Tuesday, July 12, 2011

`ஒரு மழை நான்கு சாரல்' படத்தின் கதை.?

Tuesday, Jul 12, 2011புதிதாக திரைக்கு வர இருக்கும் படம் `ஒரு மழை நான்கு சாரல்'. தலைப்பே கவிதைத் தனமாக இருக்கிறதே, இப்படத்தின் கதை எப்படி என்று இயக்குனர் ஆனந்திடம் கேட்டோம். அதற்கு அவர் பதில் அளித்ததாவது;

"வாழ்க்கையில் சோகமே அறியாத இரண்டு பேர். வாழ்க்கையை போராட்டமாகவே எதிர்கொண்ட மற்ற இரண்டு பேர். இந்த நான்கு பேரும் நட்பு என்ற நேர்கோட்டில் இணைகிறார்கள். ஒரு நண்பனின் வெற்றிக்காக மற்ற மூவரும் போராடுகிறார்கள்.

இந்த போராட்டத்துக்கு தடையாக அமைகிறது ஒரு நண்பனின் காதல். இந்த தடையைத் தாண்டி நண்பர்கள் வென்றார்களா? காதல் ஜோடி என்னவானது? என்பதே இப்படத்தின் கதை'' என்றார்.

நண்பர்களாக வரும் ரவி, சுதர்சன், கணா, சதீஷ் நால்வருமே புதுமுகங்கள். நாயகிகள் அனகா, ரம்யா இருவரும் ஏற்கனவே `வர்மம்' என்ற படத்தில் நாயகிகளாக அறிமுகமானவர்கள். இயக்குனர் ஆனந்த்தும் படத்தில் முக்கியமான கதாபாத்திரமேற்று நடித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment