This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, July 5, 2011

சக்சேனாவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை- நீதிபதி

July 6, 2011 | no commentsகைது செய்யப்பட்டுள்ள சன் பிக்ஸர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா மீதான புகார் தொடர்பான ஆதாரங்கள் எதையும் போலீசார் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் அவரை இரு தினங்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீராத விளையாட்டுப் பிள்ளை பட விநியோகம் தொடர்பாக சேலம் விநியோகஸ்தர் கந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சக்சேனா கைது செய்யப்பட்டார். இன்று அவரை போலீஸ் காவலில் எடுக்க சைதை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி அகிலா சாந்தினி, சக்ஸேனா மீதான புகாருக்கு இதுவரை போலீசார் ஆதாங்களை சமர்ப்பிக்கவில்லையே என்றார்.

இந்த வழக்கு பொய்யானது என்று சக்ஸேனா தரப்பில் வாதிட்டனர். புகார் கொடுத்த விநியோகஸ்தர் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தம் அல்லது ஆதாரங்களை காட்டினால், அவர் கேட்கும் தொகையைத் தந்துவிடுவதாகவும் சக்ஸேனா தரப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து சக்ஸேனாவை இரு தினங்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி கொடுத்தார். இந்த நாட்களில் அவரை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்றும் அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

ஜீவா- ஜெயம் ரவி இணைந்து நடிக்கும் ஜனநாதன் படம்

July 6, 2011 | no comments

எஸ்பி ஜனநாதன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவியும், ஜீவாவும் இணைந்து நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த அதிரடிப் படத்துக்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை. இந்தப் படம் குறித்து இயக்குநர் ஜனநாதன் கூறுகையில், “ஈ படம் முடிந்ததும், இன்னொரு படம் இருவரும் சேர்ந்து பண்ணலாம் என்று ஜீவாவும், நானும் திட்டமிட்டோம்.

அதேபோல் பேராண்மை முடிந்ததும், ஜெயம் ரவியோடு இன்னொரு படம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம். இப்போதுதான் அதற்கான காலம் கனிந்து இருக்கிறது. ஒரே படத்தில் இரண்டு பேரையும் இணைத்து இயக்கும் திட்டம் கைகூடியிருக்கிறது.

ஜெயம் ரவியும், ஜீவாவும் இணையும் முதல் படம் இது. முழுக்க முழுக்க அதிரடி சண்டை படமாக இருக்கும். கதையின் களம் தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருப்பதால், இங்கேயும், வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

கதாநாயகியின் கதாபாத்திரம் கவர்ச்சியும், சண்டையும் கலந்து அமைந்திருக்கிறது. இதற்காக தமிழ் பேச தெரிந்த எந்த மாநில நடிகையாக இருந்தாலும், பொருத்தமாக தேர்ந்தெடுக்க இருக்கிறோம். ஏற்கனவே ஜீவா நடித்த ஈ, கோ ஆகிய படங்கள் தெலுங்கில் `டப்’ செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளது. `பேராண்மை’ படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளிவர இருக்கிறது.

எனவே ஜெயம் ரவியும், ஜீவாவும் இணைந்து நடிக்கும் படம், தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும்,” என்றார்.

ஈ-டிக்கெட் ஏஜெண்டுகளுக்கு ஆப்பு

July 6, 2011 | no commentsதனிநபர்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில், புதிய இ-டிக்கெட் சேவையை இந்தியன் ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. சேவைக்கட்டணமும் குறைகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் டிராவல் ஏஜன்டுகளும், வணிக நிறுவனங்களும் அதிகளவில் ரயில்வே டிக்கெட் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்தனர். இதனால், தனிநபர்களுக்கு டிக்கெட் எளிதில் கிடைக்காத நிலை ஏற்பட்டது. மேலும், டிராவல் ஏஜன்டுகள் பதிவு செய்யும் இ-டிக்கெட்டுகளை அதிக விலை வைத்து விற்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதை தவிர்க்கும் பொருட்டு, இந்தியன் ரயில்வே, புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, தனிநபர்கள் முதன்முறையாக, தாங்களாகவே பதிவு செய்து கொண்டு, இந்த சேவையை பெறலாம். இதற்கு கட்டணம் ஏதுமில்லை.

தொடக்கத்தில், ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு எட்டு தடவைகள் மட்டும் பரிமாற்றங்கள் செய்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 5 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 10 ரூபாயும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சி., யில் தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 10 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு, 20 ரூபாயும், சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பகல் 12.30 மணியிலிருந்து, இரவு 11.30 வரையில் இந்த சேவையை பயன்படுத்தலாம். இந்த சேவை தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.