This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, September 5, 2011

பிரபாகரன் தலைப்பை மாற்றியது ஏன்? - பிரபுதேவா விளக்கம்

பிரபாகரன் என் தலைப்பு பவர்புல்லானது. ஆனால் அதைப் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியதால் வெடி என்ற தலைப்பை வைத்தேன், என இயக்குநர் பிரபு தேவா கூறினார்.

விஷால், சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கும் படம் வெடி. பிரபு தேவா இயக்குகிறார். ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கிறது.

இப்படத்துக்கு முதலில் பிரபாகரன் என பெயர் வைத்தனர். ஒரு வணிக ரீதியான மசாலா படத்துக்கு விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் பெயரைச் சூட்டுவது, அந்த மாபெரும் தலைவரை இழிவுபடுத்துவதாக தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்புகள் தெரிவித்து அறிக்கைகள் விட்டனர்.

இதையடுத்து படத்தின் தலைப்பு வெடி என மாற்றிவிட்டார் பிரபுதேவா (வெடியையும் புலிகளையும் மட்டும் பிரிக்க முடியுமா!).

இதுகுறித்து நிருபர்களிடம் பிரபுதேவா கூறுகையில், "தெலுங்கில் ஹிட்டான 'சௌரியம்' படத்தின் தமிழ் ரீமேக்கே வெடி. இதில் விஷாலின் கேரக்டர் பெயர் பிரபாகரன்.

இதையே படத்தின் தலைப்பாக்கினோம். நல்ல பவர்புல் தலைப்பு. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் எதற்கு வீண் சர்ச்சை எனக் கருதி, வெடி என மாற்றி பெயர் வைத்தோம். இம் மாதம் இறுதியில் இப்படம் ரிலீசாகிறது.

விஷால், சமீரா ரெட்டி இருவரும் கேரக்டர்களுக்கு கச்சிதமாக பொருந்தி விட்டனர். அருமையாக வந்துள்ளது படம்," என்றார்.

கமலுடன் நடிக்க அனுஷ்கா மறுப்பு... புதிய ஜோடி சமீரா?

கமல் நடித்து இயக்கும் விஸ்வரூபம் படத்தின் ஹீரோயின் விஷயத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இப்போது கமல் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அனுஷ்காவும் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புக்கு இருவரும் ஜோர்டன் செல்லப்போவதாக கூறப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக சத்ருகன் சின்ஹா மகள் சோனாக்ஷி ஒப்பந்தமானார். படத்தை துவங்குவதில் ஏற்பட்ட அசாசாரண காலதாமதம் மற்றும் இயக்குநர் செல்வராகவன் மாற்றப்பட்டது போன்றவற்றால், படத்திலிருந்தே விலகிக் கொண்டார் சோனாக்ஷி.

இதன் பிறகுதான் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருந்தனர்.

ஆனால் இப்போது, அனுஷ்கா தனது கால்ஷீட்டை செல்வராகவன் படத்துக்கு கொடுத்துவிட்டதால், கமல் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளாராம்.

அனுஷ்காவுக்கு பதில் சமீரா ரெட்டி கமல் ஜோடியாக நடிப்பார் எனத் தெரிகிறது.

கார்த்திக் மகனும் ராதா மகளும்....

பழைய நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதமும் நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசியும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். அது வேறு யார் படமும் அல்ல... பிரபல இயக்குநர் மணிரத்னம் படம்.

கார்த்திக் - ராதா இருவரும் பாரதிராஜா மூலம் அறிமுகமானவர்கள். இவர்கள் இருவருமே ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட ஜோடி. இருவரைப் பற்றியும் வராத கிசுகிசுக்களே இல்லை.

திருமணத்துக்குப் பிறகு ராதா நடிக்கவில்லை. தனது மூத்த மகளுக்கு அவர் கார்த்திகா எனப் பெயர் வைத்தார். இப்போது கோ பட வெற்றிக்குப் பிறகு கார்த்திகா வளரும் நடிகைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளார்.

அடுத்து ராதாவின் இன்னொரு மகள் துளசியும் நடிக்க வருகிறார். இவரை தனது அடுத்த படத்தின் நாயகியாக அறிமுகப்படுத்தும் மணிரத்தனம், அவருக்கு ஜோடியாக கார்த்திக் மகன் கவுதமை தேர்வு செய்துள்ளார். இந்திய சினிமாவில் முன்னாள் ஹீரோவின் மகனும் அவரது ஜோடி நடிகையின் மகளும் ஜோடியாக அறிமுகமாவது இதுவே முதல் முறை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப் படும் தமிழக மீனவர்களின் பிரச்சினையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் காதல் கதை இந்தப் படம்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

சல்மான் கோபிக்கக் கூடாது, அஜீத்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்-பியா

மங்காத்தா படத்தைப் பார்த்த பின்னர் நான் அஜீத்தின் முழுமையான ரசிகையாகி விட்டேன். சல்மான் கான் கோபித்துக் கொள்ளக் கூடாது, அஜீத்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார் நடிகை பியா பாஜ்பாய்.

கோவா படத்தில் நடித்தவர் பியா. அஜீத்துடன் ஏகன் படத்திலும் நடித்தார். அதில் 2வது நாயகியாக வந்தார் பியா. சமீபத்தில் வெளியான கோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் மங்காத்தா படத்தைப் பார்த்து உருகிப் போய் ட்விட்டரில் எழுதியுள்ளார் பியா.

அதில், மங்காத்தா பார்த்தேன். ஒட்டுமொத்தப் படத்தையும் அஜீத் தாங்கி நிறுத்தியுள்ளார். மனதைக் கவர்ந்து விட்டது அவரது நடிப்பு. அப்படியே உருகிப் போய் விட்டேன். அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார். ஸாரி, சல்மான் கான். இப்போது நான் அஜீத்தின் முழுமையான ரசிகையாகி விட்டேன் என்று கூறியுள்ளார் பியா.

முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம்

இசைஞானி இளையராஜாவின் இளையமகன் மகன் யுவன் சங்கர் ராஜா, தனது காதலி ஷில்பாவை திருப்பதியில் திருமணம் செய்தார். இளையராஜா மற்றும் உறவினர்-நண்பர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் 2-வது மகன் யுவன் சங்கர் ராஜா. தமிழ் சினிமாவின் இப்போதைய நம்பர் ஒன் இசையமைப்பாளர் இவர். ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவி சுஜயாவுக்கும் யுவனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து நடந்தது. சுஜையாவுக்கு வேறு திருமணமும் நடந்துவிட்டது.

இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜாவுக்கும், ஷில்பா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஷில்பா பி.பார்ம். படித்தவர். ஆஸ்திரேலியாவில் தொழிலதிபராக இருக்கும் மோகன்-மைதிலி தம்பதியரின் மகள்.

யுவனும் ஷில்பாவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்திற்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜா - ஷில்பா திருமணம் திருப்பதியில் நேற்று காலை 10.20 மணிக்கு நடந்தது.

திருமணத்தில் இளையராஜா, அவருடைய மனைவி ஜீவா, மணமகளின் பெற்றோர் மோகன்-மைதிலி, இசையமைப்பாளரும், யுவன் சங்கர் ராஜாவின் அண்ணனுமான கார்த்திக் ராஜா, சித்தப்பா கங்கை அமரன், அவருடைய மகன்கள் டைரக்டர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி, பெரியப்பா மகன் பார்த்தி பாஸ்கர், வாசுகி பாஸ்கர், பட அதிபர்கள் டி.ஜி.தியாகராஜன், சுப்பு பஞ்சு, இயக்குநர் விஷ்ணுவர்தன், நடிகர்கள் கிருஷ்ணா, சிவா, வைபவ், அரவிந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.