Friday, August 5, 2011

புலிகளின் தளபதி ரமேசை தடுத்து வைத்திருக்கவில்லை – கோத்தாபய ராஜபக்ச

விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்த கேணல் ரமேஸ் சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் இருக்கவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கேணல் ரமேஜ் இரத்தத்தை உறைய வைக்கும் ஒரு கொலைகாரர் என்றும் கிழக்கில் சரணடைந்த 650 காவல்துறையினரின் கொலையுடன் தொடர்புபட்டவர் என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

அவர் தடுப்புக்காவலில் இருக்கவில்லை. அவர் 650 சிறிலங்கா காவல்துறையினரின் கொலைகளுக்கும், பிக்குகளின் கொலைக்கும், அப்பாவி பொதுமக்களினதும் கொலைகளுக்கும் பொறுப்பானவர் என்றும் தீவிரவாதியான அவரைப் பற்றி தான் பேச விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடையச் சென்ற கேணல் ரமேஸ், சண்டையின் போது கொல்லப்பட்டதாக சிறிலங்கா படையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

சரணடைந்த கேணல் ரமேசை சிறிலங்கா படையினர் விசாரணை செய்யும் காணொலிப் பதிவு ஒன்றை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கடந்த எப்ரல் மாதம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment