதியாக வளர்ந்துள்ளார். தற்போது அவர் பெயரை வைத்து நீங்கள் முன்னுக்கு வரவேண்டும். செயலில் கில்லி மாதிரி இருக்கவேண்டும். மக்கள் விழிப்புடன் உள்ளனர். எனவே கொள்ளையடிக்கும் எண்ணத்தில் யாரும் அரசியலுக்கு வரவேண்டாம்.

விஜய் முழுநேர நடிகர்தான். நேரடியாக அவர் அரசியலுக்கு வரமாட்டார். நான்தான் உங்களுக்கு பாலமாக இருப்பேன் என்றார்.Topics: sa chandrasekaran, எஸ்ஏ சந்திரசேகர், tn elections, vijay

மலையாள சூப்பர்ஸ்டார்கள் மம்முட்டி,மோகன்லால் வீடுகளில் ஐடி ரெய்டு

தம்பி வெட்டோத்தி சுந்தரம்... கரண் நடித்து வெளியாகும் அடுத்த படம் இது. படத்தில் அவருக்கு ஜோடி அஞ்சலி.

இருவரும் இந்தப் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

இந்தப் படக்குழுவினர் நேற்று நிருபர்களைச் சந்தித்து, படம் குறித்த பல்வேறு தகவல்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் நாயகி அஞ்சலி கூறுகையில், "தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் கரணுக்கு ஜோடியாக என்னை நடிக்க அழைத்தபோது, அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதால், எப்படி பழகுவாரோ என்று கொஞ்சம் பயந்தேன். ஆனால், நான் பயந்தது போல் அவர் இல்லை. எனக்கு சவுகரியமான கதாநாயகனாக இருந்தார்.

எனக்கும், அவருக்கும் ஜோடிப்பொருத்தம் கச்சிதமாக இருக்கிறது. குறிப்பாக, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'கொலைகாரா...' என்ற பாடல் காட்சியில், எங்கள் இருவரின் கூட்டணியும், படம் பார்க்கும் எல்லோருக்கும் பிடிக்கும்.

இந்த வேடம், இந்த காஸ்ட்யூம் என்று எனக்கு எந்த பிடிவாதமும் இல்லை. நல்ல வேடம், காட்சிக்கேற்ற உடைகளை நான் அணிய தயங்கியதில்லை," என்றார்.

இந்தப் படம் நாகர்கோவில் அருகில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ளார்.

கரண் பேசும்போது, "தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை பார்த்தபின், அந்த படத்தை மறக்க முடியாது. 4 நாட்களுக்கு மனசுக்குள்ளேயே நிற்கும். அப்படி ஒரு பாதிப்பை படம் ஏற்படுத்தும்'' என்றார்.

அது என்ன வெட்டோத்தி...?

"வெட்டுக்கத்தி மாதிரி அது ஒரு ஆயுதம். ஆனால் இந்தப் படம் ஒவ்வொரு ரசிகருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே வாழ்ந்த அனுபவத்தைத் தரும்," என்றார்கள் இயக்குநர் வடிவுடையானும் தயாரிப்பாளர் செந்தில் குமாரும்.Topics: anjali, அஞ்சலி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், thambi vettothi sundaram, கரண், karan

Tuesday, July 19, 2011

கிளிநொச்சியில் புலிகள் விமான ஓடுபாதையில் இறங்கிய சிங்கள விமானம் ..!

கிளிநொச்சியில் புலிகள் விமான ஓடுபாதையில் இறங்கிய சிங்கள விமானம் ..!கிளிநொச்சியில் தமிழீழ வான்புலிகள் பாவித்த விமான ஒடுபாதையினை  மீள புனரமைத்துஇலங்கை வான் படை பவிகின்றது .இன்று வை 12 ரக இலகுரக விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது .இரத்மலானை கிளிநொச்சிக்கு இடையில் இந்த வான் தளம் பாவனைக்கு உட்படுத்தபடும் என தெரிவிக்க பட்டுள்ளது .ஆயிராம் மீட்டர் நீளமான இந்த ஓடுபாதை A9சாலையில் அமைய பெற்றுள்ளது .இந்த வான் தளத்தை  சுற்றி ஒன்பது கிலோ மீட்டருக்கு இலங்கை தரைபடைகளின் அதி உச்ச பாதுகாப்பு  வலயமாக பிரகடனபடுத்த பட்ட பகுதியில் நிறுவ பெற்றுள்ளதகா இலங்கை வான்படை தெரிவித்துள்ளது  ..!

ஆண் கடத்தபட்டு கொலை -பெண்கைது ..!

ஆண் கடத்தபட்டு கொலை -பெண்கைது ..!இன்று தப்போவா – மாரவில  பகுதியில் ஆண் ஒருவர் கடத்த பட்டுகொலை செய்யபட்ட நிலையில் பிணமாக  மீட்க பட்டுள்ளார் .குறித்த கொலையினை மேற்கொண்ட சந்தேக நபரான பெண் ஒருவர்அப்பகுதியில் இருந்து தப்பிக்க முனைந்த வேளை  காவல் துறையினரால்கைது செய்ய பட்டுள்ளார் .மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன .

கிளிநொச்சி கடை உரிமையாளர்களிற்கு இராணுவம் கொலை மிரட்டல் ..!

கிளிநொச்சியில் புலிகள் விமான ஓடுபாதையில் இறங்கிய சிங்கள விமானம் ..!கிளிநொச்சியில் தமிழீழ வான்புலிகள் பாவித்த விமான ஒடுபாதையினை  மீள புனரமைத்துஇலங்கை வான் படை பவிகின்றது .இன்று வை 12 ரக இலகுரக விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது .இரத்மலானை கிளிநொச்சிக்கு இடையில் இந்த வான் தளம் பாவனைக்கு உட்படுத்தபடும் என தெரிவிக்க பட்டுள்ளது .ஆயிராம் மீட்டர் நீளமான இந்த ஓடுபாதை A9சாலையில் அமைய பெற்றுள்ளது .இந்த வான் தளத்தை  சுற்றி ஒன்பது கிலோ மீட்டருக்கு இலங்கை தரைபடைகளின் அதி உச்ச பாதுகாப்பு  வலயமாக பிரகடனபடுத்த பட்ட பகுதியில் நிறுவ பெற்றுள்ளதகா இலங்கை வான்படை தெரிவித்துள்ளது  ..!

ரஜினி நடிக்கும் “ராணா” படத்தின் பெயர் மாறுகிறதா.?

Tuesday, Jul 19, 2011ரஜினி நடிக்கும் “ராணா” படத்தின் தலைப்பை மாற்ற பரிசீலனை நடக்கிறது. இப்படத்தின் கதை 17-ம் நூற்றாண்டில் நடப்பது போல் உருவாக்கப்பட்டு உள்ளது. ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
 
ஒரு கேரக்டருக்கு “ராணா” என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. கதையே படத்துக்கும் தலைப்பாக்கினார். “ராணா” என்பது ஒரு மன்னனின் பெயர். தற்போது “ராணா” பெயரை மாற்ற முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ரஜினி குணமடைந்து சென்னை திரும்பியதையடுத்து பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. கதை விவாதமும் நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களுக்குள் படப்பிடிப்புக்கு புறப்பட உள்ளார். அதற்குள் படத்துக்கு புது தலைப்பை தேர்வு செய்துவிட திட்டமிட்டுள்ளனர்.
 
“ராணா” பெயரை மாற்ற ரஜினி சம்மதிப்பாரா? என்பதில் சந்தேகம் கிளப்பப்படுகிறது. ஏற்கனவே அண்ணாமலை படத்தில் நடித்த போது தலைப்பை பலர் கிண்டல் செய்தனர். அண்ணாமலை அரோகரா என்று பேசினர். எனவே தலைப்பை மாற்றலாமா? என யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி அதை ஏற்கவில்லை. அண்ணாமலை என்பது திருவண்ணாமலை சிவன் பெயர் எனவே அதை மாற்றக் கூடாது என்று பிடிவாதமாக மறுத்தார். இதையடுத்து அந்த பெயரிலேயே படம் வந்து வெற்றிகரமாக ஓடியது.
 
படையப்பா பெயரையும் இது போன்ற விமர்சித்தனர். ஆனால் அப்பெயரை மாற்ற ரஜினி சம்மதிக்கவில்லை. படையப்பாவும் ஹிட் படமானது.

உதட்டில் பிளவோடு ஐஸ்வர்யா ராய் காரணம் என்ன.?

Tuesday, Jul 19, 2011கடந்த சில தினங்களாக இணையத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் போட்டோ ஒன்று உலா வந்த வண்ணம் உள்ளது. அப்போட்டோவில் அவரது மேல்வாய் கிழிந்துள்ள நிலையில் காணப்படுகிறது. என்னாச்சு ஐஸுக்கு என்று விசாரித்துப் பார்த்தபோது கிடைத்த தகவல் இதோ

உலகளாவிய அளவில் உதட்டு பிளவோடு பிறக்கும் குழந்தைகள் நலனுக்காக பாடுபடும் சமூக அமைப்பான ‘டிரெயின் சில்ட்ரன்’ என்ற அமைப்பு, இக்குறைபாட்டை நீக்க தகுந்த சிகிச்சை முறைகள் இருக்கிறது என்று மக்களுக்கு தெரியப்படுத்தவும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்பியது.

அத்றகாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயினை சந்தித்து, குழந்தைகள் நலனை குறித்து பேச, ஒரு குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் ஐஸோ. அதற்கென்ன தாராளமாக செய்து கொடுக்கிறேன் என்று ஒதுக் கொண்டார். அது மட்டுமின்றி இந்த அமைப்பின் பிராண்ட் அம்பாஸிடராகவும் இருக்க சம்மதித்துள்ளார்.

இந்த ஒத்துழைப்பால்தான் மேற்கண்ட போட்டோ வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உதட்டு பிளவு குறைபாட்டிற்கு சிகிச்சை இருக்கிறது என்று, இந்தியா உள்ளிட்ட 78 வளரும் நாடுகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

நான் பாதி இந்தியர் என்றால் ராகுல் காந்தி யார்?- கத்ரீனா கேள்வி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் தன்னைப் போன்று பாதி இந்தியர் தான் என்று பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார்.

கத்ரீனா கைப் இந்திய காஷ்மீரி தந்தைக்கும், இங்கிலாந்து அன்னைக்கும் பிறந்தவர். அவர் பாதி இந்தியர். பாதி ஐரோப்பியராக இருப்பதால் அடிக்கடி இது தொடர்பான சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

அழகிய பதுமை கத்ரீனாவை தாக்கிப் பேச விரும்புவர்கள் முதலில் கூறுவது அவர் பாதி இந்தியர் என்பதைத் தான். இவ்வாறு கூறுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு திருப்தி.

இது குறித்து கத்ரீனா கைப் கூறியதாவது,

நான் பாதி இந்தியர் என்று பிறர் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கின்றனர். இந்த உலகத்தில் என்னைப் போன்று பாதி இந்தியர்கள் பலர் உள்ளனர்.

இந்திய நியூஸ் சேனல்கள் எனது பாஸ்போர்ட் நகலை வைத்துள்ளன. அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்காதீர்கள். என் பாஸ்போர்டில் எனது அன்னையின் பெயர் உள்ளது. எனது பிறந்த நாள், பிறப்பிடத்தை என்றைக்குமே மறைத்ததில்லை. நான் ஹங்காங்கில் பிறந்தேன். இந்த தகவலை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றார் கடுப்பாக.

நான் பாதி இந்தியர், பாதி ஐரோப்பியர் என்பதற்காக வெட்கப்பட வேண்டுமா? வேண்டியதில்லை. ராகுல் காந்தி கூட தான் பாதி இந்தியர், பாதி இத்தாலியர் என்றார்.

சபாஷ், சரியான கேள்வி!Topics: katrina kaif, rahul gandhi, கத்ரீனா கைப், bollywood

அழுதது உண்மைதான்... ஆனா விலகறதா இல்ல-நயன்தாரா

சென்னை: ராம ராஜ்யம் படப்பிடிப்பின் இறுதிநாளில் நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதது உண்மைதான். ஆனால் சினிமாவிலிருந்து விலகப்போவதற்காக நான் அழுததாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம், என நயன்தாரா கூறியுள்ளார்.

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என செய்தி பரவி உள்ளது.

தெலுங்கில் நயன்தாரா கடைசியாக நடித்த ராம ராஜ்ஜியம் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிந்தது. படப்பிடிப்பின் கடைசி நாளில் அவர் கதறி அழுததும், படக்குழுவினர் அனைவரிடமும் பிரியா விடை பெற்றதும் கடந்த வாரச் செய்திகள்.

இது அழுகையும் பிரியா விடையும் சினிமாவுக்கும் சேர்த்துதான் என்று கூறப்பட்டது. அப்போது செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்த நயன்தாரா, இப்போது சினிமாவை நான்விலகமாட்டேன், என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் சினிமாவை விட்டு விலகப்போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பில் அழுததற்கான காரணமே வேறு.

என்னையும் மீறி என் மன வேதனை கண்ணீராய் வெளிப்பட்டுவிட்டது.

இன்னொரு பக்கம் ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பு குழுவினர் பாட்டு பாடி என்மேல் பூக்களை தூவி வழியனுப்பினார்கள். என் அழுகைக்கு அதுவும் ஒரு காரணம்.கடந்த ஆண்டு நான்நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட். நான் எதற்கு விலகப் போகிறேன்", என்றார்.

எதுக்கும் பார்த்து பேட்டி கொடுங்க... அடுத்த செய்தி பிரபுதேவாவிடமிருந்து நயன் விலகல் என்று வரக்கூடும்!Topics: நயன்தாரா, பிரபுதேவா, தமிழ் சினிமா, nayanthara, quitting cinema, prabhu deva

சென்டிமெண்ட்.... ரஜினியின் ராணா படத் தலைப்பில் மாற்றம்?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படத் தலைப்பு மாறக்கூடும் என சில தினங்களாகவே பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் ரஜினி அல்லது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த ரியாக்ஷனும் இல்லை.

ரஜினி கதை எழுதி, 3 வேடங்களில் நடிக்கும் மெகா பட்ஜெட் படம் ராணா. தமிழ் மன்னன் ஒருவனின் கதை. முழுக்க முழுக்க சரித்திரப் படம். இதில் ரஜினியின் ஒரு வேடத்துக்குப் பெயர்தான் ராணா. இந்தப் பெயரை தேர்வு செய்தததும் ரஜினிதான்.

இந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின்போதுதான் அவருக்கு உடல் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிங்கப்பூருக்குப் போய் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளார்.

இப்போது ஓய்விலிருக்கும் ரஜினி படத்தின் காட்சியமைப்புகள் குறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருடன் விவாதித்து வருகிறார்.

இந்த நிலையில், சென்டிமெண்டாக ராணா தலைப்பு வேண்டாம் என ஒரு சாரார் கருத்து தெரிவி்த்துள்ளார்களாம். ஆனால் ரஜினியோ ராணா தலைப்புதான் மிக ஈர்ப்பாக இருக்கிறது என அபிப்பிராயப்படுகிறாராம்.

அடுத்தவர் கருத்துக்கு எப்போதுமே அவர் மதிப்பளிப்பவர் என்பதால், தலைப்பில் மாற்றம் செய்யக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ரஜினியோ கேஎஸ் ரவிக்குமாரோ இதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர்.

ஏற்கனவே அண்ணாமலை படத்தில் நடித்த போது தலைப்பை பலர் கிண்டல் செய்தனர். அண்ணாமலை அரோகரா என்று பேசினர். எனவே தலைப்பை மாற்றலாமா? என யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி அதை ஏற்கவில்லை. அண்ணாமலை என்பது திருவண்ணாமலை சிவன் பெயர் எனவே அதை மாற்றக் கூடாது என்று பிடிவாதமாக மறுத்தார். இதையடுத்து அந்த பெயரிலேயே படம் வந்து வெற்றிகரமாக ஓடியது.

படையப்பா பெயர்தான் பெரும் அளவு கிண்டலடிக்கப்பட்டது. ஆனால் வசூலில் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டது இந்தப் படம்.

எனவே ரஜினி தலைப்பை மாற்றுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.Topics: ராணா, தலைப்பு மாற்றம், rajini, raana, title change

தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் பூட்டு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23ம் திகதி சனிக்கிழமை 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் விமானத்தளம் திறப்பு

கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையினர் வை 12 ரக விமானத்தினை தரையிறக்கி இலங்கை விமானப் படையினர் புதிய விமானத்தளம் ஒன்றினை இன்று சற்றுமுன்பு திறந்து வைத்துள்ளனர்.

மேக்னா நாயுடுவின் கவர்ச்சியில் வெளியாகும் ‘மோக மந்திரம்’

Tuesday, Jul 19, 2011சிம்பு நடித்த ‘சரவணா’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் மேக்னா நாயுடு. இப்படத்தை அடுத்து தமிழில் ஜாம்பவான், வீராசாமி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது குத்துப்பாடலுக்கும் ஆடி வருகிறார்.

கடைசியாக கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தில் இடம்பெற்ற குத்துப் பாடலுக்கு ஆடி இருக்கிறார். இவர் ஹிந்தி, தலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

அப்படி ஹிந்தியில் இவர் கவர்ச்சியாக நடித்து வெளியான படம் ‘மாசூக்கா’. இப்படம் அங்கு வசூலில் அபார வெற்றி பெறவே, இதனை அப்படியே ‘மோக மந்திரம்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்கிறார்கள்.

இப்படத்தில் மேக்னா நாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் வித்யா மாளவடே, ஆதித்யா பால் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கதாநாயகனுக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையே நடைபெறும் உறவுமுறை சிக்கல் பற்றிய கதையினை சஸ்பென்ஸ்-திகில் கலந்து சொல்லியிருக்கிறார்கள். இப்படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ஹாலிவுட் நடிகைகளை பின் பற்றும் ப்ரியா ஆனந்த்

Tuesday, Jul 19, 2011நூற்றெண்பது” படத்தில் நாயகன் சித்தார்த், நித்யா மேனன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளவர் ப்ரியா ஆனந்த்.

ஹாலிவுட் நடிகைகளின் பாணியில் சமூக அக்கறையை காட்டி வருகிறார்.

உலக அளவில் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டி, அதற்காக பாடுபட்டு வரும் பொதுநல அமைப்புடன் சேர்ந்து குழந்தைகளின் நன்மைக்காக குரல் கொடுத்துள்ளார் அவர். இன்றும் நான், என் குழந்தை பருவ நினைவுகளில் மூழ்குவதுண்டு.

மற்ற குழந்தைகள் மாதிரி நானில்லை. என்னுடைய அனுபவங்களே வித்தியாசமாக இருக்கும். குழந்தைகளின் உழைப்பை சுரண்டி பிழைக்கின்றவர்களுக்கு எதிராக என் உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்துள்ளேன்.

குழந்தைகளின் அழகான நேரங்களை எவரும் எந்தவகையிலும் பயன்படுத்தி கொள்வதை எதிர்க்கிறேன். இன்றைய குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியம். அதில் தான் அவர்களின் பசுமையான எதிர்காலம் அடங்கியுள்ளது என்று ப்ரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Monday, July 18, 2011

கோப்பாய் தமிழை வித்தியாலயம் திறப்பு

கோப்பாய் தமிழை வித்தியாலயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சற்றுமுன்பு திறந்து வைத்துள்ளார்.

இப்பாடசாலையை அமைப்பதற்காக 8.3 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த செலவினை ஊவா மாகாண சபை ஏற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பாடசாலை கட்டடத்தொகுதிகளின் வடிவமைப்புக்கு இலங்கை இராணுவ பொறியியல் பிரிவுனரும் உதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வித்தியாலயத்தினை திறந்து வைப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வித்தியாலய பிள்ளையார் கோவில் வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளார்.

மணல் கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கும் டக்கிலஸ் வெளிவந்த அம்பலம் ..!

மணல் கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கும் டக்கிலஸ் வெளிவந்த அம்பலம் ..! மணல் ஏற்றி 12லட்சம் ரூபாவை மாதம் கொள்ளையடிக்கும் டக்கிலஸ் வெளிவந்த அம்பலம் ..! மகிந்தாவின் மடிக்குள் இருந்து தமிழனத்தை அடக்கி ஆண்டு வரும்தமிழின துரோகி டக்கிலஸ் தேவானந்தா அவர்தம் ஆயுத குழுதிருட்டு தனமாக மணல் ஏற்றி மாதம் பன்னிரெண்டு லட்சம் ரூபாவைகொள்ளையடித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சீறும் சிறுத்தையும் புரட்சியாளருமான  மாண்பிமிகு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் . டக்கிலஸ் தேவானந்தாவின் ஆயுத அடக்குமுறை குழுவினால்பல பேருந்துகள் வாங்கப்பட்டு போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளது . இவ்வளவு பணமும் டக்க்ளிசுக்கு எங்கிருந்து வந்தது ..? அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து சுகம் கண்டு வரும்தேவானந்தாவின் மக்கள் நலன் இதுதான் . மக்களே இவர்களை தமிழின  வரலாறு மன்னிக்காது .இவர்களைற்கான தண்டனையை  இந்த தேர்தலில் இவர்களை மீண்டும் ஓட ஓட விரட்டுவதன் ஊடாகத்தான்எங்கள் தமிழினத்தின் ஒற்றுமையினை ஒருங்கிணைந்த பலத்தினை மீனும் சிங்கள பேரின வாதத்திற்கும்  உலகிற்கும் நாம் நிருபிக்க முடியும் ..! விரைந்து வாரீர் வீட்டுக்கு வாக்களிப்பீர்  ..!

ஆயுத முனையில் இரண்டு மில்லியன் நகைகளை வங்கியில் துணிகர கொள்ளை ..!

ஆயுத முனையில் இரண்டு மில்லியன் நகைகளை வங்கியில் துணிகர கொள்ளை ..! இன்று காலை கொஸ்கொட வங்கியில் இரண்டு மில்லியன் ரூபாய்க்கு அடகுவைத்த நகைகளை மீட்டு  கொண்டுவெளியே வந்த போது  அங்கு வந்த ஆயுத முனை முகமூடி கொள்ளையர்கள்அந்த நகைகளை அபகரித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர் . இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட வேளை திருடர்களை மடக்கி பிடிக்க முனைந்த  வங்கி காவலர்தாக்க பட்டு மருத்துவ மனையில்  அனுமதிக்க பட்டுள்ளார் . திருடர்களை கண்டு பிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் ..!

25மில்லியன் மக்கள் பணத்தை தேர்தலுக்கு செலவிட்ட மகிந்தா -அதிர்ச்சி தகவல் ..!

25மில்லியன் மக்கள் பணத்தை தேர்தலுக்கு செலவிட்ட மகிந்தா -அதிர்ச்சி தகவல் ..! ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியினர் நடைபெறும்  உள்ளுராட்சி தேர்தலுக்குவடக்கு மாகாண சபைக்கு  சொந்தமான 25 மில்லியன்  ரூபாவினை செலவிட்டுள்ளதாகசுரேஷ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார் . மக்களிற்கு ஒதுக்க பட்ட மக்கள் பணத்தினை  தவறான முறையிலும் தேர்தல் விதி முறைகளிற்குஎதிராக மகிந்தா அரசு பயன் படுத்தியுள்ளது . தமக்கு வடக்கு மக்கள் வாக்குகளை வழங்க வேண்டும் என்பதற்காக போரினால் பாதிக்க பட்ட மக்களுக்கு இலவசம் என்ற போர்வையில்  கைத்தறி, தையல் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், sarongs முதலியன இலஞ்சம் போல், கொடுக்கப்பட்டுள்ளன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரமே சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார் . குறித்த முறைகேட்டு தேர்தல் விதி முறை மீறலை தேர்தல் கண் காணிப்பாளர்களிடம்தெரிவித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ..!

