Monday, July 25, 2011

ஜான் ஆபிரகாமிற்கு தோள் கொடுத்த தீபிகா

பிபாஷாவை பிரிந்த சோகத்தில் இருக்கும் ஜான் ஆபிரகாமிற்கு தனது சோகத்தை பகிர்ந்து கொள்ளும் தோழியாக கிடைத்துள்ளார் தீபிகா படுகோன்.

நீண்ட காலமாக ஒன்றாக இருந்த நடிகர் ஜான் ஆபிரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் அன்மையில் பிரிந்துவிட்டனர். தனது சோகத்தைப் பகிர்ந்துகொள்ள யாராவது கிடைக்க மாட்டார்களா என்று நினைத்த ஜான் ஆபிரகாமுக்கு நான் இருக்கிறேன் என்று நட்புக்கரம் நீட்டியுள்ளார் தீபிகா.

தீபிகாவும், ஜானும் தேசிபாய்ஸ் என்ற படத்தில் முதன்முதலாக ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்தது. அப்போது தான் இருவரும் நண்பர்களாகியுள்ளனர். தானும் பிபாஷாவும் பிரிந்தது பற்றி தீபிகாவிடம் கூறும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்கள்.

ஷூட்டிங் இல்லாத நேரத்தில் ஒன்றாக காபி குடிக்கப் போவது, வெளி இடங்களுக்குப் போவது என்று இருவரும் ஒன்றாக நேரத்தை கழித்துள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே சிரிப்பும், பேச்சுமாய் இருந்த இவர்களைப் பார்த்து அங்கிருந்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டனராம்.

நெருக்கமாக இருந்த ஒருவரைப் பிரியும்போது ஏற்படும் வேதனை என்னவென்று தீபிகாவுக்கும் தெரியும். அந்த உணர்வு தான் இவர்களை நண்பர்களாக்கியுள்ளது.

தீபிகாவும், ரன்பீர் கபூரும் காதலித்தனர். பின்பு ஆளுக்கொரு வழியைப் பார்த்து சென்றவிட்டனர். அந்த சோகத்தை தாண்டி வந்த தீபிகா ஜானுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தீபிகாவுக்கு முன்பு ஜான் ஆபிரகாமுக்கு 'ஆறுதல் கூறியவர்' சிரிப்பழகி ஜெனிலியா என்பது குறிப்பிடத்தக்கது.


Topics: deepika padukone, john abraham, ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன்

0 comments:

Post a Comment