This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label நடிக்கும். Show all posts
Showing posts with label நடிக்கும். Show all posts

Tuesday, July 19, 2011

ரஜினி நடிக்கும் “ராணா” படத்தின் பெயர் மாறுகிறதா.?

Tuesday, Jul 19, 2011ரஜினி நடிக்கும் “ராணா” படத்தின் தலைப்பை மாற்ற பரிசீலனை நடக்கிறது. இப்படத்தின் கதை 17-ம் நூற்றாண்டில் நடப்பது போல் உருவாக்கப்பட்டு உள்ளது. ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
 
ஒரு கேரக்டருக்கு “ராணா” என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. கதையே படத்துக்கும் தலைப்பாக்கினார். “ராணா” என்பது ஒரு மன்னனின் பெயர். தற்போது “ராணா” பெயரை மாற்ற முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ரஜினி குணமடைந்து சென்னை திரும்பியதையடுத்து பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. கதை விவாதமும் நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களுக்குள் படப்பிடிப்புக்கு புறப்பட உள்ளார். அதற்குள் படத்துக்கு புது தலைப்பை தேர்வு செய்துவிட திட்டமிட்டுள்ளனர்.
 
“ராணா” பெயரை மாற்ற ரஜினி சம்மதிப்பாரா? என்பதில் சந்தேகம் கிளப்பப்படுகிறது. ஏற்கனவே அண்ணாமலை படத்தில் நடித்த போது தலைப்பை பலர் கிண்டல் செய்தனர். அண்ணாமலை அரோகரா என்று பேசினர். எனவே தலைப்பை மாற்றலாமா? என யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி அதை ஏற்கவில்லை. அண்ணாமலை என்பது திருவண்ணாமலை சிவன் பெயர் எனவே அதை மாற்றக் கூடாது என்று பிடிவாதமாக மறுத்தார். இதையடுத்து அந்த பெயரிலேயே படம் வந்து வெற்றிகரமாக ஓடியது.
 
படையப்பா பெயரையும் இது போன்ற விமர்சித்தனர். ஆனால் அப்பெயரை மாற்ற ரஜினி சம்மதிக்கவில்லை. படையப்பாவும் ஹிட் படமானது.

Monday, July 18, 2011

‘ராணா’வை அடுத்து சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய‌ படம்.?

Monday, Jul 18, 2011சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும் ‘ராணா’ படவேலைகளில் பங்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அக்டோபரில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிடும். இப்படம் 2012-ல் வெளிவர இருக்கிறது.

இப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல தெலுங்குப் பட இயக்குனரான பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் அண்மையில் நடித்து வெளியாகியுள்ள படம் ‘புட்டா ஹோகா தேரா பாப்’. இப்படத்தினை தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகந்நாத் முதன் முதலாக ஹிந்தியில் இயக்கினார்.

இப்படம் அங்கே பரபரப்பாக ஓடியதால், இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறாராம். அப்படி தமிழில் ரீமேக் செய்யும் போது, அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க முயற்சிக்கிறாராம் பூரி ஜெகந்நாத். இதற்காக இவர் விரைவில் ரஜினிகாந்தை சந்திக்க இருக்கிறாராம். இது அத்தனையும் சரியாக அமைந்தால் ரஜினிகாந்தின் அடுத்த படம் பூரி ஜெகந்நாத்துடையதாகத்தான் இருக்கும் என்று கோலிவுட் கிசுகிசுக்கிறது.

Saturday, July 16, 2011

சாய்பாபா படத்தில் நடிக்கும் சச்சின்.?

Saturday, Jul 16, 2011ஸ்ரீசத்ய சாய்பாபா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படத்தில் சச்சின் டெண்டுல்கரை நடிக்க வைக்க இயக்குநர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் மரணமடைந்த ஸ்ரீசத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார் பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.

தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு 'பாபா சத்யசாயி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா கூறுகையில், "சாய்பாபா படத்தில் தெண்டுல்கர், காவஸ்கர் ஆகியோரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் இப்படத்தில் நடித்தால் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இப்படத்தை வெளியிடலாம். பட வசூலும் நன்றாக இருக்கும்.

