Sunday, December 18, 2011

சிறார் பாலியல் துஷ்பிரயோகம் 112பேர் கைது

« குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? » சிறார் பாலியல் துஷ்பிரயோகம் 112பேர் கைதுPublished December 18, 2011 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதான வீடியோ காட்சிகளை இணையம் வழியாக பரிமாறிக்கொண்ட சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 22 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து இந்த குற்றச்செயலில் சம்பந்தப்பட்டதாக இதுவரை 270 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பில் மிக மோசமான வீடியோக்களை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்திருக்கும் ஐரோப்பிய காவல்துறையான யூரோ போல், பச்சிளம் குழந்தைகளும், இளம் சிறார்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுவதை இவை காட்டுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்துவரும் இந்த நடவடிக்கையில் இதற்கு முன்னர் கண்டுபிடிக்காத புதிய வலையமைப்புக்களை தாங்கள் கண்டுபிடித்ததாகவும், இந்த குற்றமிழைத்தவர்கள் இணையத்தை பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இந்த வீடியோக்களை உலக அளவில் பகிர்ந்துகொண்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் யூரோபோல் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment