வாரியபொல கரகஸ்வெவ பிரதேசத்தில் இன்று அதிகாலை வீசிய மினி சூறாவளியின் காரணமாக 6 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த மினி சூறாவளி இன்று அதிகாலை 4.30 மணியளவில் வீசியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதன்போது கரகஸ்வெவ விகாரைக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்களை பார்வையிட சிரேஸ்ட அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அங்கு சென்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
0 comments:
Post a Comment