இலங்கையின் வட பகுதி ராஜதந்திரிகள் தடையின்றி செல்ல அனுமதி
இலங்கையின் வட பகுதி ராஜதந்திரிகள் தடையின்றி செல்ல அனுமதி : அரசு அறிவிப்பு
இலங்கையின் வடக்கு பிரதேசத்துக்கு இன்று முதல் வெளிநாட்டு ராஜதந்திரிகள் தடையின்றி செல்லமுடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.உள்நாட்டு அரச சார்ப்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அரச சார்ப்பற்ற அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்குக்கு செல்ல வெளிநாட்டு கடவுசீட்டை கொண்டிருப்பவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த வாரத்தில் நீக்கப்பட்டது.
இதனையடுத்து ஊடகவியலாளர்கள் வட பகுதிக்கு செல்ல முயற்சித்த போது, வவுனியா ஓமந்தை சோதனை சாவடியில் அப்பால் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.
இந்தநிலையில் சர்வதேச மட்டத்தில் தம்மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கும் வகையிலேயே இலங்கை அரசாங்கம் இன்று புதிய அறிவித்தலை விடுத்துள்ளது.
0 comments:
Post a Comment