This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, July 24, 2011

நடிகர் ரவிச்சந்திரன் தொடர்ந்து கவலைக்கிடம்

நடிகர் ரவிச்சந்திரனின் உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நுரையீரல் மற்றும் கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 5 நாட்களாக கோமாவில் உள்ளார்.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.Topics: ரவிச்சந்திரன், ravichandran, கவலைக்கிடம், தீவிர சிகிச்சை

வி.சி.குகநாதன் ராஜினாமா: 'பெப்சி' தலைவராக எம்.ஏ.ராமதுரை தேர்வு

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன (பெப்சி) தலைவராக இருந்த விசி குகநாதன் ராஜினாமா செய்துவிட்டதால், அவருக்கு பதில் புதிய தலைவராக வி ஏ ராமதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெப்சி பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பெப்சி தலைவர் பொறுப்பில் இருந்த வி.சி.குகநாதன் உடல்நிலை சரியில்லாததால் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நேற்று (23-ந் தேதி) அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில், புதிய தலைவராக எம்.ஏ.ராமதுரை தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை பற்றி தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பிலிம் சேம்பரில் பேசுவதற்கு, பேச்சுவார்த்தை குழு தலைவராக இயக்குனர் அமீர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தகவலை பெப்சி பொதுச்செயலாளர் ஜி.சிவா தெரிவித்துள்ளார்.Topics: fefsi, குகநாதன், tamil cinema, vc guhanathan, va ramadurai, பெப்சி

மம்முட்டி வீட்டில் நாளை மீண்டும் ரெய்டு: அதிகாரிகள் முடிவு

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி வீட்டில் மீண்டும் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சோதனை நாளை நடக்கவிருக்கிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் கடந்த 22ம் தேதி காலையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த நட்சத்திரங்களின் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 80 அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்த சோதனைகளில் ரொக்கம், ஆவணங்கள், யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.

இதில் மம்முட்டியின் கொச்சி வீட்டில் இருந்து மட்டும் ரூ. 20 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனைகள் நடந்தபோது மம்முட்டி சென்னையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கொச்சி சென்ற அவரிடம் வருமான வரித்துறையினர் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

அவரிடம் ரூ. 20 லட்சம் ரொக்கம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இது தொடர்பாக உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படும் என்று மம்முட்டி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை மீண்டும் மம்முட்டி வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.Topics: mammootty, it raid, ஐடி ரெய்டு, மம்முட்டி, வருமான வரித்துறை, it officials

பிரபல பாடகி எமி ஒயின்ஹவுஸ் மர்ம சாவு: வீட்டில் பிணமாக கிடந்தார்

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான பாடகி எமி ஒயின்ஹவுஸ் (27) அவரது வீட்டில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அதிகளவில் போதை மருந்தை எடுத்துக் கொண்டதால் அவர் பலியாகியிருக்கலாம் என்று தெரிகிறது.

வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் சதுக்கத்தில் உள்ள தனது வீட்டில் இவர் நேற்று பிணமாகக் கிடந்தார்.

எமி ஒயின்ஹாசுக்கு போதை மருந்து மற்றும் மதுப் பழக்கம் இருந்தது. அதற்காக மறுவாழ்வு மையத்தில் தங்கி பலமுறை சிகிச்சை பெற்றுள்ளார்.

ஹவுஸ் பேக் டூ பிளாக், சோல் உள்ளிட்ட பாப் இசை ஆல்பங்கள் மூலம் புகழ் பெற்ற இவர் போதை பழக்கத்தால் சீரழிய ஆரம்பித்தார்.

இங்கிலாந்தின் கார்ன்வெல் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது, கடும் போதையில் பாடலையே மறந்துவிட்ட இவர், கூடியிருந்த ரசிகர்கள் மீது எச்சிலைத் துப்பிவிட்டு, இரும்பு மைக்கால் தன்னைத் தானே அடித்துக் கொண்டார். இன்னொரு நிகழ்ச்சியில் போதையில் தடுமாறி கீழே விழுந்தார்ய

இது போன்ற செயல்களால் ரசிகர்களின் ஆதரவை இழந்து வந்தார். இறுதியாக கடந்த மாதம் பெல்கிரேட் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பாடினார். ஆனால், அங்கும் போதை மருந்து உட்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்ததால் வாந்தி எடுத்தார், நிகழ்ச்சியில் முறையாகப் பாடவும் இல்லை.

இதைத் தொடர்ந்து அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று வீட்டில் பிணமாகக் கிடந்தார்.

10 வயதாக இருக்கும் போதே தனது நண்பர்களுடன் சேர்ந்து பாப் பாடல்கள் பாடி புகழ் பெற்ற இவர், பேக்டூ பிளாக் ஆல்பம் மூலம் உலகப் புகழ் பெற்றார். இந்த ஆல்பம் 5 கிரம்மி விருதுகளை வென்றது.

பிளேக் பீல்டர் என்பவர் உதவியோடு பாப் இசை உலகில் கால் வைத்த எமி, பின்னர் அவரை விட்டுப் பிரிவதும் சேருவதுமாக இருந்தார். அவரைப் பிரிந்தபோதெல்லாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, போதைக்கு அடிமையானார். பின்னர் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

ஆனாலும், இவர்களிடையே நடுரோட்டில் கூட அடிதடி சண்டை நடந்து இருவருக்கும் ரத்தக் காயமும் ஏற்பட்டுள்ளது.Topics: hollywood, amy winehouse, போதை மருந்து, லண்டன், drug, london