This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label வாக்களிப்பு. Show all posts
Showing posts with label வாக்களிப்பு. Show all posts

Tuesday, July 12, 2011

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தபால் மூல வாக்களிப்பு

இம்மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலுக்குரிய தபால் மூல வாக்களிப்பு இன்று கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை தேர்தலில் பிரதேச சபைக்கு 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 11,700 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கை தமிழரசுக்கடசி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய 5 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சை குழுக்களும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு இலங்கை தமிழரசு கட்சி 6059 வாக்குகளைப்பெற்று 4 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சி 2239 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றி இருந்தன.

இம்மாதம் 23 ஆம் திகதி காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வாக்காளர்கள் வாக்களிபபதற்கென 12 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தலகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறுசிறு அசம்பாவிதங்களை கொண்ட தபால் வாக்களிப்பு

சிறுசிறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய தபால் மூல வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் தெரிவித்துள்ளன.

அநுராதபுரம், கம்பஹா உள்ளிட்ட சில பகுதிகளில் சிறுசிறு அம்பாவிதங்கள் இடம்பெற்றதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இந்த நிலையில் தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றதாக கபே தேர்தல் கண்காணிப்பு இயக்கத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

65 உள்ளூராட்சி சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமானது. இந்தத் தேர்தலில் 20 அரசியல் கட்சிகள் மற்றும் 72 சுயேற்சைக் குழுக்களைச் சேர்ந்த 5,619 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

திருக்கோவில் பிரதேச சபைக்கான தபால் மூலமான வாக்களிப்பு இன்று காலை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த ஜெயசூரியா தலைமையில் நடைபெற்றது. இதன் போது தபால் மூல வாக்களிப்பில் பொலிசார் ஈடுபட்டனர்.

இதேவேளை கடந்த மாச் மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இப்பிரதேச சபைக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.