இருவருமே பாபாவின் பெரிய பக்தர்கள் என்பதால், நடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இப்படத்தில் நடிக்க நடிகை ஜமுனா ஒப்புக் கொண்டுள்ளார். வேறு நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது," என்றார்.

Friday, July 15, 2011

ரூ 35 கோடி பட்ஜெட்டில் அஜீத் நடிக்கும் பில்லா -2 படம் நேற்று தொடங்கியது.

ரூ 35 கோடி பட்ஜெட்டில் அஜீத் நடிக்கும் பில்லா -2 படம் நேற்று தொடங்கியது.

சக்ரி டோலட்டி இயக்கும் இந்த படம், முன்பு வெளியாகி வெற்றி பெற்ற பில்லா படத்துக்கு முந்தைய கதையமைப்பைக் கொண்டதாகும்.

ஹதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நேற்று படப்பிடிப்பு தொடங்கியது. முதல் நாள் ஷூட்டிங்கில் அஜீத், நாயகி ஹ்யூமா குரேஷி உள்ளிட்டோர் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்றனர்.

ரூ 35 கோடி செலவில், இந்துஜா குழுமம் மற்றும் வைட் ஆங்கில் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் நடக்கிறது.

மதராசபட்டணம் புகழ் செல்வகுமார் கலையை கவனிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏப்ரல் 2012 ல் இந்தப் படம் வெளியாகும் என்கிறார்கள். அஜீத்தின் பொன்விழாப் படமான மங்காத்தா அடுத்த மாதம் வெளியாகிறது.Topics: ajith, billa 2, அஜீத், பில்லா 2, shooting

Tuesday, July 12, 2011

16 இயக்குனர்கள் நடிக்கும் ஞானி: இசை, 5 புதுமுகங்கள்

தமிழ் திரையுலகின் புதிய முயற்சியாக 16 இயக்குனர்கள் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர்.

தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் நடிப்பது புதிதன்று. ஆனால் தற்போது ஞானி என்ற படத்தில் 16 இயக்குனர்கள் சேர்ந்து நடிக்கின்றனர்.

16 இயக்குனர்கள் சரி, ஹீரோ யார் என்று தானே கேட்கிறீர்கள். அது வேறு யாருமன்று நம்ம மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்த இயக்குனர் தருண் கோபி தான். ஹீரோயின் நடிகை ஸ்வேதா.

இயக்குனர்கள் எஸ்.எஸ்.ஸ்டன்லி, பிரபுசாலமன், தம்பி ராமய்யா, சரவண சுப்பையா, சிங்கம்புலி, ரவிமரியா, அரவிந்த்ராஜ், சித்ராலட்சுமணன், சசிமோகன், கேயார், செல்வபாரதி, பிரவின்காந்தி, சஞ்சய்ராம், ஆர்த்திகுமார் உள்ளிட்ட 15 பேர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. அது என்னவென்றால் இதற்கு பிரசாந்த், ராகவேந்திரா, ராபர்ட், இப்ராகிம், அய்யர் ஆகிய 5 புதுமுகங்கள் இசையமைக்கின்றனர். இதை ஒளிப்பதிவு செய்கிறார் மதியழகன்.

படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பெரிய பொறுப்பை ஏற்றிருக்கிறார் ஆர்த்தி குமார். சுபாசினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜே.எஸ்.குமார், எல்.சுரேஷ்குமார் ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர்.

ஒரு பெரிய பட்டாளமே இருக்கின்றதே அப்படி என்ன கதை என்று நினைக்கிறீர்களா. வேறு என்ன கிராமம் தான். அண்ணனைக் கொன்றவர்களை தம்பி பழிக்கு பழி வாங்குகிறான்.

அண்ணன் முத்து, தம்பி முருகன். இருவரும் ஒரு மரக்கடைக்காரரிடம் வேலை செய்கின்றனர். ஒரு வழக்கில் எங்கே முத்து தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று நினைத்து அவனை கடைக்காரரின் மைத்துனர்களும், தம்பியும் சேர்த்து தீர்த்துக் கட்டுகின்றனர். அவர்களை பழிக்குப் பழி வாங்குகிறான் முருகன். ஆனால் விதி அவனையும் பழிவாங்குகிறது.Topics: tamil cinema, director, kollywood, gnani, கோலிவுட், ஞானி, இயக்குனர்கள்

Tuesday, July 5, 2011

ஜீவா- ஜெயம் ரவி இணைந்து நடிக்கும் ஜனநாதன் படம்

July 6, 2011 | no comments

எஸ்பி ஜனநாதன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவியும், ஜீவாவும் இணைந்து நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த அதிரடிப் படத்துக்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை. இந்தப் படம் குறித்து இயக்குநர் ஜனநாதன் கூறுகையில், “ஈ படம் முடிந்ததும், இன்னொரு படம் இருவரும் சேர்ந்து பண்ணலாம் என்று ஜீவாவும், நானும் திட்டமிட்டோம்.

அதேபோல் பேராண்மை முடிந்ததும், ஜெயம் ரவியோடு இன்னொரு படம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம். இப்போதுதான் அதற்கான காலம் கனிந்து இருக்கிறது. ஒரே படத்தில் இரண்டு பேரையும் இணைத்து இயக்கும் திட்டம் கைகூடியிருக்கிறது.

ஜெயம் ரவியும், ஜீவாவும் இணையும் முதல் படம் இது. முழுக்க முழுக்க அதிரடி சண்டை படமாக இருக்கும். கதையின் களம் தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருப்பதால், இங்கேயும், வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

கதாநாயகியின் கதாபாத்திரம் கவர்ச்சியும், சண்டையும் கலந்து அமைந்திருக்கிறது. இதற்காக தமிழ் பேச தெரிந்த எந்த மாநில நடிகையாக இருந்தாலும், பொருத்தமாக தேர்ந்தெடுக்க இருக்கிறோம். ஏற்கனவே ஜீவா நடித்த ஈ, கோ ஆகிய படங்கள் தெலுங்கில் `டப்’ செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளது. `பேராண்மை’ படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளிவர இருக்கிறது.

எனவே ஜெயம் ரவியும், ஜீவாவும் இணைந்து நடிக்கும் படம், தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும்,” என்றார்.

Friday, July 1, 2011

மலையாளப் படத்தில் நடிக்கும் 'சுப்பிரமணியபுரம்' சசிகுமார்- 5 நாயகிகள்

சுப்ரமணியபுரம் புகழ் இயக்குனர், நடிகர் சசிகுமார் மாஸ்டர்ஸ் என்ற படத்தின் மூலம் மாலிவுட் எனப்படும் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார்.

மலையாள இயக்குனர் ஜான் அந்தோணியின் அடுத்த படம் மாஸ்டர்ஸ். இரண்டு உயிர் நண்பர்கள் பற்றிய கதை. இதில் நடிகர் பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் சசிகுமார் ஆகியோர் நண்பர்களாக நடிக்கின்றனர். தமிழில் சுப்ரமணியபுரம், பசங்க மற்றும் நாடோடிகள் படங்கள் கொடுத்த சசிகுமார் மாஸ்டர்ஸ் மூலம் மலையாளத்தில் காலடி எடுத்து வைக்கிறார்.

கல்லூரியில் ஒன்றாக ஒரே வகுப்பில் படிக்கும் 2 நண்பர்கள் படிப்பிற்கு பிறகு எவ்வாறு வெவ்வேறு துறைகளில் பணிக்கு செல்கின்றனர் என்பது தான் கதை. கதை பிடித்திருந்ததால் தான் இந்த படத்தில் நடிக்க உடனே சம்மதித்ததாக சசிகுமார் கூறியுள்ளார்.

இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் 5 கதாநாயகிகள் நடிக்கின்றனர். அதில் பியா பாஜ்பாய் மற்றும் அனன்யா அடக்கம். மற்ற 3 நாயகிகள் தேர்வு விரைவில் முடியும். மாஸ்டர்ஸ் படபிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் கோட்டயத்தில் துவங்குகிறது.Topics: சசிகுமார், மாஸ்டர்ஸ், sasikumar, mollywood, prithviraj, masters, பிரித்விராஜ்