கைவிடப்பட்ட இந்தியா வீட்டு திட்டம் மீண்டு தூசு தட்டல் -

கைவிடப்பட்ட இந்தியா வீட்டு திட்டம் மீண்டு தூசு தட்டல் - இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டி தரப்பட இருந்த வட கிழக்கு மக்களிற்கான  ஐம்பதாயிரம் வீடுகள்புனரமைப்பு  பணிகள் கடந்த எழு மாதங்களாக தடை பட்டிருந்தது . தற்போது அவை மீள யாழ் பகுதியில் ஆரம்பிக்க பட்டுள்ளதாகயாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார் .

புகையிரதம் மோதி பிரித்தானியாவில் ஒருவர் பலி -

புகையிரதம் மோதி பிரித்தானியாவில் ஒருவர் பலி - இன்று மாலை .5.30மணியளவில் பிரித்தானியாவின் விம்பிள்டன் புகையிரத நிலையத்தில்நின்ற பயணி ஒருவர்  புகையிரதத்தில் மோதுண்டு பலியாகியுள்ளார் . இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என குற்ற தடுப்பு பிரிவினர்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . குறித்த விபத்து கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருந்தால்கீழ் வரும் தொலை பேசிக்கு அழைத்து தெரிவிக்குமாறு காவல்துறையினர் மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர் ..!

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவி சாதனை

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ் மொழித் தினப் போட்டியில் காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவி ஆர்.சனூஜா பேச்சுப் போட்டியில் பிரிவு 01 இல் தங்கப் பதக்கத்தினை வென்றார்.

இச்சாதனையானது பாடசாலைக்கு வரலாற்றிலே ஒரு மைல் கல்லென அதிபர், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவியைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் எஸ்.யோகராஜா தலைமையில் நடைபெற்றது. இதன் போது காரைதீவு கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.வேதாசலம், கல்முனை வலயக் கல்வி அலுவலக தமிழ் மொழிப்பாட சிரேஷ்ட ஆசிரிய ஆலோசகர் கலாநிதி. ஆர்.வரதராஜன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு மாணவியைப் பாராட்டி கௌரவித்தனர்.

சிறைக்கைதிகளின் உண்ணாவிரதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆயர்

வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகள் தங்களது தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டத்தை நேற்று மாலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

மன்னார் மறை மாவட்ட வணகத்துக்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் வழங்கிய உறுதிமொழியையடுத்தே இந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதிகளை நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிளுடன் வவுனியா சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தி விரைவில் தீர்வுபெற்று தருவதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் வழங்கிய உறுதிமொழியையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

இதேவேளை, வவுனியா வைத்தியாசாலையிலுள்ள அரசியல் கைதியையும் ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் பார்வையிட்டார்.

ஊடகவியலாளர் ஷோன் ஹோரே மரணம்

நீயூஸ் ஒப் த வேல்ட் பத்திரிகை நிறுவனம் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேக்கிறது என கூறியவர்களுள் ஒருவரான நீயூஸ் ஒப் த வேல்ட் ஷோன் ஹோரே உயிரிழந்துள்ளார்.

கிட்லர் மகிந்தா தமிழ் மக்களை ஏமாற்ற யாழ் பயணம் ..!

கிட்லர் மகிந்தா தமிழ் மக்களை ஏமாற்ற யாழ் பயணம் ..!கிட்லர் மகிந்தா தமிழ் மக்களை ஏமாற்ற யாழ் பயணம் ..!இலங்கை கிட்லர் மகிந்தா இன்று யாழ் கையிட்ஸ்  நோக்கி பயனமாகியுள்ளார் .அங்கு பூநகரியை அண்மித்த பகுதியில் உள்ள வைத்திய சாலையை திறந்து வைப்பதுடன்கிளிநொச்சி யாழ் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடு படுவார்  என ஜனாதி பதி பேச்சாளர்தெரிவித்துள்ளார் ..!

Nilwala கங்கையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ..!

Nilwala கங்கையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ..!இன்று Nilwala கங்கையில் இருந்து நாப்பது வயதுடைய நபர் ஒருவரின் சடலத்தினைபோலீசார் மீட்டுள்ளனர் .இதுவரை குறித்த நபர் யார் என அடையாளம் காணப்படவில்லை .காவல்துறை விசாரணைகள் தொடர்கின்றன ..!

குளத்தில் நீராடிய பெண்ணை காணவில்லை ..!

குளத்தில் நீராடிய பெண்ணை காணவில்லை ..!மின்னேறிய குளத்தில் நீராடிய பெண் ஒருவர் காணமல் போய் உள்ளார் .பதுளையை சேர்ந்த குறித்த பெண்ணே காணமல் போய் உள்ளார் .இவரை நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்ச படுகின்றது ..!

தமிழினியை தொடர்ந்து தடுத்துவைக்க நீதிபதி ரஸ்மி சிங்கபுலி உத்தரவு ..!

கிட்லர் மகிந்தா தமிழ் மக்களை ஏமாற்ற யாழ் பயணம் ..!கிட்லர் மகிந்தா தமிழ் மக்களை ஏமாற்ற யாழ் பயணம் ..!இலங்கை கிட்லர் மகிந்தா இன்று யாழ் கையிட்ஸ்  நோக்கி பயனமாகியுள்ளார் .அங்கு பூநகரியை அண்மித்த பகுதியில் உள்ள வைத்திய சாலையை திறந்து வைப்பதுடன்கிளிநொச்சி யாழ் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடு படுவார்  என ஜனாதி பதி பேச்சாளர்தெரிவித்துள்ளார் ..!

யாழில் இருந்து கையிட்சுக்கு டகிலஸ்.பசில் பேருந்து ஓட்டம் .

யாழில் இருந்து கையிட்சுக்கு டகிலஸ்.பசில் பேருந்து ஓட்டம் .யாழ் நகர் பகுதியில் இருந்து கையிட்சுக்கு புதிய பேருந்து சேவைகள்ஆரம்பிக்க பட்டுள்ளன .குறித்த பேருந்து சேவையினை டக்கிலஸ் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர்நாடா வெட்டி தொடக்கி வைத்தனர் .எதிர் வரும் தேர்தலை முன்னிட்டு மக்கள் மனதை கவரும் விதத்தில் இவர்களதுவேலை திட்டங்கள் முன்னெடுக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..!

கிழக்கு ஆயுத குழுக்களுக்கு இராணுவம் எச்சரிக்கை. இன்று கடைசி ஆயுத ஒப்படைப்பு ..!

கிழக்கு ஆயுத குழுக்களுக்கு இராணுவம் எச்சரிக்கை. இன்று கடைசி ஆயுத ஒப்படைப்பு ..!கிழக்கில் சட்ட விரோதமாக பாவனையில் உள்ள ஆயுதங்களை இன்றைக்குள்பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கும் படி கிழக்கு மாகாண இராணுவ தளபதி கிழக்கில்உள்ள ஆயுத  குழுவினருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார் .அவ்வாறு தவறும் பட்சத்தில் நாட்டிற்கு எதிரான செயல் பாட்டில் ஈடு பட்டர்கள் என்றகுற்ற சாட்டின் அடிப்படையில் இருபது ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனஎச்சரிக்க பட்டுள்ளது .இவ்வாறு பல தடவை இராணுவம் அறிவித்தும் சட்ட  விரோத பாவனயில் உள்ள ஆயுதங்கள்முற்று முழுதாக இராணுவத்தினரால் கைப்பெற்ற  பட வில்லை  என்பதும் அவ்வாறான ஆயுதங்களைபுலிகளிற்கு எதிராக பயன் படுத்த இலங்கை இராணுவம் வழங்கியது என்பது குறிப்பிடதக்கது ..!

யானைகளை சுட்டு கொல்லும் இராணுவம் ..-20யானைகள் கொலை ..!

யானைகளை சுட்டு கொல்லும் இராணுவம் ..-20யானைகள் கொலை ..!கடந்த சில நாட்களில் இலங்கை இராணுவம் மூன்று யானைகளை சுட்டு படுகொலை செய்துள்ளது .இதுவரை இருபது யானைகள்   இலங்கை இராணுவத்தினால்  சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளது .Hennanigala குளம் Maduru ஓயா  பகுதியில் வைத்தே இருபது யானைகளும்  சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளன .Kantale, Manampitiya MATRUM  Kavudulla தேசிய பூங்கா அருகில் மூன்று யாணைகள்  சுட்டு படுகொலை செய்ய பட்ட நிலயில் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக  விலங்குகள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது ..!.

காதலியை கத்தியால் வெட்டி கொலை செய்த காதலன் -!

யாழில் இருந்து கையிட்சுக்கு டகிலஸ்.பசில் பேருந்து ஓட்டம் .யாழ் நகர் பகுதியில் இருந்து கையிட்சுக்கு புதிய பேருந்து சேவைகள்ஆரம்பிக்க பட்டுள்ளன .குறித்த பேருந்து சேவையினை டக்கிலஸ் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர்நாடா வெட்டி தொடக்கி வைத்தனர் .எதிர் வரும் தேர்தலை முன்னிட்டு மக்கள் மனதை கவரும் விதத்தில் இவர்களதுவேலை திட்டங்கள் முன்னெடுக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..!

ஜனாதிபதி ஊர்காவத்துறைக்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்னும் சற்றுவேளையில் ஊர்காவத்துறைக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊர்காவத்துறை பகுதிக்கு நாட்டின் ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.

சுசில் பிரேமஜயந்த கல்முனை விஜயம்

கல்முனைக்கு விஜயம் செய்த பெற்றோலிய வளத்துறை அமைச்சரும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேமஜயந்த கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள ஏ.எம்.அன்வர் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்விற்கு அமைச்சருடன் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹனைஸ் பாறுக், ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட், கல்முனை மாநகர முதல்வர் செனட்டர் மசூர் மௌலானா, ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம்.எம். சலீம் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

வேலணை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி (ஒலிப்பதிவு)

வேலணை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கலந்து கொண்டார். அங்கு ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை தருகிறார் எமது அலுவலக செய்தியாளர் பழனி விஜயகுமார்.

நேர்மையான தேர்தல் நடைபெற்றால் ஆளும் கட்சியால் வெல்ல முடியாது (காணொளி)

நேர்மையான தேர்தல் நடைபெற்றால் ஆளும் கட்சியால் எந்த ஒரு சபையையும் கைப்பற்ற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். எமது இணைய தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வேலணையில் ஜனாதிபதி தமிழில் உரை (காணொளி)

நான் சொன்னதை செய்வேன், செய்வதை சொல்வேன் என்றும் நான் உங்கள் நண்பன் என்றும் வேலணை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி தமிழில் குறிப்பிட்டார். ஜனாதிபதி தமிழில் உரையாற்றியதை இங்கே காணலாம்.

திட்டமிட்டபடி ‘மங்காத்தா’ படப்பாடல் ரிலீஸாகுமா..?

Monday, Jul 18, 2011அஜித்குமார் நடிக்கும் மங்காத்தா படத்தின் பாடல் வெளியீடு ஜூலை 18 அன்று நடைபெறும் என்று அப்படத்தின் தயாரிப்பாளரான, தயாநிதி அழகிரி முன்பே தெரிவித்திருந்தார்.

இதை நாமும் அப்போதே செய்தியாக்கியிருந்தோம். இப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவும் இதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று செய்தியும் கொடுத்திருந்தோம்.

ஆனால் இன்று வரை இப்படத்தின் பாடல் ரிலீஸ் குறித்து தகவலேதும் கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி நாளை இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெறுமா என்பது சந்தேகம்தான். இதுகுறித்து தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு;

‘’நாங்கள் எல்லோரும் இப்படத்தின் பாடல் வெளியீட்டிற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். இரவு பகல் பாராமல் இதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி தாமதம் செய்வதால் எங்களுக்கு எந்த ஒரு லாபமும் கிடைக்கப் போவதில்லை. புரிந்து கொள்ளுங்கள். விரைவில் பாடல்கள் வெளியிடப்படும்” என்றார்.

‘ராணா’வை அடுத்து சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய‌ படம்.?

Monday, Jul 18, 2011சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும் ‘ராணா’ படவேலைகளில் பங்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அக்டோபரில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிடும். இப்படம் 2012-ல் வெளிவர இருக்கிறது.

இப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல தெலுங்குப் பட இயக்குனரான பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் அண்மையில் நடித்து வெளியாகியுள்ள படம் ‘புட்டா ஹோகா தேரா பாப்’. இப்படத்தினை தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகந்நாத் முதன் முதலாக ஹிந்தியில் இயக்கினார்.

இப்படம் அங்கே பரபரப்பாக ஓடியதால், இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறாராம். அப்படி தமிழில் ரீமேக் செய்யும் போது, அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க முயற்சிக்கிறாராம் பூரி ஜெகந்நாத். இதற்காக இவர் விரைவில் ரஜினிகாந்தை சந்திக்க இருக்கிறாராம். இது அத்தனையும் சரியாக அமைந்தால் ரஜினிகாந்தின் அடுத்த படம் பூரி ஜெகந்நாத்துடையதாகத்தான் இருக்கும் என்று கோலிவுட் கிசுகிசுக்கிறது.

குத்துப்பாட்டை நான்தான் ஆரம்பித்து வைத்தேன்: டி. ராஜேந்தர்

Monday, Jul 18, 2011சினிமாத் துறையில் அஷ்டவதானியான டி.ராஜேந்தர் 'வீராசாமி' படத்திற்குப் பிறகு ‘ஒரு தலைக் காதல்’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு தலை ராகம்’ போல, இப்படமும் அபார வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார் டி.ஆர்.

இப்படம் குறித்து அவர் கூறியதாவது:

‘ஒரு தலை ராகம்’ வந்து முப்பது வருஷம் ஆகிடுச்சு. இப்போ மறுபடியும் "ஒரு தலை காதல்’. காதல் சினிமாக்களில் என்னைப் பார்த்த ரசிகன், அப்படியே மீண்டும் என்னை அண்ணாந்து பார்ப்பான். நான்தான் ஹீரோ. இதே தாடிதான். வட இந்திய பொண்ணு ஹீரோயின்.

பெரிய நடிகர், நடிகைகள் பட்டாளமே நடிக்குது. இப்போ இருக்குற எல்லா திறமையான இயக்குனர்களுக்கும் இந்த டி.ஆர். சவால் விடுறான். நீங்கள் இதுவரை பார்க்காத, யோசிக்காத படம் இது.

ஒரு தலைக் காதலில் முரட்டுத்தனமா இசையை காதலிச்சு வாழ்ற கேரக்டர். இதுவரைக்கும் 108 பாட்டுக்கு டியூன் போட்டு, எட்டு பாட்டு மட்டுமே படத்தில் வெச்சிருக்கேன். குத்துப்பாட்டை நான்தான் தூக்கிக் கொண்டு வந்தேன். இப்ப குத்து பாட்டு பச்ச தண்ணி குடிப்பது மாதிரி ஆகிவிட்டது. இதுலயும் ஒரு பாட்டை அப்படி வச்சிருக்கேன். எல்லாம் அதிரப் போகுது பாருங்க’’ என்றார்

இலங்கைத் தமிழ் விதவைப் பெண் - யாழினி குறும்படம்

இலங்கை யுத்தத்தில் விதவையான பெண்களை மையமாக வைத்து யாழினி என்ற குறும்படத்தை அவுஸ்திரேலிய தமிழர்கள் சார்லஸ் ராஜ் தயாரிக்க, ஆனந்த் இயக்கியுள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள யாழினி என்ற பெண் எப்படி விதவையானாள், அதற்கு பின்னால் நடந்தது என்ன என்பதை விளக்கும் வகையில் 30 நிமிட குறும்படம் எடுத்திருக்கிறோம். அடுத்து விடிவெள்ளி என்ற படத்தை கண்ணிவெடிகளை பற்றி எடுத்து வருகிறோம்.

இலங்கை தமிழர்கள் படும் இன்னல்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற படங்களை எடுத்து வருகிறோம். 25 வருடமாக நடந்து வரும் இலங்கை யுத்தம் குறித்து மிகவும் குறைந்த அளவே சினிமா படங்களாக வெளிவந்திருக்கின்றன.

இவை போதாது, இன்னும் உள்ள பல பிரச்சினைகள் குறித்து பலரும் சினிமாக்களாக எடுத்து உலகம் அறியச் செய்ய வேண்டும். நாங்கள் எடுக்கும் குறும்படங்களை உலகளவில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஹிலாரி இலங்கை குறித்து ஜெயாவுடன் கலந்துரையாடுவார் - ரொபேட் ஓ பிளேக்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ளவுள்ள சந்திப்பின் போது இலங்கை குறித்து கலந்துரயாடப்படும் என ஹிலாரி கிளிண்டனுடன் விஜயம் மேற்கொள்ளவுள்ள பராக் ஓபாமாவின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை முதல்தடவையாக சென்னை விஜயம் மேற்கொள்ளவுள்ள ஹிலாரி கிளிண்டன், அரச சார்பற்ற நோக்கத்துக்காகவே இந்திய விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பதனால் இலங்கை குறித்து கலந்துரையாட மாட்டார் என இந்திய வட்டாரங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஊடக நிறவனம் ஒன்றுக்கு ஐக்கிய அமெரிக்காவுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் வழங்கிய செவ்வியின் போது தமிழக மக்கள் 60 மில்லியன் பேர் இலங்கை தொடர்பில் கவனத்தில் கொண்டுள்ளதனால் இலங்கை குறித்து கலந்துரையாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்

வடக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடுவதற்கும், தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொள்வதற்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு சற்றுமுன்பு யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்.

இவ்விஜயத்தின் போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் பலவற்றை அவர் அஙகுரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், நெல்லியடி பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிக் கூட்டங்களில் கலந்துகொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

20 ஆம் திகதி பரந்தன் வைத்தியசாலையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி, அன்றைய தினம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கிளிநொச்சி சந்தை கட்டடத் தொகுதி ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் மக்கள் பேரணிக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

‘மங்காத்தா’வில் மோசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன்: அஜித் குமார்

Monday, Jul 18, 2011அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், ‘மங்காத்தா’ படத்தின் கேரக்டர் குறித்து முதன் முதலாக வாய் திறந்திருக்கிறார். இப்படத்தில் மிகவும் மோசமான கேரக்டரில் நடித்திருப்பதாக அஜித் குமார் தெரிவித்துள்ளார். இப்படம் குறித்தும், இப்படத்தில் இவருடைய கேரக்டர் குறித்தும் பேசியதாவது;

“மங்காத்தா படத்தில் 5 விதமான கேரக்டர்கள் வருகின்றன. இந்த 5 கேரக்டர்களுமே மோசமானவார்கள். இதிலே மிகவும் மோசமானவனாக, ரொம்ப கெட்டவனாக நடித்திருக்கிறேன்.

நான் பார்த்த இயக்குனர்களில் வெங்கட் பிரபு சிறந்த உழைப்பாளி. அவர் திரையில் என்ன கொண்டு வர வேண்டும் என்று விரும்பினாரோ அதை சரியாக கொண்டு வந்திருக்கிறார். அவரது அர்பணிப்பும், உழைப்பும் படத்தை தரமானதாக கொண்டுவந்திருக்கிறது

இப்படத்தில் நடித்த அனைவருமே தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தீனா, பில்லா போன்ற படங்களுக்கு அற்புதமாக இசையமைத்து வெற்றி தேடித் தந்த யுவன் சங்கர் ராஜா, இப்படத்திலும் தனது திறைமையை நிரூபித்திருக்கிறார். படத்திற்காக உங்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கிறேன்” என்றார்.

இப்படத்தில் அஜித் குமாருடன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடிதுதள்ளனர். அடுத்த மாதம் 12-லிருந்து 19-ம் தேதிக்குள் இப்படம் ரிலீஸாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sunday, July 17, 2011

மருதமுனையில் மூன்று சிறுவர்கள் விரிவுரையாளரால் பாலியல் துஸ்பிரயோகம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படடுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான்பெரேரா தெரிவித்தார்.

கடந்த செம்பர் மாதம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களினால் உரிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும் அவை விசாரணை நடாத்தப்படாமல் மூடி மறைக்கப்பட்டதாகவும் இதனையடுத்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.

குறித்த விரிவுரையாளர் சம்மந்தப்பட்ட சிறுவர்களள வீட்டிற்கு அழைத்து தமது கையடக்கத் தொலைபேசி மூலமும், கணினி மூலமும் ஆபாசபடங்களை காண்பித்ததுடன்சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர்கள் 14, மற்றும் 8 வயதை உடையவர்கள் எனவும் தொடர்ச்சியாக இச்சம்பவம் இடம்பெற்று வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது.

இது தொடர்பான முழு அளவிலான விசாரணைகள் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.என்.மென்டிஸ்சின் நேரடி மேற்பார்வையில் கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர்பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் சம்மந்தப்பட்ட விரிவுரையாளரை சனிக்கிழமை (16.7.2011) திகதி கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கெனஅழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குற்றாலத்தில் 70வது பிறந்த நாள் கொண்டாடிய பாரதிராஜா

குற்றாலம்: இயக்குநர் பாரதிராஜா தனது 70-வது பிறந்த நாளை குற்றாலத்தில் கொண்டாடினார்.

குற்றாலம் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இலஞ்சியுள்ள தனியார் ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இவ் விழாவில் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,

வாழ்க்கையில் மனிதன் கண்டிப்பாக சேவை செய்ய வேண்டும். வாழும் காலத்தில் தானம் கொடுத்து பழகிவிட்டால் அதை விட சுகமானது வேறொன்றும் இல்லை. அற்புதமான சுகம் தர்ம செயல்கள் செய்யும்போது கிடைக்கும். ஒரு ஊடகத்திற்கு இருக்கும் பொறுப்பை போல் பொது சேவையாற்றும் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளுக்கும் கடமை உள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். காவிரி, முல்லை பெரியாறு நீர்த்தேக்க பிரச்சனை, இனப்படுகொலை, இனஅழிப்பு, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பு நிகழ்வுக்கெல்லாம் பொது நல அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும்.

நாற்கலி கனவுகளில் இருந்து விலகி இருக்கும் சமூக சேவை இயக்குநர்கள் குரல் கொடுக்க தொடங்கினால் நாடெங்கும் அக்குரல் எதிரொலிக்கும். மொழி, இனம் என அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிறோம். தாயை இழப்பதும், மொழியை இழப்பதும் ஒன்று தான். நாட்டில் போலியோவை ஒழி்த்த உங்கள் இயக்கம் லஞ்சம், ஊழலையும் ஒழிக்க பாடுபட வேண்டும்.

நாம் சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்கு ஏன் லஞ்சமாகத் தர வேண்டும். லஞ்சம் வாங்கி பிழைப்பு நடத்துவதை விட கேவலமானது எதுமில்லை. மடங்களிலும், சாமியார் வீடுகளிலும், கோடி கோடியாய் பணம் கிடைக்கிறது. ஆனால் எந்த துறையாவது விசாரணை நடத்துகிறார்களா, எங்களை போல் உழைப்பவர்களிடம் தான் வருமான வரி சோதனை செய்கிறார்கள்.

ஜாதி, மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது சேவை அமைப்புகள் பொது மக்களின் பிரச்சனைகளுக்காகவும், களத்தில் இறங்கி குரல் கொடுக்க வேண்டும். மனிதன் இதயத்தை சுத்தமாக்கினால் அவனை அனைத்தும் தேடி வரும். ஒவ்வொருவரும் தன்னை பெற்ற தாயை மதிக்க கற்றுக் கொண்டால் சமுதாயத்தில் மரியாதை தானாகவே உயர்ந்து தலை நிமிர முடியும் என்றார்.

பின்னர் இரவு 9.30 மணி அளவில் ரோட்டரி பிரமுகர்களுடன் கேக் வெட்டி தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடினார். பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜ் பேசும்போது, ஒரு அரசால் மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்த முடியாது. ஆனால் இதுபோன்ற சங்கங்கள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது என்றார்.Topics: bharathiraja, பிறந்தநாள், குற்றாலம், courtallam, பாரதிராஜா

இலங்கையில் 3000எயிட்ஸ் நோயாளர் புதிதாக இனம் காணப்பட்டுள்ளனர் .!

இலங்கையில் 3000எயிட்ஸ் நோயாளர் புதிதாக இனம் காணப்பட்டுள்ளனர் .!தற்போது இலங்கையில்  புதிதாக மூவாயிரம் எயிட்ஸ் நோயாளர்கள்கண்டு பிடிக்க பட்டுள்ளனர் .இவர்களில் சிறார் ஆண் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்க பட்டுள்ளது .நாப்பதாயிரம்  பாலியால் பணியாளர்கள்   இலங்கையில்  உள்ளனர் .அதிகமானோர் வெளிநாடுகளிற்கு சென்று வந்தவர்களினாலேயே இந்த நோய் தோற்று அதிகரித்துகாணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது ..!இந்த எண்ணிக்கை மகிந்தா சிந்தையின் பின்னர் உருவாக்கம் பெற்றுள்ளது அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது ..!மகிந்தா ஆட்சியின் முன்னர் வீதிக்கு பிறந்த சிசுக்கள் அனாதையாகவும்  இறந்த நிலையிலும் கைவிட  படவில்லை என்பது இங்கே சுட்டி காட்டத்தக்கது  ..!

மார்பு புற்று நோயால் 1800பேர் பாதிப்பு ,..!

மார்பு புற்று நோயால் 1800பேர் பாதிப்பு ,..!இலங்கையில் வருடம் தோறும் ஆயிரத்து எண்ணூறு பேர் மார்பு புற்று நோயால் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகசுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது .இந்த எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்து செல்வதாக அவர்கள் சுட்டி காட்டியுள்ளனர் …இந்த நோய் தாக்கத்தினால் பலர்  பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது ..!

சானல்4க்கு எதிராக சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்

சானல்4க்கு எதிராக சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்

சானல் 4
கொலைக்களம் என்ற பெயரில் இலங்கையின் இறுதிப் போர் குறித்த விவரணப் படம் ஒன்றை தயாரித்து வெளியிட்ட, பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இங்கு லண்டனில் நடைபெற்றுள்ளது.

சானல்-4 நிறுவனத்தினால் காண்பிக்கப்பட்ட இலங்கையின் இறுதிப் போர் குறித்த விவரணப்படம், இலங்கையில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் என்று தாம் கருதுவதாகவும், அதனாலேயே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், அந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் சார்பில் பேசவல்லவராக தன்னைக் கூறிக்கொள்ளும் முஹமட் சஜிமுல்லா பிபிசிக்கு தெரிவித்தார்.

அந்தப் படத்தைப் பார்க்கும் இலங்கையின் இனங்கள், ஒன்று மற்றொன்றுக்கு எதிராக வன்செயலில் ஈடுபடலாம் என்று அவர் கூறினார்.

ஆகவே அத்தகைய வீடியோக்கள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படக்கூடாது என்றும், வேண்டுமானால், அப்படியான போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் போது அவை காண்பிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

உண்ணாவிரதமிருந்த சிறைக்கைதி வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா சிறைச்சாலையில் நேற்றுடன் ஏழாவது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்ற நான்கு அரசியல் கைதிகளில் ஒருவருடைய உடல் நிலைமை மோசமடைந்துள்ளதையடுத்து, சிறைச்சாலை வைத்தியர்கள் அவரை வவுனியா பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

செட்டிகுளத்தைச் சேர்ந்த கட்டையர் லோகேஸ்வரன் என்ற 40 வயதுடைய அரசியல் கைதியே இவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் நால்வரும் தாங்கள் நிரபராதிகள் என்றும் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதுடன், இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்து தடுத்து வைப்பது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிரான விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதே உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இவர்களில் ஒருவர் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நால்வருக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 40 பேர் இந்த உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளார்கள்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இரண்டாவது தடவையாக சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியிருக்கின்றனர்.

இதற்கிடையில், தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற இந்தத் தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் பார்வையிட்டுள்ளார்.

உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கை தொடர்பாகக் கவனம் செலுத்தப்படும் என்றும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் கைதிகளிடம் அவர் கேட்ட போதிலும், சிறைக்கைதிகள் தமது உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிடுவதற்கு மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சனல் 4க்கு முன்பு ஆர்ப்பாட்டம்

கொலைக்களம் என்ற பெயரில் இலங்கையின் இறுதிப் யுத்தம் குறித்த விவரணப் படம் ஒன்றை தயாரித்து வெளியிட்ட, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று லண்டனில் நடைபெற்றுள்ளது.

சனல்-4 நிறுவனத்தினால் காண்பிக்கப்பட்ட இலங்கையின் இறுதி யுத்தம் குறித்த விவரணப்படம், இலங்கையில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் என்று தாம் கருதுவதாகவும், அதனாலேயே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், அந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் சார்பில் பேசவல்லவராக தன்னைக் கூறிக்கொள்ளும் முஹமட் சஜிமுல்லா தெரிவித்தார்.

அந்தப் படத்தைப் பார்க்கும் இலங்கையின் இனங்கள், ஒன்று மற்றொன்றுக்கு எதிராக வன்செயலில் ஈடுபடலாம் என்று அவர் கூறினார்.

ஆகவே அத்தகைய வீடியோக்கள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படக்கூடாது என்றும், வேண்டுமானால், அப்படியான போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் போது அவை காண்பிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பில் விபத்து ஒருவர் பலி, இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் நேற்றிரவு 6.45மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண்முனைக்கு செல்லும் ஒல்லிக்குளம் வீதியில் உள்ள சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் பண்டாரியாவெளியை சேர்ந்த கருணா (30வயது) என்ற குடும்பஸ்த்தரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியில் வீடுகட்டும் பணியில் கூலித்தொழிலாளியாக வேலைசெய்துவிட்டு தனது முதலாளியின் மோட்டார் சைக்கிளை செலுத்திக்கொண்டு வீடு செல்லும்போது சந்திப்பகுதியில் வேகமாக சைக்கிளை திருப்ப முனைந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் கழுத்துப்பகுதி மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் நசியுண்ட நிலையில் அவ்விடத்தில் இருந்த பொதுமக்களால் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது வழியிலேயே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேநேரம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த காத்தான்குடியை சேர்ந்த இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

122 இலங்கைச் சாரணர்கள் சுவீடன் பயணம்

சுவீடன் நாட்டில் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ம் திகதி நடைபெறவுள்ள 22வது உலக சாரணர் ஜம்போறியில் இலங்கையிலிருந்து 122 சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை சாரணர் குழுவில் 05 சாரணர் தலைவர்கள், 10 குழுச் சாரணர் தலைவர்கள், 17 திரிசாரணர் தலைவர்கள், 90 சாரணர்கள் கலந்து கொள்ளவுள்ளதூக இலங்கை சாரணர் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவி ஆணையாளர் தெரிவித்தார்.

சாரணிய இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் பிறந்த தினமான ஓகஸ்ட் 10 ம் திகதி உலக சாரணர் தினமாக கொண்டாடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது

இலங்கை தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது

இலங்கை, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற ரோம் சாசனத்தில் கைச்சாத்திடாத நாடுகள் தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சாங் கியூன் சோங் கூறியுள்ளார்.

இலங்கை யுத்தத்தின் இறுதி நாட்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இலங்கை என்பன ரோம் சாசனத்தில் கைச்சாத்திட்டிருக்கவில்லையென்று தெரிவித்துள்ளார்.

ஆதலால் ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் நீதிமன்றத்திற்கு விடயத்தை பாரப்படுத்தாமல் சர்வதேச நீதிமன்றம் அந்த விடயம் தொடர்பாக செயற்பட முடியாது என்று அவர் தெரிவித்ததாக த அவுஸ்திரேலியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதேசமயம் தேசிய சட்ட முறைகளுக்கு மேலான முறையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இயங்குவதாக அவர் கூறியுள்ளார்.

குற்ற நீதிக்கான தேசிய முறைமைகளை தனது நீதிமன்றம் கொண்டிருப்பதாகக் கூறியுள்ள சோங், ஆனால், சில விமர்சகர்கள் குறிப்பாக அமெரிக்கா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தேசிய இறைமைக்கு அச்சுறுத்தலென வர்ணித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அச்சுறுத்தல் இருந்தால் 116 நாடுகளில் அந்த அச்சுறுத்தல்கள் சிறியளவிலான தாக்கத்தையே கொண்டிருக்குமென்று அவர் தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியின் பிரகாரம் இந்த நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அதிகாரத்தை அளித்துள்ளன. தமது ஆயுதப் படைகளின் செயற்பாடு தொடர்பாக தீர்ப்பை வழங்குவதற்கு அவை அங்கீகாரமளித்திருக்கின்றன.

நீதிமன்றத்தின் பங்களிப்புத் தொடர்பாக தவறான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தேசிய இறைமை பற்றிய சகல கவலைகளும் காணப்படுவதாக சோங் கூறியுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இறுதியாக தஞ்சமடையும் இடமாக உள்ளது. போர்க் குற்றங்களுக்கான சிறப்பு விடுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை அதன் சட்ட பரிமாணம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது. அத்துடன், இதேபோன்ற பாரதூரமான குற்றச்செயல்களும் சிறியளவிலேயே உள்ளன என்று அவர் கூறுகிறார்.

ரோம் சாசனத்தை அங்கீகரித்துள்ள நாடுகளின் விடயங்களையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கையாள முடியும். அதேவேளை, தேசிய சட்ட முறைமைகள் செயற்பட முடியாத தன்மையைக் கொண்டிருந்தால் அல்லது விருப்பமின்றியிருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் நடவடிக்கையெடுக்க முடியும்.

இறைமையுள்ள நாடுகளின் தேசிய எல்லைகளுக்கப்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது எந்தவொரு சூழ்நிலையிலும் மேலாகச் சென்றுவிட மாட்டாது, செல்ல முடியாது,செல்லக்கூடாது. அத்துடன், இறைமையுள்ள நாடொன்றின் சட்ட முறைமையின் வழமையான செயற்பாட்டை பாதிக்கும் விதத்தில் செயற்பட முடியாது என்று சோங் கூறியுள்ளார்.

தேசிய சட்ட முறைமையின் நடவடிக்கைக்கு வெளிப்புறமாகவே அடிப்படையில் நாங்கள் இருந்து வருகிறோம். விருப்பமில்லாத தன்மை அல்லது இயலாத தன்மை ஏற்படும்வரை காத்திருக்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

சிட்னியில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுநலவாய சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தென்கொரியாவின் முன்னாள் ஜுரரும் கொரிய இராணுவத்தின் முன்னாள் நீதிபதி, சட்டத்தரணியுமான சோங், த அவுஸ்திரேலியன் பத்திரிகையுடன் உரையாடியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் பொதுநலவாய அமைப்பிற்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை இரு அமைப்புகளும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அங்கீகாரமளித்துள்ளன.

2002 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது. நான்கு வருடங்களில் 66 நாடுகள் அங்கீகரித்திருந்தன. மேலும், பல நாடுகள் விரைவில் இணைந்துகொள்ளவுள்ளன. இந்த விடயத்தில் நாங்கள் முன்னேற்றமடைந்து வருகிறோம்.

துனீசியா இந்த சாசனத்தில் கடைசியாக கைச்சாத்திட்டுள்ளது. அரபுலகில் கைச்சாத்திடப்பட்ட முதலாவது நாடாக துனீசியா உள்ளது. எகிப்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தைச் சாராத தரப்பினரால் மேற்கொள்ளப்படும் சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை கையாளுவதற்கு நீதிமன்றத்திற்கு முடியாத தன்மை காணப்படுகிறது. அதனால் அந்த விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கைவிடப்பட்ட விடயங்களில் ஒன்றாகும்.

மற்றொரு கைவிடப்பட்ட விடயமாக இருப்பது இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஆவணப்படுத்தப்பட்ட விடயமாகும். இந்த விடயங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டப் பரிமாணத்திற்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.

இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றம் போன்ற விடயங்களை இந்த நீதிமன்றம் கையாளுகிறது. பயங்கரவாதத்தையும் இதில் இணைத்துக்கொள்ள முயற்சி காணப்பட்டது. ஆனால், இன்றுவரை அந்த விடயத்தில் வெற்றிபெற்றிருக்கவில்லை என்று சோங் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினை நீதிமன்றத்தை எட்டுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்கப்பட்டபோது, அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த விடயம் அரச தரப்புகளை சார்ந்த விடயம் என்றும் நீதிமன்றம் சம்பந்தப்பட்டதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்படாமல் இலங்கை விடயம் குறித்து குற்றவியல் நீதிமன்றத்தால் செயற்பட முடியாதென்று அவர் தெரிவித்திருக்கிறார்.

உலகின் மூலைகளில் குறிப்பிட்ட கொடூரங்கள் நடக்கும்போது அவை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தலாமென சகலரும் நினைப்பதாகத் தோன்றுகிறது. நாங்கள் நீதிமன்றம் தொடர்பாக அதிகரித்துவரும் அங்கீகாரத்தையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம். மறுபுறத்தில் ரோம் சாசனத்தில் விசேடப்படுத்தப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைவாகவே நாங்கள் செயற்பட வேண்டியுள்ளது.

ஆதலால் இலங்கை, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற சாசனத்தில் கைச்சாத்திடாத நாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தால் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

கிழக்கில் ஆயுதங்களை ஒப்படைக்க 30ம் திகதி வரை காலக்கெடு

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் அவற்றிடமுள்ள ஆயுதங்களை விரைவாக ஒப்படைக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு மூலம் பொலிஸ் நிலையங்கள் ஊடாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில், கொள்ளை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக சில குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் சில குழுக்கள் சில அரசியல் கட்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுவருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் இந்த அறிவிப்பை செய்துவருகின்றனர்.

ஆயுதங்கள் வைத்திருப்போர் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களது பகுதிகளில் இருக்கும் விசேட அதிரடிப்படை முகாம் மற்றும் இராணுவ முகாம்களில் ஆயுதங்களை கையளிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆயுதங்களை வைத்திருப்போர் அதனை நேரடியாக கொண்டுவந்து ஒப்படைக்க முடியாதவிடத்து அதனை ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு அறிவித்தால் அந்த ஆயுதங்களும் மீட்க்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு ஆயுதங்கள் கையளிக்கப்படாதவிடத்து அவை பற்றிய தகவல்கள் கிடைத்து மீட்க்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையை உயர்த்த கோரிக்கை

வவுனியா சிறைச்சாலையில் நேற்றுடன் ஏழாவது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்ற நான்கு அரசியல் கைதிகளில் ஒருவருடைய உடல் நிலைமை மோசமடைந்துள்ளதையடுத்து, சிறைச்சாலை வைத்தியர்கள் அவரை வவுனியா பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

செட்டிகுளத்தைச் சேர்ந்த கட்டையர் லோகேஸ்வரன் என்ற 40 வயதுடைய அரசியல் கைதியே இவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் நால்வரும் தாங்கள் நிரபராதிகள் என்றும் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதுடன், இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்து தடுத்து வைப்பது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிரான விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதே உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இவர்களில் ஒருவர் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நால்வருக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 40 பேர் இந்த உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளார்கள்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இரண்டாவது தடவையாக சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியிருக்கின்றனர்.

இதற்கிடையில், தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற இந்தத் தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் பார்வையிட்டுள்ளார்.

உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கை தொடர்பாகக் கவனம் செலுத்தப்படும் என்றும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் கைதிகளிடம் அவர் கேட்ட போதிலும், சிறைக்கைதிகள் தமது உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிடுவதற்கு மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லண்டன் டூடிங் அம்மன்கோயிலில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நிகழ்வு -

லண்டன் டூடிங் அம்மன்கோயிலில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நிகழ்வு -  எதிர்வரும் செப்டம்பர் மாதம் டூடிங் அம்மன் கோயிலில் காலைஎட்டு மணியில் இருந்து இரவு எட்டு மணிவரை ஒருநாள் அடையாளஉண்ணாவிரதம் இருக்க ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளன . தியாக தீபத்தின் நினைவு நாளில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது .இங்கு நடை  பெரும் உண்ணாவிரத்ததில் நீங்களும் பங்கெடுக்க விரும்பின் இன்றேஎம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் . எம் தேச புதல்வர்களை நினைவு கூறுவதுடன் நாமும் அந்த நிகழ்வில் பங்கெடுத்து கொள்வோம் . குறிந்த நாளில் மாவீர்கள் மற்றும் தியாக தீப்தம் தொடர்பான கவிதைகள் .பாட்டுக்கள் .பேச்சுக்கள் நிகழ்த்த விரும்புவர்கள்உங்களது படைப்புக்களை அனுப்பி விபத்துடன் நீங்களும் நேரே வந்து உங்களை படைப்புக்களை நிகழ்த்த முடியும் .  தொடர்புகளிற்கு  -நிமலன் -07877204123வன்னிமைந்தன் .07404118674  newsethiri@hotmail.com ethiri@hotmail.co.uk ……

பாணந்துறையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

பாணந்துறை திக்கல்ல பகுதியில் 3 கிராம் மற்றும் 280 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பாணந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவரை நாளைய தினம் பானந்துறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு பாணந்துறை பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்வெட்டி துறைமுகத்திற்கான பணிகள் ஆரம்பம்

மஹிந்த சிந்தனை கொள்கையை அடிப்படையாக கொண்டு அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களுக்கான நீர் வழங்கல் செயற்திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், உட்பட பல முக்கிய பிரமுகர்களும் பல பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது வல்வெட்டி துறைமுகத்திற்கான ஆரம்ப பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

மண்டைதீவு மக்களுக்கு குடிநீர்

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் மண்டைதீவு மக்களுக்கான குடிநீர் விநியோகத்திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பல வருடங்களாக மண்டைதீவு மக்கள் குடிநீருக்காக பெரிதும் சிரமப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கன்னடப் படத்தில் நடிப்பதற்காக காத்திருக்கும் சமீரா ரெட்டி

இந்தி, தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துள்ள சமீரா ரெட்டி கன்னடப் படங்களில் நடிப்பதற்காக காத்திருக்கிறாராம்.

பாலிவுட் நடிகையாக இருந்து வந்த சமீரா ரெட்டி இப்போது தென்னிந்திய நடிகையாகவும் மாறி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது மனக்கிடக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அது கன்னடப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சிறு வயதில் கன்னடப் படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவை எனக்குப் பிடிக்கும். ஆனால் நான் நடிகையாகி இத்தனை காலமாகி விட்டது, ஆனால் என்னைத் தேடி ஒரு கன்னடப் படமும் வரவில்லை என்பது வியப்பாக உள்ளது.

அத்தனை மொழிப் படங்களிலும் என்னைக் கேட்கிறார்கள். கன்னடத்தில்தான் யாரும் இன்னும் அணுகவில்லை. நான் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சரியான வாய்ப்பு வந்தால் மகிழ்ச்சியோடு நடிப்பேன் என்றார் சமீரா.Topics: sameera reddy, kannda movie, சமீரா ரெட்டி கன்னடப் படங்கள்

எங்களுக்கு வாக்கு போடுங்கோ கிளிநொச்சியில் ஜேவிபி.பிச்சை ..!

எங்களுக்கு வாக்கு போடுங்கோ கிளிநொச்சியில் ஜேவிபி.பிச்சை ..! கிளிநொச்சியில் ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரவன்சஅவரது சக பாடிகளுடன் சென்று எதிர் வரும் தேர்தலில் தமக்குவாக்கு அளிக்கும் படி மக்களை வீடு வீடாக சென்றும் கடைகள்  தோறும் ஏறி வேண்டினர் . தமிழினம் அழியும் போது வேடிக்கை பார்த்து தமிழரை அழித்த  படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களுடன்கூட்டு வைத்து பிழைப்பு நடத்தி வந்த கட்சிகள் தற்போது தமிழர்களிடம் மடி பிச்சை கேட்டு  அவர்களை காப்போம் என வேற்று கோஷமிட்டு வருவதுஇன்று இலங்கையில் நடக்கும் விநோதங்களில்  ஒன்றாகி போனது .  தமிழர்கள் வாழ தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமபைப்பை பலப்படுத்தி அதன் வாயிலாக தமிழரின்உரிமைகளை வென்றெடுக்க பாடு பட வேண்டும் அதற்காக இந்த தேர்தலில் மீளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெறும் பட்சத்திலேயே தமிழினம் தனக்கான அங்கீகாரத்தினை உலக மட்டத்தில் பெற்று கொள்ள முடியும் என்பது இன்றைய நோக்கு ..!#gallery-1 {margin: auto;}#gallery-1 .gallery-item {float: left;margin-top: 10px;text-align: center;width: 33%;}#gallery-1 img {border: 2px solid #cfcfcf;}#gallery-1 .gallery-caption {margin-left: 0;}2k3k
4k3k1k
4k

  

இந்தியாவில் உள்ள ஈழதமிழ் அகதிகள் இலங்கை திரும்ப விருப்பம் UNHCR-தெரிவிப்பு ..!

இந்தியாவில் உள்ள ஈழதமிழ் அகதிகள் இலங்கை திரும்ப விருப்பம் UNHCR-தெரிவிப்பு ..! இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள்இரண்டு லட்சத்து எண்பதாயிரம்தமிழர்கள் இந்தியா சென்றனர் . இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு புலிகள் ஆயுத .அரசியல் மவுனப்பிற்கு   பின்னர் சிங்கள இனவாத  அரசுதமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்த பின்னர் தற்போது அங்கு சென்று தமது சொந்த மண்ணில் வாழ இந்த  ஏதிலிகள்ஆர்வம் கொண்டுள்ளனர் என சர்வதேச UNHCRதொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது .

சற்றே கலைந்தது இந்தியாவின் மௌனம்

இலங்கை மீதான யுத்தகுற்ற விவகாரத்தில், இந்தியா முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தின் போது அங்கு நடந்த மனித உரிமை மீறல் புகார்களை விரிவாக ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில், இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக ஐ.நா. சபை நியமித்த நிபுணர் குழு குற்றம் சாட்டியுள்ளது. இலங்கைத் தலைவரை யுத்த குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.

அவர் மீது உலகம் முழுக்க யுத்தகுற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இது தொடர்பான 50 நிமிட வீடியோவை சேனல் 4-ம், இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடேவும் வெளியிட்டன. ஆனால் இந்த பிரச்சனையில், இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த இந்தியா, நேற்று தனது மௌனத்தை கலைத்தது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறுகையில், இலங்கையில் பல்வேறு வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 20 சதவீதம் பேர் தமிழ் பேசுபவர்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவின் இதர பகுதிகளிலும் நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர்.

எனவே, அவர்களின் நலனில் இந்தியாவுக்கு அக்கறை உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு சட்டரீதியான மனக்குறைகள் உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

அந்த அடிப்படையில், தாம் இலங்கையின் சம அந்தஸ்து பெற்ற குடிமக்கள்தான் என்றும், தாம் கௌரவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ முடியும் என்றும் இலங்கை தமிழர்கள் எண்ணும் அளவுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுதான், இப்பிரச்சினையில் இந்தியாவின் பார்வை.

இந்தியாவை பொறுத்தவரை, யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை அரசின் கருத்துகளை பல்வேறு தருணங்களில் கேட்டுள்ளது. கடந்த மே மாதம், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி டெல்லிக்கு வந்தபோதும், கடந்த மாதம் கொழும்பு நகரில் நடைபெற்ற சந்திப்பின் போதும் கேட்டுள்ளோம்.

இந்த குற்றச்சாட்டுகள் பற்றி இலங்கை அரசு விரிவான முறையில் ஆய்வு செய்வது அவசியம். மனித உரிமை மீறல் தொடர்பாக எழுப்பப்படும் கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.

இலங்கை தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். யுத்தம் முடிந்ததால் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழர்களை மறுகுடியேற்றம் செய்யும் பணிகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம் என்றார்.

எலிக் காய்ச்சலால் 56 பேர் மரணம்

இவ்வருடத்தில் எலிக் காய்ச்சல் காரணமாக 56 பேர் இதுவரையில் உயிரழந்துள்ளதுடன் 4464 பேர் இந்த காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவற்றுள் அதிகமாக கம்பஹா மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குருநாகலை மாவட்டத்திலேயே அதிகமாக 1346 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இந்த காய்ச்சல் காரணமாக முறையே நால்வர் உயிரிழந்துள்ளனர்.

தேர்தல்களுக்கான சகல பணிகளும் பூர்த்தி

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்கான சகல பணிகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

65 உள்ளுராட்சி சபை தேர்தல்களில் ஐந்தாயிரத்து 688 வேட்பாளர்கள் போட்டியிடும் அதேவேளை 875 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இந்த தேர்தலில் பங்குகொள்ள 26 இலட்சத்து 30 ஆயிரத்து 975 வாக்காளர்கள் வாக்களிக்கும் தகமைகளைக் கொண்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள் 20ம் 72 சுயேச்சைக் குழுக்களும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்வதற்காக இரண்டாயிரத்து 226 வாக்குச் சாவடிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியில் தேர்தல் நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் தேர்தல்கள் செயலகம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வாக்களிப்பவர்களுக்காக வாக்காளர் அட்டை விநியோகம் நேற்றுடன் நிறைவு வடைந்துள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றுவரையில் 80 சதவீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் எம்.கே.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

வாக்காளர் அட்டைகளை இதுவரையில் பெற்றுக்கொள்ள் தவறியவர்கள் தமது பிரதேச அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபுதேவாவை தொடர்ந்து பிருத்விராஜ் !

Sunday, Jul 17, 2011சமீபத்தில் பிரபுதேவா, ரம்லத் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது இதனால் சந்தோசத்ததில் இருந்த பிரபுதேவா  குருவாயூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது இவரை தொடர்ந்து.

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ். இவர் தமிழில் மொழி, சத்தம் போடாதே, ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கும், டெலிவிஷன் நிருபர் சுப்ரீயாவுக்கும் திருமணம் நடந்தது.
 
இதையொட்டி நேற்று காலை அவர் தனது மனைவியுடன் குருவாயூர் சென்றார். 7 மணி அளவில் குருவாயூரப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.   பின்னர், தனது எடைக்கு எடையாக வெண்ணை துலாபாரம் செய்தார். அதற்காக 95 கிலோ வெண்ணைக்கு கோவில் அலுவலகத்தில் ரூ.19,005 செலுத்தினார்.
 
பூஜை மற்றும் வழிபாடு முடிந்தவுடன் கோவில் உதவி மேலாளர் நந்தகுமார் நடிகர் பிருத்விராஜ், அவரது மனைவி சுப்ரீயாவுக்கு பிரசாதம் வழங்கினார்.

சீமான் என்னுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் உள்ளன-விஜயலட்சுமி

இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் மீது புகார் கூறியுள்ள நடிகை விஜயலட்சுமி, தன்னுடன் சீமான் குடும்பம் நடத்தியது தொடர்பாக 700 ஆதாரங்களை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் சீமானுக்கு கேக் ஊட்டுவது போல காட்சிகள் உள்ளன.

3 வருடமாக தன்னைக் காதலித்து விட்டு இப்போது திருமணம் செய்ய சீமான் மறுப்பதாக விஜயலட்சுமி புகார் கூறியுள்ளார். இது காலப்போக்கில் அப்படியே மறைந்து போய் விட்டது. இந்தநிலையில் திடீரென சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கொடுத்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

அவர் என்னுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. மதுரையில் அவருடன் நான் 15 நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளேன். 3 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்து விட்டு என்னைத் தூக்கிப் போட்டு விட்டார் சீமான் என்று கூறியுள்ளார் விஜயலட்சுமி.

சீமானுடன் இருப்பது தொடர்பாக விஜயலட்சுமி வெளியிட்டுள்ள படங்களால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Topics: விஜயலட்சுமி, சீமான், நாம் தமிழர் கட்சி, naam tamilar party, seeman, vijayalakshmi

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மட்டும் வேண்டாம்-வித்யா பாலன் கண்டிஷன்

மறைந்த கவர்ச்சிக் கன்னி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் சில்க் வேடத்தில் நடித்து வரும் வித்யா பாலன், எந்த வகையான காஸ்ட்யூமும் தனகக்கு ஓ.கேதான் என்று கூறியுள்ளாராம் - ஒரே ஒரு நிபந்தனையுடன்.

அந்த நிபந்தனை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மட்டும் கூடவே கூடாது என்பதாம். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் படமாக்கி வருகிறார்கள். இதில் சில்க் வேடத்தில் நடித்து வருகிறார் வித்யா பாலன்.இதற்காக கவர்ச்சிகரமான டிரஸ்களிலும் இவர் படத்தில் காட்சி தருகிறார்.

தற்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறதாம். படத்தில் வித்யாவை கவர்ச்சிகரமாக காட்டும் பொறுப்பை அவரது காஸ்ட்யூம் டிசைனர் நிஹாரிகா கான் ஏற்றுள்ளார். அவரிடம் என்ன மாதிரியான காஸ்ட்யூமைக் கொடுத்தாலும் பரவாயில்லை, எனக்கு ஓ.கே.தான். ஆனால் ஸ்லீவ்லெஸ் மட்டும் வேண்டாம் என்று கூறியுள்ளாராம் வித்யா.

ஏன் ஸ்லீவ்லெஸ் வேண்டாமாம்? ஸ்லீவ்ஸெல் போட்டால் தனது தோள்பட்டைகளும், அக்குளும, பட்டவர்த்தனமாக தெரியும். அதை தான் விரும்புவதில்லை என்கிறார் வித்யா பாலன்.

சில்க்குக்கு இணையாக இதுவரை யாரையும் திரையுலகம் கண்டதில்லை. அந்த இடத்தை வித்யா பாலன் நிரப்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.Topics: silk smitha, vidya balan, sleevless tops, வித்யா பாலன், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், சில்க் ஸ்மிதா

டெங்கு தொற்றை கட்டுப்படுத்த பாரிய சுத்திகரிப்பு

டெங்கு தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் ஒரு பாரிய சுத்திகரிப்பு நடவடிக்கைகள் கொழும்பு நகரினுள் விரைவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னர் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு நடவடிக்கைகள் அதிகளவிலான பலனை தரவில்லை என கொழும்பு மாநகர சபையில் பிரதம மருத்துவ அதிகாரியின் காரியாலயம் தெரிவித்துள்ளது.

டெங்கு தொற்று காரணமாக மரணமானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகர எல்லைக்குட்டபட்ட பிரதேசங்களில் இருந்து 25 முதல் 30 வரையிலான நோயாளர்கள் நாளாந்தம் சிகிச்சைப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 சதவீத்திற்கும் மேற்பட்ட டெங்கு தொற்றுக்கள் பெரும்பாலும் கொழும்பு வடக்கு பிரதேசத்திலேயே பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் மருத்துவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பம்பலப்பிட்டி கருவாக்காடு மற்றும் கொம்பனி தெரு போன்ற பிரதேசங்களில் இருந்து மிகக்குறைவான டெங்கு தொற்றுக்குள்ளானவர்களே இனங்காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைதிகள் தொடர்பில் துரித விசாரணைக்கு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கோரிக்கை

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்தோடு வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டம் குறித்து சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டீ சில்வா சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.

நான்கு பேர் வவுனியா சிறைச்சாலையில் மேற்கொண்டுள்ள இப்போராட்டத்தில் மேலும் 30 பேர் நேற்று இணைந்து கொண்டுள்ளதாகவும் அறியப்படுத்தியுள்ளார்.

வாக்களிக்க இராணுவ அடையாள அட்டை

வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை மீண்டும் பயன்படுத்தி வாக்களிப்பில் கலந்துகொள்ள அனுமதி வழங்குவது தொடர்பாகத் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடவுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராய்ச்சி இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

வடக்கில் தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று ஜே.வி.பியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளன. இது தொடர்பாக அரசும் தேர்தல் ஆணையாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்ற வகையில் தேர்தல் அமைதியாக இடம்பெறவேண்டும் என்பதே எமது விருப்பம். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரசோ, எதிர்க்கட்சிகளோ மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தேர்தல்மீது வடக்கு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்யக்கூடாது.

யுத்தம் முடிவடைந்து ஒருசில வருடங்களுக்குள்ளேயே தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் சுதந்திரமும் வடக்கு மக்களுக்கு இருக்கவேண்டும். இந்த சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதிக்கும் வகையில் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அமையக்கூடாது.

கிளிநொச்சியில் தொடர்ந்தும் மீள்குடியமர்வு இடம்பெறுகின்றது. அது இன்னும் முடிவடையவில்லை. இவர்களில் தேசிய அடையாள அட்டைகள் இல்லாத பலரும் உள்ளனர். அவர்கள் தற்காலிக அடையாள அட்டைகளைப் பயன்படுத்தலாம். தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கை இந்த மாதம் 13 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளதால் அதிகம் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த மக்களுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை இந்த மக்கள் ஒருதடவை வாக்களிப்புக்குப் பயன்படுத்தினர்.தேசிய அடையாளஅட்டை இல்லாதவர்கள் இந்த இராணுவ அடையாள அட்டைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்குவது தொடர்பாக நாம் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கவுள்ளோம் என்றார்.

Saturday, July 16, 2011

இன விகிதாசார அடிப்படையில் ஆட்சேர்ப்பு - பொன்.செல்வராசா எதிர்ப்பு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு இன விகிதாசார அடிப்படையில் ஆட்களை திரட்டுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சேவைக்கு ஆட்களைத் திரட்டுவது தொடர்பாக மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் போட்டிப் பரீட்சையொன்றை நடத்துவதற்கான அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், கூடுதலான புள்ளிகளைப் பெற்றவர்கள், அரச நிர்வாக சுற்றறிக்கை (15/90)ன்படி இன விகிதாசார அடிப்படையிலேயே இந்த சேவைக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரினால் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அரச நிர்வாக சுற்றறிக்கை ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின் பேரில் பல வருடங்களுக்கு முன்னர் இரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, அதன் பின்னர் தான் அறிந்தவரை இன விகிதாசார அடிப்படையில் நியமனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசினால் இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்திரட்டல் நடைபெற்ற போதும் திறமை அடிப்படையிலேயே சுமார் 250 பேர் தெரிவானார்கள். இதில் தமிழ் பேசும் எவரும் தெரிவாகவில்லை. இன விகிதாசார அடிப்படை பேணப்பட்டிருந்தால் 40 - 50 பேர்வரை அதில் தமிழ் பேசும் இனத்தவர்கள் தெரிவாக வாய்ப்பு கிடைத்திருந்திருக்கும் என்றும் சுட்டிக் காட்டினார் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளருக்கு தான் அனுப்பி வைத்துள்ள ஆட்சேபனைக் கடிதத்தில் திறமை அடிப்படையில் ஆட்தெரிவு இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

தனது கடிதத்திற்கு பதில் கிடைக்காவிட்டால் அல்லது சாதகமான முடிவு கிடைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு அதிகாரிகளின் கருத்துக்களை உடனடியாகப் பெற முடியவில்லை.

இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியா மௌனமாக உள்ளது

இலங்கை பிரச்சனை, ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம் என இந்திய கம்யூனியஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் :-

இலங்கையில் யுத்தம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்தும் அங்கு இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படவில்லை. இலங்கையில் யுத்தத்தின் போது நடைபெற்ற மனித மீறல்களின் இறுவட்டுக்களைப் பார்த்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளின் வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது.

ஆனால் இலங்கை பிரச்சினையில் சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா மௌனமாக உள்ளது. இலங்கை பிரச்சனை என்பது தமிழக மக்களின் பிரச்சினை மட்டுமல்லாது தேசிய அளவிலான பிரச்சினை ஆகும். இதனையும் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது கேள்வி எழுப்புவோம், என்றார்.

ஈரானின் உதவியை மறுத்தது இலங்கை

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் வெளியீட்டினை 50,000 பரல்களில் இருந்து 100,000 பரல்களாக அதிகரிக்கும் ஈரானின் உதவி செயற்திட்டத்தினை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது சபுகஸ்கந்தயில் நாளந்தம் 40,000 பரல்கள் சுத்திகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹனிமூனுக்கு ஆஸ்திரியா புறப்பட்ட‌ கார்த்தி : றஞ்சனி

Sunday, Jul 17, 2011கல்யாணம் முடிந்த கையோடு ஆஸ்திரியாவுக்கு ஹனிமூன் கொண்டாட பறந்துவிட்டார்கள் கார்த்தியும் அவர் மனைவி ரஞ்சனியும். ஐரோப்பியாவில் உள்ள ஆஸ்திரியா அழகிய மலைகள், கண்கவர் ஏரிகள், அதிவேக நதிகள், அடர்ந்த காடுகளுக்குப் பெயர் பெற்றது. ஆபத்தில்லாத அழகிய நாடு.

கல்யாணம் முடிந்ததுமே இங்குதான் ஹனிமூன் செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டாராம் கார்த்தி. அடுத்த வாரம் வரை ஆஸ்திரியாவில் ஹனிமூன் கொண்டாடும் கார்த்தி தம்பதி, வரும் 20ம் தேதி சென்னை திரும்புகிறது. அதன் பிறகு நேராக சகுனி படப்பிடிப்பில் பங்கேற்கவிருக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தை இயக்குபவர் சங்கர் தயாள். ஏற்கெனவே கணிசமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

மனைவி வந்த நேரம், இந்தப் படம் பெரிய அளவுக்குப் பேசப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளார் கார்த்தி.

இரு பேருந்து நேரெதிர் மோதல் -இருவர் பலி ..15பேர் காயம் !

இரு பேருந்து நேரெதிர் மோதல் -இருவர் பலி ..15பேர் காயம் !இன்று காலை கிரிபத்கும்புற  சாந்தி  கண்டி -கொழும்பு பிரதான வீதியில்நேரெதிர் இரு பேருந்துகள் மோதியதில் இருவர் ஸ்தலத்தில் பலியாகினர் . மேலும் பதின் ஐந்து பேர்  படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்த அனைவரும்  கண்டி போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர் என காவல்துறை பேச்சாளர் ப்ரிஷந்த  ஜெயகொடி தெரிவித்துள்ளார் .!

இலங்கையில் அதிகரித்து வரும் ஆண் -பெண் ஓரினசேர்க்கை ..!

இலங்கையில் அதிகரித்து வரும் ஆண் -பெண் ஓரினசேர்க்கை ..! இலங்கையில் ஒரே பாலின உறவுகள்  அதிகரித்து வருகிறது,சமுக நல தளமான FACEBOOKஊடாக இலங்கை சேர்ந்த ஆண் பெண்கள் இணைந்திருக்கும் ஓரின சேர்க்கைகாட்சி படங்கள் வெளியாகியுள்ளன .  இலங்கையில் இவ்வாறான செயல் பாடுகள் மக்களினால் ஏற்று கொள்ள முடியாத  சூழல்உருவாகி உள்ள நிலையில் இந்த செயற்கை  மாற்றம் அதிகரித்து வருவதாக சமுக நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளன . ..!!

இலங்கையில் கர்ப்பமாகும் 12,13வயது சிறுமிகள் -..!

இலங்கையில் கர்ப்பமாகும் 12,13வயது சிறுமிகள் -..!  Mahaweli பகுதிகளில் பன்னிரண்டு பதின்மூன்று வாயதான பெண்கள்கர்ப்பம் அடைந்துள்ளனர் . இவர்களிற்கு திருமணம் செய்து கொடுக்க பட்டு வெளியில் தெரியாத படிஇவர்களது திருமண உறவு முறைகள் மறைக்க  பட்டுள்ளன . இவ்வாறு அண்மையில் சிறு வயதுடைய சிறுமிகள்கர்ப்பம்மாகியுள்ளது கண்டு பிடிக்க பட்டதாக வட மத்திய மாகாண சுகாதார அமைச்சர் Peshala ஜயரத்னதெரிவித்துள்ளார் ..!

15நாளில் 1684டெங்கு நோயாளர்கள் மருத்துவ மனையில் அனுமதி ..!

15நாளில் 1684டெங்கு நோயாளர்கள் மருத்துவ மனையில் அனுமதி ..! இலங்கையில் பதின் ஐந்து நாளில் 1684நோயாளர்கள் மருத்துவ மனையில்  அனுமதிக்க பட்டுள்ளனர் .இந்தவருடம் 4632பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர் . குறித்த ஏழு மாத  கால பகுதியில் 93பேர் பலியாகியுள்ளனர் எனEpidemiology Unit of the Health Ministry தெரிவித்துள்ளது ..!

வடக்கில் ஏழு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறப்பு ..!

இலங்கையில் அதிகரித்து வரும் ஆண் -பெண் ஓரினசேர்க்கை ..! இலங்கையில் ஒரே பாலின உறவுகள்  அதிகரித்து வருகிறது,சமுக நல தளமான FACEBOOKஊடாக இலங்கை சேர்ந்த ஆண் பெண்கள் இணைந்திருக்கும் ஓரின சேர்க்கைகாட்சி படங்கள் வெளியாகியுள்ளன .  இலங்கையில் இவ்வாறான செயல் பாடுகள் மக்களினால் ஏற்று கொள்ள முடியாத  சூழல்உருவாகி உள்ள நிலையில் இந்த செயற்கை  மாற்றம் அதிகரித்து வருவதாக சமுக நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளன . ..!!

கிழக்கில் ஐந்து பாலங்கள் கட்ட ஜப்பான் 1,4 மில்லியன் நிதி அளிப்பு ..!

கிழக்கில் ஐந்து பாலங்கள் கட்ட ஜப்பான் 1,4 மில்லியன் நிதி அளிப்பு ..!இலங்கை கிழக்கில் ஜப்பான் நாட்டின் உதவியின் அடிப்படையில் ஐந்து பாலங்கள் கட்ட பட உள்ளன .Peradeniya -Badulla - செங்கலடி வீதியில் நான்கு பாலங்கள் . Batticaloa  - Tirikkondiadimadu - திருமலை  வீதியில் ஒரு பாலம் கட்ட பட உள்ளதாகதெரிவிக்க பட்டுள்ளது ..!

11 வருடங்களின் பின் கொடிகாமம் - பருத்தித்துறை இடையிலான வீதி திறப்பு

11 வருடங்களின் பின்னர் கொடிகாமம் - பருத்தித்துறைக்கு இடையிலான பாதை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ் மற்றும் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வின் பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

காஷ்மீரில் சபையர் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர் கைது

மூன்று இலங்கையர்கள் உட்பட நான்கு பேர் காஷ்மீர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சபையர் கடத்தல்கார சர்வதேச கும்பலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் உலோகங்கள் லிமிடெட் நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள சபையர்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தலுடன் JKML சில உயர் அதிகாரிகள் தொடர்புபட்டிருக்கிறார்கள் என சந்தேகிப்பதாக காஷ்மீர் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வெளியில் இருந்து சில நபர்கள் சர்வதேச சந்தையில் Padder சுரங்கங்களில் இருந்து உலக புகழ்பெற்ற நீல சபையர் கடத்தல் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபு ஹஸனின் மகள் மொஹமட் இக்ரம், Zaabur பின் சுல்தான் Izakoreஇன் மகன் முஹம்மது ஷா பின் காசிம் பின் Hattar, மற்றும் அஹர் அல் Zehrat என்பவரின் மகன் Akber காசிம் ஆகிய இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என காஸ்மீர் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையில் அமைதியான தீர்வு உருவாவதை இந்தியா அப்போதே எதிர்த்தது - கசிவு

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அமைதியான ஒரு தீர்வை எட்டும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 2007ம் ஆண்டு தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதாக புதிய தகவல் கிளம்பியுள்ளது.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த இரகசிய விடயம் குறித்த செய்தியை சர்வதேச செய்தித் தளமொன்று வெளியிட்டுள்ளது.

எனினும் அவ்வாறானதொரு அமைதியான தீர்வுக்கு வருவதை இந்திய அரசாங்கம் எதிர்த்ததாக தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டாளராக செயற்பட்ட முன்னாள் நிர்வாக அதிகாரியும் சமூக ஆர்வளருமான எம்.ஜீ.தேவசகாயம் தெரிவித்துள்ளார்.

தான் ஏற்பாட்டாளராக செயற்பட்ட குறித்த சிவில் சமூகக் குழுவில் ஓய்வுபெற்ற சிவில் சேவையாளர்கள், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் எனப்பலர் உள்ளடங்கியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சிவில் சமூகக் குழுவின் முதல் அமர்வு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ஒருவர் தலைமையில் சென்னையில் 2007ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி இடம்பெற்றதாகவும் இனப்பிரச்சனைக்கான ஒரே தீர்வு அரசியல் தீர்வு என அக்கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் எம்.ஜீ.தேவசகாயம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து 2007ம் ஆண்டு ஜூலை 17ம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளை தமது சிவில் சமூக அமைப்பு சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் காலங்கடந்து கூறியுள்ளார்.